Jump to content

முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ்" - சிரிய ஜனநாயகப் படைகள் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ்" - சிரிய ஜனநாயகப் படைகள் அறிவிப்பு

"வீழ்ந்தது ஐ.எஸ்"படத்தின் காப்புரிமைDELIL SOULEIMAN

சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரிய ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது.

ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரிய ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி வருகிறார்கள்.

சிரியா மற்றும் இராக்கில் 88,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பளவை ஐஎஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

தனது பிராந்தியத்தை அந்த அமைப்பு இழந்து வந்தாலும், இக்குழு சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

எனினும், நைஜீரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை தக்கவைத்திருக்கிறது.

இறுதி சண்டை

கிழக்கு சிரியாவில் உள்ள பாகூஸ் கிராமத்தில் மீதமிருந்த ஆயுதப் போராளிகள் பதுங்கி இருந்த நிலையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஐஎஸ் மீதான இறுதி தாக்குதலை குர்துக்கள் வழிநடத்தும் சிரிய ஜனநாயக படைகள் தொடங்கியது.

பிபிசி

அப்பகுதியில் அதிக அளவிலான பொதுமக்கள் இருந்ததினால் தாக்குதல் தடைபட்டது. அங்கிருந்து ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டினரும் இந்த சண்டையில் இருந்து தப்பித்து சிரிய ஜனநாயக படைகளின் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களுக்கு சென்றனர்.

பல ஐ.எஸ் அமைப்பினரும் பாகூஸ் கிராமத்தை விட்டுச் சென்றனர். ஆனால், அங்கேயே தங்கியிருந்தவர்களால், தற்கொலை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினார்கள்.

"ஐ.எஸ் என்று கூறிக் கொண்ட அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டதை சிரிய ஜனநாயக படைகள் அறிவிக்கிறது" என அதன் ஊடக அலுவலக தலைவர் முஸ்தஃபா பாலி ட்வீட் செய்திருந்தார்.

"இந்நாளில் வெற்றிக்கு வழிவகுத்த ஆயிரக்கணக்கான தியாகிகளை நாம் நினைவு கூற வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் ஐ.எஸ் அமைப்பு வீழ்த்தப்பட்டுவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க துருப்புகளை திரும்ப பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறினார். இது அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்ததுடன், அதன் பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பதவி விலகவும் காரணமாக அமைந்தது.

இவற்றைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமெரிக்க படைகள் இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/global-47679132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை அழிக்க வேண்டுமாயின், அவர்கள் செய்வது எல்லாமே கொடுமையான செயல்கள் என்று காட்டி, வரி செலுத்தும் மக்களின் அபிப்பிராயங்களை மேல் நாடுகள் திரட்டும்.

சதாமுக்கும், கடாபிக்கும் அதுவே நடந்தது. 

ஆனால்  இவர்களோ, தாம் செய்த கொடூரங்களை தாமே வீடியோ மூலம் பறை சாற்றிக் கொண்டனர்.

அப்போதே சொன்னார்கள், இவர்கள் தமது சவப்பெட்டியினை காவிக் கொண்டே செல்கின்றனர் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

syria-11-428x285.jpg

தோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு: வெற்றிக்கொடியை நாட்டியது சிரிய இராணுவம்

சிரிய யுத்த வெற்றியை சிரிய மற்றும் அமெரிக்க ஆதரவு படைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

கடந்த சிலவாரங்களாக படையினரால் நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் ஐ.எஸ் போராளிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் சிரிய இராணுவம் இன்று (சனிக்கிழமை) தமது வெற்றியை அறிவித்துள்ளது.

சிரியாவின் பல்வேறு பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ் போராளிகள், படைகளிடம் தோற்று பல்வேறு பகுதியை இழந்து இறுதியாக கிழக்கு சிரியாவின் பாக்ஹுஸ் பகுதியை மாத்திரம் தம் வசம் வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடும் தாக்குதல் மூலம் பாக்ஹுஸ் பகுதியையும் படைகள் வென்றுள்ளது. அப்பகுதியில் இருந்த போராளிகள் பலர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.

இதேவேளை பாக்ஹுஸ் பகுதிக்கு விடுதலை கிடைத்திருப்பதாக சிரிய இராணுவத்தின் ஊடக பேச்சாளர் முஸ்தபா பாலி தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு சிரியாவில் தொடங்கிய யுத்தம் போராளிகள், இராணுவத்தினர் உட்பட இலட்சக்கணக்கானோரைக் காவுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தோற்கடிக்கப்பட்டது-ஐ-எஸ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை என்னென்னா.. அசாத் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக ஐ எஸ்  ஐ அனுப்பிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே.. ஐ எஸ் ஸுக்கு எதிரான போரில் வெற்றி என்று அறிவிக்க வேண்டி வந்திருப்பது தான். அசாத் அப்படியே தான் இருக்கிறார். 😊

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தான் இங்கு அமெரிக்காவினதும்... அதன் கூட்டாளிகளினதும் நிலைப்பாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

கொடுமை என்னென்னா.. அசாத் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக ஐ எஸ்  ஐ அனுப்பிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே.. ஐ எஸ் ஸுக்கு எதிரான போரில் வெற்றி என்று அறிவிக்க வேண்டி வந்திருப்பது தான். அசாத் அப்படியே தான் இருக்கிறார். 😊

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தான் இங்கு அமெரிக்காவினதும்... அதன் கூட்டாளிகளினதும் நிலைப்பாடு. 

ஒசாமா பின்லேடனை வளர்த்து விட்ட அமெரிக்காவே அவனை வேட்டையாட வேண்டியிருந்தது. பஞ்சாப் அரசுக்கு எதிராக பிந்தரன்வாலே வை உருவாக்கிய இந்திரா காந்தி அரசே அவனை அழிக்க வேண்டிய சூழல் உருவானது. தன் வினை தன்னைச் சுடும் என்பதுதானே உலக நியதி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

ஒசாமா பின்லேடனை வளர்த்து விட்ட அமெரிக்காவே அவனை வேட்டையாட வேண்டியிருந்தது. பஞ்சாப் அரசுக்கு எதிராக பிந்தரன்வாலே வை உருவாக்கிய இந்திரா காந்தி அரசே அவனை அழிக்க வேண்டிய சூழல் உருவானது. தன் வினை தன்னைச் சுடும் என்பதுதானே உலக நியதி ?

சிறிலங்காவிலும் இதுதானே நடந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.