Jump to content

Recommended Posts

வாழ்க்கை
..................

தம்பிக்குக் கிரிக்கெட்மீது பைத்தியம்
தனக்குப்பிடித்த 
நாடகத்தை தியாகம் செய்வாள்
அக்கா
.................

மகள் முள்ளை எடுக்கச்
சிரமப்படுவாள்
தலையை தான் எடுத்துவிட்டு
வால் பகுதியை
மகளுக்கு விட்டு வைப்பார்
அப்பா

...................
வளருகிற பெடியனுக்குச்
சத்துத் தேவை
கறியில் இருக்கும் தனக்குப்பிடித்த
மீன் சினைகளை 
மகனுக்கு தெரிந்து எடுத்துக்கொடுப்பாள்
அம்மா

...........................
தங்கைக்குக் கல்யாணம் முடியட்டும்
தன் காதலை கட்டுப்படுத்திக்கொள்வான்
அண்ணன்

..........................
அக்கா சொகுசாய் வாழவேண்டும்
கடன்காரனாகிப்போவான்
தம்பி

........................
அவள் நீண்டநாளாய்
ஆசைப்பட்ட சாரியை 
வாக்கிக்கொள்ளட்டும்
தனக்கு சாரன் மட்டும் 
போதுமென்று பொய் சொல்வார்
அப்பா

.........................
புருஷன் மாதக்கடைசியில்
மோட்டர் சைக்கிளுக்கு
பெட்ரோல் போடவே கஷ்டப்படுவார்
என்று தெரிந்தே
ஒவ்வொருநாளும் மரக்கறிக்காரனுடன்
பேரம்பேசி சிலநூறுகளைச்
சேமித்து வைத்திருப்பாள் 
மனைவி

.............................
விபத்தில் இறந்த‌
அக்காவின் பிள்ளைகளை
தன் பிள்ளைகளென்றே
சொல்கிறாள் சித்தி

.............................
பேரப்பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காகவே
தன் முந்தானையில் சில்லறைகளை
முடிந்து வைத்திருப்பாள்
பாட்டி

...............................
ஊன்றுகோல்கள் தேவைப்படுவதில்லை
பேரப்பிள்ளைகளின்
கைகளைப்பிடித்துக்கொண்டே
நடப்பார்கள் தாத்தாக்கள்

..............................
வாழ்க்கையென்றால் என்ன‌
என்பவர்களிடம் சொல்ல
இவற்றைவிட‌ வேறில்லை
என்னிடம்.

 

முகநூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்றால் விடாப்பிடியாக வாழ்வதல்ல விட்டுக்கொடுத்து வாழ்வதே வாழ்க்கை........நல்ல கவிதை , நன்றி அபராஜிதன்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அபராஜிதன் said:

தங்கைக்குக் கல்யாணம் முடியட்டும்
ன் காதலை கட்டுப்படுத்திக்கொள்வான்
அண்ணன்

 

மேலே உள்ள கவியில் ஒவ்வொரு வரியும் உள்ளம்தைத் தொடுபவையாகவும் வாழ்நாளில் நாம் பார்த்த சந்தித்த நிகழ்வுகளாக இருந்தாலும்

எனது மகன் தனது தங்கைக்காக இருந்து அடுத்த வருடம் திருமணம் செய்தது நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி . நல்ல பகிர்வு நாம் வாழ்ந்த வாழ்வை சொல்கிறது ஆனால் இக்கால தலை  முறை  முற்றிலும்  மாறுபட்டு  வாழ்கிறது.  

Link to comment
Share on other sites

On 3/25/2019 at 1:13 AM, suvy said:

வாழ்க்கை என்றால் விடாப்பிடியாக வாழ்வதல்ல விட்டுக்கொடுத்து வாழ்வதே வாழ்க்கை........நல்ல கவிதை , நன்றி அபராஜிதன்......!   👍

 

On 3/25/2019 at 2:47 AM, நிலாமதி said:

 நன்றி . நல்ல பகிர்வு நாம் வாழ்ந்த வாழ்வை சொல்கிறது ஆனால் இக்கால தலை  முறை  முற்றிலும்  மாறுபட்டு  வாழ்கிறது.  

 

On 3/25/2019 at 1:21 AM, ஈழப்பிரியன் said:

மேலே உள்ள கவியில் ஒவ்வொரு வரியும் உள்ளம்தைத் தொடுபவையாகவும் வாழ்நாளில் நாம் பார்த்த சந்தித்த நிகழ்வுகளாக இருந்தாலும்

எனது மகன் தனது தங்கைக்காக இருந்து அடுத்த வருடம் திருமணம் செய்தது நினைவுக்கு வருகிறது.

நன்றிகள் கருத்துகளிற்கும் பச்சைக்கும் :)

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்பும் காதலும் தியாகமும் கொண்டதே நல் வாழ்வு ....நல்ல குறும் கவிதைகள் அபராஜிதன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.