Jump to content

மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு

கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும்,  கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். 

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில்,

image_cinema_21319.jpg

“நெடுநல்வாடை’ என்ற இந்த படத்தின் தலைப்பிற்காகவே இயக்குனருக்கு தமிழ் இலக்கிய உலகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மொழி பேசும் போதும், புழங்கும் போது தான் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட நெடுநல்வாடையை இன்றைய டிஜிற்றல் யுகத்தில் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பாக்கி அதனை மீண்டும் உயிருள்ளதாக ஆக்கியதற்காக இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கி ராஜநாராயணன் போலவோ, ஜெயகாந்தன் போலவோ, புதுமைப்பித்தன் போலவோ, தி ஜானகிராமன் போலவோ முழுநேர நாவலாசிரியரோ அல்லது சிறுகதை ஆசிரியனும் அல்ல. அடிப்படையில் நான் ஒரு கவிஞன். பாட்டு எழுதுவதில் சுகம் காண்பவன்.  பாடல் எழுதுவதில் இலாபம் காண்பவன்.

தமிழ் திரைப்பட பாடல்கள் சற்று தொய்வடைந்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு படத்தில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கிறது .எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை எண்ணங்கள் குறையாத பாடல்கள் வேண்டுமே என்பதுதான் என் போன்ற தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திரைப்படப் பாடல்கள், தமிழர்களுக்கு கவிதை செய்யும் வேலையை மாறுவேடமிட்டு செய்து கொண்டிருக்கிறது.

தமிழாற்றுப்படை யை நான் இன்றுடன் நிறைவு செய்து இருக்கிறேன். தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், இளங்கோ, கம்பர், திருவள்ளுவர், ஆண்டாள் ,அப்பர், திருமூலர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், அண்ணா என இந்த வரிசையில் கடைசியாக பெரியாரை பற்றி தமிழாற்றுப்படை கட்டுரையுடன் நிறைவு செய்கிறேன்.

பெரியாரை பற்றிய தமிழாற்றுப்படை, மே மாதம் 5ஆம் திகதி திருச்சியில் அரங்கேற்றுகிறேன். அத்துடன் தமிழாற்றுப்படையின் ஒரு பெரும் பணி தற்காலிகமாக நிறைவடைகிறது. இது நூலாக ஜூலை 12ஆம் திகதி அன்று வெளியாகிறது. இனி முழுக்க தமிழ் திரையுலகில் பாடல்களை எழுதுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எம்மை தயாராக் வைத்துக் கொண்டிருக்கிறேன். இளம் இயக்குனர்கள் இளம் படைப்பாளிகள் இளம் இசையமைப்பாளர்கள் என்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

http://www.virakesari.lk/article/52374

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் இந்தாளுக்கு தற்பெருமையும் தற்புகழ்ச்சியும் ஓவரிலும் ஓவர். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.