Jump to content

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

happy.jpg

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன.

நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/மகிழ்ச்சியான-நாடுகளின்-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, மிகவும் கவலையான நாடுகளின் பட்டியலில் எத்தனையாவது இடம்? முதலாவது ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

அப்போ, மிகவும் கவலையான நாடுகளின் பட்டியலில் எத்தனையாவது இடம்? முதலாவது ???

கட்டாயம் இல்லை. அதுக்குத்தான் இந்தியா இருக்கிறதே! சாரி   ராசவன்னியன் அண்ட் கோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

2880px-Happiness_score_of_countries_acco

எங்களைவிடவும் தென்னமெரிக்க, வடக்கு ஆப்பிரிக்கர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! 

ஆனால் இந்தியாகூட எங்களைப்போலதான்.

எப்போதுபோல கனடாவும் அவுஸ்த்திரேலியாவும், ஸ்கண்டிநேவியாவும் மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

கட்டாயம் இல்லை. அதுக்குத்தான் இந்தியா இருக்கிறதே! சாரி   ராசவன்னியன் அண்ட் கோ ?

அரை முதல் ஒரு புள்ளி அதிகமாக பெற்று வாழும் நாட்டிலிருந்து இங்க பாருங்கப்பா, சாரோட அலப்பறையை..? :)

 இந்தியாவ பத்தி யாருங்கோ கவலைப்பட்டா..? 😜

தமிழ்நாடு, வளமா, மகிழ்ச்சியா இருந்தால் போதும் சாமி..!😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின், முதலிடமுள்ள  மகிழ்சியான நாட்டில்  வாழ்ந்தாலும் நான் மட்டும் மகிழ்சியாக இல்லை.

"என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி  என்பதை எதை  வைத்து  கணிக்கிறார்கள்  என்று  தெரியவில்லை

பணம்??  பொருளாதாரம்??

சுகாதாரம்??

நிம்மதி??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ragunathan said:

அப்போ, மிகவும் கவலையான நாடுகளின் பட்டியலில் எத்தனையாவது இடம்? முதலாவது ???

ஊரில் மக்கள் கவலையாய் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது போல் உள்ளது 😧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

ஊரில் மக்கள் கவலையாய் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது போல் உள்ளது 😧

இல்லை, நான் அப்படியான அர்த்தத்தில் சொல்லவில்லை. சிறிலங்கா அப்படித்தான் மக்களை வைத்திருக்கிறது என்று சொல்கிறேன். அவர்கள கவலைப்படவேண்டும் என்று நான் ஏன் ஆசைப்படுகிறேன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன.

குளிர் கூடின நாடுகள் மகிழ்ச்சியாய் இருக்கிறமாதிரி தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

குளிர் கூடின நாடுகள் மகிழ்ச்சியாய் இருக்கிறமாதிரி தெரியுது.

அப்ப.... ரஸ்யாவும் மகிழ்ச்சியாக எல்லா இருக்க வேணும். :grin:
பார்க்க... அப்பிடி, தெரியேல்லையே... 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

மகிழ்ச்சி  என்பதை எதை  வைத்து  கணிக்கிறார்கள்  என்று  தெரியவில்லை

பணம்??  பொருளாதாரம்??

சுகாதாரம்??

நிம்மதி??????

கல்வி மருத்துவம் போதுமான அளவு அரசு உதவிப்பணம் 
இருந்தால் ........
ஜாலியா படுத்து தூங்கலாம் என்கிறார்கள். 

நான் நினைக்கிறேன் 
ஸ்கண்டிநேவியா அவுஸ் கனடாவில் மற்ற நாடுகள்போல் 
இளம் பெண்கள் அதிகமா லெக்கிங்ஸ் அணிவது இல்லைபோல ...

மற்ற நாடுகளில் ஆண்கள் நிம்மதியாவேகவே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2019 at 5:54 PM, விசுகு said:

மகிழ்ச்சி  என்பதை எதை  வைத்து  கணிக்கிறார்கள்  என்று  தெரியவில்லை

பணம்??  பொருளாதாரம்??

சுகாதாரம்??

நிம்மதி??????

ஒவ்வொருவருக்கும் ஓவ்வரு விடையம் மகிழ்ச்சி. அதுக்கும் இந்த பட்டியலுக்கும் சம்பந்தம் இல்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, சுவைப்பிரியன் said:

ஒவ்வொருவருக்கும் ஓவ்வரு விடையம் மகிழ்ச்சி. அதுக்கும் இந்த பட்டியலுக்கும் சம்பந்தம் இல்லை.

இந்தப் பட்டியலுக்கு சம்பந்தம் இல்லை என்ற உங்கள் கருத்தில் மாற்றமில்லை. ஏனெனில், ' கொலை, களவு, கள், காமம், பொய்கூறல்'  இவற்றைக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழ்பவர்கள் அரசுசெய்ய அவர்களுக்கு ஆதரவளித்து செல்வம் சேர்த்துச் செழித்து வாழும் மக்களைக் கொண்ட  நாடுகளே உலகில் அதிகம். அந்தவகையில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளே பட்டியலில் முதலிடத்தில் இருக்கவேண்டும். 🤔

 

இலங்கையில்

முதல் 10 இடத்தில் உள்ள பணக்காரர்கள் அனைவரும் அரசியல்வாதிகள்.

1. மஹிந்த ராஜபக்ஸ (Mahinda Rajapaksa – $18 Billion)2. அர்ஜுனா ரணதுங்கா (Arjuna Ranatunga – $68 million)
3. மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena – $14million)
4. ஆறுமுகம் தொண்டைமான் (Arumugam Thondaman – $1.9million)
5. விநாயகமூர்த்தி முரளிதரன் (Vinayagamoorthy Muralitharan – $1.7million)
6. அப்துல் ஹமீது முஹம்மத் பௌசி (A. H. M. Fowzie – $1.4million)
7. சந்திரிகா குமாரதுங்கே (Chandrika Kumaratunga – $1.4 Million)
8. அனுரா குமாரா திசநாயகே (Anura Kumara Dissanayaka – $1.3 million)
9. அஹ்மத் லெப்பே மரைகாயர் அதுல்லா (A. L. M. Athaullah – $900,000)
10. ரணில் விக்ரமசிங்கே (Ranil Wickremesinghe – $860,000)

இந்தியாவில்

1.       முகேஷ் அம்பானி 15 லட்சம் கோடி ரூபாய்

2.       திலிப் சங்வி 11 லட்சம் கோடி ரூபாய்

3.       இந்துஜா சகோதர்கள் 10.1 லட்சம் கோடி ரூபாய்

4.       அசிம் பிரேம்ஜி 10 லட்சம் கோடி ரூபாய்

5.       பல்லோன்ஜி பிஸ்திரி 9.31 லட்சம் கோடி ரூபாய்

6.       லட்சுமி மிட்டல் 8.37 லட்சம் கோடி ரூபாய்

7.       கோத்ரேஜ் குடும்பம் 8.31 லட்சம் கோடி ரூபாய்

8.       ஷிவ் நாடார் 7.64 லட்சம் கோடி ரூபாய்

9.       குமார் பிர்லா 5.89 லட்சம் கோடி ரூபாய்

10.   சைரஸ் பூனவாலா 5.76 லட்சம் கோடி ரூபாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

இந்தப் பட்டியலுக்கு சம்பந்தம் இல்லை என்ற உங்கள் கருத்தில் மாற்றமில்லை. ஏனெனில், ' கொலை, களவு, கள், காமம், பொய்கூறல்'  இவற்றைக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழ்பவர்கள் அரசுசெய்ய அவர்களுக்கு ஆதரவளித்து செல்வம் சேர்த்துச் செழித்து வாழும் மக்களைக் கொண்ட  நாடுகளே உலகில் அதிகம். அந்தவகையில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளே பட்டியலில் முதலிடத்தில் இருக்கவேண்டும். 🤔

 

 

 

செல்வம் மட்டும்தான் மகிழ்ச்சி என்று நீங்கள் நினைத்தால் சொல்வதற்க்கு ஓன்றும் இல்லை

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

செல்வம் மட்டும்தான் மகிழ்ச்சி என்று நீங்கள் நினைத்தால் சொல்வதற்க்கு ஓன்றும் இல்லை

தவறான புரிதல் என்று எண்ணுகிறேன். 😥

இன்றைய உலக அரசியல், அனேகமாக கயவர்களின் தலைமையில் இயங்குவது கண்கூடு. அந்த கயவர்களின் வழிகாட்டலில் வாழ்ந்து அதுவே மகிழ்ச்சி என்று எண்ணும் மக்கள் கூட்டத்தைக் குறிப்பிட்டேன். என்னையும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நீங்கள் பார்க்க எண்ணினால் அது என் துர்ப்பாக்கியம். 😯

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.