Jump to content

சவேந்திர சில்வா உள்ளிட்ட 67 பேரை கைதுசெய்ய வலியுறுத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jagath-Jayasuriya-and-Shavendra-Silva.jpg

சவேந்திர சில்வா உள்ளிட்ட 67 பேரை கைதுசெய்ய வலியுறுத்து!

யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், பிரசன்ன சில்வா, சாகி கால்லகே, கமால் குணரத்ன, ஜகத் ஜயசூரிய உள்ளடங்களாக, 67 இராணுவ உயரதிகாரிகளை கைதுசெய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் அறிவுறுத்தியுள்ளார்.

17 நாடுகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இவர்கள் அனைவரும் குறித்த நாடுகளுக்கு வந்தால் கைதுசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ஐ.நா. ஆணையாளரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடன்படவில்லையென கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.

யுத்தக்குற்றத்திற்குள்ளான இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகளை சர்வதேச நீதமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அறிவுத்தலை இதற்கு முன்னர் பதவியில் இருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எவரும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சவேந்திர-சில்வா-உள்ளிட்ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

67 இராணுவ உயரதிகாரிகளை கைதுசெய்யுமாறு ஐ.நா அறிவுறுத்தல்?

March 17, 2019

 Savendrasilva-gegath.jpg?resize=666%2C40யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், கமால் குணரத்ன, ஜகத் ஜயசூரிய உள்ளடங்கிய 67 இராணுவ உயரதிகாரிகளை கைதுசெய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் அறிவுறுத்தியுள்ளார் என சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.

17 நாடுகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ள அவர், இவர்கள் குறித்த நாடுகளுக்கு வந்தால் அவர்களைக் கைதுசெய்து வழக்குத் தொடருமாறும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ஐ.நா. ஆணையாளரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள ரஸ்யா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடன்படவில்லையென சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.

யுத்தக்குற்றத்திற்குள்ளான இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகளை சர்வதேச நீதமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அந்த அறிவித்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

 

http://globaltamilnews.net/2019/116240/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 4 நாடுகளும் எமக்கெதிரான இனவழிப்பு யுத்தத்தில் சிங்களப் போர்க்குற்றவாளிகளுக்கு உதவியவர்கள். நிச்சயமாக இவர்களால் ஆணையாளரின் கோரிக்கையை ஏற்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியா சீனா பாகிஸ்தான் எப்பவும் தமிழர்களுக்கு வெளிப்படை ஆதரவளிக்காத நாடுகள். அவை மனித உரிமைகளை மிக மோசமாக மீறும் நாடுகள் கூட.

ஆனால்.. எமது அரசியல்வியாதிகள்..தமது நட்பு நாடுன்னு நம்பும் ஹிந்தியா.. அகிம்சை பற்றி போதிக்கும்.. பஞ்சசீலம் தொடர்பில் வகுப்பெடுக்கும்.. புத்தர் பிறந்த பூமின்னு கொலரை தூக்கிவிடும்.. ஹிந்தியா.. இதில் ஏன் இணைந்து கொண்டது. உண்மையில்.. தமிழர்களின் துரோகி நாடுன்னா.. அது ஹிந்தியா தான். 🙄

Link to comment
Share on other sites

கைது செய்யச் சொல்லி இருக்கும்,  67 பேரில், கோத்தபாயாவும் உள்ளடக்கமா?

அவரும் உள்ளடக்கம் என்றால், அவரை இப்போது கைது செய்யலாம்.

இப்போது அமெரிக்கா போயிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிங்களச்செய்தித்தாளில்  மட்டுமே வந்த  இந்தச்செய்தி  உண்மையா?????

Link to comment
Share on other sites

16 hours ago, nedukkalapoovan said:

ரஷ்சியா சீனா இந்தியா

தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக முன்னாள் பொதுவுடமை நாடுகளான ரஷ்சியா சீனாவுக்கும் இந்து மதத்தினரை பெருமளவில் கொண்ட இந்தியாவுக்கும் ஆதரவு இருந்து வருகிறது.  இவை விரும்பாத அமெரிக்காவை தமிழரும் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக முன்னாள் பொதுவுடமை நாடுகளான ரஷ்சியா சீனாவுக்கும் இந்து மதத்தினரை பெருமளவில் கொண்ட இந்தியாவுக்கும் ஆதரவு இருந்து வருகிறது.  இவை விரும்பாத அமெரிக்காவை தமிழரும் விரும்பவில்லை.

இதுதான் உண்மை எண்பதுகளின் இறுதிப்பகுதி வரையிலும். ஆனால், இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்புடன் அந்த இந்திய மாயை மெல்ல மெல்ல கழன்றுவிட்டதென்றே நினைக்கிறேன்.

இப்போது, நாம் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் இந்தியாவோ, அல்லது ரஷ்ஷியா சீனாவோ எம்மை விடப்போவதில்லை. எமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் ஏதோ ஒருவகையில் இந்த நாசகார நாடுகளின் செல்வாக்கு இருந்துகொண்டே இருக்கப்போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கு இந்தியா ஏன் தயங்குகின்றது என்று ஏன் யாருமே கேட்கவில்லை? தமிழகத்தில் 7 கோடித் தமிழர்கள் வசிக்கிறோம், ஒருவருக்குக் கூடவா இதுபற்றிக் கேள்வி எழவில்லை? 

உங்களின் உறவுகளில் 150,000 பேரைக் கொன்று வேட்டையாடிய மிருகங்களை உங்கள் நாட்டில் கைதுசெய்யுங்கள் என்று ஐ. நா கேட்கின்றபொழுது, உங்கள் நாடு முடியாதென்கிறதே, அது ஏன் உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை? குறைந்தபட்சம் இவ்விடயம் பற்றி பொதுத் தளங்களிலோ அல்லது தேர்தல் மேடைகளிலோ பேசலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

போர்க்குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கு இந்தியா ஏன் தயங்குகின்றது என்று ஏன் யாருமே கேட்கவில்லை? தமிழகத்தில் 7 கோடித் தமிழர்கள் வசிக்கிறோம், ஒருவருக்குக் கூடவா இதுபற்றிக் கேள்வி எழவில்லை? 

உங்களின் உறவுகளில் 150,000 பேரைக் கொன்று வேட்டையாடிய மிருகங்களை உங்கள் நாட்டில் கைதுசெய்யுங்கள் என்று ஐ. நா கேட்கின்றபொழுது, உங்கள் நாடு முடியாதென்கிறதே, அது ஏன் உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை? குறைந்தபட்சம் இவ்விடயம் பற்றி பொதுத் தளங்களிலோ அல்லது தேர்தல் மேடைகளிலோ பேசலாமே? 

அண்மையில் மிகவும் நெருக்கமான நண்பன் ஒருவன்.....கொழும்புக்குப் போய் வந்தான்!

அங்கிருந்து  மரத்தில் செதுக்கப் பட்ட  ஒரு காந்தி சிலையை எனக்காக வாங்கிக் கொண்டு வந்தான்! 

மச்சான் அந்தக் கடையில் ஒரே ஒரு சிலை தான் இருந்தது! உனக்குப் பிடிக்கும் என்று வாங்கி வந்தேன்!
ஆனால் மனுசி...தனக்கும் அது பிடிச்சிருக்காம் என்டு சொல்லுது!
இருந்தாலும் உனக்கெண்டு வாங்கின படியால்.....தர முடியாது என்று சொல்லி விட்டேன் என்று கூறினான்!

என்னடா .....காந்தியோட பெரிய ...பிரச்சனையாய்ப் போச்சுது....என்று நினைத்த படியே....சிலையை வாங்கிக் கொண்டேன்!

முள்ளி வாய்க்காலுக்குப்  பிறகு காந்தியை வீட்டில் வைத்திருப்பது சரியாகப் படவில்லை!

மறு நாள் .....சிலையை வடிவாய்...ஒரு அழகான பெட்டியில்...வைத்து....நண்பனின் மனைவியிடம்...காந்தி உங்கள் வீட்டில் இருப்பது தான் முறை என்று கூறித் திரும்பக் கொடுத்து விட்டு வந்து விட்டேன்!

மனதுக்கு  மிகவும்  ஆறுதலாக இருந்தது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.