Jump to content

அதிமுக தேர்தல் அறிக்கை - 15 முக்கிய அம்சங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
அதிமுகபடத்தின் காப்புரிமை AIADMK/FB

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. மக்கள் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் கேபிள்/DTH கட்டணங்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்.

2. வருமான வரி விலக்கு வரம்பை 8 லட்சமாக உயர்த்த வேண்டும். நிலையான கழிவை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும்

3. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றை மேம்படுத்தவும், தேம்ஸ் நதி போல கூவம் நதியில் போக்குவரத்து மற்றும் மகிழ்ச்சி சுற்றுலா மையம் அமைத்து அழகுபடுத்த மத்திய அரசிடம் நிதி ஒதுக்க வலியுறுத்துவோம்..

4. உச்சநீதிமன்றத்தின் மண்டல அளவினை கிளை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் கேட்டுக்கொள்வோம்.

5. சேலத்துக்கு இரவு நேர விமான சேவை ஏற்படுத்த மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.

6. அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் - மாதாந்திர நேரடி உதவித் தொகை ரூபாய் 1,500 வழங்கும் திட்டம்

7. இளைஞர்கள், இளம்பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்

8. பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கைவிட மத்திய அரசிடம் கேட்டு கொள்ளப்படும்.

9. கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவது, நீட் தேர்வுக்கு விலக்கு, உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

10. தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழு அளவில் கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

11. பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதை அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

12. இந்திய நதி நீர் வழித்தடங்கள் அனைத்தும் தேசிய மயமாக்கப்படவேண்டும் என அதிமுக வலியுறுத்தும்.

13. மத்திய அரசு அதன் வரி வருவாயில் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தும்.

14. ஈழ தமிழருக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிய பாதுகாப்பு கிடைத்திடவும், அவர் தம் உடமைகளுக்கும் உரிமைகளுக்கும் மத சுதந்திரத்தை பாதுகாக்கவும், மொழி உரிமைகள் உறுதி செய்யப்படவும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவும் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என அதிமுக மத்திய அரசிடம் எடுத்துரைத்து தமிழர் நலன் காக்கும் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும்.

15. நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக மாணவர்கள் கல்விக் கடனை திரும்ப செலுத்த இயலாமல் தவித்து வருவதால் மாணவர்கள் தேசிய வங்கிகள் மற்றும் இதர வங்கிகள் மூலம் பெற்ற கல்விக்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

அதிமுக

அதிமுக தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அறிவித்தது.

அதிமுகவில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் பி.எச். மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார். 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

https://www.bbc.com/tamil/india-47623287

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில், 3 தடவை தமிழை தேசிய ஆட்சி மொழி ஆக்கிருக்காங்க, 4 தடவை நதிகளை இணைச்சுருக்காங்க, 5 தடவை கச்சத்தீவை மீட்ருக்காங்க, 6 தடவை விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்துருக்காங்க, 7 தடவை கல்வி கடன்களை ரத்து பண்ணிருக்காங்க. #Elections2019

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இதுவரை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில், 3 தடவை தமிழை தேசிய ஆட்சி மொழி ஆக்கிருக்காங்க, 4 தடவை நதிகளை இணைச்சுருக்காங்க, 5 தடவை கச்சத்தீவை மீட்ருக்காங்க, 6 தடவை விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்துருக்காங்க, 7 தடவை கல்வி கடன்களை ரத்து பண்ணிருக்காங்க. #Elections2019

பத்து முறை... மதுவை ஒழித்திருக்கின்றார்கள்.  :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

பத்து முறை... மதுவை ஒழித்திருக்கின்றார்கள்.  :grin: 

எல்லாவற்றுக்கும் மத்திய அரசையே சாட்டி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாவற்றுக்கும் மத்திய அரசையே சாட்டி இருக்கிறார்கள்.

dmk ,admk இரு கட்சி தலைவர்கள் தான் மதுபான ஆலை முதலாளிகள் .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

இதுவரை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில், 3 தடவை தமிழை தேசிய ஆட்சி மொழி ஆக்கிருக்காங்க, 4 தடவை நதிகளை இணைச்சுருக்காங்க, 5 தடவை கச்சத்தீவை மீட்ருக்காங்க, 6 தடவை விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்துருக்காங்க, 7 தடவை கல்வி கடன்களை ரத்து பண்ணிருக்காங்க. #Elections2019

+ கூவத்தை 10 தரம் சுத்தப்படுத்திட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கைகளில் ஒன்றையாவது நாங்கள் திட்ட வட்டமாய் செய்வம் என்று சொல்லவில்லை...... அங்க கேட்போம் , இங்க வலியுறுத்துவோம் , மத்திய அரசிடம் கூறுவோம் என்று தந்திரமாகத்தான்.அறிக்கைகள் சொல்லுது.எல்லாத்துக்கும் வலியுறுத்தி வலியுறுத்தி இவர்கள் வலி வந்து செத்து, அந்த பாவம் மக்களுக்கு தேவையா.....பேசாமல் மத்திய அரசுக்கே ஓட்டு போடலாம்.எதோ நாலில் ஒன்றாவது நிட்சயமாய் கிடைக்கும்......!  😗

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.