Jump to content

சிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி!? - என்.சரவணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
kodi.jpg
 
“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார். அதன் பின் அரச மரியாதையுடன்  ராஜரீக கொடி ஏற்றப்பட்டது. அளவான வெப்பமுள்ள நாள், தெளிவான வானம்....”
 
கண்டி வீழ்ச்சியின் சூத்திரதாரி ஜோன் டொயிலியின் டயரியில் மார்ச் 2. 1815 ஆம் திகதி இப்படித்தான் எழுதப்பட்டிருந்தது.
 
ஆனால் அதே தினம் வாரியபொல சுமங்கள தேரர் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கி காலால் மிதித்து சிங்கக் கொடியை ஏற்றியதாக பல்லாயிரக்கணக்கான சிங்களக் கட்டுரைகளும், நூல்களும் பதிவு செய்து வந்திருக்கின்றன. பாடசாலை பாடப்புத்தங்களில் இன்றுவரை அப்படியொரு கதை எழுதப்பட்டு வருகின்றன.
53111076_502827373580042_8279159391345704960_n.jpg
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் அதுவொரு கட்டுக்கதை என்றும் பிரபல மானுடவியலாளரான பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட பலர் தமது ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.
 
டொயிலியோ அல்லது வேறெந்த ஆங்கில அறிஞர்களோ, அல்லது அதிகாரிகளோ கூட அன்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை.
sri%2Blankan%2Bflag.jpg
 
அப்படி சிங்கக் கொடியை எற்றியிருந்தாலும் கூட அப்படியொரு கொடி கண்டி ராஜ்ஜியத்தின் கொடியாக இருந்ததில்லை. கண்டி ராஜ்ஜியம் ஏழு பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கென கொடிகளும் இருந்தன. அந்த ஏழில் ஒன்று “சத்கோறளை” எனப்படும் பிரதேசம் இன்றைய குருநாகல் பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கியது அது. சத் கோரளவின் கொடி தான்  சிங்கக் கொடி. ராஜசிங்கனுக்கு எதிரான கிளர்ச்சி சத்கோரளையிலிருந்து தான் ஆரம்பித்தது எனலாம்.
 
11033182_1624206094479209_677743947594714207_n.jpg
 
கண்டி தலதா மாளிகைப் பகுதிக்குள் உள்ள அதே ‘மகுல் மடுவ’வில் இன்றும் அந்தக் கொடிக்கம்பம் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் 200வது ஆண்டு நிறைவையொட்டி மகுல்மடுவவுக்கு ஊர்வலமாகச் சென்ற பிக்குமார்கள் தலைமையிலான கும்பல் தேசியக் கொடியிலிருந்து பச்சை, செம்மஞ்சள் பகுதிகள் அகற்றப்பட்ட தூய சிங்கக் கொடியை போலிசாரோடு மல்லுக்கட்டிக்கொண்டு ஏற்றிய சம்பவத்தை நாம் மறந்திருக்கமாட்டோம். அந்தளவு வாளேந்திய சிங்கக் கொடி பற்றிய கற்பிதங்களும், புனிதப்படுத்தளும் நிறுவனமயப்பட்டுள்ளன.
 
இலங்கையில் சிங்கத்தை ஒரு குறியீடாகவோ, சின்னமாகவோ கொடியாகவோ பயன்படுத்தப்பட்ட சில சந்தர்ப்பங்கள் வரலாற்றில் இருக்கத் தான் செய்கின்றன. அதே வேளை கிடைக்கப்பற்ற தொல்பொருள் சான்றுகளைத் தவிர்ந்த “சிங்கம் சின்னமாக” இருந்ததன் கதைகள் நம்பகத்தன்மை குறைந்ததாகவே உள்ளதை பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட சில வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டத் தவறவில்லை. 
cover.jpg
 
இலங்கையில் புராதன அரண்மனை வாசல்களில் அமைக்கப்பட்டிருந்த சந்திரவட்டக்கற்களில் வரிசையாக செதுக்கப்பட்ட சிங்கங்களின் உருவங்கள் காணப்படுகிறன. 
 
அதுமட்டுமன்றி ஏறத்தாழ 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மன்னர்கள் மலசலம் கழிக்க உருவாக்கப்பட்டிருந்த கற்களில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகளிலும் சிங்கத்தைக் காண முடிகிறது.
 
DSC01996.JPG
மலசலம் கழிக்க பண்டைய காலத்தில் கற்களால் செதுக்கி உருவாக்கப்பட்டிருந்திருக்கிறது (அனுராதபுரத்தில்)
இலங்கையில் சிங்கள சாதியமைப்பில் மேனிலையில் இருந்த சாதிகளுக்கென்று தனித் தனியான கொடிகள் இருந்திருக்கின்றன. கராவ (மீனவ "கரையார்" சாதிக்கு ஒப்பானவர்கள்) சாதியினர் சிங்கத்தை தமது கொடியில் வைத்திருந்திருக்கின்றனர்.
 
Rathalawewa_Karava_Lion_flag355191001.10955003_std.jpg
கராவ சாதிக்குரிய கொடி
இவர்கள் எல்லோரும் அப்படி நம்புமளவுக்கு அந்த சிங்கக் கொடி தான் கண்டியின் கடைசிக் கொடியா?
 
இலங்கைக்கு விஜயன் வந்தபோது சிங்கக் கொடியுடன் தான் இலங்கையில் கால் பதித்தான் என்று ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. மகாவம்சத்திளும் சூலவம்சத்திலும் அப்படி இருப்பதாகவும் கதைகள் பரப்பப்பட்டுவருகின்றன. விஜயனின் தகப்பன் சிங்கபாகு சிங்கத்துக்குப் பிறந்ததாகக் கூறும் மகாவம்சக் கதையின் தொடர்ச்சியாகவே இப்படிப் புனைய நேரிட்டிருப்பதாகக் கொள்ள முடியும்.
33357360_2033157790267073_8653276078191673344_n.jpg
எல்லாளன் - துட்டகைமுனு போரை சித்திரிக்கும் 19ஆம் நூற்றாண்டுக்குரிய தம்புள்ளை குகை ஓவியம்
DutugemunuDambulla131231818.10943807_large.jpg
 
அதுபோல எல்லாளனுடன் துட்டகைமுனு போர்புரிந்தபோது துட்டகைமுனு சிங்கக் கொடியுடன் தான் சென்றதாகவும் மகாவசம் கூறுவதாக சொல்வதும் சுத்தப் பொய். பிற்காலத்தில் வரையப்பட்ட அப்படியொரு சுவரோவியத்தைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 18ஆம் நூற்றாண்டில் மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் ஆட்சியின் போது வரையப்பட்ட தம்புல்லையில் உள்ள குகை ஓவியத்தில் ஒன்றே எல்லாளன் – துட்டகைமுனு போரை சித்திரிக்கிறது. இலங்கையின் தொல்பொருள் ஆய்வின் வித்தகராக போற்றப்படும் பரணவிதான எழுதிய “சிங்ஹலயோ” என்கிற நூலில் தான் அந்த ஓவியம் ஒரு கோட்டுச் சித்திரமாக வெளியிட்டிருந்தார். ஆனால் அந்தச் சித்திரத்தில் கொடியில் இருந்த உருவத்தை வெறுமையாக விட்டார். அந்த உருவம் தெளிவாக இல்லாததால் அவர் அதை வெறுமையாக விட்டிருக்கக் கூடும்.
 
DutugemunuDambulla_2131231928.10944201_large.jpg
ஆனால் ஈ.டபிள்யு பெரேரா கொடிகள் பற்றி எழுதி வெளியிட்ட நூலில் இந்தக் கொடியில் இருப்பது சிங்கம் தானென்றும் சிங்கத்தின் வலது கையில் வாளொன்றையும் உருவகப்படுத்தி புனைந்து வெளியிட்டார். இலங்கையின் தேசியக் கொடியைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்ததாக கூறி ஒரு வரைபடத்தை முதன் முதலில் வெளியிட்டதும் அவர் தான். அந்தக் கோடி தான் இலங்கையின் தேசியக் கொடியானது. வாளேந்திய அந்தக் கொடியே தான் கண்டு பிடித்த தேசியக்கொடி என்பதை உறுதிபடுத்த அவர் இந்த “துட்டகைமுனுவின் சிங்கக் கொடி புனைவில்” இறங்கியிருக்கக் கூடும்.
 
இந்த தம்புள்ள ஓவியத்தைக் கொண்டு தான் இன்றும் சகலரும் அந்தப் போர் குறித்த கற்பிதத்துக்கும், காட்சிப்படுத்துவதற்கும் வலுசேர்த்து வருகிறார்கள். பயன்படுத்திவருகிறார்கள். அந்த காட்சியைத் தான் பலரும் சிலைகளாகவும், ஓவியங்களாகவும், கதைகளாகவும் மேலதிகமாக புனைந்துவருகிறார்கள். அதுபோல “சிங்கக் கொடி”யை சிங்களக் கொடியாக புனிதப்படுத்தும் மரபும் இங்கிருந்துதான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
 
சரி... சிங்கக் கொடி கண்டி ராஜ்ஜியத்தின் கொடி என்றால் இலங்கையின் தேசியக் கொடி எது? சிங்களவர்களின் கொடி தான் என்ன? அவ்வாறு சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடி என்று ஒன்று வரலாற்றில் இருந்திருக்கிறதா? அல்லது ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்களவர்களின் நாடாகத் தான் என்றாவது இருந்ததுண்டா?

இலங்கையில் சிங்கம் கிடையாது என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இல்லாத ஒரு விலங்கு ஆதி காலத்தில் இருந்தே இலங்கையின் சின்னமாக இருந்ததாக கூறப்படுவது எப்படி?
 
இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்பிய அசோக சக்கரவர்த்தியின் தாக்கமே பிற்காலத்தில் “சிங்கம்” சின்னமானதன் பின்னணிக் கதையாகக் இருக்கக் கூடுமென பலரும் நம்புகின்றனர்.
 
Four_Lions_-_East_Pillar_Top_-_South_Gateway_-_Stupa_1_-_Sanchi_Hill_2013-02-21_4356.JPG
இன்றும் இந்தியாவின் தேசிய அரச இலட்சினையாக பயன்படுத்தப்பட்டுவருவது நான்கு சிங்கங்களைக் கொண்ட அசோகனின் சின்னம் என்பது நமக்குத் தெரியும். அசோகன் இலங்கைக்கு தனது மகன் மகிந்தனை அனுப்பி பௌத்தத்தை இலங்கையில் பரப்பியபோது அனுராதபுரத்தை தலைமையாகக் கொண்டு தேவனம்பியதிஸ்ஸன் ஆட்சி புரிந்துவந்தான். தேவனம்பியதிஸ்ஸன் பௌத்தத்தைத் தழுவினான். அதுபோல அசோகனுக்கும் தேவனம்பியதிஸ்ஸனுக்கும் இடையில் பல தடவைகள் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்திகள் காணக் கிடைக்கின்றன. இந்த பின்னணியில் தான் தேவனம்பியதிஸ்ஸனின் கொடியும் கூட சிங்கக் கொடியாக அமைகிறது.
 
இலங்கையில் சிங்கத்தைக் கொடியாகக் கொண்டிருந்தவர்கள் அந்தந்த ராஜதானிகளின் கொடிகளாகத் தான் கையாண்டிருக்கிறார்களேயொழிய  ஒரு இனத்தை அது பிரதிநிதித்துவப்படுத்தியது கிடையாது. 
 
485536_120379551494515_1063886802_n.jpg
 
 
ஐரோப்பியர்கள் பலரின் குறிப்புகளில் மன்னர் சூரியனையும், சந்திரனையும் கொண்ட கொடியையும், சில நேரங்களில் அன்னம், மயில், மான், கரடி, சிங்கம், புலி, யானை, மேலும் சில பறவைகள் போன்ற பல்வேறு பிராணிகளைக் கொண்ட கொடியையும் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றனர். ரொபர்ட் பேர்சிவல் தனது நூலில் (An Account of the Island of Ceylon: Containing Its History, Geography) ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் பரிவாரங்கள் சூரியனின் உருவத்தைக்கொண்ட கொடியைத் தாங்கிச் சென்றதாக குறிப்பிடுகிறார்.
 
இதேவேளை இன்று நாம் பயன்படுத்தும் வாளேந்திய சிங்கத்தின் உருவத்துக்கு நிகராக ஐரோப்பாவில் பல சின்னங்களும், கொடிகளும், லட்சினைகளும் இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன. போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்தில் அவர்களின் முக்கிய லட்சினைகளாகவும், சின்னங்களாகவும், நாணயங்களிலும் சிங்க உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அவற்றின் தாக்கம் கூட இந்தக் காலப் பகுதியில் இருந்திருக்கலாம் என்றும் நாம் சந்தேகிக்க முடியும்.
 
இப்போது சொல்லுங்கள் சிங்கக் கொடி/கண்டியக் கொடி எப்படி தேசியக் கொடியாக முடியும்? இனப்பிரச்சினையின் ஒரு குறியீட்டு அடையாளமாக இன்று இந்த கொடி உருவகமாகுமளவுக்கு இன்று வந்து நிற்கிறதல்லவா?
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.