Jump to content

அரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு

 

- பி.கே.பாலச்சந்திரன் -

இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது.

jeni.jpg

இலங்கை நீதிமன்றங்களுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு தடையே அல்ல என்று சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இலங்கை நீதிமன்றங்களில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் அனுமதிப்பதற்கு இலங்கையின் அரசியலமைப்பு இடம்தரவில்லை எனவும் அவ்வாறு அனுமதிப்பதனால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு திருத்தத்தை கொண்டுவந்து  அதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என்று மார்ச் 21 ஆம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு பதிலளிக்கும் முகமாகவே சட்டவல்லுனரான சுமந்திரனின் பாராளுமன்ற உரை அமைந்தது.

அரசியலமைப்பின் 105 வது சரத்து எந்த தடையையும் விதிக்கவில்லை . மேல் நீதிமன்றம் தொடர்பிலான 111 வது சரத்து நீதிபதிகள் எந்த நாட்டவராக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் எந்த தடையையும் விதிக்கவில்லை. வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை அரசியலமைப்பு தடைச்செய்கின்றது என்ற கூறுவது தவறானதாகும்.அது தடைசெய்யவே இல்லை. இது தொடர்பில் நீதித்துறையின் தீர்மானங்களும் இருக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அரசியலமைப்பில் உள்ளதைப் போலன்றி இலங்கையின் அரசியலமைப்பு நீதிபதிகளை நியமிக்கும் செயற்பாடுகளின் தகுதி அல்லது கட்டுப்படுத்தும் தன்மை பற்றி எந்தவித வழிகாட்டல் விதிமுறைகளையும் கொண்டிருக்க வில்லை என்று சுமந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஷ ராஜபக்ஷ வெளிப்படுத்திய ஆட்சேவம் குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன் வெளிநாட்டு நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆராயப்பட்ட போது தானும் அவரும் ஜெனீவாவில் இருந்ததை நினைவு படுத்திய  இலங்கை நீதிமன்றமொன்றில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு தடையெதுவும் இல்லையென்பதை அவர் ஒத்துக் கொண்டிருந்தார் என்று கூறினார். விஜேதாச ராஜபக்ஷவின் இணக்கப்பாட்டிற்கு பின்னர் தான் ஜக்கிய நாடுகள் மனித உவுரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டது என்றும் சுமந்திரன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு நீதிபதிகளை  இலங்கை நீதிமன்றங்களில் அனுமதிப்பதற்கு வகை செய்யும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு  விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்பித்ததை நினைவுப்படுத்தியதுடன் சுமந்திரன் தனது செயல் அரசியலமைப்புக்கு முரணானது என ராஜபக்ச நினைத்திருந்தால் அவ்வாறு செய்திருப்பாரா? என்று கேள்வியையும் எழுப்பினார்.

மேலும் நீதிச் செயன்முறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இணைவதற்கு வாய்ப்பில்லையென்றால் எதற்காக 2015 ஒக்டோம்பர் 30/1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது? வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பிலான ஏற்பாடுகளை ஜெனீவா தீர்மானம் எப்போதுமே உள்ளடக்கியிருந்தது என்று கூறப்பட்டிருந்த போதிலும் எதற்காக மேலும்  இருதடவைகள் இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது? என்று சுமந்திரன் கேள்வியெழுப்பி வாதிட்டார்.

வெளிநாட்டு நீதி நியாயாதிக்கம்

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாக இருக்குமானால் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு சர்வதேச சமூகத்தை கேட்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியிருக்கப் போவதில்லை என்று சுமந்திரன் எச்சரிக்கையும் விடுத்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டமாக இருக்கின்ற ரோம் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடாமல் எவ்வாறு இதைச் செய்ய முடியும் என்று சுமந்திரனிடம் கேட்ட போது சர்வதேச நீதிமன்றமொன்றிற்கு உத்தரவிடுமாறு பாதுகாப்பு சபையை சர்வதேச சமூகம் கேட்க முடியும். இத்தகையதொரு நடவடிக்கைகெதிராக பாதுகாப்பு சபையை சீனா அல்லது ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துமேயானால் சர்வதேச விசாரணை மன்றம் ஒன்றை அமைப்பதற்கான வேறு வழிமுறைகளை ஆராய முடியும் என்று பதிலளித்தார்.

'ஒரு விடயத்தை தெளிவுப்படுத்த நான் விரும்புகிறேன். இலங்கை அரசாங்கம் இந்த உறுதி மொழிகளை மூன்று தடவைகள் எழுத்தில் வழங்கியிருக்கின்றது. ஆனால் நீதிச் செயன்முறையில் சுயாதீனமான வெளிநாட்டு நீதிபதிகள் தமிழ் படுத்தப்பட்ட உறுதிமொழி உட்பட இந்த உறுதி மொழிகளை கடைப்பிடிக்க அரசாங்கம் தவறுமேயானால்அதற்கு பிறகு தமிழ் மக்களாகிய நாம் முற்றிலும் சர்வதேச நீதி செயன்முறையொன்றை நோக்கி நகர்வதை தவிர வேறு மாற்று வழி எமக்கில்லாமல் போகும். அதுவே சாத்தியமானதே எமது மக்கள் அதையே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் . சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை விவகாரத்தை பாரப்படுத்தும்படி எமது மக்கள் கூறுகிறார்கள்.நாங்கள் கலப்பு நீதிச் செயன்முறையொன்றையே வீம்புகிறோம். எழுத்து மூலமாக வழங்கிய உறுதி மொழிகளுக்கு மத்தியிலும் அதுவும் அரசியலமைப்பின் கீழ் அவ்வாறு செய்வது   சாத்தியம் என்று இருக்கின்ற போதிலும் அரசாங்கம் அதை செய்யவில்லையானால்  சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது வேறு வகையான  முற்றிலும் சர்வதேச  நீதி செயற்முறைக்கு இலங்கை விவகாரத்தை நகர்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுப்போம் என்பதை அரசாங்கத்திற்கும்  நாட்டிற்கும் இன்று நான் அறிவிக்கின்றேன்:. என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் கூறினார்.

' ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் கூறிய வார்த்தைகள் நடைமுறையில் கைகூட வேண்டுமானால்  நாட்டுக்குள்ளே நல்லிணக்கத்திற்கான செயன்முறைகளை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும். அவ்வாறானால் வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கம் உறுதியாக  பின்பற்றி  நடைமுறைப்படுத்த வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பின் ஊடாக மாத்திரமே  சுயாதீனமான செயன்முறையை உறுதிப்படுத்த முடியும். முரண்நிலையில் இருக்கின்ற தரப்புகளில் அல்லது போரில் ஈடுபடுகின்ற தரப்புகளில் ஒரு தரப்பு இலங்கை அரசாகவும், மறுதரப்பு நாட்டை பிரிப்பதை இலக்காக கொண்டு தீவிரவாத குழுவாகவும் இருக்கின்ற விவகாரம் ஒன்றில் இலங்கை அரசு சுயாதீனமான  மத்தியஸ்தராக இருக்க முடியாது. சுயாதீனமான நீதிச் செயன்முறை ஒன்று குறித்து எவருமே குறை கூற முடியாது. என்ற காரணத்தினால் தான் வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபற்ற வேண்டும் என்று  நாம் கேட்கின்றோம். அத்தகைய ஒரு செயன்முறை பின்பற்றப்படவில்லையானால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகள் அனைத்தும் மீறப்படுகின்றன என்றாகிறது. அதற்கு பிறகு முற்றிலும் சர்வதேச விசாரணை மமன்றமொன்றிற்கே நாடு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்". எனவும் சுமந்திரன் எச்சரித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு அசௌகரியம்

வெளிநாட்டு நீதிபதிகளை சம்பந்தப்படுத்துவதற்கு  சட்டரீதியாக இடமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், வெளிவிகார அமைச்சர் திலக் மாரப்பன பகிரங்கமாக கூறியிருப்பதால் சுமந்திரனின் வாதம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு பெறும் அசௌகரியத்தை தோற்றுவிக்கக் கூடியதாக இருக்கின்றது. மேற்குலக நாடுகளின் தலைமையிலான ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் இப்போது தங்களின் வாதத்தை முன்வைக்க முடியாமல் போகும்.

இலங்கையில் போர்குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது. இந்நிலைப்பாட்டிற்கு சேதமில்லாத வகையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுப்படுத்துவதற்கு அரசாங்கம் வழிவகைகளை கண்டறிய வேண்டியிருக்கலாம். அல்லாது விட்டால் ஒரு மாற்று வழியாக இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் மாத்திரமே ஐ. நா  நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெனீவா தீர்மானித்தில் ஏற்பாடு ஒன்றின் கீழ் அரசாங்கம் தஞ்சம் தேடிக்கொள்ள கூடும். அதனால் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் இலங்கை இணக்கத்தைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை.

தமிழர் அரசியல் மீதான தாக்கம்

சுமந்திரனின் பாராளுமன்ற பேச்சு வடக்கு , கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களின் தேர்தல் தெரிவு மீது தாக்கம் ஒன்றினைக் கொண்டிருக்க முடியும். 2019ம் ஆண்டில் இரண்டாம் அரை கூறிலும், 2020ம் ஆண்டின் முதலாம் அரைகடகூறிலும்  ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் என்று முக்கிய தேர்தல்கள் வரிசையாக வரவிருக்கின்றன. முன்னாள் போர் வலயமான இலங்கையின்  வட, கிழக்கில் உள்ள சலக தமிழ் அரசியல் கட்சிகளுமே வெளிநாட்டு நீதிபதிகளையும், வழக்கு தொடுநர்கள் மற்றும்  வழக்கறிஞர்களை கோரி நிற்கின்றனர். இனவாத அடிப்படையில் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு சபார்பாகவே இலங்கையின் நீதித்துறை செயற்படும் என்ற அச்சம் காரணமாகவே இந்த கோரிக்கையை தமிழ் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அதனால்  வெளிநாட்டு நீதிபதிகள் நியமனத்தை விதத்துரை செய்கின்ற 2015 ஜெனீவா தீர்மானத்தை சகல தமிழ் கட்சிகளுமே ஆதரிக்கவும் செய்கின்றன.

ஆனால் இலங்கை தமிழரசு கட்சியின் சுமந்திரன் மாத்திரமே அரசியலமைப்பினதும், இலங்கையின் சட்டத்தினதும் அடிப்படையில் அந்த கோரிக்கையை நியாயப்படுத்தி வாதிட்டு இலங்கை அரசாங்கம் நழுவி செல்வதை  கஷ்டமாக்கியுள்ளார்.தற்போது தொடங்கி 2020 நடுப்பகுதி வரையிலான  காலகட்டத்தில் மாகாண சபை தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் அறிவிக்கப்படும் போது சுமந்திரனால் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த வாத தமிழரசு கட்சி வல்லமை வாய்ந்த ஒரு பிரச்சாரக் கருவியாக மாறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது இது தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்காக போராடுகின்ற துணிச்சலை இழந்து இன்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் கைப்பாவையாக ஆகிவிட்டது என்று போட்டி தமிழ் கட்சிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டை நிரூமூலம் செய்கின்றது.

(நியூஸ் இன் ஏசியா)

http://www.virakesari.lk/article/52588

Link to comment
Share on other sites

மிகவும் நுட்பமான சட்ட பிரச்சினை. சுமந்திரனுக்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.