Jump to content

Recommended Posts

உணர்வுகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தாயகத்தில் போர் நிகழும் போதும்கூட நிகழ்ந்திராதவகையில் வெறும் அமெரிக்க அரசியல் பேசி நண்பர்கள் இன்று பிரிந்து போகிறார்கள். யாரும் யாரிலும் தங்கியில்லை. எவரையும் எவரிற்கும் பேணத்தேவையில்லை. தன்னைத் தான் பார்க்கவிரும்பும் உயரத்தில் இருந்து பத்துமடங்காவது அதிகப்படி உயரத்தில் வைத்துப் பிறரிற்குத் தன்னைக் காட்டவேண்டிய கட்டாயம் பலரிற்குள் உணரப்படுகிறது. இது காலாதிகாலமாக இருந்த வரட்டுக்கவுரவம் தான் என்று கொள்ளினும், ஒரு சிறு, ஆனால் மிகமுக்கிய வித்தியாசம் இன்று முனைப்பெடுக்கிறது. அதாவது, மற்றையவன் தன்னைப் பார்;பது பக்கவிளைவு, தான் நினைக்கும் உயரத்தில் தான் இருந்தே ஆகவேண்டும் என்ற சமாதானப்படுத்தமுடியா அடம் சுயத்தின் முனைப்பு என்றாகியுள்ளது. 

இது சுயத்தின் முனைப்பு என்று சொல்கையில் அது ஒரு சாதகமான முன்னேற்றமான விடயம்போல் தோன்றுகிறது. இருப்பினும் இந்த முனைப்பு திட்டமிட்டு நடுத்தரவர்கத்தினர் மீது விளைவிக்கப்படுகின்றது. முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்கு கடன் பிராணவாயு. கடன் வாழ்வதற்கு ஆசை அத்தியாவசியம். அனைவரும் எப்போதும் அறி;ந்த ஆனால் என்றைக்கும் விளங்கிக்கொள்ளாத விடயம், வறியோர்க்கும் செல்வந்தர்க்கும் ஆசை அந்நியம். இருவரிற்கும் அதற்கு நேரமில்லை. அதாவது வறியவர்க்கு என்னத்திற்கு ஆசைப்படலாம் என்று றூம் போட்டு யோசிக்க நேரமில்லை, அவர்களது ஆசைகள் அவர்களது ஊர் எல்லைக்குள் விரிவன—சந்தைக்கு அவற்றால் பாரிய சகாயமில்லை. செல்வந்தர்க்கு ஆசைப்படமுதல் வாயில் தோசை என்பதால் இல்லாமை உணர அவகாசமில்லை. இதனால் இடைப்பட்ட வர்க்கத்தில் சந்தை ஆசை வேளாண்மை செய்கிறது.

இன்னுமொரு விதத்தில் பார்ப்பின், பெரும் செல்வந்தர் வேண்டாம், ஒரு பத்து மில்லியன் டொலரைக் கையில் வைத்துக் கொண்டு பார்த்தால், 3 வீத உறுதிப்படுத்தப்பட்ட முதலீடு சர்வசாதாரணம். அதாவது 3 லட்சம் வருட வருமானம் உறங்கியபடி எந்த ஆபத்தும் இன்றி உறுதிப்படுத்தப்படலாம். 3 லட்சம் நடுத்தர வர்க்கத்தின் ஊதியம். ஒரு படி மேலே சென்று 100 மில்லியன் உள்ளவரைப் பார்த்தால் அதே 3 வீத முதலீடு அவரிற்கு 3 மில்லியன் பொக்கற் மணி என்றாகிறது. பொதுவாகச் செல்வம் செழிப்பாக இருக்கையில் பணவீக்கத்தை வெல்லும் முதலீடுகளட் மட்டும் போதும் என்று; திருப்த்தியளிப்பினும் ஆறு வீதம் மிக இயல்பான களியாட்டக் காசிற்கான முதலீடு. ஆக 3 தொடக்கம் 6 வீதம் மிகக்குறைந்த ஆபத்தில் வருமானம் ஈட்டும் முதலீடுகள் செல்வந்தரின் பொக்கற் மணிக்கான குறியாகின்றன (பெரும்பணமீட்டும் வியாபாரங்களும் முதலீடுகளும் இன்ன பிற. வெறும் களியாட்டத்திற்கு மேற்படி போதுமானது). இப்போ எங்கிருந்து இந்த 3 தொடக்கம் 6 வீத வருமானம் ஈட்டப்படுகிறது என்று பாhத்தால் பெரும்பாi;மையாக மஞ்சள் தண்ணி தெளித்தபடி நிற்கும் நடுத்தர வர்க்க ஆடுகளே தென்படும். வீட்டுக் கடன். வாகனக் கடன் முதற்கொண்டு நுகர்வுப் போதைக்கு அடிமைப்பட்ட நடுத்தர வர்க்கத்தில் தலையில் செல்வந்தரின் களியாட்டம். 

ஆக, ஆசை நடுத்தரவர்கத்தில் வேளாண்மை செய்யப்படுகிறது. ஆனால், தாங்கள் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடுகள் என்பது என்றைக்கும் நடுத்தர வர்க்கத்திற்குத் தெரிந்திடக்கூடாதென்பதற்காய் எத்தனையோ உத்திகள் காலாதிகாலமாய்க் களமிறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், மேற்படி உத்திகளை அமுல் படுத்துவதில் தான் செல்வந்தர் பெருஞ்செல்வந்தராகும் அடிப்படை இருக்கிறது (விளம்பரம், மருத்துவம், மாத்திரை. இன்னபிற). அந்த வகையில் செல்வந்தரின் விளைநிலங்களாக மாடாய் உழைத்து விளைந்தவற்றையும் செல்வந்தரின் சாகுபடியாக்கி நடுத்தரவர்கம் முளித்தபடி சிரிக்க முனைகிறது. 

எவரையும் பேணாது, பழையவரின் தேடல்களில் பிறந்த பாரம்பரிய பெறுமதிகளையும் புறந்தள்ளி, சுயமுனைப்பில் மிதப்பதாய் நம்பியபடி அடிமைப்படுத்தப்பட்டு, அகங்காரம் புற்றுநோய் கடந்த பயங்கரமாகி, நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல உண்மையான உறவுகள் என்று யாருமற்று, இயக்கத்தில் தூங்கியபடி தனித்தீவுகளாகத் தம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் உணரத் தவறுவது யாதெனில்: மேற்படி மந்தைக்குள் மாடாக கூட்டத்தில் தீவாகப் பாரம்பரிய லாபங்களையும் தொலைத்துத் திரியும் நிலை எதேச்சையானதொன்றல்ல—திட்டமி;ட்டுச் செய்யப்படும் வேளாண்மை.

அடிமை என்பது மனதின் நிலை. ஒருவன் பிறிதொருவனை அடிமைப்படுத்துவது என்பது ஆயுதங்களால் சாத்தியப்படாதது. மனதில் விளையும் களைகள் இன்றி அடிமை என்ற தழை சாத்தியமில்லை. மனதில் விதைக்கப்பட்ட களைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில், மனதில் களையின்றி வேறேதும் சாத்தியமா? என்ற கேள்வி பிறக்கும். அந்தப் புள்ளியில் விடுதலை வேண்டும் ஆன்மீகத் தேடல் ஆரம்பமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இக்காலத்தில் ஆன்மீகத் தேடலில் ஈடுபடப்போகிறார்??? எதையும் எப்படியுமே நிறுத்தமுடியாத ஒரு சகதிக்குள் தான் நாம் அனைவருமே தள்ளப்பட்டுருக்கிறோம். இப்போதைக்கு இதற்கான விடிவற்ற தொடர்ச்சியே நீடித்திருக்கும்

Link to comment
Share on other sites

On 3/22/2019 at 1:27 AM, Innumoruvan said:

அடிமை என்பது மனதின் நிலை. ஒருவன் பிறிதொருவனை அடிமைப்படுத்துவது என்பது ஆயுதங்களால் சாத்தியப்படாதது. மனதில் விளையும் களைகள் இன்றி அடிமை என்ற தழை சாத்தியமில்லை. மனதில் விதைக்கப்பட்ட களைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில், மனதில் களையின்றி வேறேதும் சாத்தியமா? என்ற கேள்வி பிறக்கும். அந்தப் புள்ளியில் விடுதலை வேண்டும் ஆன்மீகத் தேடல் ஆரம்பமாகும்.

நல்லதொரு சிந்தனைப்பகிர்வு.

இன்றைய சூழலில் நாம் அவசியம் அறியவேண்டிய ஓர் ஆரம்பப் புள்ளியைத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறீர்கள், இன்னுமொருவன். நாம் இன்று எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சு இங்கு தான் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, ஆசை நடுத்தரவர்கத்தில் வேளாண்மை செய்யப்படுகிறது. ஆனால், தாங்கள் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடுகள் என்பது என்றைக்கும் நடுத்தர வர்க்கத்திற்குத் தெரிந்திடக்கூடாதென்பதற்காய் எத்தனையோ உத்திகள் காலாதிகாலமாய்க் களமிறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், மேற்படி உத்திகளை அமுல் படுத்துவதில் தான் செல்வந்தர் பெருஞ்செல்வந்தராகும் அடிப்படை இருக்கிறது (விளம்பரம், மருத்துவம், மாத்திரை. இன்னபிற). அந்த வகையில் செல்வந்தரின் விளைநிலங்களாக மாடாய் உழைத்து விளைந்தவற்றையும் செல்வந்தரின் சாகுபடியாக்கி நடுத்தரவர்கம் முளித்தபடி சிரிக்க முனைகிறது. 

 

இதுதான் யதார்த்தத்தில் நடை பெறுகின்றது......!  😗

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.