Jump to content

சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்

மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:27 Comments - 0

image_fc3b3d4b43.jpgமனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.   

ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர்.   

தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.   

இலங்கையிலும் காணி இழந்த மக்களின் கோரிக்கைகள், வெகுஜனப் போராட்டங்களாக மேற்கிளம்பத் தொடங்கியுள்ளதைக் காண முடிகின்றது. தமிழர் தரப்பில், இவ்வாறான நிறையப் போராட்டங்கள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருக்கத் தக்கதாக, இப்போது வடபுலத்தின் சிலாவத்துறை முஸ்லிம்களால், காணிமீட்புப் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.   

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட, சிலாவத்துறை பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து, சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், மீளக் குடியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படை முகாமை அகற்றுமாறு, இத்தனை நாள்களாகக் கோரிவந்த முஸ்லிம் மக்கள், இப்போது காணி விடுவிப்புக்கான தொடர் போராட்டத்தை, 23 நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர்.   

கேப்பாப்புலவு தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும் கூட, சிலாவத்துறை முஸ்லிம்களின் 34 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நல்ல சமிக்ஞைகளோ, காத்திரமான அரசியல் நகர்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை.   

இதனால், தொடர் வெகுஜனப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, இன்று வெள்ளிக்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

1990ஆம் ஆண்டில், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தக் காலப் பகுதியில், சிலாவத்துறையில் வாழ்ந்த சுமார் 220 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேறி, வேறு இடங்களில் வசித்து வந்தனர். 

இந்நிலையில், யுத்தம் முடிந்த கையோடு, அதாவது 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், அம்மக்கள் தங்களது குடும்பங்கள், வாரிசுகளோடு திரும்பி வந்து, மீளக் குடியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.   

220 குடும்பங்களாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள், 19 வருடங்களுக்குப் பிறகு, சொந்த மண்ணுக்குத் திரும்பிய போது, 625 குடும்பங்களாகப் பெருகியிருந்தனர். எனவே, அவர்களுக்குக் காணி மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. 

ஆனால், ஏற்கெனவே இம்மக்களுக்குச் சொந்தமாக இருந்த 34 ஏக்கர் நிலப்பரப்பில் கூட, குடியேற முடியாதவாறு, அங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.   

அன்று தொடக்கம் இன்று வரை, தமது காணிகளை விடுவிக்குமாறும் கடற்படை முகாமை வேறோர் இடத்துக்கு மாற்றுமாறும், சிலாவத்துறை மக்கள் பல வழிகளிலும் குரல்கொடுத்து வருகின்றனர்.   

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், கட்டம் கட்டமாகப் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், பலனேதும் கிடைக்கவில்லை என்ற நிலையிலேயே, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதியில் இருந்து, கூடாரமடித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

தமது மண்ணுக்கு மீளத் திரும்பியிருந்த சுமார் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி எனக் கூறப்படுகின்ற 34 ஏக்கர் காணியிலிருந்து, கடற்படை முகாம் அகற்றப்பட்டு, அக்காணியை விடுவிக்காமல் இழுத்தடித்து வருகின்றமையால் அல்லது அதைச் செய்யக் கூடாது என்று அரசாங்கம் நினைத்து இருக்கின்றமையால், மேற்படி இருநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள், தமது பூர்வீகக் காணியில் மீள்குடியேற முடியாமல், இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.   

ஆனபோதும், ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர, ஏனைய அரசியல் தலைமைகளோ, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, தமது போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று அப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர்.   

முத்துக்குளிப்புக்குப் பெயர்போன இடம் என்பதற்கு மேலதிகமாக, பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் மிக்கதும் பழைமை வாய்ந்ததுமான சிலாவத்துறை, வடமாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முசலியின் பிரதான ஊராகக் கருதப்படுகின்றது.   

அத்துடன், சுற்றியுள்ள 25 இக்கும் மேற்பட்ட கிராமங்கள், குக்கிராமங்களின் பிரதான நகர் போலவும் சிலாவத்துறை திகழ்கின்றது. இருப்பினும், அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஒரு தொகுதி மக்களின் காணிகளில், அவர்கள் மீளக் குடியேற முடியாத நெருக்கடி, கடந்த 10 வருடங்களாக நீடித்து வருகின்றமை கவலைக்குரியது.   

தமது காணிகளில் இருந்து கடற்படை முகாமை அகற்றி, மீள்குடியேற்றத்துக்கு வழிவிட்டுத் தருமாறு, பல வருடங்களாக இம்மக்கள் கோரி வருகின்றனர். 

இதற்காகத் ‘தபாலட்டைப் போராட்டம்’, கூட்டங்கள், பேரணிகள், மகஜர் கையளிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் என, எல்லா வடிவிலான போராட்ட முன்னெடுப்புகளையும் மேற்கொண்டனர்.   

அதேநேரம், அரசியல் தலைவர்களால் மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கூட, வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், ஆன பயன் எதுவுமில்லை என்று, இம்மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.   

இந்த 34 ஏக்கரில் ஆறு ஏக்கரை விடுவிப்பதாக முன்னரே பிரதமர் கூறியிருந்ததற்கு அமைவாக, ஆறு ஏக்கர் காணியை மட்டும் விடுவித்தால் கூட, அது போதாது என்று, இதற்காகக் குரல் கொடுப்போர் கூறுகின்றனர். 34 ஏக்கர் காணியும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருக்கத்தக்கதாக, ஆறு ஏக்கர் காணியில் 200 குடும்பங்கள் வாழ்வதென்பது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.   

எனவே, எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படுவதுடன் அருகிலுள்ள வேறோர் இடத்துக்குக் கடற்படை முகாமை நகர்த்துமாறு, பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய இன மக்களும் கோரி வருகின்றனர்.   

இவ்வாறிருக்கையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள பிரதேச மக்கள் பிரதிநிதியும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கடந்த வாரம் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றிருக்கின்றார். அத்துடன், இது தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்றும் அவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.   

image_fc1119403e.jpg

இக்கூட்டத்தில், மக்கள் தமது மனக் கிடக்கைகளை முன்வைத்தனர். “பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த, எமக்குச் சொந்தமான காணிகளை, நாங்கள் பறிகொடுத்துப் பரிதவிக்கின்றோம். 10 வருட‍ங்களாக நாங்கள் இந்தக் காணி விடுவிப்புக்காகப் போராடி வருகின்றபோதும், இதுவரை எமக்கு நீதியோ, நியாயமோ கிடைக்கவில்லை. எனவேதான், தற்போது கடற்படை முகாமை அகற்றச் சொல்லி வருகின்றோம். நீங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, எமது காணியை மீட்டுத்தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.  

இக்கூட்டத்தில், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் புள்ளிவிவர அடிப்படையிலான தரவுகளை முன்வைத்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், “மொத்தமாக 34 ஏக்கர் காணி, கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், ஆறு ஏக்கர் பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. 

இரண்டு ஏக்கர் காணி, பாதைகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர், எஞ்சிருப்பது 26 ஏக்கர் ஆகும். இந்த 26 ஏக்கரில், 35 பேருக்கு வருடாந்த பெர்மிட், 18 பேருக்கு எல்.டி.ஓ. (காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழானது), நான்கு பேருக்கு கிராண்டும் (நன்கொடை அல்லது அளிப்பு), 13 பேருக்கு உறுதியும் இருக்கின்றன” என்று தெரிவித்ததாக அறிய முடிகின்றது.   

அத்துடன், “12 பேர் காணிகளை அடாத்தாகத் தமக்குச் சொந்தமாக்கி உபயோகப்படுத்தினர்” என்று சுட்டிக்காட்டிய அவர், “ஏற்கெனவே பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில், கடற்படையினருக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் அங்கு இடமாறிச் செல்வதற்கான உறுதிமொழிகளும் தரப்பட்டன. இவை தீர்மானமாகவும் உள்ளன” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.   

அத்தோடு, கடற்படை முகாமை இடம்மாற்றுவதற்காக, மேத்தன்வெளி என்ற இடத்தில் காணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காணி அதிகாரிகள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

சிலாவத்துறையில் மேற்படி சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில், 18 வருடங்களாக முஸ்லிம்கள் வாழவில்லை. இந்தக் காலப் பகுதியிலேயே யுத்த மேகம் சூழ்ந்திருந்தது. கடற் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குப் பொருத்தமான இடமாகக் கருதப்பட்டே, இங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.   

அத்துடன், ஒரு படை முகாமை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றுவது என்பது, சிறிய விடயமல்ல. அது, அங்கு இருக்கின்ற ஆயுத தளவாடங்களையும் படையினரையும் இடம்மாற்றுதலுடன் தொடர்புடைய செயற்பாடு மட்டுமல்ல, முகாமின் அமைவிடம், பாதுகாப்பு, முன்னைய முகாமில் காணப்படுகின்ற வசதிகளைப் புதிய இடத்தில் ஏற்படுத்தல், கடலைக் கண்காணிப்பதற்கு ஏதுவான கேந்திர மய்யம் என்பவை உள்ளிட்ட, நாமறியாத இன்னும் எத்தனையோ விடயங்களைக் கவனித்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

இவை எல்லாவற்றையும் ஓர் இரவில், ஒரு வாரத்தில் செய்து முடிக்கக் கூடிய பணியல்ல என்பதை, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.   

ஆனால், சிலாவத்துறை மக்கள் இன்று நேற்று இப்போராட்டத்தில் இறங்கவில்லை. ஒரு வாரத்துக்குள், மாதத்துக்குள் படை முகாமை அகற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கவும் இல்லை.   

மாறாக, கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாகத் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக, கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைத்து வருகின்றனர். எனவே, அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இப்போது 34 ஏக்கர் காணியையும் விடுவித்திருக்கலாம் என்பதையும் மறுதலிக்கக் கூடாது. எனவே, சிலாவத்துறை மக்களின் நியாயமான கோரிக்கையை, அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.   

கேப்பாப்புலவு பிரதேசத்தில் படை முகாமை அகற்றி, தமது காணியைத் தருமாறு தமிழ் மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக, கேப்பாப்புலவுக் காணிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக, சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.  

ஆனால், சிலாவத்துறை மக்களின் கோரிக்கையை, ஜனாதிபதியிடம் கொண்டு செல்வதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும், அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.   எனவே, கேப்பாப்புலவு தமிழர்களுக்கு கிடைத்த ‘சந்தோஷமான’ செய்தியை, சிலாவத்துறை முஸ்லிம்களுக்கும் பெற்றுத்தர முஸ்லிம் தலைமைகள் முன்னிற்க வேண்டியது தார்மீகமாகும்.   

காணியற்ற மக்கள் கூட்டம்

காணிகள் மனித வாழ்வுக்கும் பௌதீக ரீதியான இருப்புக்கும் அடிப்படையான தேவைப்பாடாகக் காணப்படுகின்றன. 

சனத்தொகையின் பரம்பலுக்கு அமைவாக, காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனச் சர்வதேச சட்டங்களும் சமவாயங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால், நிதர்சனம் வேறு விதமானதாக இருக்கக் காண்கின்றோம்.   

2017ஆம் ஆண்டு, உலக வங்கி நடத்திய நிலம் மற்றும் வறுமை மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பிரகாரம், காணி உரிமையைப் பாதுகாத்தல் என்பது வறுமையைக் குறைப்பதற்கும் நாட்டிலும் சமூகத்திலும் குடும்ப மட்டத்திலும் பகிரப்பட்ட செழிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கும் மிக அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டது.   

உலக சட்டங்கள் மட்டுமன்றி, உரிமைசார் அமைப்புகளும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காகப் பாடுபட்டு வருவது போல, சனத்தொகைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினர் (குறிப்பாக பெண்கள், சுதேசிகள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் பிரிவினர்) தமக்குரிய காணி உரிமையை உறுதி செய்வதற்கான பங்களிப்புகளை, உலக வங்கியும் வழங்கி வருகின்றது.   

எது எவ்வாறிருப்பினும், உலகெங்கும் பெருந்தொகையான, காணியற்ற மக்கள் மட்டுமன்றி நாடற்ற மனிதர்களும் உள்ளனர். உலக வங்கியின் தரவுகளின் படி, உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மிகக் குறைவான மக்களே தமது பெயரில் காணிகளைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்தவர்களாக இருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது.   

இலங்கையைப் பொறுத்தமட்டில், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் மூன்று மாகாணங்களிலேயே செறிவாக வாழ்கின்றனர். ஆனால், மொத்த நிலத்தில் 23சதவீதமே அம்மக்களுக்கு உள்ளது என்று மத்திய வங்கி கூறுகின்றது.   

அத்துடன், இலங்கையில் சொந்தமாகக் காணிகளே இல்லாத மக்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது காணிகளைப் பகிர்ந்தளித்து வருகின்றது என்றாலும், காணியற்ற இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் இருக்கின்றனர்.   

இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இலட்சக்கணக்கான ஹெக்டேயர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளன.  

 அதுமட்டுமன்றி, முஸ்லிம்களின் சனத்தொகைக்கு ஏற்ப, காணிகளும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. எனவே, காணிப் பிரச்சினையே இன்று முஸ்லிம்களுக்கு முதன்மையானது என்பது கவனிப்புக்குரியது.   

இடம்பெயர்ந்த மக்களின் உரித்துக்கள் பற்றி, ஐக்கிய நாடுகள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ந்து ‘பின்ஹெய்ரோ கோட்பாடுகள்’ என்ற தலையங்கத்தின் கீழ் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களினதும் அகதிகளினதும் வீடுகள், காணிகள் போன்றவற்றைத் திரும்பப் பெறுவது பற்றிச் சில கோட்பாடுகளை இயற்றியுள்ளார்கள். 

பொருட்கோடல் உள்ளடங்கலாக 23 கொள்கைக் கருத்துகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அவற்றில் இருந்து முக்கியமான, இரண்டாவது கொள்கைக் கருத்து பின்வருமாறு அமைகின்றது:   

2.1. ‘எந்த ஒரு வீட்டில் இருந்தோ காணியில் இருந்தோ ஏதேனும் ஆதனத்தில் இருந்தோ எதேச்சாதிகாரமாகவோ அல்லது சட்டத்துக்கு மாறாகவோ எந்தவோர் அகதியோ அல்லது இடம்பெயர்ந்த நபரோ வெளியேற்றப்பட்டிருப்பின் அவர்கள் அவ்வீட்டிலோ காணியிலோ அல்லது ஆதனத்திலோ மீளக் குடியமர்த்தப்படுவதற்கு உரித்துடையவர் ஆவார். அத்துடன், ஏதேனும் ஒரு சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைச்சபை ஒன்றால் வீடோ, காணியோ, ஆதனமோ உண்மையில் திரும்பப் பெற முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாகக் காணப்படுமிடத்து அதற்கான நட்ட ஈட்டை அவர் பெற உரித்துடையவராவார்.’  

2.2. ‘இடம்பெயர்வுக்குத் தக்க நிவாரணமாக அரசாங்கங்கள் ஆதன மீளளிப்பையே முன்னுரிமைப்படுத்த வேண்டும். இதனையே மீளளிக்கும் நீதியின் மிக முக்கியமான கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மீளளிப்புப் பெறும் உரித்தானது துல்லியமான ஒரு தனியுரித்து. வீடு, காணி, ஆதனம் ஆகியவற்றுக்கு உரிமையுடைய அகதிகளோ, இடம்பெயர் நபர்களோ திரும்ப வந்தால் என்ன, வராதிருந்தால் என்ன மேற்படி உரித்தானது எந்த விதத்திலும் பாதிப்படையாது’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  

இந்தக் கொள்கைக் கருத்தானது மீள்க்குடியிருப்பு என்ற தனியுரித்து எந்தளவுக்குச் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிலாவத்துறை-காணி-மீட்பு-போராட்டம்/91-230920

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.