Jump to content

ஐ.நாவின் அறிக்கையை முழுமையாக ஏற்க முடியாது! ஒரேபார்வையில் ஜெனீவா…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2009ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற போர் மற்றும் அதற்குப் பிந்தைய இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலெட்டின் உரை இடம்பெற்று வருகின்றது.

அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனின் உரை இடம்பெறவுள்ளது. இதன்போது, அவர் ஐ.நாவின் உரையை முழுமையாக ஏற்க முடியாது என்றும், இலங்கையில் தற்போது நிலமைகள் மாற்றமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மன்னாரின் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி பிரித்தானிய ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்றும் அதனை வேறு விதமாக சித்திரிக்க முடியாது என்றும் திலக் மாரப்பன தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக மற்றுமொரு சட்டம் உருவாக்கப்படுவதாகவும் 2017ஆம் ஆண்டின் பின்னர், இலங்கை ஐ.நா பிரேரணைகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐநாவின் பிரேரணை, உரிய கால எல்லைக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய உரிய காலஎல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட  கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி, வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது எனவலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்”

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இதனை அறிவித்துள்ளது.

இது குறித்து கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்போன் கருத்து வெளியிடுகையில், “தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நாம் தொடர்ந்தும் போராடுவோம். இந்த விடயம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலமாக ஒலிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் போர்க்காலத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 13ஆவது திருத்த சட்டமூலத்தை,  முழுமையாக நடைமுறைப்படுத்துவதனூடாகவே  தமிழர் பிரச்சினைகளை தீர்க்கமுடியும்..

இலங்கை தமிழர் பிரச்சினைகளை தீர்க்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தில் உள்ள விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் மிச்செல் பாச்லெட் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

குறித்த அறிக்கையை தொடர்ந்து உரையாற்றியபோதே இந்தியா இதனை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தமது நட்புநாடு என்றவகையில் சகல விடயங்களிலும் இந்தியா துணை நிற்கும், குறிப்பாக தேசிய ஒற்றுமை, மனித உரிமை போன்ற விடயங்களில் அதிக கரிசனை கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்தது. அத்தோடு, இலங்கையின் தமிழ் சமூகம் தொடர்பாக கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மீள்குடியேற்றம் நல்லிணக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக நிலையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் எனவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

http://globaltamilnews.net/2019/116507/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.