Jump to content

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes
நாம் தமிழர் - கோபிச்செட்டிபாளையம்J’aime la Page
6 h · 

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள்.
நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.

■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.

■ அனைவருக்கும் கட்டணமில்லா செய்வழி (practical) தனித்திறன் கல்வி (ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்). சாதரண குடிமகனின் பிள்ளைகள் முதல் முதலமைச்சரின் பிள்ளைகள் வரைக்கும் அனைவருக்கும் அரசுப் பள்ளியில் சரியான தரமான இலவசக் கல்வி!

■ ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.

■ 6 மணி நேர செய்வழி தனித்திறன் கல்வி. 1 மணி நேரம் தமிழரின் வீர விளையாட்டு பயிற்சி.

■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு.

■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.

■ A2பால் தரும் நாட்டு மாடு மற்றும் இறைச்சி ஆடு வளர்ப்பு செய்ய ஊதியம் குறைந்த பட்சம் 20000 மற்றும் அரசு பணி.
தமிழ்நாட்டின் பால் மற்றும் இறைச்சி தேவை தமிழ்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படும்.

■ மரபு வழி சார்ந்த விவசாயம்.

■ தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி.

■ நீர் வளம் மேலாண்மை. நீர் வளம் பெருக்கம். 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்.

■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்.

■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்.

■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்.

■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்.

■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.

■ தண்ணீர் விற்கத்தடை.

■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை.

■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்.

■ நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும். இதன் மூலம் கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்.

■ மீனவர் நலம் மற்றும் பாதுகாப்பில் முக்கியத்துவம். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகளை முறைப்படுத்தி மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்.

■ வரதட்சணைக்கு தடை.

■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்.

■ ஏறுதழுவுதல் / தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) தேசிய திருவிழாவாக அறிவித்து, 7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்.

■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 40000 ருபாய் வழங்கப்படும்.

■ கைய்யூட்டு (லஞ்சம்) வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

■ கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்.

■ தற்சார்பு பொருளாதார கொள்கை. சுற்றுச்சூழலைப் பாதிக்காதபடி உற்பத்தித் துறைகளில் கவனம், தொழில்முனைவு ஊக்கம், அனைத்து துறைகளில் வேலைவாய்ப்பு பெருக்கம், வளர்ச்சி.

நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று

வாக்களிப்பீர் #விவசாயி சின்னம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கொள்கைத் திட்டம் ஆனால் பணக்காரருக்கு பிடிக்குமோ?

Link to comment
Share on other sites

7 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்ல கொள்கைத் திட்டம் ஆனால் பணக்காரருக்கு பிடிக்குமோ?

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

மற்றவர்களின் கொள்கைகள் எப்பவுமே சாத்தியப்படாதெனும் போது நாம் தமிழர் கடசியின் ஓரிரு கொள்கைகளில் பிழை பிடிக்க தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

இயற்கை விவசாயத்தை  ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஜேர்மனியில் கிருமிநாசினிகளின் பயன்பாடு வருடத்திற்கு வருடம் குறைத்துக்கொண்டு வருகின்றார்கள்.தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வரும்   கெமிக்கல் பசளைகளை ஒரு கால எல்லைக்கு பின் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளார்கள். இதெற்கெல்லாம் முக்கிய காரணி புற்றுநோய்தான்.

சட்டங்கள் வலுவாகவும் அரசியல்வாதிகள் ஒழுங்காகவும் இருந்தால் சர்வாதிகார ஆட்சியோ இராணுவ ஆட்சியோ வர சந்தர்ப்பமில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

சிங்கப்பூரில் எப்படி சாத்தியமாகியது?

அன்பான சர்வாதிகார அரசு.

அதேயே தான் சீமான் வலியுறுத்துகிறார். 

அதே வேளை சீமானின் திட்டங்கள், தமிழ் நாட்டில் சிலர் எள்ளி நகையாடும் போதே,  ஓவென்றும் வெவேறு மாநிலங்களில் அமுலாகின்றன.
 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இயற்கை விவசாயத்தை  ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஜேர்மனியில் கிருமிநாசினிகளின் பயன்பாடு வருடத்திற்கு வருடம் குறைத்துக்கொண்டு வருகின்றார்கள்.தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வரும்   கெமிக்கல் பசளைகளை ஒரு கால எல்லைக்கு பின் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளார்கள். இதெற்கெல்லாம் முக்கிய காரணி புற்றுநோய்தான்.

சட்டங்கள் வலுவாகவும் அரசியல்வாதிகள் ஒழுங்காகவும் இருந்தால் சர்வாதிகார ஆட்சியோ இராணுவ ஆட்சியோ வர சந்தர்ப்பமில்லை.
 

ஒன்றை ஊக்குவிப்பது வேறு. அதை மட்டுமே அனுமதிப்போம் என்பது வேறு. ஐரோப்பாவில், வட அமெரிக்காவில் இயற்கை விவசாயம் பற்றி சிறந்த முறையில் அறிவூட்டுகின்றார்கள். அதன் பலனாக இயற்கை விவசாயம் தொடர்பான ஆர்வமும் முயற்சியும் அதிகரிக்கின்றது. இப்படியான செயல்முறை தான் சரியாக வரும். அதை விட்டுட்டு இயற்கை விவசாயத்தை மட்டுமே அனுமதிப்போம் என்பது ஒரு போதுமே மக்களால் விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியாதது. அத்துடன் தமிழக மக்களின் சனத்தொகை அளவுக்கு இது சாத்தியமும் இல்லை.
 

53 minutes ago, Nathamuni said:

சிங்கப்பூரில் எப்படி சாத்தியமாகியது?

அன்பான சர்வாதிகார அரசு.

அதேயே தான் சீமான் வலியுறுத்துகிறார். 

அதே வேளை சீமானின் திட்டங்கள், தமிழ் நாட்டில் சிலர் எள்ளி நகையாடும் போதே,  ஓவென்றும் வெவேறு மாநிலங்களில் அமுலாகின்றன.
 

சிங்கபூர் ஒரு சுண்டைங்காயளவு உள்ள நாடு. மிகச் சிறிய சனத்தொகை கொண்ட நாட்டில் அது சாத்தியம். அத்துடன் சிங்கபூர் ஒரு நாடு, தமிழகம் மாதிரி மத்திய அரசில் தங்கி நிற்கும் மானிலம் அல்ல.
 

Link to comment
Share on other sites

இதே மாதிரித்தான் வரதட்சணைக்கு தடை (புலிகளால் கூட தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் செய்ய முடியாமல் போன விடயம்),  தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி (தமிழும் படித்து இருந்தால் தான் அரசுப் பணி என்று இருந்தால் நன்று என்பது மாற்று இதுக்கு), ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் என்பதெல்லாம்.

சீமான் இன்னும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலில் இருந்து வெளிவரவில்லை என்பதுதான் இவற்றின் அர்த்தம். மிக இலகுவாக மக்களால் இவரது இத் திட்டங்கள் நிராகரிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதை சொல்லும் சினிமா எடுத்தாலே தோல்வியை தழுவும் இந்தியாவில்   லஞ்சமும் கசமுசாக்களும் பாலியல் வல்லுறவுகளுமே வளரும்.
வாழ்க வளர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

இதே மாதிரித்தான் வரதட்சணைக்கு தடை (புலிகளால் கூட தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் செய்ய முடியாமல் போன விடயம்),  தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி (தமிழும் படித்து இருந்தால் தான் அரசுப் பணி என்று இருந்தால் நன்று என்பது மாற்று இதுக்கு), ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் என்பதெல்லாம்.

சீமான் இன்னும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலில் இருந்து வெளிவரவில்லை என்பதுதான் இவற்றின் அர்த்தம். மிக இலகுவாக மக்களால் இவரது இத் திட்டங்கள் நிராகரிக்கப்படும்.

அரசியல்ல இதெல்லாம் சகயம் நிழலி, நீஙகள் தான் ஓவரா கவலைப்படுறீங்க போல....

ஆசியாவிலேயே படித்தவர்கள் அதிகம் கொண்ட இலங்கையில், ஜே ஆர் ஜெயவர்த்தன தனக்கு வாக்களித்தால், சந்திரனிலிருந்தாவது அரிசி கொண்டு வருவேன் என்றார், வென்றார்.

அட, அப்படி கேட்டமா, ரசிச்சமா, நாலு வசனம் போட்டமா, ஜாலியா போயிட்டே இருப்பம். ஓகே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

உண்மைதான் பல சீனர்களுடனும் ரஷியர்களுடனும் கம்யூனிசியம் பற்றி பேசி 
இருக்கிறேன் நேரில் அனுபவித்த அவர்களின் அனுபவம் தூரத்தில் இருந்து 
பொதுவுடைமை என்பதனால் ஆதரித்த எமக்கு இனித்ததுபோல் அவர்களுக்கு அமையவில்லை.

மனித மனம் சுயநலம் மிக்கது எப்பபோதும் எதையாவது சுரண்டி 
சுகவாழ்க்கை வாழ எத்தனிக்கும் என்பதுதான் நிஜம்.
கோவில் செல்லும் ஒவ்வருவரும் கடவுள் ஒரு மூடன் நாம் கையூட்டு கொடுத்து 
அவனிடம் அருளை  பெறுகிறோம் எனும் மனநிலையில் தெரிந்தோ தெரியாமலோ 
வாழ்கிறார்கள் ... அவர்கள்தான் மறைமுகமாக கடவுளை மறுப்பவர்கள்.

நல்லவைகள் எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொள்ளாது புறக்கணிக்க பட்டாலும் 
கெட்டவைகள் தறிகெட்டு ஆட தொடங்கும்போது கைவிட வேண்டிய நிலைமை எல்லோருக்கும் உண்டு.
இயற்கை விவசாயத்தை இங்கு ஏற்றுக்கொண்டதன்  காரணம் ... செயற்கையால் கண்ட அவஸ்தைதான்.
இந்த அனுபவங்களை பரப்புரை செய்வதன் மூலம் ஒரு விழிப்புணர்வை கொண்டுவர முடியும்.
இப்போ நிறைய இயற்கை வேளாண்மை தமிழ்நாட்டில் நடக்கிறது. 

அதுக்காக தேர்தல் பரப்புரையில் நல்லவைகளை சொல்வதில் தவறில்லை 
தமிழ்நாடு திருந்த 25 வருடம் குறைந்தது தேவை 
சீமான் முதலமைச்சர் ஆனாலும் அது முடியாத ஒன்று ...
அதுக்காக முயற்சிக்காதே என்பது ... அதைவிட  கீழானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2019 at 1:40 PM, நிழலி said:

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

Monsanto loses millions of dollars after Indian farmers switch to indigenous seeds

Monsanto claims that the genetically modified cotton seeds they sell are superior. So why are so many people trying to switch?

Ruth Milka / NationofChange / News Report - March 9, 2017
2012721101822590734_20.jpg

Get news the mainstream media doesn’t want you to see.

Sign Up
 

Monsanto is losing millions of dollars now that farmers in India are switching to indigenous cotton seeds rather than Bt cotton.

The agrochemical company is known for pushing a form of Bt cotton in India for the last decade. They have been accused of manipulating laws in order to enter the Indian market.

Monsanto’s manipulation and greed in India has caused hundreds of thousands of Indian farmers to commit suicide. Between the years of 1995 and 2013, more than 300,000 farmer suicides occurred, many of which were linked to Monsanto. Farmers are forced to pay for Monsanto’s costly seeds, which then force them to pay for the expensive pesticides to effectively grow them, as Bt cotton’s pest resistant quality fades over time.

These farmers are losing their lands, and their livelihoods, due to the debt they incur trying to afford Monsanto’s products. Many of the farmers drink the chemical insecticides in order to commit suicide.

But recently the Indian government has been promoting the use of indigenous seeds as an alternative. In the past year Monsanto has lost $75 million in royalties from the switch. As Keshav Raj Kranthi of India’s Central Institute for Cotton Research stated, “Just wait for the crucial three to four years to see a complete, natural turnaround. By then most farmers will give up Bt cotton and go for the indigenous variety.”

Monsanto claims that the genetically modified cotton seeds they sell are superior, but places in West Africa, where Monsanto is similarly pushing their Bt seeds, rejected the gm seeds after finding it produced poor quality cotton.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போன்றவர்கள் ஆட்சியை பிடிக்க விடமாட்டார்களே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.