Jump to content

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்

Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:47 Comments - 0

சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு தொடர்ந்தும் முன்னேறிக்கொண்டே இருக்கும்.

இருப்பினும், எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆங்காங்கே காட்டுச் சட்டங்களே அதிகாரம் செய்கின்றன. இதனால் தான், யுத்தம், பாதால உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வியாபாரங்கள் எனப் பல பிரச்சினைகளை, இலங்கை சந்தித்தது, இன்னும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இதனால், மனித உயிர்களுக்கு மதிப்பின்றிப் போயுள்ளது. இது, நாட்டுக்கு உகந்ததன்று.

யுத்த காலத்தின் போது, கடற்படையின் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம், ஒரு சில தினங்களுக்கு முன்னர், இரகசியப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த விசாரணை, இரண்டு தினங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டு, உயர்க் கல்விக்குத் தயாராகவிருந்த 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு, கப்பம் கோரப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருந்த விவகாரம் தொடர்பிலேயே, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

கடற்படையின் கீழ் செயற்பட்ட விசேட பிரிவு ஒன்றினூடாகவே, இந்த இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த விவகாரத்தில், முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்க, நேவி சம்பத் என்றழைக்கப்படும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி, சம்பத் முனசிங்க ஆகிய மூவரும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும், அட்மிரல் கரன்னாகொடவுக்குக் கீழ் பணிபுரிந்தவர்களாவர்.

2008, 2009ஆம் ஆண்டுகளிலேயே, மேற்படி இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டனர் என்று, அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். எவ்விர காரணமுமின்றி, இந்த 11 இளைஞர்களும் கடத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்களை விடுவிப்பதற்காக, பெற்றோரிடம் கப்பம் கோரப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான தகவல்களும் சாட்சியங்களும், பெற்றோரால் வழங்கப்பட்டிருந்தன. இது தொடர்பான தொலைபேசி இலக்கங்களைப் பரிசோதித்துப் பார்த்த போது, கப்பம் கோரி வந்த அழைப்புகள் அனைத்தும், திருகோணமலை கடற்படை முகாமிலிருந்தே வந்துள்ளதாகவும் அந்த இலக்கங்கள், சில கடற்படை அதிகாரிகளுடையவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில், 2009 மே 28ஆம் திகதியன்று, அட்மிரல் கரன்னாகொடவினால், கொழும்புக் குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்த விசாரணைகளின் போது, நேவி சம்பத் மற்றும் சம்பம் முனசிங்க ஆகியோரது 8ஆம் இலக்க அறையிலிருந்து, கடத்தப்பட்ட இளைஞர்களின் அடையாள அட்டைகள், பணம், கடவுச்சீட்டு என்பன கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சம்பத் முனசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பிருப்பதாகத் தான் சந்தேகிப்பதாக, கரன்னாகொடவினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதேவேளை, கடத்தப்பட்ட இளைஞர்கள், திருகோணமலையிலுள்ள டென்ஜன் சுரங்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான சாட்சியங்களும், கரன்னாகொடவுக்கு கிடைத்திருந்தன. அத்துடன், அவ்விளைஞர்கள் படுகொலை செய்தமைக்கான சாட்சியங்களை, ரணசிங்க, வீரசிங்க, பெர்ணான்டோ ஆகிய உயரதிகாரிகள் முன்னிலையில், பண்டார என்பவரால், கரன்னாகொடவிடம் உறுதிப்படுத்தப்பட்டன.

இதனால், கரன்னாகொடவின் நெருங்கிய சகாவான சம்பத் முனசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்வது, அப்போதிருந்த கடற்படை அதிகாரிகளுக்குப் பிரச்சினையாக இருந்தது. இந்த விவகாரத்தில், அப்போது பல தகவல்கள் கூறப்பட்டாலும், அதன் உண்மைத் தன்மையை, கரன்னாகொடவும் முனசிங்கவுமே அறிவர். இருப்பினும், தன்னுடைய அதிகாரம் தொடர்பில் அகங்காரம் கொண்டிருந்த முனசிங்கவுக்கு ஏற்பட்ட கதி தொடர்பில், அப்போதிருந்த உயரதிகாரிகள் பலரும் மகிழ்ச்சி கொண்டிருந்தனர். இவ்வாறிருக்க, கரன்னாகொடவினால், இது தாடர்பில், பாதுகாப்பு உயர் தரப்பிடம் முறையிடப்பட்டிருந்தது. இதனால், கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், 11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் குறித்து, எதிர்பாராதொரு சந்தர்ப்பத்தில், சம்பத் முனசிங்கவால், மிகப்பெரிய வாக்குமூலமொன்று அளிக்கப்பட்டது. அதில், அவ்விளைஞர்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இறுதியில், சம்பத் முனசிங்க கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர்களில், ரஜீவ் என்ற பெயரில், ஒரு தமிழ் இளைஞர் இருந்தார். இவர், முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் உறவினரொருவரின் மகனாவார். இவர் கடத்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள், மருத்துவக் கல்வியை மேற்கொள்வதற்காக, இங்கிலாந்துக்குச் செல்லத் தயாராக இருந்துள்ளார். இவ்விளைஞன், கடற்படை வீரர்களின் அலைபேசிகளைப் பெற்று, அவருடைய பெற்றோருக்கு, பலமுறை அழைப்புகளை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தன்னைக் காப்பாற்றுமாறும் தன்னை விடுவிப்பதற்காக, கடற்படை அதிகாரிகள் கோரும் பணத்தை, தயங்காமல் வழங்குமாறும், தன்னுடைய தாயிடம், அவ்விளைஞன் கோரியிருந்துள்ளார். அத்துடன், பீலிக்ஸ் பெரேராவுக்கும் அழைப்பை ஏற்படுத்தி, “அங்கள், என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்றும் மன்றாடியுள்ளார். இதன்போது பீலிக்ஸ் பெரேரா, தன்னுடைய முழுச் சொத்துகளையேனும் விற்றாவது, அவரைக் காப்பாற்றுவதாகக் கோரியுள்ளார். அத்துடன் நின்றுவிடாது, தன்னால் போகமுடிந்த எல்லா இடங்களுக்கும் சென்று, தங்களுடைய பிள்ளைகளைக் காப்பாற்றுமாறும், பெரேரா கோரியுள்ளார். இருப்பினும் அது சாத்தியப்படவில்லை.

கடற்படை வீரர்களின் அலைபேசிகளூடாகத் தங்களுடைய பெற்றோருக்கு அழைப்புகளை மேற்கொண்டதற்காக, அந்த அலைபேசி இலக்கங்களுக்கு பணம் மீள் நிரப்புமாறும் (ரீலோட்), அவ்விளைஞர்கள் கோரியிருந்துள்ளனர். அதற்கமை, 500, 1000 ரூபாயென, அவ்விலக்கங்களுக்கு பணம் மீள் நிரப்பப்பட்டிருந்தன. இறுதியாக ரஜீவ், 2009 ஜூன் 21ஆம் திகதியன்றே, தனது தாய்க்கு இறுதி அழைப்பை மேற்கொண்டிருந்துள்ளார். அன்று அவர் தனது தாயிடம் கூறியிருந்த வார்த்தைகளைக் கேட்டால், எந்தவொரு தாயினதும் கண்களில் கண்ணீர் நிரம்புவது மாத்திரமன்றி, நெஞ்சே வெடிக்கும் போலாகும்.

“அம்மா...! எங்களைக் கடத்திவந்த விடயத்தால், கொழும்பில் உயரதிகாரிகளுக்கு இடையில் பிரச்சினையாம். எங்களுக்கு இதுபற்றித் தெரியவந்தது. சிலவேளை, நான் உங்களோடு பேசும் இறுதிச் சந்தர்ப்பமாகக் கூட இது இருக்கலாம். உங்களோடு இனி பேசவில்லை என்றால் பயப்படாதீர்கள். உண்மையில், அம்மா எனக்கு கூறிய விடயங்களைக் கேட்டிருந்தால், இன்று எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலும், நான் ஒரேயொரு விடயம் பற்றித் தான் சிந்திக்கிறேன். அடுத்த ஜென்மத்திலாவது, உங்கள் வயிற்றிலேயே நான் மகனாகப் பிறக்கவேண்டும்” என்று இறுதியாகக் கூறியுள்ளார். அதன் பின்னர், ரஜீவுக்கு என்ன நடந்ததென்று, இன்றுவரை தெரியாது.

எவ்வாறாயினும், திருகோணமலைக்கு ஒருமுறை சென்றிருந்த கரன்னாகொட, அவ்விளைஞர்கள் பற்றி அங்கு தேடிப்பார்த்த போதிலும், அவர்களைக் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரெவிஸ் சின்னையாவிடமிருந்தும் சாட்சியம் பெறப்பட்டிருந்ததாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டதாகவே தனதுக்குத் தகவல் கிடைத்ததாக, அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெறும் போது, தான் இந்தியாவிலேயே இருந்ததாகவும் மீண்டும் நாடு திரும்பியவுடன், இதுபற்றித் தேடியறிந்த போதே, இந்தத் தகவல் தனக்குக் கிடைத்ததாகவும் விசேடமாக, தான் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாகச் சேவையாற்றிய போதிலும், டென்ஜன் முகாமானது, தன்னால் நிர்வகிக்கப்படவில்லை என்றும், அதை, டீ.கே.பி.தசநாயக்கவும் கரன்னாகொடவுமே நிர்வகித்தனர் என்றும், சின்னையா கூறியிருந்தார். அத்துடன், குறித்த முகாமுக்கும் செல்லும் வாகனங்களின் இலக்கங்கள் கூடப் பதியப்படுவதில்லை என்றும் கூறியிருந்த சின்னையா, அந்த சாட்சியமளிப்பின் பின்னர், சேவையில் நீடிக்காத நிலையில் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த இளைஞர்கள், தங்களுடைய பெற்றோருடன் பேசுவதற்கான அலைபேசிகளை வழங்கக் காரணம், அவர்கள், எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமையும் அவர்கள் அப்பாவிகள் என்பதாலுமே என்று, இளைஞர்களுக்கு அலைபேசிகளை வழங்கிய கடற்படை வீரர்கள் சாட்சியமளித்துள்ளனர். அது மாத்திரமன்றி, தமது பெற்றோருடன் அலைபேசியில் உரையாற்றியுள்ள இளைஞர்கள், தங்களைப் பார்க்க வந்த கடற்படை அதிகாரிகள் யாரென்றும் அவர்களைக் கடத்திவந்த வாகனங்களின் இலக்கங்கள் பற்றியும், பெற்றோருக்குத் தெரிவித்திருந்துள்ளனர். அந்தத் தகவல்கள் அனைத்தும், அந்தப் பெற்றோர், அவர்களுடைய நாள்குறிப்புகளில் குறித்து வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளிக்கச் சென்றிருந்த கரன்னாகொட, இளைஞர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பான பல தகவல்களை மறந்திருந்தார் என்றே கூறப்படுகிறது. யுத்தத்தின் இறுதிக்கட்டம் என்பதால், தனக்கு அந்த விடயங்கள் குறித்து தெட்டத் தௌவாக நினைவில் இல்லையென, அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில், தானே முதன் முதலில் முறைப்பாடு செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த இளைஞர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பில், கரன்னாகொடவினால், இருமுறை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி, மேலும் நூற்றுக்கும் அதிகமானோரிடமிருந்தும் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து விடயங்களையும் கூறும் அதிகாரம், ஊடகங்களுக்கு இல்லை. காரணம், இது வழக்கொன்று நடைபெற்றுவரும் விவகாரமாகும். இந்த விடயத்தில், நீதிமன்றமே தீர்ப்பளிக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், தாமதமின்றி சமர்ப்பிக்க வேண்டும். சட்டம் மீது நம்பிக்கை கொள்வோம்.

(நன்றி: தேஷய)

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/11-இளைஞர்கள்-கடத்தல்-விவகாரம்-கரன்னாகொடவின்-கரணம்/91-231067

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.