Jump to content

Recommended Posts

உணர்வுகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தாயகத்தில் போர் நிகழும் போதும்கூட நிகழ்ந்திராதவகையில் வெறும் அமெரிக்க அரசியல் பேசி நண்பர்கள் இன்று பிரிந்து போகிறார்கள். யாரும் யாரிலும் தங்கியில்லை. எவரையும் எவரிற்கும் பேணத்தேவையில்லை. தன்னைத் தான் பார்க்கவிரும்பும் உயரத்தில் இருந்து பத்துமடங்காவது அதிகப்படி உயரத்தில் வைத்துப் பிறரிற்குத் தன்னைக் காட்டவேண்டிய கட்டாயம் பலரிற்குள் உணரப்படுகிறது. இது காலாதிகாலமாக இருந்த வரட்டுக்கவுரவம் தான் என்று கொள்ளினும், ஒரு சிறு, ஆனால் மிகமுக்கிய வித்தியாசம் இன்று முனைப்பெடுக்கிறது. அதாவது, மற்றையவன் தன்னைப் பார்;பது பக்கவிளைவு, தான் நினைக்கும் உயரத்தில் தான் இருந்தே ஆகவேண்டும் என்ற சமாதானப்படுத்தமுடியா அடம் சுயத்தின் முனைப்பு என்றாகியுள்ளது. 

இது சுயத்தின் முனைப்பு என்று சொல்கையில் அது ஒரு சாதகமான முன்னேற்றமான விடயம்போல் தோன்றுகிறது. இருப்பினும் இந்த முனைப்பு திட்டமிட்டு நடுத்தரவர்கத்தினர் மீது விளைவிக்கப்படுகின்றது. முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்கு கடன் பிராணவாயு. கடன் வாழ்வதற்கு ஆசை அத்தியாவசியம். அனைவரும் எப்போதும் அறி;ந்த ஆனால் என்றைக்கும் விளங்கிக்கொள்ளாத விடயம், வறியோர்க்கும் செல்வந்தர்க்கும் ஆசை அந்நியம். இருவரிற்கும் அதற்கு நேரமில்லை. அதாவது வறியவர்க்கு என்னத்திற்கு ஆசைப்படலாம் என்று றூம் போட்டு யோசிக்க நேரமில்லை, அவர்களது ஆசைகள் அவர்களது ஊர் எல்லைக்குள் விரிவன—சந்தைக்கு அவற்றால் பாரிய சகாயமில்லை. செல்வந்தர்க்கு ஆசைப்படமுதல் வாயில் தோசை என்பதால் இல்லாமை உணர அவகாசமில்லை. இதனால் இடைப்பட்ட வர்க்கத்தில் சந்தை ஆசை வேளாண்மை செய்கிறது.

இன்னுமொரு விதத்தில் பார்ப்பின், பெரும் செல்வந்தர் வேண்டாம், ஒரு பத்து மில்லியன் டொலரைக் கையில் வைத்துக் கொண்டு பார்த்தால், 3 வீத உறுதிப்படுத்தப்பட்ட முதலீடு சர்வசாதாரணம். அதாவது 3 லட்சம் வருட வருமானம் உறங்கியபடி எந்த ஆபத்தும் இன்றி உறுதிப்படுத்தப்படலாம். 3 லட்சம் நடுத்தர வர்க்கத்தின் ஊதியம். ஒரு படி மேலே சென்று 100 மில்லியன் உள்ளவரைப் பார்த்தால் அதே 3 வீத முதலீடு அவரிற்கு 3 மில்லியன் பொக்கற் மணி என்றாகிறது. பொதுவாகச் செல்வம் செழிப்பாக இருக்கையில் பணவீக்கத்தை வெல்லும் முதலீடுகளட் மட்டும் போதும் என்று; திருப்த்தியளிப்பினும் ஆறு வீதம் மிக இயல்பான களியாட்டக் காசிற்கான முதலீடு. ஆக 3 தொடக்கம் 6 வீதம் மிகக்குறைந்த ஆபத்தில் வருமானம் ஈட்டும் முதலீடுகள் செல்வந்தரின் பொக்கற் மணிக்கான குறியாகின்றன (பெரும்பணமீட்டும் வியாபாரங்களும் முதலீடுகளும் இன்ன பிற. வெறும் களியாட்டத்திற்கு மேற்படி போதுமானது). இப்போ எங்கிருந்து இந்த 3 தொடக்கம் 6 வீத வருமானம் ஈட்டப்படுகிறது என்று பாhத்தால் பெரும்பாi;மையாக மஞ்சள் தண்ணி தெளித்தபடி நிற்கும் நடுத்தர வர்க்க ஆடுகளே தென்படும். வீட்டுக் கடன். வாகனக் கடன் முதற்கொண்டு நுகர்வுப் போதைக்கு அடிமைப்பட்ட நடுத்தர வர்க்கத்தில் தலையில் செல்வந்தரின் களியாட்டம். 

ஆக, ஆசை நடுத்தரவர்கத்தில் வேளாண்மை செய்யப்படுகிறது. ஆனால், தாங்கள் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடுகள் என்பது என்றைக்கும் நடுத்தர வர்க்கத்திற்குத் தெரிந்திடக்கூடாதென்பதற்காய் எத்தனையோ உத்திகள் காலாதிகாலமாய்க் களமிறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், மேற்படி உத்திகளை அமுல் படுத்துவதில் தான் செல்வந்தர் பெருஞ்செல்வந்தராகும் அடிப்படை இருக்கிறது (விளம்பரம், மருத்துவம், மாத்திரை. இன்னபிற). அந்த வகையில் செல்வந்தரின் விளைநிலங்களாக மாடாய் உழைத்து விளைந்தவற்றையும் செல்வந்தரின் சாகுபடியாக்கி நடுத்தரவர்கம் முளித்தபடி சிரிக்க முனைகிறது. 

எவரையும் பேணாது, பழையவரின் தேடல்களில் பிறந்த பாரம்பரிய பெறுமதிகளையும் புறந்தள்ளி, சுயமுனைப்பில் மிதப்பதாய் நம்பியபடி அடிமைப்படுத்தப்பட்டு, அகங்காரம் புற்றுநோய் கடந்த பயங்கரமாகி, நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல உண்மையான உறவுகள் என்று யாருமற்று, இயக்கத்தில் தூங்கியபடி தனித்தீவுகளாகத் தம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் உணரத் தவறுவது யாதெனில்: மேற்படி மந்தைக்குள் மாடாக கூட்டத்தில் தீவாகப் பாரம்பரிய லாபங்களையும் தொலைத்துத் திரியும் நிலை எதேச்சையானதொன்றல்ல—திட்டமி;ட்டுச் செய்யப்படும் வேளாண்மை.

அடிமை என்பது மனதின் நிலை. ஒருவன் பிறிதொருவனை அடிமைப்படுத்துவது என்பது ஆயுதங்களால் சாத்தியப்படாதது. மனதில் விளையும் களைகள் இன்றி அடிமை என்ற தழை சாத்தியமில்லை. மனதில் விதைக்கப்பட்ட களைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில், மனதில் களையின்றி வேறேதும் சாத்தியமா? என்ற கேள்வி பிறக்கும். அந்தப் புள்ளியில் விடுதலை வேண்டும் ஆன்மீகத் தேடல் ஆரம்பமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இக்காலத்தில் ஆன்மீகத் தேடலில் ஈடுபடப்போகிறார்??? எதையும் எப்படியுமே நிறுத்தமுடியாத ஒரு சகதிக்குள் தான் நாம் அனைவருமே தள்ளப்பட்டுருக்கிறோம். இப்போதைக்கு இதற்கான விடிவற்ற தொடர்ச்சியே நீடித்திருக்கும்

Link to comment
Share on other sites

On 3/22/2019 at 1:27 AM, Innumoruvan said:

அடிமை என்பது மனதின் நிலை. ஒருவன் பிறிதொருவனை அடிமைப்படுத்துவது என்பது ஆயுதங்களால் சாத்தியப்படாதது. மனதில் விளையும் களைகள் இன்றி அடிமை என்ற தழை சாத்தியமில்லை. மனதில் விதைக்கப்பட்ட களைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில், மனதில் களையின்றி வேறேதும் சாத்தியமா? என்ற கேள்வி பிறக்கும். அந்தப் புள்ளியில் விடுதலை வேண்டும் ஆன்மீகத் தேடல் ஆரம்பமாகும்.

நல்லதொரு சிந்தனைப்பகிர்வு.

இன்றைய சூழலில் நாம் அவசியம் அறியவேண்டிய ஓர் ஆரம்பப் புள்ளியைத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறீர்கள், இன்னுமொருவன். நாம் இன்று எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சு இங்கு தான் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, ஆசை நடுத்தரவர்கத்தில் வேளாண்மை செய்யப்படுகிறது. ஆனால், தாங்கள் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடுகள் என்பது என்றைக்கும் நடுத்தர வர்க்கத்திற்குத் தெரிந்திடக்கூடாதென்பதற்காய் எத்தனையோ உத்திகள் காலாதிகாலமாய்க் களமிறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், மேற்படி உத்திகளை அமுல் படுத்துவதில் தான் செல்வந்தர் பெருஞ்செல்வந்தராகும் அடிப்படை இருக்கிறது (விளம்பரம், மருத்துவம், மாத்திரை. இன்னபிற). அந்த வகையில் செல்வந்தரின் விளைநிலங்களாக மாடாய் உழைத்து விளைந்தவற்றையும் செல்வந்தரின் சாகுபடியாக்கி நடுத்தரவர்கம் முளித்தபடி சிரிக்க முனைகிறது. 

 

இதுதான் யதார்த்தத்தில் நடை பெறுகின்றது......!  😗

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.