Jump to content

கால அவகாசம் வழங்கப்படவில்லை ; தவறான கருத்துக்களை பரப்ப கூடாது ; ஜெனிவாவில் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)   

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே  ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தின் ஜெனிவாவில் தெரவித்துள்ளார்.

sumanthiran.jpg

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 40 அவது கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் உரையாற்றியமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/52213

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிழம்பு said:

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது

இதுக்கு பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமோ?

Link to comment
Share on other sites

35 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமோ?

நான் நினைக்கின்றேன் சுமந்திரன் சொல்ல வருவது என்னவெனில், இந்த நீட்டிப்புக்கு மறுத்து நிராகரித்தால், சர்வதேச மேற்பார்வை இந்த மார்ச் மாதத்துடனேயே முடிந்து போய் இலங்கை அரசுக்கு சாதகமாகி விடும் என.

இலங்கை அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றுதான் மகிந்த தரப்பும் சொல்கின்றது. புலம்பெயர் அமைப்புகளில் ஒரு பிரிவும் சொல்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் எதிர்க்கிறது எண்டு முடிவு செய்து விட்டால், இந்தாள் சொல்ல வருவதையும் விளங்காமல் எதிர்க்க வேண்டியது தான்.

இவர், சொல்லாமல் சொல்லவருவது இதுதான்...

அடுத்த தேர்தலில், மைத்திரி, கோத்தா மற்றும் ரணிலின் மும்முனைப் போட்டியில் ரணில் வெல்லும் சந்தர்ப்பமே அதிகம்.

ரணில் ஜனாதிபதியானல், இந்த விசாரணைகள் சாத்தியமாகும் என மேற்குலகு நினைக்கிறது. அதுக்காக கோத்தாவுக்கு ஒரு இத்துப்போன கயிறு கொடுக்கப் பட்டிருக்கிறது.

நாய்க்கு கிடைத்த எலும்பு துண்டு போல அவரும், அமெரிக்க குடியுரிமை நீக்கத்துடன் இழுபட்டு..... இழுபட்டு.... தேர்தல் திகதி கடந்த பின்னும் இழுபடலாம்.

ஆகவே தான், இந்த, 'மேலும் இரண்டு வருட நீடிப்பு' கேட்கப்படுள்ளது. இலங்கை அரசுக்கு நீடிப்பு வழங்கப் படவில்லை. ஐக்கிய நாடுகள் மேற்பார்வை காலமே நீடிக்கப் பட்டுள்ளது என்கிறார்.  

மகிந்த, இணை அனுசரணையில் இருந்து விலக சொல்லி வலியுறுத்துகிறார் என்பதும் கவனிக்க தக்கது.

எல்லாம் சிங்கள தலைமையையும் பார்த்தாயிற்று. மேற்குலகு  நம்பும் ரணிலையும் ஒருமுறை பார்ப்பது நல்லது தானே.

45 minutes ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன் சுமந்திரன் சொல்ல வருவது என்னவெனில், இந்த நீட்டிப்புக்கு மறுத்து நிராகரித்தால், சர்வதேச மேற்பார்வை இந்த மார்ச் மாதத்துடனேயே முடிந்து போய் இலங்கை அரசுக்கு சாதகமாகி விடும் என.

இலங்கை அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றுதான் மகிந்த தரப்பும் சொல்கின்றது. புலம்பெயர் அமைப்புகளில் ஒரு பிரிவும் சொல்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு வேறு வழியில்லை என்றது உண்மை தான், ஆனால் முற்கூட்டியே அரசு 30/1 தீர்மானத்தை செயற்படுத்துகின்றதா என்று கண்காணிப்பதையும் செயற்படுத்தி இருக்கலாம்.
ஏனெனில் வரலாற்றில் பல ஏமாற்றங்களை சந்தித்த பட்டறிவு அப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன் சுமந்திரன் சொல்ல வருவது என்னவெனில், இந்த நீட்டிப்புக்கு மறுத்து நிராகரித்தால், சர்வதேச மேற்பார்வை இந்த மார்ச் மாதத்துடனேயே முடிந்து போய் இலங்கை அரசுக்கு சாதகமாகி விடும் என.

இலங்கை அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றுதான் மகிந்த தரப்பும் சொல்கின்றது. புலம்பெயர் அமைப்புகளில் ஒரு பிரிவும் சொல்கின்றது.

 

1 hour ago, Nathamuni said:

எல்லாத்தையும் எதிர்க்கிறது எண்டு முடிவு செய்து விட்டால், இந்தாள் சொல்ல வருவதையும் விளங்காமல் எதிர்க்க வேண்டியது தான்.

இவர், சொல்லாமல் சொல்லவருவது இதுதான்...

அடுத்த தேர்தலில், மைத்திரி, கோத்தா மற்றும் ரணிலின் மும்முனைப் போட்டியில் ரணில் வெல்லும் சந்தர்ப்பமே அதிகம்.

ரணில் ஜனாதிபதியானல், இந்த விசாரணைகள் சாத்தியமாகும் என மேற்குலகு நினைக்கிறது. அதுக்காக கோத்தாவுக்கு ஒரு இத்துப்போன கயிறு கொடுக்கப் பட்டிருக்கிறது.

நாய்க்கு கிடைத்த எலும்பு துண்டு போல அவரும், அமெரிக்க குடியுரிமை நீக்கத்துடன் இழுபட்டு..... இழுபட்டு.... தேர்தல் திகதி கடந்த பின்னும் இழுபடலாம்.

ஆகவே தான், இந்த, 'மேலும் இரண்டு வருட நீடிப்பு' கேட்கப்படுள்ளது. இலங்கை அரசுக்கு நீடிப்பு வழங்கப் படவில்லை. ஐக்கிய நாடுகள் மேற்பார்வை காலமே நீடிக்கப் பட்டுள்ளது என்கிறார்.  

மகிந்த, இணை அனுசரணையில் இருந்து விலக சொல்லி வலியுறுத்துகிறார் என்பதும் கவனிக்க தக்கது.

எல்லாம் சிங்கள தலைமையையும் பார்த்தாயிற்று. மேற்குலகு  நம்பும் ரணிலையும் ஒருமுறை பார்ப்பது நல்லது தானே.

 

உங்கள் விளக்கத்துக்கு நன்றி நிழலி ,நாதம்.

1 hour ago, Nathamuni said:

அடுத்த தேர்தலில், மைத்திரி, கோத்தா மற்றும் ரணிலின் மும்முனைப் போட்டியில் ரணில் வெல்லும் சந்தர்ப்பமே அதிகம்.

இங்கே வாக்குகள் பிரியுமென்பதால் இருவரும் சேரலாம்.
இருந்தாலும் ரணில் சந்திரிக்காவை வைத்து இவர்களை சேரவிடாமல் முயற்சி செய்வார்.

Link to comment
Share on other sites

On 3/18/2019 at 8:01 PM, பிழம்பு said:

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே  ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தின் ஜெனிவாவில் தெரவித்துள்ளார். 

கும்பலில் கோவிந்தா போடும் சுமந்திரனின் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று!

முன்னர் "ஏக்கிய" என்பதற்கு வியாக்கியானம் செய்து தமிழ் மக்களை ஏமாற்ற முனைந்த பேர்வழி! 

ஜெனீவாவில் என்ன நடக்கிறது என்பதை தமிழ் மக்கள் விளங்கித்தான் உள்ளனர்! அதற்கு சுமந்திரனின் விளக்கங்கள் அவசியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் பேசுவதற்கும், சம்பந்தன் மாவை போன்றோர் பேசுவதற்குமிடையே அதிகளவு வித்தியாசம் இருப்பது ஏன்?

சம்பந்தன் அண்மையில்க் கூட தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராகச் சிங்களவர்களால் பலவந்தமாக ஆளப்படுகிறார்கள் என்று ஐ. நா பிரதிநிதி ஒருவரிடம் கூறியிருக்கிறார்.

மாவையோ, தீர்மானத்தைப் பிற்போடுவதற்கோ கால அவகாசத்திற்கோ இடமில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால், சுமந்திரனோ கால அவகாசம் இருப்பதாக இன்னொரு பெயரில் கூறுகிறார்.

இதில் எவர் கூறுவது சரி?

கூட்டமைப்பிற்கு எத்தனை தலைவர்கள்? எவர் கூறுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

சுமந்திரன் பேசுவதற்கும், சம்பந்தன் மாவை போன்றோர் பேசுவதற்குமிடையே அதிகளவு வித்தியாசம் இருப்பது ஏன்?

சம்பந்தன் அண்மையில்க் கூட தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராகச் சிங்களவர்களால் பலவந்தமாக ஆளப்படுகிறார்கள் என்று ஐ. நா பிரதிநிதி ஒருவரிடம் கூறியிருக்கிறார்.

மாவையோ, தீர்மானத்தைப் பிற்போடுவதற்கோ கால அவகாசத்திற்கோ இடமில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால், சுமந்திரனோ கால அவகாசம் இருப்பதாக இன்னொரு பெயரில் கூறுகிறார்.

இதில் எவர் கூறுவது சரி?

கூட்டமைப்பிற்கு எத்தனை தலைவர்கள்? எவர் கூறுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வது? 

ஜஸ்டின், ஜூட்  தயவுசெய்து மேடைக்கு வரவும்! விளக்கமளிக்க?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.