Jump to content

தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு: 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
சித்தரிப்புப் படம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புப் படம்

மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

2007ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிவந்த வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது.

கலவரம் நடக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவர்கள் அனைவரையும் விடுவித்தது. இதனை எதிர்த்து நீண்ட காலமாக முறையீடு செய்யாமல் இருந்த சி.பி.ஐ. 118 நாட்கள் கழித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முறையீடு செய்தது. கொல்லப்பட்ட வினோத்தின் தாயாரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 17 பேரில் ஒருவர் இறந்துவிட மீதமுள்ள 16 பேர் மீது வழக்கு நடத்தப்பட்டுவந்தது. இவர்கள் ஒரு கட்டத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தபோது, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக இறுதி விசாரணை நடந்துவந்த நிலையில், டி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. மொத்தமுள்ள 16 பேரில் 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகக் கூறியது. உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

தாக்குதல் சம்பவம் நடந்தபோது அலட்சியமாக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை டி.எஸ்.பி. ராஜாராம் மார்ச் 25ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் அவருக்கான தண்டனை விவரங்கள் அன்று அறிவிக்கப்படுமென்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் தயாநிதி, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகிய இருவரும் தலைமறைவாகவே உள்ளனர்.

வழக்கின் பின்னணி

2007ஆம் ஆண்டு, சன் குழுமத்திற்குச் சொந்தமான தினகரன் நாளிதழ் 'மக்கள் மனசு' என்ற பெயரில் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறந்தவர் யார், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்பது போன்ற கேள்விகளை மக்களிடம் கேட்டு, அவர்களது கருத்தை வெளியிடுவதாக அந்த நாளிதழ் கூறியது.

மு. கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என 70 சதவீதம் பேர் கருதுவதாகவும் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே மு.க. அழகிரியை அடுத்த வாரிசு என கருதுவதாகவும் 2007 மே 9ஆம் தேதியன்று கருத்துக் கணிப்பு வெளியானது.

அன்று காலையிலேயே மதுரை நகரில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் நாளிதழை ஆங்காங்கே போட்டு தீ வைத்துக் கொளுத்தினர். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், சில பேருந்துகளையும் தீ வைத்து எரித்தனர். இதில் 7 பேருந்துகள் எரிந்து சாம்பலாயின. இதற்குப் பிறகு ஒரு கும்பல் மதுரை - மேலூர் சாலையில் உத்தங்குடியில் உள்ள தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தது. பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.

இந்தத் தாக்குதலில், அந்த நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டடர்களாக இருந்த கோபி (28), வினோத் (27), காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் பலியாகினர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தி.மு.கவின் தொண்டரணி அமைப்பாளரும் மு.க. அழகிரியின் ஆதரவாளருமான அட்டாக் பாண்டியின் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் தாக்குதல் நடத்திய படங்களும் ஊடகங்களில் வெளியாயின.

https://www.bbc.com/tamil/india-47650533

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.