Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனக்கு ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதிருக்கும்.  எனது அன்ரி மன்னாரில் ஒருபாடசாலையில படிப்பிச்சுக்கொண்டு இருந்தா. நான் அதுவரை அங்கு சென்றதில்லை. ஒரு பெரிய பள்ளி விடுமுறைக்கு அன்ரி எங்களை எல்லாம் அங்கு கூட்டிக்கொண்டு போவதாகக் கூறியவுடன் மனதில ஏற்பட்ட சந்தோசத்தைச் சொல்ல முடியாது. அங்க போற நாளை ஒவ்வொருநாளும் எண்ணியபடி காத்திருக்க ஆரம்பிச்சம் நானும் என் தம்பி தங்கைகளும்.  அப்போதெல்லாம் எந்த விடயத்தையும் மனதில் வைக்க முடியாது அக்கம் பக்கத்தில் உள்ள எம் வயதுக்காரருக்குச் சொல்லிவிடுவோம்தானே. அப்பிடி நாங்கள் மன்னார் போவதும் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு ஆட்களுக்கு எல்லாம் தெரிய, எங்களோட வர அவர்களும் ஆசைப்பட, என்னும் இரண்டு பேரை மட்டும் எம்மோடு கூட்டிக்கொண்டு போக அன்ரியும் சம்மதிக்க, என் தம்பிக்கு மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு போவது பிடிக்காது அவை எங்களுடன் வரவேண்டாமென்று அன்ரியுடன் சண்டைபோட ஆரம்பித்தான்.

எங்களோட வர இருந்தது எங்கள்  மாமிமார்தான். மாமிமாரென்றால் கிழடு கட்டை எண்டு எண்ண வேண்டாம். அவையில ஒருத்திக்கு எனிலும் ஒருவயதும் மற்றவாவுக்கு மூண்டு வயதும்தான் வித்தியாசம்.

அதுக்கு முதல் இன்னொண்டும் சொல்லவேணும். என்ர அன்ரி மன்னாரில் ஒரு குடும்பத்தோடதான் இருந்தவ. அவைக்கு நாலு பிள்ளையள். ஒரு பெட்டை மூண்டு பெடியள். மூத்த பெடியனுக்கு ஒரு இருபது வயது இருக்கும். இரண்டாவது பெட்டைக்கு ஒரு பதினெட்டும் மூன்றாவதுக்கும் நாலாவதுக்கும்  இரண்டிரண்டு வயதைக் குறைச்சுப் பாருங்கோவன்.

ஆனால் அப்ப எங்களுக்கு முதல் இரண்டுபேரை மட்டும்தான் தெரியும். ஏனெண்டா அவை இரண்டுபேரும் அன்ரியோடை அல்லது  மூத்தவர் தனியா யாழ்ப்பாணத்திலே ஏதும் அலுவலிருந்தா வந்து எங்கட வீட்டிலதான் தங்கிப்போறவை. அவை வந்து நிக்கிற நாட்களிலே வீடே இரண்டுபடுமளவு ஒரே சிரிப்புச் சத்தம் தான் கேட்கும். இரவிரவா நான் என்ர  பக்கத்துவீட்டு மாமி, தம்பி, அவர் ... அதுதான் தினேஷ் எல்லாரும் சேர்ந்து தாயம் விளையாடுவம். கரம்போர்ட் விளையாடுவம் அல்லது வீடியோ வாடகைக்கு எடுத்து இரண்டுமூன்று படம் என்று பார்ப்பம். அதனால அவை வந்தால் நேரம் போவது தெரியாது. அவை வந்தால் அம்மாவும் நல்லா அவையை உபசரிப்பா. தினேஷ் தனிய வந்தாலும் சரி.தங்கையோட வந்தாலும் சரி அம்மா என்னிடம் தான்  மக்கில் தேநீர் அல்லது கோப்பி போட்டுத் தருவா. தங்கைக்கு சிறிய சோசர் தான் பிடிக்கும் அதனால அவவுக்கு அதில குடுப்பன்.

ஒருக்கா நாங்கள் எல்லாரும் சேர்ந்து வின்சர் தியேட்டருக்கு படம் பார்க்கப்போனால் அவருக்குப் பக்கத்தில இருக்கிறதுக்கு என்ற மாமிமார் இரண்டுபேரும் நான் நீ எண்டு சண்டை போட நான் எதை பற்றியும் யோசிக்காமல் அவரின் தங்கைக்குப் பக்கத்தில் போய் இருந்திட்டன். எனக்குப் பக்கத்தில தம்பி வந்து இருக்க அவர் இரண்டுமாமிமாருக்கும் நடுவில இருந்து என்ர பக்கமா அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது என்ர கடைக்கண்ணுக்குத் தெரிஞ்சிது. மனதில ஒரு சந்தோசமும் எட்டிப்  பார்த்தது.

அவரைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லத்தான் வேணும். பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.

 

 

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப எனக்கு ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதிருக்கும்.  .......

அவர் இரண்டுமாமிமாருக்கும் நடுவில இருந்து என்ர பக்கமா அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது என்ர கடைக்கண்ணுக்குத் தெரிஞ்சிது. மனதில ஒரு சந்தோசமும் எட்டிப்  பார்த்தது.

அவரைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லத்தான் வேணும். பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.

 

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அக்காளுக்கு பலத்த போட்டிகளுக்கிடையிலை ஒரு கனாக்காலம் நடந்திருக்குடோய்......😎

பள்ளிக்கூடம் போகேக்கையே நாங்கள் பேர் சொல்ல மாட்டமாம்....அவர்.....அவர்....அவர்.....கமலகாசன் மாதிரியாம்...:grin:

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருக்கா நாங்கள் எல்லாரும் சேர்ந்து வின்சர் தியேட்டருக்கு படம் பார்க்கப்போனால் அவருக்குப் பக்கத்தில இருக்கிறதுக்கு என்ற மாமிமார் இரண்டுபேரும் நான் நீ எண்டு சண்டை போட நான் எதை பற்றியும் யோசிக்காமல் அவரின் தங்கைக்குப் பக்கத்தில் போய் இருந்திட்டன். 

பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.

நமது பள்ளிக்காலத்தில் வின்சர் தியேட்டர் பக்கம் போகும் போது இங்கு ஒரு காலத்தில் நிறையப் படங்கள் ஓடினதாம் என்ற அளவில் தான் தெரியும்.

எமது தலைமுறை தவறவிட்ட அந்த இனிய நாள் இனிய அனுபவங்களைத் தொடருங்கள் சுமே அக்கா. அந்தக் கால யாழ்ப்பாணம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  கனாக் காலத்தை   காண ஆவல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவரைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லத்தான் வேணும். பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.

நாங்களும் 70 களில் பெல்போட்டம் போட தொடங்கியவர்கள் தான்.இப்போ அதை நினைக்க வெட்கமாக இருக்கிறது.

3 hours ago, Nathamuni said:

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ...

ஆடறுக்க முதல் ...................கொஞ்சம் பொறுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு மனம் திறந்து தன்ர கதையச் சொல்ல விடுங்கோ!
நீங்க சொல்லுங்கோ அக்கா.(விடுப்பு கேக்கிற குணம் என்று பேசவேணாம்)😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ...

உப்பிடி அவசரப்படப்பிடாது கண்டியளோ ??😀

12 hours ago, குமாரசாமி said:

 அக்காளுக்கு பலத்த போட்டிகளுக்கிடையிலை ஒரு கனாக்காலம் நடந்திருக்குடோய்......😎

பள்ளிக்கூடம் போகேக்கையே நாங்கள் பேர் சொல்ல மாட்டமாம்....அவர்.....அவர்....அவர்.....கமலகாசன் மாதிரியாம்...:grin:

அட அட அட என்னமா இரசிச்சு வாசிக்கிறியள் 😁

12 hours ago, மல்லிகை வாசம் said:

நமது பள்ளிக்காலத்தில் வின்சர் தியேட்டர் பக்கம் போகும் போது இங்கு ஒரு காலத்தில் நிறையப் படங்கள் ஓடினதாம் என்ற அளவில் தான் தெரியும்.

எமது தலைமுறை தவறவிட்ட அந்த இனிய நாள் இனிய அனுபவங்களைத் தொடருங்கள் சுமே அக்கா. அந்தக் கால யாழ்ப்பாணம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்! 😊

யாழ்ப்பாணப் புதினம் எழுத வெளிக்கிட்டா என்ட புதினத்தை எப்ப எழுதி முடிகிறது மல்லிகைவாசம் ??😃

10 hours ago, நிலாமதி said:

தொடருங்கள்  கனாக் காலத்தை   காண ஆவல் 

நன்றி அக்கா வரவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

நாங்களும் 70 களில் பெல்போட்டம் போட தொடங்கியவர்கள் தான்.இப்போ அதை நினைக்க வெட்கமாக இருக்கிறது.

ஆடறுக்க முதல் ...................கொஞ்சம் பொறுங்கோ.

80  களிலேயும் பெல்பொட்டம் தானே

9 hours ago, ஏராளன் said:

ஒரு பொண்ணு மனம் திறந்து தன்ர கதையச் சொல்ல விடுங்கோ!
நீங்க சொல்லுங்கோ அக்கா.(விடுப்பு கேக்கிற குணம் என்று பேசவேணாம்)😀

அதானே???? முதல்ல கதையாகி சொல்ல விடவேணும் 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தலான ஆரம்பம்........ அட்டகாசமாய் எழுதுங்கோ ,இந்த மாமிமார்தான் பெரிய பிரச்சினை .......!  😁

Link to comment
Share on other sites

23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ்ப்பாணப் புதினம் எழுத வெளிக்கிட்டா என்ட புதினத்தை எப்ப எழுதி முடிகிறது மல்லிகைவாசம் ??😃

யாழ்ப்பாணப் புதினம் என்றில்லை அக்கா. 70, 80களில் நம்மவர்களின் வாழ்க்கை முறையை உங்கள் கதையூடாக மேலும் அறியலாம் என்று தான். 

சரி, உங்கள் புதினத்தைத் தொடருங்கள் அக்கா! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவர் கமலஹாசன் மாதிரியெண்டு சொல்லி முடியமுதலே உங்கட கற்பனை எப்பிடி எல்லாம் ஓடுது எண்டு எனக்கு விளங்குது. அதுக்காக நான் கண்டபடி கற்பனையில் மிதக்கேல்லை.
படம் ஓடிக்கொண்டு இருக்குது. பின் பக்கம் இருந்த எவனோ காலை என் கதிரைக்கு மிண்டு கொடுத்தானோ என்னவோ அடிக்கடி கதிரை ஆட்டுப்பட்டுக்கொண்டே இருக்குது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கொங்சம் முன்னே நகர்ந்து இருக்கிறேன். எத்தனை நேரம் நிமிர்ந்து இருப்பது. மீண்டும் சாய்ந்தால் அதே தொந்தரவு. நான் செய்வதறியாது நெளிந்தபடி தினேஷின் பக்கம் பார்க்க,அவர் என்னைப்பார்த்து என்ன என்பதுபோல் சைகையால் கேக்கிறார். பின்னுக்கு கால என்று மட்டும் சொல்லிவிட்டு பின்பக்கம் திரும்பவே பயந்து திரையைப் பார்த்துக்கொண்டு இருக்க, எடடா காலை என்று தினேஷ் பின் பக்கம் பார்த்துச் சொல்ல எனக்கு நெஞ்சுக்குள் பதட்டம் வந்து சேர்க்கிறது. உடனே தினேஷ் எழுந்து நிவேதா இதில வந்து இருங்கோ என்றபடி தன் இடத்தைக்காட்டி விட்டு என்னிடத்தில் வந்து அமர்கிறார். உடனே மாமியு ம் மற்றவர்களும் என்ன என்ன என்று என்னைக் கேட்கிறார்கள். சத்தம் போடாமல் படத்தைப் பாருங்கோ என்று தினேஷ் கூற மற்றவர்கள் அடங்கிப் போகின்றனர்.

இடைவேளைக்கு அறிவிப்போடு லையிற் போட அப்பதான் நான் சிறிது துணிவுவரப்பெற்று  முதலில் இருந்த கதிரையைப் பார்க்கிறேன். இரண்டு கதிரைகளிலும் எவரையும் காணவில்லை. ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வாறன் என்று எழுந்த தினேசை நான் அவசரமாகத் தடுக்கிறேன். நீங்கள் போகாதேங்கோ அவன் வெளியில நிண்டு எது பிரச்சனை பண்ணினாலும் என்று பயத்துடன் கூற தினேசும் வெளியே செல்லவில்லை. மாமிமார் தான் குனிந்து என்னடி நடந்தது என்று இரகசியமாக கேட்கினம். நான் சொல்ல திரும்ப வருவங்களோடி என்று பயத்துடன் கேட்கிறா மாமி. எனக்குத்தெரியுமே  என்று சொல்லிவிட்டு படம் தொடங்கியதும் பார்த்தால் அவங்களைக் காணேல்லை. மனதுக்குள்  பெரிய  நின்மதியோட படம் பார்த்து முடிச்சாச்சு.

படம் பார்த்து முடிய எல்லாரும் சுபாஷ் கபேக்கு ஐஸ்கிரீம் குடிக்கப் போவம் எண்டு தினேஷ் எங்களைக்கூட்டிக்கொண்டு போனார். இரண்டு மாமிகளையும்  தவிர்த்துவிட்டு எனக்குப் பக்கத்திலேயே நடந்துவர முயற்சி செய்தும் முடியேல்லை. ஏனெண்டா என் தம்பி என்னை விட்டு அங்காலை இங்காலை அரக்காமல் என்னோடயே ஒட்டிக்கொண்டு வந்ததுதான் காரணம். கடைக்கு உள்ளபோன  உடன அந்த ஏசி சுகமே ஒருவித நின்மதியைத் தர நான் கடைசியாக நிக்கிறன். நாலுபேர் இருக்கிற ஒரு மேசைதான்  காலியாக கிடக்கு. தம்பி உடன ஒரு கதிரையில இருக்க மாமிமார் இரண்டுபேரும் ஒராளை ஒராள் பாத்துக்கொண்டு நிக்க அவையைப் பார்த்து இருங்கோவன் என்று தினேஷ் சொல்ல மாமிமார் வேற வழி இல்லாமல் எதிரும் புதிருமாப் போய் இருக்கினம். மிகுதி நாங்கள் மூன்று பேர். இருப்பது ஒருகதிரை. உடனே தினேஷ் நிஷா நீ இதில இரு என்றுவிட்டு சுற்றிவரப் பார்க்கிறார்.

அடுத்தவரிசையில் சுவரோரம் இரண்டு இருக்கைகள் காலியாக இருக்க வாங்கோ நிவேதா என்றபடி நகர வெளிக்கிட, பின்னால் இரு மேசைகளில் இருந்தவர்களும் எழும்ப, பார்த்துக்கொண்டிருந்த தங்கை அண்ணா எல்லாரும் பின்னுக்குப்போவம் என்றபடி எழுந்து வர முன்னே நின்றுகொண்டிருந்த நான் வேறுவழியின்றி முதலில் போய் சுவர் பக்கம் இருக்காது மற்றப்பக்கமாக இருந்துகொள்ள எனக்குப்பக்கத்தில் என்தம்பி வந்து இருக்க எதிர்ப்பக்கம் தினேஷின் தங்கையும் ஒருமாமியும் இருக்க மறுபக்கத்தில் தினேசும் மற்ற மாமியும் போயிருக்க எனக்கு அந்தக் குளிரிலும் எரிச்சல் எட்டிப் பார்க்கிறது.  

அவர் எல்லாருக்கும் இரண்டு இரண்டு ரோல்ஸ் சொல்ல அப்ப ஐஸ்கிரீம் இல்லையோ என்கிறான் என் தம்பி. அது கட்டாயம் வரும். முதல்ல இதைச் சாப்பிடுங்கோ என்று சொல்லி வாய் மூட முதல் ரோள்ஸ் வருது. அந்தக்காலத்தில் அடிக்கடி சாப்பிடாததில ரோள்ஸ் நல்ல சுவையா இருக்கும். அதுவும் நாங்கள் உப்பிடி வெளியில போனால்த்தான் அவற்றையெல்லாம் சாப்பிடுவது. சாப்பிட்டுமுடிய ஐஸ்கிரீம் வர நாங்களெல்லாம் அதை சாப்பிடுறதில மும்மரமாக இருந்தமே தவிர எனக்கு ஏற்பட்ட எரிச்சல்கூட ஐஸ்கிரீமின்ரை சுவையில் இல்லாமல் போட்டுது.

எல்லாக் கப்பும் காலியாக இன்னும் ஒண்டு ஓடர் செய்யவோ என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார். தனியா இருந்தால் நான் ஓம் என்றுதான் சொல்லியிருப்பன். ஆனா மற்றவையும் முக்கியமா மாமிமாருக்கும் ஏன் இரண்டாவதை வாங்கிக் குடுக்கவேணும் என்று ஓடிய எண்ணத்தில வேண்டாம் வேண்டாம் வயிறு புல் என்கிறேன் நான்.

அதுக்குப்பிறகு பஸ்சுக்குப் போய் நிண்டா  காங்கேசன்துறை போற பஸ் நிறைய ஆட்களோட நிக்குது. இது போய் அடுத்த பஸ் வந்து .... பிறகு அது எப்ப வெளிக்கிடுதோ .. நிண்டு அடுத்ததில போவமோ என்று என்னைப்  பார்த்தே கேட்கிறார். என்ன இவர் என்னைப் பார்த்து கேட்க மாமி ஆட்கள் என்னவும் நினைக்கப் போயினம் எண் ட பயமும் மனதில எட்டிப் பாக்குது. இல்லை இதிலையே போவம் என்கிறேன் நான்.

நான் வேம்படியில் படித்ததால் ஒவ்வொருநாளும் பஸ்ஸில் போய்ப் பழக்கம். மாமியும் தம்பியும் தினேஷின் தங்கையும் அடிக்கடி போகாதபடியால் முண்டியடித்து பஸ்ஸில் எற கடைசியாய் நானும் தினேசும் ஏறுகிறோம். ஒரு ஐந்து நிமிடத்தில் பஸ் வெளிக்கிட்டு நிடவைபோனவை ஓடிவந்து ஏறி, இனியாரும் எற இடமில்லையென்ற அளவுசனம். நான் எப்போதும் பஸ்ஸின் முன்பக்கக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் வழக்கம். அக்கம் பாக்கக் கண்ணாடியைப் பார்த்தால் தலை சுற்றும். எனக்கு முன்னால் நின்ற மாமி என்னையே முறைத்துப் பார்க்கிறா என்று யோசித்தபடி திரும்பினாள் எனக்குப் பின்னால் மிக அருகில் தினேஷ் நிற்பது தெரிகிறது. ஒரு செக்கன் உடல் முழுதும் ஒரு சந்தோசம் பரவ மாமியின் பார்வை மறுசெக்கன்  நினைவில் வந்து  என் சந்தோசத்தை சடிண் பிரேக் போட்டு நிறுத்த நான் என் உடலை ஒடுக்கியபடி நின்றுகொண்டேன்.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ,உங்களுக்கு நல்ல கொசிப்புகளை 😂எழுதுற திறன் இருக்கு...தொடருங்கோ ...நானும் விடுப்பறிய🤣 ஆவல்😃 ...20 வயது இளைஞருக்கு ,அவ்வளவு பேருக்கும் செலவழிக்க  அந்தக் காலத்திலேயே நல்ல காசு இருந்திருக்கு....ரியோ கூல் பார் எவ்வளவு காலமாய் யாழில் இருக்கு?
 

20 hours ago, Nathamuni said:

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ…

முந்தி ஒரு காதற் கதையும்,கல்யாணம் கட்டின கதையும் சுமோ எழுதினவல்லவோ! அது யாற்றை  கதை😕  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

சுமோ,உங்களுக்கு நல்ல கொசிப்புகளை 😂எழுதுற திறன் இருக்கு...தொடருங்கோ ...நானும் விடுப்பறிய🤣 ஆவல்😃 ...20 வயது இளைஞருக்கு ,அவ்வளவு பேருக்கும் செலவழிக்க  அந்தக் காலத்திலேயே நல்ல காசு இருந்திருக்கு....ரியோ கூல் பார் எவ்வளவு காலமாய் யாழில் இருக்கு?
 

அதையும் சொல்லுறன் ரதி அடுத்த பகுதியில 😆

றியோ இருந்தாலும் நான் முன்னர் ஒரு தடவை கூட அங்கு சென்றதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவவுக்கும் தியேட்டருக்கும் எட்டாப்பொருத்தம் போலை கிடக்கு.......ஏனெண்டால் எல்லாரும் தனகிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமே......!


எவ்வளவு தான் கிரைண்டர்.....அது ...இது என்று வந்தாலும்......அந்த அம்மிக்கல்லில்....அரைக்கும்...சம்பலின் சுவை என்றுமே தனித்துவமானது....!  

பதின்மூன்று....பதினான்கு வயதிலேயே.....இந்தக் கோலமெண்டால்.....?

நினைக்கவே குலைப்பன் எடுக்குது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 8:43 PM, ரதி said:

சுமோ,உங்களுக்கு நல்ல கொசிப்புகளை 😂எழுதுற திறன் இருக்கு...தொடருங்கோ ...நானும் விடுப்பறிய🤣 ஆவல்😃 ...20 வயது இளைஞருக்கு ,அவ்வளவு பேருக்கும் செலவழிக்க  அந்தக் காலத்திலேயே நல்ல காசு இருந்திருக்கு....ரியோ கூல் பார் எவ்வளவு காலமாய் யாழில் இருக்கு?
 

 

 

தங்கச்சி! கூடுதலாய் ஒவ்வொரு லேடீஸ் கூட்டத்துக்குள்ளையும் பணவசதி படைச்ச பாவப்பட்ட சீவன் ஒண்டு பில் கட்டுறதுக்கெண்டே கடவுளாய்   பாத்து படைச்சு வைச்சிருப்பார்..☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 7:20 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படம் பார்த்து முடிய எல்லாரும் சுபாஷ் கபேக்கு ஐஸ்கிரீம் குடிக்கப் போவம் எண்டு தினேஷ் எங்களைக்கூட்டிக்கொண்டு போனார்

ஒரு காலத்தில் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் வேறு வேறு பெயர் போன கடைகள் இருந்தன.
சுபாஸ் றியோ ஐஸ்கிறீம்.(இதில் றியோ பின்னர் வந்தது)
வடைக்கு பெயரே வருதில்லை.(தாமோதரவிலாசோ)
சர்பத் லிங்கம் கூல்பார்.
புட்டு குறுமா மொக்கன்கடை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் வேறு வேறு பெயர் போன கடைகள் இருந்தன.
சுபாஸ் றியோ ஐஸ்கிறீம்.(இதில் றியோ பின்னர் வந்தது)
வடைக்கு பெயரே வருதில்லை.(தாமோதரவிலாசோ)
சர்பத் லிங்கம் கூல்பார்.
புட்டு குறுமா மொக்கன்கடை.

 

கீரை வடையெண்டால்.....மலேயன் கபே...!

கடலை வடையெண்டால்....கன்ரீன் நடராசா அண்ணை....!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

கடலை வடையெண்டால்....கன்ரீன் நடராசா அண்ணை....!😀

ஏன் போண்டா எப்படி?
ஒன்று தின்றா 3-4 மணிநேரம் தாக்குப் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 9:51 PM, குமாரசாமி said:

இவவுக்கும் தியேட்டருக்கும் எட்டாப்பொருத்தம் போலை கிடக்கு.......ஏனெண்டால் எல்லாரும் தனகிறாங்கள்.

🤓

On 3/17/2019 at 10:36 PM, புங்கையூரன் said:

தொடருங்கள் சுமே......!


எவ்வளவு தான் கிரைண்டர்.....அது ...இது என்று வந்தாலும்......அந்த அம்மிக்கல்லில்....அரைக்கும்...சம்பலின் சுவை என்றுமே தனித்துவமானது....!  

பதின்மூன்று....பதினான்கு வயதிலேயே.....இந்தக் கோலமெண்டால்.....?

நினைக்கவே குலைப்பன் எடுக்குது...!

போதாது மூடிக்கொண்டு படுங்கோ😆

15 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! கூடுதலாய் ஒவ்வொரு லேடீஸ் கூட்டத்துக்குள்ளையும் பணவசதி படைச்ச பாவப்பட்ட சீவன் ஒண்டு பில் கட்டுறதுக்கெண்டே கடவுளாய்   பாத்து படைச்சு வைச்சிருப்பார்..☹️

🤔🤔

9 hours ago, புங்கையூரன் said:

கீரை வடையெண்டால்.....மலேயன் கபே...!

கடலை வடையெண்டால்....கன்ரீன் நடராசா அண்ணை....!😀

மலையன் கபே தெரியும் மற்றது கேள்விப்படாதே இல்லை.

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் வேறு வேறு பெயர் போன கடைகள் இருந்தன.
சுபாஸ் றியோ ஐஸ்கிறீம்.(இதில் றியோ பின்னர் வந்தது)
வடைக்கு பெயரே வருதில்லை.(தாமோதரவிலாசோ)
சர்பத் லிங்கம் கூல்பார்.
புட்டு குறுமா மொக்கன்கடை.

 

நான் அங்கே இருக்குமட்டும் சுபாஸ்கபேக்கு மட்டும்தான் போனது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் அங்கே இருக்குமட்டும் சுபாஸ்கபேக்கு மட்டும்தான் போனது

அத்தாருக்கு அது மட்டும் தான் தெரியும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

அத்தாருக்கு அது மட்டும் தான் தெரியும் போல.

இஞ்ச உப்பிடிக் கதைக்கக் கூடாது

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 3

சினிமாவுக்குப் போனதன் பிறகு அடுத்த நாள் தினேசும் தங்கையும் திரும்பப் போட்டினம். நாங்களும் பள்ளிக்கூடம் சோதினை எண்டு எங்கடபாட்டைப் பாக்க வெளிக்கிட்டிட்டம். அப்ப போனும் இல்லை உந்த முகலாலும் இல்லை. தினேசும் ஒரு எட்டு ஒன்பது மாதங்களா வீட்டுப்பக்கம் வரவும் இல்லை. அன்ரியும் ஆசிரியை எண்டதனால பள்ளிக்கூட லீவு விடேக்குள்ளதான் யாழ்ப்பாணம் வருவா. அப்பத்தான் அம்மா எழுதின கடிதத்துக்கு தான் இம்முறை லீவுக்கு வரும்போது எங்களை மன்னாருக்கு கூட்டிப்போவதாக அன்ரி எழுதியிருந்தா.

எனக்கு தினேசும் அங்கே இருக்கிறார் என்பதைவிட தினேஷின் தங்கை வர்ணித்து எங்களைக் கடுப்பேற்றும் வயல்வெளிகளும் வாய்க்கால்களும் பெரிய தாமரைக்குளமும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் என்னும் அவாவை என்னுள் ஏற்படுத்தியிருந்தன. அத்தோடு போற வழியில் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கும் போய் பாலாவியில் குளிக்கலாம் என்று கடிதத்தில் எழுதியிருந்த வரிகளும் ஒரு எல்லையற்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்தன. எட்டு வயதாக இருக்கும்போது பெற்றோருடன் கேதீச்சரத்துக்குப் போனதும் படிகளில் இருந்தே காலையில் நடுங்கிநடுங்கிக் குளித்ததும் பாலாவின் மேல் பரவியிருந்த புகைமூட்டம் போல  நினைவில் நின்றாலும்  தெளிவில்லாமல் இருந்தது.

அன்ரி வீட்டுக்கு வந்தவுடன் இம்முறை எங்கள் அலாதியான வரவேற்பும் மாறிமாறி நாங்கள் கேட்ட
கேள்விகளும் அவவைத் திக்குமுக்காட வைத்தன. எண்ணி ஐந்தே நாள்த்தான் அங்கு நிற்பதாகத் திட்டம். எங்களை அம்மா அதுவரை தனியே அனுப்பியதில்லை. அதனால் அன்ரியுடன்தான் என்றாலுமே அதிகநாள் நிக்கவிட விம்பவில்லை.

அங்க யாற்ற வீட்டில நிக்கிறது என்று மாமி கேட்டா. தினேஷ் ஆக்களின்ர வீட்டிலதான் என்று அன்ரி சொன்னா.
தினேஷின் அப்பா ஒரு பெரிய கடையும் வேறு இரு வியாபாரங்களும் செய்துகொண்டு இருந்தாராம். திடீரெண்டு ஒருநாள் விபத்தில இறந்துபோக மூத்த மகனான தினேஷ் A/L ஓட படிப்பை நிப்பாட்டிப்போட்டு வியாபாரத்தையும் வயலையும் பாக்கிறாராம் என்று அன்ரி சொல்ல அப்ப அதுக்குமேல அவர் படிக்கேல்லையோ என்று நான் கேட்டேன். தாய் படிக்கச் சொன்னதுதான். ஆனால் கேட்காமல் நல்ல வடிவா குடும்பத்தைப்பாக்கிது. நல்ல பொறுப்பான பெடியன் எண்டெல்லாம் அன்ரி அம்மாவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தா. எனக்குச் சினிமாக் கதை கேட்கிறமாதிரி இருந்ததுதான் ஆனாலும் மேல படிக்கேல்லை எண்டதும் ஒரு நெருடலாத்தான் இருந்தது.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில இருந்தே எனக்கான பொருட்களை தங்கைகளானானும் சரி நான் யாருடனும் பங்கிடுவதில்லை.  சவுக்காரம், துவாய், பவுடர், பொட்டு, ரிபன்  .....இப்பிடி சிலது. நான் மூத்த பிள்ளை எண்டதால சலுகைகளும் கொஞ்சம் எனக்கு கூடத்தான். அதனால் வீட்டில இருந்த ஒரு வடிவான பாக்கில என் பொருட்களையெல்லாம் அடுக்கினன் . தம்பி தங்கையினதை இன்னொரு பாக்கில் அடுக்கி தம்பியின் பொறுப்பில் கொடுத்தாச்சு. இங்கேயிருந்து எல்லாம் காவத் தேவையில்லை. என்னட்டை எல்லாமிருக்குத்தானே என்று அன்ரி கூறியும் நான் கேட்கேல்லை.

விடியக் காலை ஏழு மணிக்கு வீட்டில இருந்து வெளிக்கிட்டு நாங்கள் ஏழுபேரும் பஸ்ஸில யாழ்ப்பாணம் வந்து அங்கேயிருந்து திருக்கேதீஸ்வரம் நோக்கிப் போறம். விடிய இடியப்பமும் சொதி சம்பலோட உருளைக்கிழங்குப் பிரட்டலும் அம்மா செய்து தந்ததால் பசியில்லை. ஆனால் தண்ணி விடாய். அம்மா கரைச்சுத் தந்த எலும்மிச்சைத் தண்ணியும் குடிச்சு முடிஞ்சுது. பஸ்ஸில யன்னல் கரையில இருந்து வாற காத்தும் காலை வெய்யிலும் நல்லாய் இருக்க இயற்கையை ரசித்துக்கொண்டு வந்தாலும் நீண்ட தூர பயணம். கண்ணை சொக்கிக்கொண்டு வர கொழும்பில என்னை விட்டுவிட்டு இறங்கினமாதிரி இவையும் இறங்கினா என்ன செய்யிறது என்ற பயத்தில வந்த நித்திரையை அடிச்சுக்க கலைச்சுப்போட்டு பார்த்துக்கொண்டே இருந்தால் எனக்குப் பக்கததில இருந்த தம்பியும் சின்ன மாமியும் அன்ரியோட இருந்த தங்கையும் நல்ல நித்திரை.

மன்னாருக்குப் போய் இறங்க பதினோரு மணியாய் போச்சு. பிறகு திருக்கேதீஸ்வரம் போக மத்தியானம் ஆச்சு.
நல்ல வெய்யிலுக்க போய் பாலாவியில குளிக்க இரண்டு படியை விட்டு இறங்க அன்ரி விடேல்லை. விட்டாலும் நாங்கள் தள்ளிப்போயிருக்க மாட்டம். ஏனெண்டால் ஒருத்தருக்கும் நீச்சல் தெரியாது என்பது ஒன்று. குளித்துக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் பெண்களும் கிழவிகளும் தான். ஒரேயொரு ஆண்  மட்டும் நீந்திக்கொண்டு இருக்க நாங்கள் அதிசயமாய் பாத்துக்கொண்டு நிண்டம். குளிச்சு முடிய ஒருமண்டபத்தில போய் உடுப்புகளை மாத்திப்போட்டு கோயிலுக்குள்ளே போய் சுத்திக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்தால் சரியான பசி.

அன்ரி எங்களைக் கூட்டிக்கொண்டு ஒரு சாப்பாட்டுக் கடைக்கு கூட்டிக்கொண்டு போய் வடையும் டீயும் வாங்கித் தர, பசியோட இருந்த எங்களுக்கு என்னடா இது இதை வாங்கித் தந்து பேக்காட்டிறாவே என்ற நினைப்பு ஒடியது. தினேசின்ர அம்மா எங்களுக்கு எல்லாம் சமைச்சிருப்பா. இன்னும் ஒருமணித்தியாலத்தில அங்க போயிடலாம் என்று அன்ரி சொல்ல மனம் நின்மதியானது. பஸ்ராண்டில போய் நிக்கேக்குள்ளயும் பாக்கில வச்சிருந்த பிஸ்கற்றை எங்களுக்குத் தர வயிறு நிறைஞ்சிட்டுது.

தினேஷ் வீட்டுக்குப்  பக்கத்திலேயே பஸ்ராண்ட். பஸ்ஸால நாங்கள் எல்லாரும் இறங்கவே  தினேசும் தங்கை தம்பி எல்லாம் பஸ்ராண்டில நிக்கினம். வீட்டுக்குள்ள போனதும் வாங்கோ பிள்ளையள்  எண்டு தினேஷின் அம்மா எங்களை ஒவ்வொருவராகக் கட்டி அணைக்கிறா . பெரிய வீடு. எங்கள் பாக்குகள் பைகளை எல்லாம் இங்கே கொண்டு வந்து வையுங்கோ எண்டு அன்ரி தன் அறைக்குள் கூட்டிக்கொண்டு போனா. பாக்குகளை வைத்துவிட்டு வந்து விசிற்ரிங் ரூமில வந்து இருந்தால் சுவர்களில் ஜேசு, மாதா படங்கள். இவை கிறிஸ்தவரா என்று பெரிய மாமி அன்ரியை இரகசியமாகக் கேட்க அன்ரி ஓம் என்று மெதுவாகக் கூறுவது என் காதிலும்  கேட்கிறது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது ஒருத்தரையும் இந்தப்பக்கம் காணேல்லை. கிழுகிழுப்பா இருந்தாத்தான் வருவினைபோல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.