Jump to content

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

Mar 19, 20190

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான் என்று தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை அமையப்போகும் வடக்கும் கிழக்கும் இணைந்த சுய நிர்ணய ஆட்சிக்கான சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும் என்றும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறிய விக்னேஸ்வரன் கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் நடைபெறும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 16 ஆம் திகதியே கிழக்கு மாகாணத்துக்கு வந்த நான் அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் பல இடங்களிலும் மக்கள் சந்திப்புகள் பலவற்றை நடத்தி இங்கு வாழும் தமிழ் மக்களின் குறைகள், கவலைகள், கஷ;டங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்துள்ளேன். தமிழ் மக்களின் போராட்டத்துக்கு அளப்பெரும் தியாகங்களையும் மகத்தான பங்களிப்பையும் செய்துள்ள கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் பெரும் இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகளின் கீழ் வாழ்ந்துவருவதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. நில ஆக்கிரமிப்பு, காணாமல் போனவர்களின் குடும்ப நிலை, கணவன்மார்களை இழந்த பெண்கள் நிலை, வேலை இல்லா நிலைமை என்று பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் அவர்கள் வாழ்ந்துவருவதைக் கண்டு மனம் நொந்துபோயுள்ளேன். இரு வேறு சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இங்குள்ள மக்களின் நிலைமை பாரதூரமான நிலையில் இருக்கின்றது. எமது மக்கள் 300 க்கும் அதிகமான தமது பூர்வீகக் கிராமங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், அரசியல் ஒற்றுமை என்பவற்றைக் காரணம் காட்டி எமது அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து வருகின்றார்கள் என்று மக்கள் என்னிடம் குறை கூறினார்கள். எமக்கான நியாயமான உரித்துக்கள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கு நாம் பின்நிற்கத் தேவை இல்லை. அதேசமயம் ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுக்கும் வகையிலும் நாம் செயற்படத்தேவை இல்லை. சமூகங்களின் சுமூகம் என்பது ஒரு சாராரின் தலைமைகள் நித்திரைக்குப் போகும் நிலையை ஏற்படுத்தக்கூடாது.

கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் நாம் மூலோபாயங்களை வகுத்து செயற்படவேண்டும். இதில் புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான். ஆயுத ரீதியான போராட்டம் நடைபெற்றபோது கிழக்கு மாகாண மக்கள் செய்துள்ள பங்களிப்பை நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட பங்களிப்புக்களை நான் நீதிபதியாக இங்கு கடமையாற்றிய காலங்களில் நேரடியாகக் கண்டுள்ளேன். செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை நாம் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு சுய நிர்ணய அடிப்படையிலான தீர்வினைப் பெறும்போது எமக்குச் சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும்.

இதனைச் சாத்தியமானதாக்க வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து நாம் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும். நான் அடிக்கடி இங்கு வந்து இங்குள்ள மக்களைச் சந்திக்கவிருக்கின்றேன். மக்களாகிய நீங்கள் என்னையோ அல்லது எனது கட்சி முக்கியஸ்தர்களையோ எந்நேரத்திலும் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறலாம். அவற்றைத் தீர்க்க நாம் எம்மால் ஆனமட்டில் முயற்சி செய்வோம்.

 

http://www.samakalam.com/செய்திகள்/போராட்டத்துக்கு-வட-மாகாண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

 

கிழக்கில் போராட்டத்துக்கு ஓடினார்கள்

வடக்கில் வெளிநாட்டுக்கு ஓடினார்கள்.

Link to comment
Share on other sites

இப்படியான ஒப்பீடுகள் ஒரு போதும் ஒற்றுமையை கொண்டு வர போவதில்லை.

மாவீரர்கள் தங்கள் உயிரை மாய்க்கும் போது தான் கிழக்குக்காக தன் உயிரை அர்ப்பணிக்கின்றேனா அல்லது வடக்குக்காக உயிரை அர்ப்பணிக்கின்றேனா என பார்த்து பார்த்து அர்ப்பணிக்கவில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் ஈழத்துக்காகவே அர்ப்பணித்தனர்.

விக்கினேஸ்வரன் தான் அரசியல் செய்ய இப்படியான புள்ளிவிபரங்களை எடுத்து விட்டு இருக்கும் ஒற்றுமையையும் குலைக்க பார்க்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இப்படியான ஒப்பீடுகள் ஒரு போதும் ஒற்றுமையை கொண்டு வர போவதில்லை.

மாவீரர்கள் தங்கள் உயிரை மாய்க்கும் போது தான் கிழக்குக்காக தன் உயிரை அர்ப்பணிக்கின்றேனா அல்லது வடக்குக்காக உயிரை அர்ப்பணிக்கின்றேனா என பார்த்து பார்த்து அர்ப்பணிக்கவில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் ஈழத்துக்காகவே அர்ப்பணித்தனர்.

விக்கினேஸ்வரன் தான் அரசியல் செய்ய இப்படியான புள்ளிவிபரங்களை எடுத்து விட்டு இருக்கும் ஒற்றுமையையும் குலைக்க பார்க்கின்றார்

ஏன்...நிழலி...தமிழனுக்காக வெட்டிப் புடுங்குவம் என்டு வாற எல்லாரும்.....கடைசியில....தமிழனைப் பிழக்கிற வேலையை மட்டுமே பாக்க வெளிக்கிடுகினம்?

தமிழன்...எப்பவுமே....இளிச்ச வாயன் தானா?😚

Link to comment
Share on other sites

இந்த செய்தியை பார்த்ததும் என்மனதில் தோன்றிய கருத்தும் நிழலியின் கருத்தும் ஒன்றாக உள்ளது!

ஒப்பீடுகள் ஒற்றுமையை உருவாக்க உதவப்போவதில்லை!

விக்னேஸ்வரன் அவர்களின் கருத்து மேலோட்டமாக உண்மை போல தெரிந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவற்றில் உண்மையில்லை! அதற்கு அப்பால் இது போன்ற ஒப்பீடுகள் இலகுவான விடயம் இல்லை!

விக்னேஸ்வரன் அவர்கள் இதுபோன்ற பத்தாம்பசலித்தன அரசியலை முற்றாக கைவிடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஓர் ஒப்பீடாக நான் பார்க்கவில்லை. மதிப்பீடாகவே பார்க்கின்றேன். இயற்கை அழிவிலும் சரி, போராட்டத்திலும் சரி, உயிரிழப்பு / பொருளிழப்பு / படுகொலைகள் போன்றவற்றை கிழக்கு மக்களே கூடுதலாக அனுபவித்தவர்கள். இன்றும் கூட அவர்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பெரும்பாலும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்ததால் 
வெளிநாட்டு பயணமும் வெளிநாட்டு பணமும் என்று வாழ்க்கை சென்றுகொண்டு 
இருந்தது.

கிழக்கு மக்களுக்கு போராடடம்தான் ஒரே வழி என்று இருந்தது 
வாகரை பகுதிகளில் எல்லாவீட்டிலும் ஒரு போராளி உண்டு என்று சொல்லலாம் 
அவர்கள் அர்ப்பணிப்பும் தியாகமும் கூடுதல் என்பது என்னவோ உண்மைதான். 

அதனால்  இதனை கூறி கொண்டு இருப்பதால் ஒற்றுமை வளருமா என்றால் இல்லை எனலாம்.
அந்த போராளிகளின் கனவு சுதந்திர விடுதலை  ... அதை நோக்கி நகர்வதே கிழக்கு மக்களுக்கும் போராளிகளுக்கு 
கொடுக்கும் மரியாதை ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் சற்று பொறுமையோடு இருந்தால் இன்னும் சில நாட்களில் விக்கி அவர்கள் செய்தியை மறுத்து பதிலளித்து தான் அப்படியான ஒரு பிரிவினை வாத கருத்தை என்றுமே முன்வைக்கவில்லை என மாற்று அறிக்கையொன்றை விடக்கூடும். விக்கியரை வம்பில் மாட்டிவிடவேண்டும் என பலர் கிளம்பியிருப்பதும் புரிகிறது. 

Link to comment
Share on other sites

4 hours ago, vanangaamudi said:

நாங்களும் சற்று பொறுமையோடு இருந்தால் இன்னும் சில நாட்களில் விக்கி அவர்கள் செய்தியை மறுத்து பதிலளித்து தான் அப்படியான ஒரு பிரிவினை வாத கருத்தை என்றுமே முன்வைக்கவில்லை என மாற்று அறிக்கையொன்றை விடக்கூடும். விக்கியரை வம்பில் மாட்டிவிடவேண்டும் என பலர் கிளம்பியிருப்பதும் புரிகிறது. 

சரி சரி விக்கியர் அறிக்கை வரும்வரை காத்திருப்போம்........

ஆனால் மட்டுவில் இழந்த போராளிகள் (அனைத்து இயக்கங்களிலும் ) அதிகம், இழந்த மக்கள் அதிகம்.

மட்டுவைப்போன்று போரினால் பாதிக்கப்பட்ட இடம் வடகிழக்கில் எங்குமேயில்லை. அவர்களும், தமிழோ முஸ்லீமோ தமிழர்களே. 

நேரடியாக பார்க்கணும் என்றால் ஒருமுறை படுவான்கரைப்பக்கம் போய் பாருங்கள்.

தயவு செய்து அவர்கள் தியாகங்களை கொச்சைப் படுத்தாதீர்கள் + அதை அரசியலாக்காதீர்கள்.

அவர்களையாவது வாழவையுங்கள் இல்லை குறைந்தது வாழவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் லாபத்திற்காகவும்,மக்களை உசுப்பேத்த சொன்னாலும் உண்மையை சொல்லி இருக்கார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.