Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 6 

வீட்டுக்கு வந்து சேர்ந்தபிறகும் என் கோபம் ஆறவேயில்லை. கள்ளப்பயல் எனக்கும் றூட் போட்டபடி மாமிக்கும் லேஞ்சி வாங்கிக் குடுத்திருக்கிறானே என்று படங்களில் வாற வில்லன் போல் அவர் தெரிஞ்சார். ஒருவாரமா மாமியோடும் கதைக்கேல்லை. அவை வீட்டுப்பக்கம் எட்டியும் பாக்கேல்லை. என்ர கவலையை ஆருக்கும் சொல்லவும்முடியாமல் தவிச்சுக்கொண்டிருந்த நேரத்திலதான் ரஞ்சிமாமி ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்தா. "என்னடி உன்னை வீட்டுப்பக்கமே காணேல்லை. வருவாய் எண்டு பாத்துக்கொண்டிருந்தனான்" எண்டா. "ஏன் என்ன அலுவல். எனக்கு படிக்கநிறைய இருக்கு என்றேன்." "நாங்கள் வந்து ஒரு கிழமையாகேல்லை. அதுக்குள்ள கனநாள் ஆனமாதிரி இருக்கு. ஆனா அவர் பொறுக்கேலாமல் எனக்குக் கடிதம் போட்டிருக்கிறார் என்றா". எனக்கு உடனே சந்தேகம் எழ "என்ன துணிவில எழுதினவர்? தற்செயலா உங்கட அம்மா அப்பா கையில சிக்கியிருந்தால் "?? என்றேன் நான்.

நான் இந்த வருசம் வீட்டிலதானே நிப்பன். அப்பா வேலைக்குப் போவிடுவர். அம்மா குசினீக்குள்ளதானே இருப்பா. நான்தான் அவருக்குக் கடிதம் போடச் சொன்னனான் என்றுவிட்டு என்னைப்பார்க்க முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டக்கூடாது என்று ஓ என்றேன். ஆனாலும் என் முகம் காட்டியதோ அல்லது சும்மா கேட்டாவோ ஏனடி உன்ர முகம் ஒரு மாதிரி இருக்கு என்று. "ஏன் ஒரு மாதிரி. என்ர நோமலாத்தான் இருக்கு. உங்களுக்குத்தான் இப்ப எல்லாம் மாறிமாறித் தெரியுது" என்றுவிட்டு நான் அப்பால் போய்விட்டேன். 

என்னை நினைக்க எனக்கே கேவலமாய் இருந்துது. ஏன் இப்பிடி என்னை ஏமாற்றினவர் என்று எண்ணியெண்ணி மாய்ந்துவிட்டு, அவர் என்னட்டைக் காதலைச் சொல்லேல்லையே. நானாக்க் கற்பனை செய்தேனோ என்றெல்லாம் ஏதேதோ எண்ணி மனம் குமைந்துவிட்டு திடமாக அவரைப்பற்றி இனி நினைத்தே பார்ப்பதில்லை என முடிவெடுத்து அதன்படி நடக்கத் தொடங்கினேன்.

நான் ரஞ்சி மாமியுடன் கதைக்காததை அவதானித்த அம்மா ஏன் உவள் ரஞ்சியோட நீ கதைக் கிறேல்லை. உங்களுக்குள்ள ஏதும் பிரச்சனையோ என்று கேட்க, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சிரித்து மழுப்பிவிட்டுச் சென்றுவிட்டேன். இரண்டுமாதம் போனபின் திரும்பவும் மாமி நான் நிக்கிற நேரமா வீட்டை வந்து "எடி அவர் அஞ்சாவது கடிதம் போட்டிருக்கிறார்" என்று முடிக்க முதல் "அவர் அஞ்சாவது போட்டாலென்ன பத்தாவது போட்டால் என்ன. எனக்கு இனிமேல் வந்து சொன்னியள் எண்டா அம்மாட்டைச் சொல்லிப்போடுவன்" என்றவுடன் மாமி வெலவெலுத்துப்போய் ஒண்டும் சொல்லாமல் போட்டா. அதுக்குப் பிறகு ஆறு மாதமா மாமியும் என்னோட கதைக்க வரேல்லை. நானும் எல்லாத்தையும் மறந்து என்ர அலுவலைப் பாக்கத்தொடங்கீட்டன். 

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ரியூட்டறி. என் நண்பியின் அத்தான் தான் கணித ஆசிரியர். என் அங்கு என் நண்பியையும் வந்திருந்து படிக்கும்படி அத்தான் காறன் சொல்ல அத்தனை பெடியளுக்குள்ளும் தனி ஒருத்தியாய் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு எடி நீயும் வாடி என்று கரைச்சல் தர நானும் கணிதபாடத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் ரியூசனுக்குப் போகப்போறன் என்றேன். எங்கே என அம்மா கேட்க நான் உதுல பக்கத்திலதான் என்று விபரம் சொன்னேன். அம்மாவும் உடனே ஓம் எண்டிட்டா. OL லுக்குப் பிள்ளை நல்லாத்தான் படிக்குது எண்டு அம்மாட எண்ணம். 

நானும் அவளும் படிக்கத் தொடங்கினபிறகு இன்னும் மூண்டுபேர் எங்களோட சேர முன் வாங்கில போய் இருப்பம் எண்டு சொல்லி படிப்பில கவனத்தோட இரண்டுநாள் இருக்க, முன் வாங்கு வேண்டாமடி. பெடியள் பின்னால இருந்து குறுகுறுவென்று பாக்கிறாங்கள் போல முதுகு கூசுதடி என்று சொல்ல நாங்கள் பின் வாங்கை நிறைத்துக்கொண்டம்.

5-6 மணிவரை கணிதம். 6-7 மணிவரை விஞ்ஞானம். ஏழுக்கு வீட்டை. வீட்டில் தங்கை தம்பியுடன் என்னதான் செய்யிறது. அதனால அம்மாவுக்கு ரியூசன் எட்டுமணிவரை என்று சொல்லிப்போட்டு பெட்டையள் சிலர் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு எட்டு மணிக்கு AL பெடிபெட்டைகளின்  ரியூசன் முடிய வீட்டை போறதை வளக்கமாக்கிக்கொண்டம். 

என்ர வீட்டுக்கு சுத்திப் போக ஏழு நிமிட நடை. பக்கத்து ஒழுங்கையால போக மூன்று நிமிடங்கள் போதும். ஆனால் கும்மிருட்டு. எனக்குத் தனிய உதுக்குள்ளால போகப் பயமாய் இருக்கு. என்னை கொண்டுபோய் விடடி எண்டு சொல்ல அவள் திரும்பத் தனிய வர தனக்குப் பயமாய் இருக்கு என்று சொல்ல அத்தான் காறர் சொன்னார் எடேய் உந்தப் பெற்றோல் மக்ஸ்சைக் கொண்டுபோய் பிடிச்சுக்கொண்டு நில்லுங்கோ நிவேதா போகுமட்டும் என்றார். அன்றிலிருந்து யாராவது ஒருவர் பெற்றோல்மக்ஸ்சைப் பிடித்துக்கொண்டு நிற்க நான் ஓட்டமும் நனையும் வீடுபோய்ச் சேர்ந்திடுவன்.

எங்கட ரியூசன் முடிஞ்சு வெளியே வர ஒரு மூண்டுநாலுபேர் நிண்டு கதைச்சுக்கொண்டு நிப்பினை. அன்று பார்த்து புதிசா ஒருத்தர் அவர்களுடன் நிக்க, ஆரெடி இவன் புதிசாய் இருக்கு என்றேன் நண்பியிடம். கிளிநொச்சியில் இருந்தவை இத்தனைநாளும். தகப்பன் இப்ப மாற்றலாகி இங்க வந்திருக்கினை என்றும் இதே ஊரவைதான். உதில முன்னுக்குத்தான் வந்திரிக்கினை, புதிசா வந்ததால் ஒரு பிறெண்சும் இல்லை. அதுதான் இவங்களோட வந்து கதைச்சுக்கொண்டு நிக்குது ஆள் என்கிறாள்.

நான் சாதாரணமாக ஊரப்பெடியளைக் கணக்கிலையும் எடுக்கிறேல்லை. அவங்களும் பலரும் அம்மா அப்பாட்டைப் படிச்சபடியால் என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டுவதில்லை. ஆனால் பகிடிவிட்டுக் கதைப்பாங்கள். ஒருமாதமாப் பாக்கிறன் புதியவர் வகுப்புத் தொடங்க முதலும் முடியவும் வந்து பெடியளோட கதைச்சுக்கொண்டு நிக்கிறார். ஆனால் அவரைத் திரும்பியும் பார்ப்பதில்லை. அன்று ஏலெவல் ஆட்களின் வகுப்பு முடிய நான் வீட்டை போக வெளிக்கிட ஒருத்தன் பெற்றோல்மக்சைத் தூக்கிக்கொண்டு வாறான். மூண்டுநாலு பெடியள் வெளியில நிக்கிறாங்கள். நான் ஒழுங்கைக்குள்ள அப்பதான் காலெடுத்து வைக்கிறன். 

உங்களுக்கு வேற வேலை இல்லையோடா இவவுக்கு ஒவ்வொருநாளும் விளக்குப்பிடிக்கிறதுக்கு??? சுத்திப்போனால் தேஞ்சிடுவாவோ? என்று புதியவரின் குரல் என் காதுகளில் நாராசமாய் விழ எரிச்சலும் கோபமும் ஒருங்கே வர " ஏன் உங்களையே விளக்குப் பிடிக்கச் சொன்னனான். உதில நிண்டு தூங்காமல் போய் பாக்கிற அலுவலைப் பாரும்" என்கிறேன். உடனே அவர் " சரிதான் போடி வாயை மூடிக்கொண்டு என்கிறார். நீ வாயை மூடிக்கொண்டு போடா என்றுவிட்டு நான் ஒரே ஓட்டமாக ஓடி வீட்டுக்குள்ளே போக " ஏன் இப்பிடி ஓடி வாறாய்என்ற அம்மாவுக்கு நாய்க்குப் பயந்து ஓடி வந்தனான் என்றுவிட்டு முகம் கழுவச் செல்கிறேன். எல்லோரும் கொல்லென்று சிரித்த சிரிப்பொலி அடிக்கடி காதில் ஒலித்தபடி இருக்க நெஞ்சில் ஒரு பயமும் ஏற்பட்டது.

 

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமே , கதை சுவையாக போகுது. நானும் தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நீர்வேலியான் said:

சுமே , கதை சுவையாக போகுது. நானும் தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருக்கிறேன் 

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாயாடி பிள்ளை தான்!
சுமே அக்கான்ர தைரியத்த பாராட்டி ஒரு பட்டம் குடுக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் வாசிக்கோணும் என்டது என் தலையெழுத்து 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஏராளன் said:

நல்ல வாயாடி பிள்ளை தான்!
சுமே அக்கான்ர தைரியத்த பாராட்டி ஒரு பட்டம் குடுக்கலாமே?

வேண்டாம் எண்டு சொல்வேனா??🤪🤪

37 minutes ago, ரதி said:

இதை எல்லாம் வாசிக்கோணும் என்டது என் தலையெழுத்து 😁
 

பின்ன விட்ட குறை தொட்டகுறை எண்டிறது இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 7

அடுத்த நாள் ரியூசனுக்கு வர அந்தக் கும்பல் முதலே வந்து நிக்கினம். எனக்கு கொஞ்சம் புஜம் தான் இருந்தாலும் பயம் இல்லை என்று காட்ட தலையை நிமித்திக்கொண்டு கடந்து போக எதோ சொல்லி எல்லாரும் கொல் என்று சிரிப்பது கேட்டாலும் எதுவும் பேசாமல் போய் இருந்திட்டன். 

அடுத்த நாளில இருந்து பார்த்தா நான் காலை பள்ளிக்குப் போகேக்குள்ளை, பள்ளி முடிஞ்சு வீட்டை வரேக்குள்ள, நான் வீட்டில நிக்கிற நேரம் பார்த்தது எண்டு புதியவரும் இன்னும் இரண்டு குரங்குகளும் சைக்கிள்ள எனக்குப் பின்னால வாறதும் என்னை விலத்திக்கொண்டு பெல் அடிச்சுக்கொண்டு போறதுவும் மறைமுகமா ஏதும் கதை சொல்லுறதுமா .... முதல்ல எனக்குக்கோபம் வந்தாலும் போகப்போக அதை இரசிக்க ஆரம்பிச்சன். புதியவரின் பெயர் கூட அதன் பிறகுதான் அறிஞ்சன். நான் தற்செயலாக நிமிர்ந்து பார்த்தால் அந்தாள் பார்த்த பார்வை இன்னும் நெஞ்சில நிக்குது. 

ஒரு வாரம் போக நான் பஸ் எடுக்கிற பஸ்டாண்டுக்கு முன்னால வந்து நிக்க ஆரம்பிச்சார் அவர். நான் பயந்த மாதிரியே மற்றப் பெட்டையள்  ஆரடி அது உனக்கு காவலாய்த் திரியிறார் என்று கேட்க, எனக்குத் தெரியாது என்று மழுப்பினாலும் அவரின் பார்வையும் சிரிப்புமெனக்குப் பிடித்துப் போக நானும் அவரை சாடைமாடையாகப் பார்க்க ஆரம்பிச்சன். 

ஒருநாள் நானும் நண்பியும் கதைததுக்கொண்டு இருந்தபோது எம்மிலும் மூன்று வயது குறைவான எங்கள் பக்கத்து வீட்டுக்காரப் பெடியன் ஒரு என்வலப்பை என் கையில் கொண்டுவந்து தர நான் என்ன என்று கேட்க உதயன் அண்ணா தந்தவர் என்று சொல்லிவிட்டு போய்விட்டான். 

அன்புள்ள நிவேக்கு என்று கடிதம் ஆரம்பித்திருக்க எனக்குள் ஒரு சந்தோச ஊற்று பொங்குவதை உணர முடிந்தது.தொடர்ந்து தடதடக்கும் நெஞ்சோடு வாசிக்க மகிழ்வாக இருந்தது.
" சண்டையில் ஆரம்பித்தாலும் என்னால் உங்களை ஒரு நிமிடமேனும் மறந்திருக்க முடியவில்லை. உங்களை விட்டு வேறொருவரை என் வாழ்வில் நினைத்தும் பார்க்க முடியவில்லை. இத்தனைநாள் எந்தவித சலனமும் அற்றிருந்தேன். நீங்கள் எனக்கு சம்மதம் தெரிவித்தால் அதைவிட மகிழ்ச்சி என் வாழ்வில் இருக்காது. உங்கள் சம்மததத்திற்காக காத்திருக்கும் உங்கள் காதலன்" என்று கடிதம் முடிந்திருந்தது.

உடன கையுல ஒரு உதறல் எடுக்க உந்தப் பெடியன் ஆரிட்டையன் போய்ச் சொல்லப்போறானடி என்று சொல்லியபடி கடிதத்தை என் நண்பியிடம் கொடுத்தேன். அவள் சிரித்தபடி வாசிச்சிட்டு உதை நான் எதிர்பார்தது தானடி என்றாள். உடன பதில் ஒண்டும் குடுத்திடாதை. ஆறுதலா யோசிச்சு முடிவெடுப்பம் என்றாள். அதன்பின் ஓம் ஓம் என்று தலையாட்டியபடி அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் மனம் எங்கெங்கோ அலைந்தது.

அடுத்தநாள் அண்ணை கடிதம் கேட்டவர் என்று அந்தப் பெடி வந்து நின்றபோது ‘’போடா இனிமேல் இங்கை வரக்கூடாது “என்று கலைத்துவிட்டாலும் மகிழ்ச்சியும் குழப்பமும் மாறிமாறி ஏற்பட என்னம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்றார் அம்மா. நல்ல பிள்ளைம்போல் ஓலெவல் சோதனைக்கு இன்னும் நாலு மாசம்தான் இருக்கு. அதுதான் என்று இழுத்தேன். முதலே பயப்பிடக்கூடாது. வடிவாப் படிச்சியெண்டா என்ன பயம் எண்டா அம்மா. ஓம்ம்மா என்றுவுட்டு ரியூசனுக்குக் கிளம்பினேன். 

என்னடி என்ன யோசிச்சு வைத்திருக்கிறாய் என்று என் நண்பி கேட்டதுக்கு நான் சம்மதம் என்று இப்பதான் பெடியிடம் கடிதம் குடுத்தேன் என்று கூற விசரி விசரி அவசரப்பட்டிட்டியே என்று திட்டத் தொடங்கினாள். 

விதி என்பது லேசுப்பட்டதல்ல என்பதை அப்போது நான் உணரவில்லை. உணர்ந்தபோது காலம் கடந்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய விதி என்று நீங்கள் குறிப்பிடவில்லை.உதயனை நினைக்கத்தான்....ம்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

யாருடைய விதி என்று நீங்கள் குறிப்பிடவில்லை.உதயனை நினைக்கத்தான்....ம்........!  😁

அடுத்ததா அதைத்தானே சொல்லப்போறன் 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்த இடத்தில நிறுத்திவிட்டு நிற்பாட்டிவிட்டு  போய்விட்டீங்கள். விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் உதயன் 😪அப்ப மாட்டுப் பட்டவர் என்னும் மீள முடியாமல் இருக்கிறார்...அதெல்லாம் இருக்கட்டும் அந்த மன்னார் பெடியனுக்கு என்னாச்யுது? உங்கட மாமியையும் விட்டுட்டாரா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா, (நீங்கள் அக்காவோ அல்லது தங்கச்சியோ தெரியவில்லை)
நல்ல சுவாரஸ்யமாக கதை போகுது. வாசகனை அடுத்து என்ன என்று தேடும் ஆர்வத்தை தரும் விதத்தில் உங்கள் எழுத்து /சம்பவங்கள் நிறைந்து இருக்கிறது...தொடருங்கள்.
ஒரே ஒரு வேண்டுகோள் ...கதையை முழுமையாக முடித்து விட்டு எங்களை போன்றவர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் தாருங்கள். 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

பொறுத்த இடத்தில நிறுத்திவிட்டு நிற்பாட்டிவிட்டு  போய்விட்டீங்கள். விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன் 

விரைவில் எழுதி முடிப்பன்.கவலையை விடுங்கள்😁

4 hours ago, ஏராளன் said:

இது தான் அத்தான் போல!

🤓 இன்னும் ஒரு கிழமை பொறுங்கோவன்.

3 hours ago, ரதி said:

பாவம் உதயன் 😪அப்ப மாட்டுப் பட்டவர் என்னும் மீள முடியாமல் இருக்கிறார்...அதெல்லாம் இருக்கட்டும் அந்த மன்னார் பெடியனுக்கு என்னாச்யுது? உங்கட மாமியையும் விட்டுட்டாரா?
 

அடுத்த பகுதியில வரும் ரதி. பச்சைக்கும் கருத்துக்கும் நன்றி. 

27 minutes ago, Sasi_varnam said:

சுமே அக்கா, (நீங்கள் அக்காவோ அல்லது தங்கச்சியோ தெரியவில்லை)
நல்ல சுவாரஸ்யமாக கதை போகுது. வாசகனை அடுத்து என்ன என்று தேடும் ஆர்வத்தை தரும் விதத்தில் உங்கள் எழுத்து /சம்பவங்கள் நிறைந்து இருக்கிறது...தொடருங்கள்.
ஒரே ஒரு வேண்டுகோள் ...கதையை முழுமையாக முடித்து விட்டு எங்களை போன்றவர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் தாருங்கள். 😍

மிக்க நன்றி சசித் தம்பி வருகைக்கும் கருத்துக்கும்😄 கனடாவில காணேக்குள்ள தங்கச்சி போலவா இருந்தது???😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2019 at 1:22 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடுத்த நாளில இருந்து பார்த்தா நான் காலை பள்ளிக்குப் போகேக்குள்ளை, பள்ளி முடிஞ்சு வீட்டை வரேக்குள்ள, நான் வீட்டில நிக்கிற நேரம் பார்த்தது எண்டு புதியவரும் இன்னும் இரண்டு குரங்குகளும் சைக்கிள்ள எனக்குப் பின்னால வாறதும் என்னை விலத்திக்கொண்டு பெல் அடிச்சுக்கொண்டு போறதுவும் மறைமுகமா ஏதும் கதை சொல்லுறதுமா ....

அதென்ன குரங்குகள்??????  

ஆனால் நாங்கள் லேடீசை மரியாதையாய்த்தான் கதைப்பம் தெரியுமே......😍


  இல்லை தெரியாமல் கேக்கிறன் வாலிப வயசிலை பெல் அடிக்காமல் கிழட்டு வயசிலையே பெல் அடிக்கிறது? 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இது தான் அத்தான் போல!

அத்தான் இவளவு உசாரா இருந்திருப்பாரோ  என்டு ஒரு டவுட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதென்ன குரங்குகள்??????  

ஆனால் நாங்கள் லேடீசை மரியாதையாய்த்தான் கதைப்பம் தெரியுமே......😍


  இல்லை தெரியாமல் கேக்கிறன் வாலிப வயசிலை பெல் அடிக்காமல் கிழட்டு வயசிலையே பெல் அடிக்கிறது? 😎

 

இப்ப மரியாதையாத்தான் கதைக்கிறது. அப்ப அப்பிடித்தான் 😅

22 minutes ago, சுவைப்பிரியன் said:

அத்தான் இவளவு உசாரா இருந்திருப்பாரோ  என்டு ஒரு டவுட்டு.

அத்தார் சரியான உசார்😄

பச்சை தந்த நீர்வேலியானுக்கும் கண்மணி அக்காவுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 7:50 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாக் கப்பும் காலியாக இன்னும் ஒண்டு ஓடர் செய்யவோ என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார். தனியா இருந்தால் நான் ஓம் என்றுதான் சொல்லியிருப்பன். ஆனா மற்றவையும் முக்கியமா மாமிமாருக்கும் ஏன் இரண்டாவதை வாங்கிக் குடுக்கவேணும் என்று ஓடிய எண்ணத்தில வேண்டாம் வேண்டாம் வயிறு புல் என்கிறேன் நான்.

அப்படியே தமிழர்களின் குணம் தெறிக்கிறது 

 

On 3/21/2019 at 4:37 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனாலும் மேல படிக்கேல்லை எண்டதும் ஒரு நெருடலாத்தான் இருந்தது.

ரொம்ப எதிர்பார்க்கப்படாது கண்டியளோ 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

.அதெல்லாம் இருக்கட்டும் அந்த மன்னார் பெடியனுக்கு என்னாச்யுது? உங்கட மாமியையும் விட்டுட்டாரா?
 

இதெல்லாம் ஏன் கேட்கிறியள் அதெல்லாம் கடந்து போன லிஸ்ட் ஆங் 

 

அந்த மனுசனை பார்க்கும் போதே தெரிஞ்சுது உதயன் அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியே தமிழர்களின் குணம் தெறிக்கிறது 

நாங்கள் எப்பவும் உண்மையைத்தான் சொல்லுவம்😎

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த மனுசனை பார்க்கும் போதே தெரிஞ்சுது உதயன் அண்ணை

என்ன தெரிச்சிது ?????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 8

நாங்கள் இருவரும் தனியாக நின்று கதைத்ததுகூடக் கிடையாது. கடிதப்போக்குவரத்து மட்டும்தான். உறை போட்ட புத்தகத்தின் அல்லது கொப்பியின் உறையின் உள்ளே கடிதத்தை வைத்து என் சிறிய தங்கையிடம் அல்லது அந்தப் பெடியனிடம் கொடுக்க  அவரும் தன் சின்னத் தம்பியிடம் அல்லது அவர் நண்பனிடம் கொடுக்க, மற்றவர்களுக்குத் தெரியாது என எண்ணிக்கொண்டு நாம் தொடர்ந்தோம். எங்கள் காதல் கதை அரசல்புரசலாக ஊரில் பரவலாயிற்று.ஆனால் நல்லகாலம் அம்மாவின் காதுக்கு இன்னும் வரவில்லை.

நாலு மாதங்களில் ஓலெவல் சோதினை எல்லாம் முடிய நல்ல நின்மதியாக வீட்டில இருக்க ஆன்ரியும்  விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தா தினேசோடு. எனக்குத் தினேசைப் பார்த்ததும் ஒரு கோபம் எட்டிப் பார்த்ததுதான் எனினும் வீட்டுக்கு வந்தவரிடம் மற்றவர்கள் முன்னால் என் கோபத்தைக் காட்டிட முடியாது சாதாரணமாகவே என் முகத்தை வைத்துக்கொண்டேன். ஆனாலும் பெரிதாக அவருடன் கதைக்காது மாலையில் என் நண்பி வீட்டுக்கு போட்டுவாறன் என்று அம்மாவிடம் சொல்ல, "தினேஷ் நிக்குது. நாளைக்குப் போவன்" என்று கூறியும் இல்லை போட்டுவாறன் என்றுவிட்டுக் கிளம்ப தினேஷின் பார்வையில் என்னை விட்டுவிட்டுப் போகிறாயா என்று கேட்பது போலிருந்தாலும் அதுதான் மாமி வருவா உன்னோடு கொஞ்சிக் குலாவ என்று மனதுள் திட்டியபடி போய்விட்டேன்.   

மாலை ஆறு மணிக்கு நான் வீட்டுக்கு வந்தபோது தினேசைக் காணவில்லை. நான் உள்ளே வரும்போது குசினியில் நின்று அம்மாவும் அன்ரியும் இரவுஉணவு தயார் செய்தபடி கதைத்துக்கொண்டிருந்தார்கள். நான் வந்ததைக் கவனிக்காது அன்ரி அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தா. தினேஷ் போனமாதம் ஒருக்காக் கதைக்கேக்குள்ள என்னட்டைக் கவலைப்பட்டவர். "உங்கடை அக்கா நல்லாத்தான் எங்களைக் கவனிக்கிறா. உபசரிக்கிறா ஆனால் தன்ர மகளைக் கட்டித்தாங்கோ என்று கேட்டால்கட்டித் தருவாவோ" என்று. நான் சொன்னேன் அக்காவும் அத்தானும் ஆசிரியர்கள் என்றபடியால் பிள்ளையளுக்கு படிச்ச மாப்பிளைத்தானே பாம்பினம். அதோட நீங்கள் கிறீஸ்தவர்கள். அதனால அதை பிள்ளை என்று சொல்ல முடியாதுதானே என்று அவரின் வாயை அடக்கீட்டன் என்றா.

அம்மா எதுவோ சொல்வது கேட்டது. ஆனால் என்ன சொன்னா என்று விளங்கவில்லை.
உவர் ஏன் உப்பிடிக் கதை விட்டவர் என்று எனக்கு யோசனையாக இருக்க  நான் அப்போதுதான் வருவதுபோல் குசினிக்குள் வந்து எங்க தினேஷ் அண்ணை போட்டாரோ என்றேன். தெல்லிப்பளையில் யாரையோ பார்க்கப் போட்டார் என்று கூறிவிட்டு அன்ரி இடியப்பத்தைப்பிழியத் தொடங்க நான் உடுப்பை மாற்ற அறைக்குள் சென்றுவிட்டேன்.

சாதாரணமாக நாம் இரவு ஏழுமணிக்கெல்லாம் இரவு உணவை உண்டுவிடுவோம். அதனால் அம்மாவிடம் சென்று சமையல் முடிஞ்சுதோ என்றேன். கொஞ்சம் பொறன் தினேசும் வரட்டும் என்ற அம்மாவிடம் "அவர் வரும்வரையில் பார்த்துக்கொண்டு இருக்கேலாது" என்றேன். சரி சின்னக்கா நானும் நீயும் தினேசோட சாப்பிடுவம். உவைக்குக் குடன் என்று  தம்பி தங்கைகளையும் பார்த்துச் சொன்னா அன்ரி.

நாங்கள் மேசையிலிருந்து சாப்பிட்டு முடிஞ்சு எழும்ப தினேஷ் உள்ளுக்கு வாறார். " என்னை விட்டிட்டு நீங்களெல்லாரும் சாப்பிட்டிட்டியள்போல என்றபடி அவர் வர சீச்சீ சின்னாக்கள் பசிக்குது என்றவை. நானும் அவளும் இன்னும் சாப்பிடேல்லை. நீங்கள் முகம் கழுவிவிட்டுவாங்கோ நாங்கள் சாப்பிடுவம் என்று சொல்ல அதன்பின் நான் அங்கு நில்லாது கையைக் கழுவிவிட்டு அங்காலே போய்விட்டேன். மாமி ஆட்கள் வந்தவையே என்று மெதுவாகத் தங்கையிடம் விசாரிக்க அவள் இல்லையென்று தலையாட்ட என்னடா இது அதிசயமாய் இருக்கு. அவ்வளவு தூரத்தில இருந்து அவவைப் பார்க்க இவர் வந்திருக்கிறார். அவ ஏன் வீட்டுப்பக்கம் வரவே இல்லை. இரண்டு பேருக்குள்ளும் ஏதும் பிரச்சனையோ என்று என் மனம் குழம்பத் தொடங்க யாரிடமும் இதுபற்றிக் கேட்க முடியாமல் தவிப்புடன் நின்றேன் நான்.

முன்பெனில் தினேஷ் வந்தால் கும்பலாகக் இரவிரவாகக் கதைத்துச் சிரித்து வேறுவழியில்லாமல் தூங்கப் போகும் நான் அன்று வெள்ளணவே தூங்கப்போனாலும் தூக்கம் வராமல் மாமி ஏன் வீட்டுப்பக்கமே வரவில்லை என்ற யோசனையோடு புரண்டு புரண்டு படுத்துத் தூங்கிப்போனேன். அதிகாலையில் வழக்கம்போல் விழிப்பு வர நான் எழுந்து வந்து பல் தீட்டி முகம் கழுவிவிட்டு வெளியே வர எதிர்ப்பக்கம் மாமி வீட்டு வேலிக்கு மேலால் மாமியும் தினேசும் கதைத்துக்கொண்டு நிற்பது தெரிய எரிச்சலோடு விடுவிடு என்று வீட்டுக்குள்போய் சுவாமி கும்பிட்டுவிட்டு குசினிக்குள் போகிறேன். அம்மா நான் எழும்பிய சத்தம்கேட்டு தேநீர் தயாரித்து வைத்து குடிக்கும் படி எடுத்துத் தருகிறதா. " தினேஷ் எழும்பிட்டுதா " என்று அம்மா என்னைக் கேட்க நான் ஓம் என்று தலையாட்டுகிறேன்.

தினேஷ் முகம்கழுவிவிட்டுதா என்று கேள் என்று அம்மா சொல்ல நான் பின்பக்கம் சென்று எட்டிப் பார்க்க அவர் முகம் கழுவிக்கொண்டு நிற்பது தெரிகிறது. நான் பார்த்துவிடடேன் என்று மாமி போட்டா போல என எனக்குள் எண்ணிக்கொண்டே வந்து முகம் கழுவிறார் என்கிறேன் அம்மாவிடம். இந்தா கோப்பியைக் கொண்டுபோய் தினேசுக்குக் குடு என்று மக்கைத் தருகிறா. நான் வாங்கிக்கொண்டு அவர் இருந்த அறைக்குள் செல்ல அவர் முகம் துடைத்தபடி இருக்க இந்தாங்கோ கோப்பி என்று அவரைப் பார்க்காமல் நீட்டுகிறேன்.

"என்னை ஏமாத்திப் போட்டீங்கள் நிவேதா" என்று அவர்சொல்ல திடுக்கிட்டுப் போய் அவரை நிமிர்ந்து பார்த்து "என்ன ஏமாத்தினானான்" என்கிறேன். "நான் உங்களையே நினைச்சுக்கொண்டிருக்க நீங்கள் இப்ப உதயனைக் காதலிக்கிறீங்களாம்" என்றவுடன் எனக்கு கோபம் வருகிறது. "என்னையும் நினைச்சுக்கொண்டு மாமிக்கும் கடிதம் குடுத்தனீங்களோ" என்று கேட்கிறேன். அவர் முகம் சுருங்குகிறது. "என்ன விசர்க் கதை கதைக்கிறீர். நான் எங்க கடிதம் குடுத்தனான்" என்று சொல்ல என் உச்சந்தலையில் யாரோ ஓங்கி அடித்ததுபோல் இருக்க, மாமி எனக்கு எல்லாம் சொலீற்றா. நீங்கள் லேஞ்சி வாங்கிக் குடுத்தது வரை என்கிறேன். "என் அம்மா சத்தியமாய் நான் உங்கள் மாமிக்கு ஒண்டும் வாங்கிக் குடுக்கவுமில்லை. கடிதமும் குடுக்கேல்லை. வாங்கோ இப்பவே உங்களுக்கு முன்னால அவவைக் கேட்கிறன்" என்கிறார்.  

என் கால்கள் தொய்ந்துபோக  பக்கத்தில் இருந்த கதிரையில் இருந்து மேசையில் முகம் கவிழ்த்தபடி  அழத் தொடங்குகிறேன் நான். "ஐயோ நிவேதா. உங்கள் அம்மாவுக்கு கேட்கப் போகுது. அழாதேங்கோ.  என்னோட இவ்வளவு பழகின்னீங்கள். எப்பிடி அவ சொன்னதை நம்பின்னீங்கள். என்னட்டை ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே" என்கிறார் தினேஷ். நான் நிமிர்ந்து அவரைப் பார்த்து "எப்பிடிக் கேட்டிருக்கமுடியும் ?? காலம் கடந்துபோச்சு என்கிறேன்".
நான் கேட்டதை மறந்திடுங்கோ. நீங்கள் சந்தோசமாய் இருங்கோ. ஆனாலும் உங்களோட பழகின நாட்கள் எப்பவும் மனதை விட்டுப்போகாது என்றபடி அவர் கட்டிலில் சோர்வாய் அமர நான் எழுந்து வெளியே சென்று அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமலிருக்க முகத்தை மறுபடியும் கழுவி திருநீறு பூசியபடி வெளியே வந்து பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விடத் தொடங்குகிறேன்.

இன்னும் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் வரும்

இனி  தினேஷ் வரமாட்டார் போல

மாமி விளையாடீ இருக்கா போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவணா?
மாமி உங்களை குழப்ப சொன்னது இப்பிடி நடந்திட்டுதே!
தினேஸ் பார்த்தா பாவமா இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமி ஏன் இந்த நாத்த வேலை பார்த்தவ.😞..அவ தெரிஞ்சு செய்தாவோ தெரியாமல் செய்தாவோ தினேசுக்கு நல்லது தான் செய்திருக்கிறா😊 ...மாமியோட உப்ப பேச்சு வார்த்தை உண்டோ 🤐
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனி  தினேஷ் வரமாட்டார் போல

மாமி விளையாடீ இருக்கா போல 

இன்னும் ஒருக்கா வருவார்🤣

3 hours ago, ஏராளன் said:

என்ன கொடுமை சரவணா?
மாமி உங்களை குழப்ப சொன்னது இப்பிடி நடந்திட்டுதே!
தினேஸ் பார்த்தா பாவமா இருக்கு.

உலகத்தில பலவிசயங்கள் இப்பிடித்தான் நடக்கிறது. ஆனால் என்னைப்போல ஒருத்தரும் சொல்லுறேல்லை.🤓

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.