Jump to content

"உழைக்கிறோம்; ஆனால் வாழ்க்கையில் உயரவில்லை" மீனவப் பெண்களின் வாழ்க்கைப்பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ்
 
  •  
மீனவப் பெண்களின் வாழ்க்கைப்பதிவுபடத்தின் காப்புரிமை ARUN SANKAR

அதிகாலை மூன்று மணி. நம்மில் பலரும் பாதி தூக்கத்தில் இருக்கும் நேரம். ஆனால், இவ்வளவு காலையில் எழுந்து வேலை செய்தால் மட்டுமே தங்கள் குடும்பத்தை நடத்த முடியும் என்கிறார்கள் நெய்தல் நிலத்து மீனவப் பெண்கள்.

மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகால மத்திய அரசின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்றும், வரப்போகும் புதிய பிரதமரிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள, நாம் தமிழகத்தின் சில இடங்களுக்கு பயணித்தோம்.

முதலாவதாக கடலூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு சில மீனவப் பெண்களை சந்தித்தோம். அம்மாவட்டத்தின் மஞ்சக்குப்பத்தில் உள்ள லாஞ்ஜரி என்ற இடத்துக்குப் போகும்போது அதிகாலை நான்கு மணி.

அதிகாலை 5 மணியளவில் லாஞ்ஜரி Image caption அதிகாலை 5 மணியளவில் லாஞ்ஜரி இலங்கை

இந்தியாவில் மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நான்காவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2017-18ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 7.12 லட்சம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரையின் நீளம் - 1,076 கிலோ மீட்டர்

கடற்கரை மாவட்டங்கள் - 13

மீனவ கிராமங்கள் - 608

மீனவ மக்கள் தொகை - 10.07* லட்சம்

இலங்கை

சென்னை போன்ற பெரு நகரங்களில் அவ்வளவு அதிகாலையில் காகம் கூட எழுந்து கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் லாஞ்ஜரியில் அவ்வளவு கூட்டம். முக்கியமாக பெண்கள்தான் அதிகளவில் இருந்தார்கள். கடலில் பிடிக்கும் மீன்கள் இங்குதான் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

அதிகாலை லாஞ்சரிக்கு வந்த கப்பல்களில் இருந்து பலரும் மீன் வாங்குகின்றனர். Image caption அதிகாலை லாஞ்சரிக்கு வந்த கப்பல்களில் இருந்து பலரும் மீன் வாங்குகின்றனர்.

"கடலுக்கு சென்று மீன்களை கொண்டுவருவது என்னமோ ஆண்களாக இருந்தாலும், அதற்கு பிறகு செய்யும் அனைத்து வேலைகளும் பெண்களை சார்ந்தே இருக்கிறது" என்கிறார் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அங்கு வந்திருந்த பஞ்சவர்ணம். இவர் அங்கிருந்து மீன் வாங்கிக் கொண்டு அருகில் உள்ள தன் கிராமத்துக்கு எடுத்துச் சென்று விற்கிறார்.

பஞ்சவர்ணம் Image caption "கடலுக்கு சென்று மீன்களை கொண்டுவருவது என்னமோ ஆண்களாக இருந்தாலும், அதற்கு பிறகு செய்யும் அனைத்து வேலைகளும் பெண்களை சார்ந்தே இருக்கிறது" - பஞ்சவர்ணம் மீன் ஏலம் எடுக்குமிடம் Image caption மீன் ஏலம் எடுக்குமிடம்

முந்தைய நாள் மாலை மீன் பிடிக்க சென்ற கலங்கள், அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு லாஞ்சரிக்கு வரும். மீன்களை எடை போட்டு ஏலம் விடும் இடம் முழுக்க கூச்சலும் குழப்பமும் விவாதங்களும் நிறைந்திருக்கின்றன.

மீன்களை ஏலத்தில் வாங்கி அதனை சுத்தப்படுத்தி, வெட்டி விற்பதில் இருந்து, அல்லது அவற்றை உப்புக்கண்டம் போட்டு வெயிலில் காய வைத்து கருவாடாக்கி விற்பது வரை இங்கு அனைத்தும் பெண்கள்தான். இதோடு வீட்டில் குடும்பத்தையும் இவர்களே சமாளிக்கிறார்கள்.

"என் வீடு இங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் இங்கு வந்துவிடுவோம். நடந்துதான் வருவோம். வீட்டிற்கு திரும்பி செல்ல மாலை ஏழு மணியாகிவிடும். சரியான தூக்கம் கிடையாது. கைக்கால்கள் எல்லாம் குடைச்சல் எடுக்கும். படுத்தால் எழுந்திருக்க முடியாது. எனினும், இதெல்லாம் பிள்ளைகளுக்காகத்தான்" என்கிறார் மீன் விற்கும் தொழில் செய்துவரும் ஜோதி.

வரவிருக்கும் தேர்தலையடுத்து பதவியேற்கவுள்ள புதிய பிரதமரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு பதிலேதும் சொல்லாத ஜோதி, "இதுவரைக்கும் என்ன செஞ்சாங்க? எதுவும் செய்யலையே. உங்களுக்கு என்ன செய்யனும்னு கேக்கறாங்க. ஆனா ஒன்னும் செய்ய மாட்டாங்க" என்று மீன் அரிந்துக்கொண்டே நம்மிடம் கூறுகிறார்.

மீனவப் பெண்களான ஜோதி மற்றும் வத்சலா Image caption மீனவப் பெண்களான ஜோதி மற்றும் வத்சலா

ஜோதி அரிவாள்மனையில் மீனை வெட்டி உப்பில் போட்டுக் கொண்டிருந்தார். மேலும், அங்கிருந்த தரையில், வேறு சிலர் கருவாட்டை பரப்பி காயவைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஜோதியின் கணவரும் மீன் தொழிலில்தான் இருக்கிறார். அவரது மகனும் கருவாட்டை பாக்கெட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதாக ஜோதி கூறினார்.

"வரும் வருமானம் சாப்பாட்டுக்கு மட்டும்தான். அத வெச்சு வேற ஒன்னும் பண்ண முடியாது" என்கிறார் அவர்.

ஒன்பது ஆண்டுகளாக இத்தொழிலில் இருக்கும் வத்சலா, தன் வாழ்வில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார். "எங்களுக்கு ஏதோ செய்யறோம்னு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டெல்லாம் வாங்கிட்டு போனாங்க. தோ, ஒரு வருஷம் ஆச்சு. இதுவரைக்கும் எதுவுமே செய்யல. நாங்க சம்பாதிச்சு குழந்தைகளை படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்படறோம். எங்களுக்கு கடனும் குடுக்க மாட்டேங்கறாங்க. அரசு ஏதாவது கடனுதவி செய்தால் புண்ணியமாக போகும்" என்கிறார்.

"பாதி வருமானம் வயிற்றுக்கும், மீதி வருமானம் பிள்ளைகளை படிக்க வைக்கவுமே சரியாக இருக்கிறது. நாங்களும் எங்களின் வாழ்வில் முன்னேற எவ்வளவோ முயற்சி செய்கிறோம். எங்களிடம் அதிக உழைப்பு இருக்கிறது. ஆனாலும், முன்னேற முடியவில்லை"

"அதிகாலை ஒரு மணிக்கும், மூன்று மணிக்கும் இங்க வந்து மீன்கள வாங்க படாதபாடு படுவோம். ரொம்ப கஷ்டப்படுவோம். கேக்கற காசில்லைன்னா, மீன் வாங்கற எடத்துல மரியாதையாகூட நடத்த மாட்டங்க" என்று சோகத்துடன் கூறுகிறார் வத்சலா.

கருவாடு

இவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அருகில் உள்ள இடத்தை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு வயதான பெண்ணை பார்த்தோம். அவர் பெயர் சின்னப்பிள்ளை. அவருக்கு அவருடைய வயது என்ன என்று தெரியவில்லை.

அவரது கணவர், சிறு வயதிலேயே அவரை கைவிட்டுச் சென்றுவிட்டதாகவும், தற்போது அவர் உயிருடனும் இல்லை என்றும் அவர் கூறினார்.

"காலைல சீக்கரமே வேலைக்கு வந்துருவேன். முடியலைனா இங்கயே படுத்துக்குவேன். அப்பறம் எழுந்து திரும்பியும் எடத்த பெருக்குவேன். மீன்கள இங்க கொண்டாந்து போட்டா காய வைப்பேன்."

மத்திய அரசிடம் வைக்க ஏதேனும் கோரிக்கை உள்ளதா என்று கேட்டதற்கு "தெரியவில்லை" என்று கூறிவிட்டார் சின்னப்பிள்ளை. "எனக்கு முதியோர் பணமோ, விதவைத் தொகையோ எதுவும் வரல. நிறைய வாட்டி எழுதி கொடுத்துட்டேன், நிறைய அலைஞ்சேன், ஆனா எனக்கு யாரும் உதவ செய்யல" என்று கண்ணீருடன் நம்மிடம் தெரிவித்தார்.

"என் பேரன் பேத்தியெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு போனாங்க. அப்பறம் படிக்க வைக்க காசில்ல. நிறுத்தியாச்சு. சில நாளைக்கு நிறைய வேலை இருக்கும். அன்னிக்கு 250 ரூபா வரைக்கும் கிடைக்கும். ஒரு நாளைக்கு வேலையே இருக்காது. 50 - 60 வருஷமா இங்கதான் இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போறோம்..." என்கிறார் அவர்.

சின்னப்பிள்ளை பாட்டி Image caption சின்னப்பிள்ளை பாட்டி

கடலூர் மாவட்டத்தின் சொத்திக்குத்து கிராமத்தை சேர்ந்த வேதநாயகி, ஹார்பருக்கு ஒன்பது ஆண்டுகளாக வந்து செல்கிறார்.

"சுனாமிக்கு அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா மீன்வளம் எல்லா அழிஞ்சு போச்சு. வட்டிக்கு வாங்கி சுருக்கு வலை போட்டோம். ஆனா, அரசாங்கம் சுருக்கு வலைய தடை பண்ணிட்டாங்க. எங்களுக்கு யாரும் சொத்துல்லாம் சேத்து வெச்சுட்டு போகல. கடல்தான் எங்களுக்கு தெய்வம். வேறெதுவும் தெரியாது".

இலங்கை

சுருக்கு வலை என்றால் என்ன? அதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது?

டன் கணக்கில் மொத்தமாக மீன்களை பிடிக்க சுருக்கு வலை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மீன்பிடி முறையாகும்.

இந்திய இலங்கை மீனவர்கள் இடையே பிரச்சனை நிலவுவதற்கு சுருக்கு வலை விவகாரமும் ஒரு முக்கிய காரணமாகும்.

இதனால், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு, சிறிய படகுகளில் மீன்பிடிக்க செல்வோருக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சாதாரண வலையில் பெரும்பாலும் மீன்கள் மட்டுமே பிடிபடும். ஆனால், சுருக்கு வலை பயன்படுத்தும்போது கொத்து கொத்தாக மீன்களோடு, மீன்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளும் பிடிபடுவதால், இந்த வலையினால், அப்பகுதியின் மீன்வளம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இலங்கை

"கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வெச்சேன். ஆனா, மீனவ சமூகத்துக்கு எங்க வேலை தராங்க. அவங்க வேலை இல்லாமதான் இருக்காங்க.

சம்பாதிக்கற காசெல்லாம் வட்டி கட்டத்தான போகுது. ஒரு படகுக்கு 10 லட்சம்னு வெச்சாக்கூட, 4 பைசா, 5 பைசா அல்லது தினவட்டிக்குகூட வாங்கறோம். ஆனா, எங்களால கட்ட முடியல. அதுவும் கடந்த 3 வருஷமா கடல்ல வருமானமே இல்லாம போயிடுச்சி. அதுக்கு முன்னாடி கொஞ்சம் பரவால்லையா இருந்தது.

தானே புயல்ல ரொம்ப பாதிக்கப்பட்டோம். அதிலேருந்து வெளிவரத்துக்கே ரொம்ப காலம் ஆயிடுச்சி. அரசாங்கம் பெருசா எதுவும் செய்யாது. 50 ஆயிரம் இழப்புனா அரசு ஐயாயிரம் இல்ல... பத்தாயிரம் கொடுக்கும். எங்களோட உழைப்பு, அதோட கடன் வாங்கறதுலதான் காலத்த தள்றோம். சொத்து சொகமும் கிடையாது. சேமிப்பும் கிடையாது.

சொத்திக்குத்து கிராமத்தை சேர்ந்த வேதநாயகி Image caption சொத்திக்குத்து கிராமத்தை சேர்ந்த வேதநாயகி

சில படகுகளுக்குதான் டீசல் மானியம் இருக்குது. எல்லாத்துக்கும்லாம் தரமாட்டாங்க. என்ன செஞ்சாங்க? வருவாங்க. ஓட்டு வாங்குவாங்க. ஆனா ஒன்னு, அரசாங்கம் எங்களுக்கு துறைமுகம் கட்டி கொடுத்திருக்காங்க. வலை பொத்தற்துக்கு கூடம் கட்டி கொடுத்துருக்காங்க.

இங்க வேலை செய்ற பெண்களால வட்டிக்கு வாங்கி சமாளிக்க முடியல. விவசாயிகளுக்கு கொடுக்கறது மாதிரி மீனவர்களுக்கு அரசாங்கம் கடன் தரனும்னு கேட்டுக்கிறோம்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கை

மீனவப் பெண்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம்

மீனவர்களுக்கான மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றி மாநில அரசு மீனவப் பெண்களுக்கு இத்திட்டம் கொண்டுவந்தது.

2017 - 18ஆம் ஆண்டு பட்ஜெட்டில், 1,98,833 மீனவப் பெண்களுக்கு இத்திட்டத்தின்கீழ் பலன் வழங்குவதற்காக ரூ.59.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தமிழக மீனவத்துறையின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 1,98,783 மீனவப் பெண்களுக்கு,இத் தொகையில் 59.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் 2018 - 2019 ஆண்டிலும் தொடரும்.

இலங்கை

இவர்கள் எல்லாம் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து லாஞ்சரிக்கு வந்து, அங்கிருக்கும் ஓலை வீடுகளில்தான் தங்குகிறார்கள். அது அவர்களே கட்டிக் கொண்டது. மீன் அறுக்கவும், கருவாட்டை காய போடவும், பகலில் சமைத்து சாப்பிடவும் செய்கிறார்கள்.

இந்த வீடுகளில் எல்லாம் மின்வசதி கிடையாது. இப்பெண்களிடம் சாதா கைபேசி இருக்கிறது. ஆனால், வாட்சாப் குறித்தெல்லாம் பலருக்கும் தெரியவில்லை.

மீனவப்பெண்

சமீபத்தில் இடைக்கால பட்ஜெட்டில், தனியே மீன்வளத்துறை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது குறித்தும் அவர்களுக்குப் பெரிதாக தெரிந்திருக்கவில்லை.

அதுவும் சில பெண்களுக்கு அவர்களுக்கான உரிமை என்ன, டெல்லியில் என்ன நடக்கிறது, அவர்களுக்கு வரவேண்டிய சலுகைகள் என்ன என்பது குறித்தும் எதுவும் தெரியவில்லை.

அவர்கள் தேவையெல்லாம் அடுத்த வேளை உணவும், பிள்ளைகளின் எதிர்காலமும், வட்டி கட்ட அவசியமில்லாத வாழ்க்கையும்தான்.

https://www.bbc.com/tamil/india-47524108

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.