Jump to content

ஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்

March 24, 2019

Geneva.jpg?resize=680%2C400ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் வைகுந்தவாசனில் தொடக்கி கஜேந்திரகுமார் வரையிலுமான பல தசாப்த கால அரசியலில் ஐ.நா. அல்லது ஜெனிவா எனப்படுவது ஒரு மாயையா? அல்லது ‘விடியுமாமளவும் விளக்கனைய மாயையா’? இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் அதை மூன்று தளங்களில் ஆராய வேண்டும்.

முதலாவது ஜெனிவா என்றால் என்ன என்பதனை அதை அதுவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவது இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை எவ்வாறு கையாண்டு வருகிறது என்பதனை அந்த தளத்தில் வைத்து ஆராய வேண்டும். மூன்றாவது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெனிவா எவ்வாறு கையாளப்பட்டு வருகிறது என்று பார்க்க வேண்டும.;

இம்மூன்றிலும் இக்கட்டுரையானது மூன்றாவதை அதாவது தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜெனிவா கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வாறு கையாளப்பட்டு வருகிறது என்ற விடயப்பரப்பின் மீது தனது கவனத்தை குவிகின்றது.

தமிழ் மக்கள் ஜெனீவாவில் ஒரு தரப்பு அல்ல. ஜெனீவா என்பது அரசுகளின் அரங்கம். அங்கே அரசுகள்தான் தீர்மானத்தை எடுக்கின்றன. தமிழ் மக்கள் ஒர் அரசற்ற தரப்பு. எனவே ஜெனீவாவில் உத்தியோக பூர்வ தரப்பாக முழு அதிகாரத்தோடு தமிழ் மக்கள் பங்குபற்ற முடியாது. ஆனால் அரசற்ற தரப்புக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பரப்புகளில் தமிழ் மக்கள் செயற்படலாம். உதாரணமாக Side Events என்று அழைக்கப்படும் பக்க நிகழ்வுகளில் பங்குபற்றலாம், இது தவிர ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கீழ்வரும் Shadow Report- என்று அழைக்கப்படும் குழுக்களுக்கூடாக தமது முறைப்பாடுகளை முன்வைக்கலாம். மேற்படி குழுக்கள் மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய உடன்படிக்கைகளை ஏற்றுக் கையொப்பம் இட்ட நாடுகளைக் கண்காணிக்கும் சுயாதீனமான நிபுணர்களைக் கொண்டிருப்பவை. இக்குழுக்களிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கூடாக நிழல் அறிக்கை–ளூயனழற சுநிழசவ- என்றழைக்கப்படும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். இவற்றுடன். ஜெனீவாவின் பிரதான அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது அமைப்புகளின் ஊடாக பங்குபற்றி இரு நிமிடங்கள் உரையாற்றலாம். இவை தவிர ஜெனீவாவில் உள்ள ஐ.நா பிரதிநிதிகளை உத்தியோகப் பற்றற்ற விதங்களில் சந்தித்து உரையாடலாம். இவ்வாறான சந்திப்புக்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்துச் செல்லலாம்.

எனினும் மேற்படி சந்திப்புக்கள் செயற்பாடுகள் மூலம் ஜெனீவாவின் உத்தியோகபூர்வ தீர்மானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாமா என்ற கேள்வி இங்கு முக்கியம். கடந்த எட்டு ஆண்டுகளாக ஜெனீவாவில் மு;னனெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளால் தமிழ்த் தரப்பு பெற்றுக் கொண்டவை எவை? என்ற கேள்விக்கு ஒரு தொகுக்கப்பட்ட முழுமையான ஆய்வு அவசியம். ஒவ்வொரு ஜெனீவாக் கூட்டத்தொடரிலும் என்ன நடக்க வேண்டும் என்பதற்குரிய நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிடும். இதில் பங்குபற்றும் நாடுகளின் பிரதிநிதிகளும் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் எடுத்த முடிவுகளை வெளிப்படுத்துபவர்கள்தான். அவர்களால் முடிவுகளைப் பெரியளவில் மாற்றவியலாது. எனவே ஜெனீவாவிற்கு வரும் ராஜதந்திரிகளின் முடிவுகளில் மாற்றங்களை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துவது என்று சொன்னால் அதை ஜெனீவாவில் செய்வதற்குப் பதிலாக அந்தந்த நாடுகளில் தலைநகரங்களுக்குச் சென்று அங்கு வைத்துச் செய்ய வேண்டும். அங்கேயுள்ள கொள்கை வகுப்பாளர்களை நோக்கி லொபி செய்ய வேண்டும்.
உதாரணமாக, ஜெனீவாவை மட்டும் ஒரே மையமாகக் கருதக் கூடாது ஜெனீவாவை தாண்டி ஐ.நா வின் பாதுகாப்புச் சபைக்கும் பொதுச் சபைக்கும் தமிழர்களின் விவகாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னால் அதற்கு எங்கே வேலை செய்ய வேண்டும்? வொஷிங்ரனிலும், புதுடில்லியிலும் ஐரோப்பியத் தலைநகரங்களிலும் வேலை செய்ய வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள மனிதநேய அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், மத நிறுவனங்கள், ஊடகங்கள், அரச சார்பற்ற அமைப்பக்கள், அவ்வவ் நாடுகளிலுள்ள எதிர்க்கட்சிகள் என்று அரசுகளிற்கு வெளியிலும் லொபி செய்ய வேண்டும்.

இலங்கைத் தீவில் நடைபெற்றது இனப்படுகொலையே என்று தமிழகத்தில் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். வட மாகாண சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்விரு தீர்மானங்களும் மகத்தான இரு தொடக்கங்கள். இரண்டுமே பெருந்தமிழ் பரப்பில் உள்ள இரு வேறு சட்ட மன்றங்களால் நிறைவேற்றப்பட்டவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு சட்ட மன்றங்களின் தீர்மானங்கள் அவை. அதனால் அவற்றுக்கு ஐனநாயக ரீதியாக அங்கீகாரமும் அந்தஸ்தும் அதிகம். தமிழகம், ஈழத்தமிழர்கள் என்ற இரண்டு சனத் தொகையையும் கூட்டினால் பெருந் தழிழ் பரப்பில் ஒப்பிட்டளவில் ஆகப் பெரிய சனத் தொகையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அவை. எனவெ அவற்றுக்கு உலகத்தின் அங்கீகாரம் உண்டு. அவை அரசியல் தீர்மானங்கள். எனவே அவற்றுக்கு சட்ட வலுவுண்டு. அதை அடிப்படையாக வைத்து உலகப் பரப்பில் தமிழ் மக்கள் நீதிக்கான தமது போராட்டத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லலாம். ஆனால் அதற்குரிய வேலைகளை வடமாகாண சபையும் செய்யவில்லை. விக்னேஸ்வரனும் செய்யவில்லை, ஜெயலலிதாவின் ஆதுரவாளர்களும் செய்யவில்லை.

எனவே ஜெனீவாவும் உட்பட ஏனைய உலக அரங்குகளில் ஈழத்தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தை முன்னெடுப்பது என்று சொன்னால் அப்போராட்டங்களை முதலில் பெருந் தமிழ் பரப்பிற்கு விஸ்தரிக்க வேண்டும். அடுத்த கட்டமாக உலகப்பரப்பிற்கு விஸ்தரிக்க வேண்டும். அதற்கு எல்லா இந்திய தலைநகரங்களிலும், உலகத் தலை நகரங்களிலும் லொபி செய்ய வேண்டும்.

ஐ.நா வைக் கையாள்வது என்பது அதன் பிரயோக அர்த்தத்தில் ஐ.நாவுக்கு வெளியே தான் இருக்கிறது. ஆதற்கு வேண்டிய உலகலாவிய ஒரு கட்டமைப்பு தமிழ் மக்களிடம் உண்டா? இல்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் உண்டு. ஓர் அரசு என்ற அடிப்படையில் அரசுக்கும், அரசுக்குமிடையிலான கட்டமைப்பு சார்ந்த ஓர் உலகலாவிய வலைப்பின்னல் அரசாங்கத்திற்குண்டு. கடந்த எட்டு ஆண்டுகளாக nஐனிவாத் தீர்மானங்கள் இலங்கை அரசுக்கு நோகாமல் வெளிவரக் காரணமே அதுதான். ஓர் இனப் படுகொலையையும் செய்து விட்டு கடும் போக்குடைய சிங்கள பௌத்தர்கள் nஐனீவாவுக்கு போய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் மேற்சொன்ன அரசுடைய தரப்பு என்ற பலம்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜெனீவாவின் பிரதான அரங்குகளில் பெருமளவிற்குச் செயற்பட்ட சிங்கள, பௌத்த கடும் போக்காளர்கள் கடந்த ஆண்டு தொடக்கம் பக்க அரங்குகளிலும் தீவிரமாக செயற்படத் தொடங்கி விட்டனர். பிரதான அரங்கிற்கு வெளியே பக்க அரங்குகளில் ஒர நிகழ்வுகளில் தமிழ் லொபிக்கு எதிராக சிங்கள லொபியும் முடுக்கு விடப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படை பிரதானியாகிய சரத் வீரசேகர போன்றவர்கள் கடந்த ஆண்டிலிருந்து தமிழ் லொபியை நெற்றிக்கு நேரே சந்திக்கத் தொடங்கி விட்டார்கள். சிவாஜிலிங்கத்துக்கு இனி வேலை அதிகம்?

அரசாங்கமும் அதன் ஏனைய நிறுவனங்களும் ஜெனீவாவின் பிரதான அரங்கில் வேலை செய்ய, சரத் வீரசேகர போன்றவர்கள் பக்க நிகழ்வுகளில் இறங்கி வேலை செய்கிறார்கள். அது மட்டுமல்ல இம்முறை அரசாங்கம் nஐனீவாத் தீர்மானத்தை பொறுத்த வரை இரண்டுபட்டு நிற்பதாக ஒரு தோற்றம் காட்டப்பட்டது. ஆனால் இந்த ரணில், மைத்திரி பிளவு கூட அரசாங்கத்துக்கு சாதகமானதே. எப்படியென்றால் மைத்திரியின் எதிர்ப்பைக் காரணம் காட்டி மேற்கு நாடுகள் ரணிலை மேலும் பலப்படுத்தவே முயற்சித்தன. இப்படிப் பாரத்தால் சிங்கள, பௌத்த பெரும் தேசிய வாதிகள்; மூன்றாகப் பிரிந்து செய்ற்படுவது போல தோன்றினாலும் அதன் இறுதி விளைவைப் பொறுத்த வரை சரத் வீரசேகரவும் சரி, ரணிலும் சரி, மைத்திரியும் சரி, இறுதியிலும் இறுதியாக அரசாங்கத்தையே பாதுகாக்கிறார்கள்;. ஆனால் தமிழ் தரப்பு?

தமிழ் மக்கள் ஜெனீவாவில் ஒரு தரப்பும் அல்ல. அதே சமயம் ஒன்றுபட்ட தரப்பும் அல்ல. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பானது ஜெனீவாவில் மூன்றாகப் பிரிந்து காணப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் உத்தியோக பூர்வ பிரதிநிதி போல ஜெனீவாவில் நிற்கிறார். வழங்கப்படுவது கால அவகாசமல்ல. ஐ.நா வின் கண்காணிப்பதற்கான கால நீட்;சியே என்று அவர் ஒர் அப்புக்காத்து விளக்கத்தை தருகிறார். அவரோடு ஒரு கத்தோலிக்க மதகுருவும் காணப்பட்டார். முன்பு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதானியாக அறியப்பட்டவர் அவர். சுமந்திரனோடு அவர் காணப்படுவது புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ள பிளவுகளைக் காட்டுகிறது. இது ஒரு புறம். இன்னொரு புறம் மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இவர்களோடு பெருமளவுக்குச் சேராமல் தன்னைத் தனித்துக் காட்ட முயல்கிறார்.

இவை தவிர கூட்டமைப்பின் அங்கமாக உள்ள ரெலோவும் புளட்டும் ஏனைய மூன்று கட்சிகளோடு இணைந்து அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கக் கூடாது என்று கூறுகின்றன. இவ்வாறு கூறும் ரெலோவின் பிரமுகர் சிவாஜிலிங்கம் -அவர்தான் மேற்படி கட்சிகள் ஐந்தையும் ஒருங்கிணைப்பதற்குக் கூடுதலாக உழைத்தவர் என்றும் தெரிகிறது- அவர் வடமாகாண ஆளுநரிடம் ஐ.நா.வில் கொடுப்பதற்கென்று ஒரு மனுவைக் கையளித்திருக்கிறார். ஆளுநர் எனப்படுபவர் அவரது பதவியின் நிமித்தம் அரசுத் தலைவரின் முகவர்தான். வடபகுதி மக்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட ஒருவரிடம் ஏன் அனந்தியும் சிவாஜிலிங்கமும் மனுக் கொடுத்தார்கள்? ஒரு புறம் ஆளுநருக்கு மனுக் கொடுக்கிறார்கள். இன்னொரு புறம் ஐ.நா வுக்கு மனுக் கொடுக்கிறார்கள்.

இவர்களைத்தவிர ஜெனிவாவில் வழமையாகக் காணப்படும் மற்றொரு தரப்பாகிய கஜேந்திரகுமாரும் அங்கே போயிருந்தார். தமிழகத்திலிருந்தும் ஒரு பேச்சாளர் வந்திருந்தார். மேற்கண்ட அனைத்து தமிழ் தரப்புகளும் ஒரு மையத்திலில்லை. ஒரே விதமான கோரிக்கைகளை முன்வைக்கும் தரப்புக்கள் கூட ஓரணியாக இல்லை. பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் இம்முறை தமது கோரிக்கைகளைப் பொறுத்தவரை ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. ஆனால் செயல் ரீதியாக அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. ஒரு பொது வேலைத் திட்டமும் இல்லை. ஒரு பொதுவான வழி வரைபடமும் இல்லை. எல்லாத் தரப்புக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மைய அமைப்பும் மையப் பொறிமுறையும் இல்லை.

ஆக மொத்தம் தமிழ் தரப்பு ஒருமித்த தரப்பாக இல்லை. ஒருங்கிணைந்த வேலைத்திட்டமும் இல்லை. கடந்த எட்டு ஆண்டுகால உழைப்பைக் குறித்துத் தொகுக்கப்பட்ட ஒரு மீளாய்வும் இல்லை. அரசாங்கத்தை ஐ.நா கண்காணிப்பதென்றால் அதற்கு கால அட்டவணையுடன் கூடிய ஒரு பொறிமுறை வேண்டும் என்று தமிழ்த் தரப்புக் கேட்கிறது. ஆனால் ஜெனீவாவை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் தமிழ் தரப்பிடம் கால அட்டவணையோடு கூடிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அல்லது மையப் பொறிமுறையும் ஏதாவது உண்டா?

 

http://globaltamilnews.net/2019/116747/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.