Jump to content

திக்கு தெரியாத காட்டில் ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 1000 நாட்களுக்கு முன்பு ஜூலை 2016 ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை 52% மக்கள் ஆமோதித்தார்கள். கூடுதலான பென்ஷன் காரர் வெளியேறுவதை ஆதரித்தார்கள், அவர்களில் ஒரு தொகையினர் இவுலகை விட்டு வெளியேறி இருப்பார்கள். ஆனால் அவர்கள் விதைத்த பிரெக்ஸிட் என்ற  விதை விருச்சமாக வளர்ந்து பூக்காமலும் காய்க்காமலும் நிக்கிறது. அரசியல் அமைப்புகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் இன்று திக்கு முக்காடுகிறது. 90% ஆமா என்று போட்டிருந்தால் பிரச்சனை சுலபமாக தீர்க்கப் பட்டிருக்கும். ஆம் என்று போட்டவர்கள் பெரும்பாலான பழமைவாதிகளும், பென்ஷனக்காரர்களும். இல்லை என்று போட்டவர்கள் பெரும்பாலான இளைஞர்களும் வெளிநாட்டு காரர்களும். வோட்டு போட்ட பலருக்கு தெரியாது பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன்  தரை வழி தொடர்பு உண்டு என்று,  பிரச்சினைக்குரிய வடக்கு ஐயர்லாந்து இன்று பாரிய சிக்கலாக உள்ளது. ஐயர்லாந்து எல்லையில் சோதனை சாவடி போடுவதை அவர்கள் விரும்பவில்லை, மீண்டும் கலவரங்கள் வர சாத்தியங்கள் உண்டு என்று ஐயப்படுகிறார்கள்.

இன்று மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. பிரதமர் பதவி நீடிப்பாரா? தேர்தல் வரவும் வாய்ப்பு  உள்ளது. அதனால்தான் பல ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரதமரை குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. இவர்கள் மீண்டும் எப்படி மக்களை போய் சந்திப்பார்கள். அதனால்தான் இப்பவே பிரதமரை குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்போது கால அவகாசம் கேட்க போகிறார்கள். அப்படி நீடித்தாலும் பிரதமரால் தனது வரைவை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி உள்ளது. பிரெக்ஸிட்டை (article 50) ரத்து செய்யக்கோரி ஒரு மில்லியனுக்கும் மேட்பட்டவர்கள் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.  இன்னும் ஏழு நாட்கள் தான் உள்ளது. நாடு அரசியல் வியாபாரிகளினால் திக்கு தெரியாத காட்டில் விடப் பட்டிருக்கிறது.

அகஸ்தியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அரசியல் ஆய்வு அகஸ்தியன்.......தகவல்களுக்கு நன்றி.

தலையங்கம் பிரமாதம். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Ahasthiyan said:

சுமார் 1000 நாட்களுக்கு முன்பு ஜூலை 2016 ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை 52% மக்கள் ஆமோதித்தார்கள். கூடுதலான பென்ஷன் காரர் வெளியேறுவதை ஆதரித்தார்கள், அவர்களில் ஒரு தொகையினர் இவுலகை விட்டு வெளியேறி இருப்பார்கள். ஆனால் அவர்கள் விதைத்த பிரெக்ஸிட் என்ற  விதை விருச்சமாக வளர்ந்து பூக்காமலும் காய்க்காமலும் நிக்கிறது. அரசியல் அமைப்புகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் இன்று திக்கு முக்காடுகிறது. 90% ஆமா என்று போட்டிருந்தால் பிரச்சனை சுலபமாக தீர்க்கப் பட்டிருக்கும். ஆம் என்று போட்டவர்கள் பெரும்பாலான பழமைவாதிகளும், பென்ஷனக்காரர்களும். இல்லை என்று போட்டவர்கள் பெரும்பாலான இளைஞர்களும் வெளிநாட்டு காரர்களும். வோட்டு போட்ட பலருக்கு தெரியாது பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன்  தரை வழி தொடர்பு உண்டு என்று,  பிரச்சினைக்குரிய வடக்கு ஐயர்லாந்து இன்று பாரிய சிக்கலாக உள்ளது. ஐயர்லாந்து எல்லையில் சோதனை சாவடி போடுவதை அவர்கள் விரும்பவில்லை, மீண்டும் கலவரங்கள் வர சாத்தியங்கள் உண்டு என்று ஐயப்படுகிறார்கள்.

இன்று மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. பிரதமர் பதவி நீடிப்பாரா? தேர்தல் வரவும் வாய்ப்பு  உள்ளது. அதனால்தான் பல ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரதமரை குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. இவர்கள் மீண்டும் எப்படி மக்களை போய் சந்திப்பார்கள். அதனால்தான் இப்பவே பிரதமரை குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்போது கால அவகாசம் கேட்க போகிறார்கள். அப்படி நீடித்தாலும் பிரதமரால் தனது வரைவை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி உள்ளது. பிரெக்ஸிட்டை (article 50) ரத்து செய்யக்கோரி ஒரு மில்லியனுக்கும் மேட்பட்டவர்கள் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.  இன்னும் ஏழு நாட்கள் தான் உள்ளது. நாடு அரசியல் வியாபாரிகளினால் திக்கு தெரியாத காட்டில் விடப் பட்டிருக்கிறது.

அகஸ்தியன்

பாவம் பார்த்து.....ஐரோப்பிய ஒன்றியம்.....இரண்டே ....இரண்டு மாதம் மட்டும்.....கால அவகாசம் கொடுத்து இருக்காம்!

என்னைப் பொறுத்த வரையில்....பிரித்தானியா.. தனது பழைய பெருமைகளை...மூட்டை கட்டி வைத்துவிட்டு...காலத்தைப் பின்னோக்கி....நகர்த்த முயற்சிக்காமல்....ஐரோப்பிய யூனியனில்...சேர்ந்திருப்பதே....நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய யூனியனில் சேர்ந்திருப்பதால் வரும் நன்மைகளை எல்லாம் பிரித்தானியர் என்று பெருமைகொள்ளும் ஒரு பகுதியினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பிரதமர் தெரசா மே அவர்களைத் தாண்டி முடிவெடுக்கக்கூடிய நிலையிலும் இல்லை. திக்குத் தெரியாத காட்டில்தான் சுற்றிக்கொண்டிருப்பதால் எங்கு போய் முடியுமோ என்று தெரியாத நிலைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

நல்லதொரு அரசியல் ஆய்வு அகஸ்தியன்.......தகவல்களுக்கு நன்றி.

தலையங்கம் பிரமாதம். 👍

 

20 hours ago, புங்கையூரன் said:

பாவம் பார்த்து.....ஐரோப்பிய ஒன்றியம்.....இரண்டே ....இரண்டு மாதம் மட்டும்.....கால அவகாசம் கொடுத்து இருக்காம்!

என்னைப் பொறுத்த வரையில்....பிரித்தானியா.. தனது பழைய பெருமைகளை...மூட்டை கட்டி வைத்துவிட்டு...காலத்தைப் பின்னோக்கி....நகர்த்த முயற்சிக்காமல்....ஐரோப்பிய யூனியனில்...சேர்ந்திருப்பதே....நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறேன்!

 

13 hours ago, கிருபன் said:

ஐரோப்பிய யூனியனில் சேர்ந்திருப்பதால் வரும் நன்மைகளை எல்லாம் பிரித்தானியர் என்று பெருமைகொள்ளும் ஒரு பகுதியினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பிரதமர் தெரசா மே அவர்களைத் தாண்டி முடிவெடுக்கக்கூடிய நிலையிலும் இல்லை. திக்குத் தெரியாத காட்டில்தான் சுற்றிக்கொண்டிருப்பதால் எங்கு போய் முடியுமோ என்று தெரியாத நிலைதான்.

சேர்ந்து இருப்பதுதான் பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு. கருத்துக்களுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அகஸ்தியன்,கட்டுரைக்கு நன்றி...சேர்ந்திருப்பதால் அப்படி என்ன நன்மை என்று எழுதினால் நன்றாயிருக்கும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2019 at 8:27 PM, ரதி said:

வணக்கம் அகஸ்தியன்,கட்டுரைக்கு நன்றி...சேர்ந்திருப்பதால் அப்படி என்ன நன்மை என்று எழுதினால் நன்றாயிருக்கும் 
 

வணக்கம் ரதி 
எனது அறிவுக்கு எட்டியவரை, பிரித்தானியா எதிரி நாட்டு(ரஷ்யா) தாக்குதலுக்கு சமாளிக்க கூடிய நிலையில்  இப்ப பலம்  இல்லை. நேட்டோ படைகள் (அமெரிக்கா உட்பட ) அல்லது ஐரோப்பிய ஒன்றியம் தான் உதவிக்கு வர வேண்டும். அமெரிக்கா சும்மா வர மாட்டார்கள் பெரிய தொகையில் பேரம் பேசுவார்கள். 2ம் உலகப்போரில் அமெரிக்கா உதவியத்துக்கு  பிரித்தானியா பெரும் செல்வத்தை அமெரிக்காவுக்கு கொடுத்தது. அதன் விளைவு, தன் ஆட்சியின் கீழ் இருந்த பல நாடுகளை கை  விட வேண்டி வந்தது (நிர்வாக செலவு காரணமாக). ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பது எவ்வளவோ மேல். 
ஒரு தோப்பை அழிப்பது கடினம் ஆனால் தனி மரத்தை இலகுவாக சரித்து விடலாம். இது பொருளாதாரத்துக்கும் பொருந்தும். இதை பற்றி பல பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே அபாய சங்கை ஊதி விட்டன. கூட்டு விண் வெளி ஆராய்ச்சி, போக்கு வரத்து, சுற்றுலா, காப்புறுதி, மருத்துவம், மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிகள்  - இவை எல்லாம் மறு சீரமைத்தால், ஒரு வேளை சில ஆண்டுகள் பின்னோக்கியும் போகலாம். இவை எல்லா வற்றையும் விட  தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். 

தூர நோக்கு இல்லாத சுய நல அரசியல் வாதிகளால் இப்ப பிரிந்தாலும், இளம் தலைமுறையினர் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறார்கள். எனவே ஒரு 20 வருடத்தில் திரும்ப சேர விண்ணப்பிக்கலாம். யார் கண்டது.

என்னை பாதிப்பது, நான் அடிக்கடி எனது வாகனத்தில் ஐரோப்பாவுக்கு போவேன். விசா, வாகன - மருத்துவ காப்புறுதிகள், கைபேசி பாவனைகள்  போன்றவை மாறுவதை விரும்பவில்லை. எனதும் மனைவியின் சகோதரங்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள் . இப்பதான் பிள்ளைகள் பழக ஆரம்பித்து இருக்கிறார்கள். சும்மாவா சொன்னார்கள் வனம் மேய போனாலும் இனம் சேர வேண்டும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகத்தியன்,

உண்மையில் பிரச்சனை டேவிட் காமரோன் உடன் தான்  ஆரம்பித்தது.

அவரது தந்தை ஒரு பங்குச்சந்தை சூதாடி. ஆகவே மகனும் இரு ஆபத்தான அரசியல் சூதாட்டங்களில் இறங்கினார்.

ஒன்று: ஸ்காட்லாந்து பிரிந்து  போகும் குடியொப்பம். அதில் வென்றதும் அடுத்தது இந்த ஐரோப்பிய யூனியன் குடியொப்பம்.

அதில் தோற்று, துண்டைக் காணம், துணியை காணம் என்று ஓடி விட்டார்.

அவரது அமைச்சரவையில், உள் நாட்டு அமைச்சராக இருந்த அம்மையார் பிரதமரானார்.

நன்றாக, நட்பாக பழகக் கூடிய கேமரோனுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில பல நண்பர்கள் இருந்தார்கள். எதையும் வெட்டி ஆடக் கூடிய மனிதராக இருந்தார்.

அம்மையார், மார்கிரெட் தாட்சர் போல, பிரித்தானிய பெண் பிரதமர்களுக்கு உரிய, சிறிய தலைக்கனம் உள்ளவர். ஆகவே அவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் நண்பர்கள் இருக்கவில்லை. எனவே பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கவில்லை.

வெள்ளையர்கள், பீர், கூலிங் பீயரில், தீராத பிரச்சனைக்கு எல்லாம் தீர்வைக் காண முடியும் என்பார்கள்.

ஆனால் அது, ஆணும், ஆணும் தான்.... ஆணும் பெண்ணும் இல்லை. ஆகவே அம்மையாரால் சாதிக்க முடியவில்லை.

உண்மையில் அவர், டேவிட் கேமரோன், டோனி பிளேயர் போன்ற பழைய பெருச்சாளிகளை அழைத்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசும் பொறுப்புகளை  கொடுத்து பின்னால் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தான் இந்த ஆட்டத்துக்கு புதியவர் என்பதை மறந்து, தானே பேச  வேண்டும் என்று ஓடித் திரிந்து, இன்று கவுட்டுக் கொட்டிப் போட்டு உள்ளார்.

ஏறச் சொன்னா எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னா நொண்டிக்கு கோபம் நிலையில் உள்ளது பிரித்தானியா.

அம்மையார் இதை தவறாக கையாண்டு விட்டார். மறுபுறம், எதிர்க் கட்சி தலைவரோ, ஒரு பனியர். அணுகுண்டு எல்லாம் தேவையில்லை, எல்லாம் கழட்டி எறியவேண்டும் என்று சொல்லும் ரகம்.

பரீட்சை மூலமே, மாணவரை தெரிவு செய்யும் பாடசாலை ஒன்றில் தான் படித்தாலும், அவ்வாறு தனது மகனுக்கு கிடைத்தபோது, வேண்டாம் சாதாரண பாடசாலைக்கு அனுப்பு என்று, சொல்ல, மனைவி மறுக்க, மணமுறிவு செய்த ஆள்.

ஆகவே தான், அம்மையார் தேர்தலுக்கு போனாலும் பிரச்சனை, குடியொப்பத்துக்கு போனாலும் பிரச்சனை. உலகத்தை கட்டி ஆண்ட நாட்டுக்கு, தலை முட்டப் பிரச்சனை.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பது பாதுகாப்பது ரீதியில் அல்ல, பொருளாதார ரீதியில், பலமானது.

காரணம், ஐரோப்பிய ஒன்றியம், ஒன்றாக சேர்ந்தது, பேரசுரன் அமெரிக்காவின் பொருளாதார பலத்துக்கு ஈடு கொடுக்க.

பிரித்தானியா பிரிவது, டிரம்ப்பருக்கு மகிழ்வானது. சேர்ந்து இருக்கும், எருமைகளை, தனித்தனியே பிரித்தால், சிங்கம் பிரித்து மேயலாம் என்பதே காரணம்.

ஒரு விசயத்தில் அம்மையார் திறமான வேலை செய்து விட்டார்.

ஸ்காட்லாந்து இரண்டாவது குடியொப்பம் வேண்டும் என்று அதன் முதலமைச்சர் நாண்டு பிடித்தார். அதெல்லாம் வேலைக்கு ஆகாது அம்மையார் cut அண்ட் right ஆக சொல்லி விட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.