Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அண்ணா, அண்ணி பரிமளத்தை தவிர வேறு ஒரு பொண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார் 

 

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ட அண்ணா, அண்ணி பரிமளத்தை தவிர வேறு ஒரு பொண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார் 

 

பெண் ஆ பொண் ஆ.....

என்ன அக்கோய் இன்றைக்கு அடிக்கடி றோல் ஆகிறது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 9:32 PM, ரதி said:

ஊர்க் கொசிப்😂 எல்லாம் கடிதம் மூலம் கேக்கிற பழக்கம் இருந்திருக்கு 
 

அந்தக்காலத்திலை வேலிக்காலை கதைக்கிறதை விட கடிதங்களிலை தான் அந்தமாதிரி சுவாரசியமான கொசிப்புகள் இருக்கும்..🤣

On 4/6/2019 at 5:26 AM, ஈழப்பிரியன் said:

இதோட காச்சல் நின்று வயித்தால அடிக்க தொடங்கியிருக்குமே?

வசந்தியின் எண்ணமும் தலைகீழாகியிருக்குமே?

அதென்ன வசந்தியின் எண்ணம்? அப்பிடியென்ன கெட்டதை சொல்லிப்போட்டன்?:grin:

On 4/6/2019 at 5:52 AM, ராசவன்னியன் said:

தடுமாறும் கு.சா பற்றி மிகச் சரியான அவதானிப்பும்,  அவரின் துரோக(?)  சிந்தனைக்கு ஏற்றாற்போல் பரிமளத்தின் எதிர்வினையும், கோபமும் மிக நியாயமானதுதான்..! 😋

 

என்ரை உதவிமனப்பான்மையை புரிஞ்சு கொள்ளுறீங்களே இல்லையப்பா 😃

On 4/10/2019 at 1:29 AM, நிலாமதி said:

பரிமளம் அண்ணியை நேர காலத்துக்கு கூப்பிடுற வேலையை பாருங்கோ   அண்ணே 

போட்ட கடிதங்களுக்கு பதில் போடாட்டில் என்னெண்டு கூப்பிடுறதாம்......😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2019 at 4:05 AM, தனிக்காட்டு ராஜா said:

வெட்டுனா அந்த தல எனக்கு  என்று சொல்லி போடுவம் 

அதை வைச்சு என்ன செய்யப்போறீங்க சார்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2019 at 5:38 AM, ராசவன்னியன் said:

Kv-5.png

'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..? :innocent:

சிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..! :)

சா...பழசையெல்லாம் ஞாபகப்படுத்தி கொன்னுட்டீங்க.....ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை போய் வந்த றோட்டு எல்லோ....😁

Vadivelu in disguise to charm girls - Aaru erosnow, tamil, kollywood, movie, indian, films, Aaru, Aru, Aaru movie, Aru movie, Aaru tamil movie, hd, Vadivelu, scene, scenes, comedy, humour, jilla GIF

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துர்க்கை அம்மன் துணை.

கச்சேரி
யாழ்ப்பாணம்
06.06.1983

அன்புள்ள குரு அறிவது!

                                                    நான் நற்சுகம்.அது போல் நீங்களும் சுகமாயிருக்க துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன்.

உங்கள் கடிதங்கள் கிடைத்தன. இரண்டு போட்டோக்களையும் பார்த்தேன்.

யார் அந்த வெள்ளைக்காரி? மற்றப்போட்டோவில் நிக்கிறது யார்?  சிலோன் ஆளோ?

அண்ணாவும் வெளிநாடு போகப்போறன் என சொன்னார்.அண்ணா உங்கடை ஐயாவோடை அக்கா பரிமளம் சம்பந்தமாய் ஏதோ பிரச்சனைப்பட்டவராம்.என்ன பிரச்சனையெண்டு எனக்கு தெரியாது.எனக்கு சொல்லவும் மாட்டினம். அக்காவுக்கு புன்னாலைகட்டுவனிலையிருந்து ஒரு கலியாண பேச்சுக்கால் வந்தது. நல்ல இடமெண்டு புரோக்கர் சொன்னவராம். நேற்று கலியாணபேச்சு முடிவு கேக்க புறோக்கர் வந்தவர். புரோக்கரை கண்டவுடனை அக்கா  யாருக்கும் தெரியாமல் கடியன் கறுவலை அவிட்டுவிட்டா....அது அவர்ரை காலை கடிச்சுப்போட்டுது.ஐயா ஒரு மாதிரி புரோக்கரை சமாளிச்சு அனுப்பிப்போட்டார்.

எனக்கு கனடா அல்லது லண்டன் போகத்தான் விருப்பம்.இங்கேயும் கனடா லண்டனுக்குத்தான் நல்ல மதிப்பு.ஏஜன்சியும் அந்த இரண்டு நாட்டுக்குத்தான் கூட காசு கேட்கின்றார்கள்.முடியாவிட்டால் முதலில் ஜேர்மனிக்காவது வரலாம் என்றிருக்கின்றேன்.

இந்த வெளிநாடு விசயமாக நான் இன்னும் வீட்டில் கதைக்கவில்லை. அம்மாவுடன் முதலில் கதைத்தால் எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.அம்மா ஓம் என்று சொன்னால் வீட்டில் ஒருவரும் மறுபேச்சு பேசமாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே.

உங்கள் பதில் கடிதம் கண்டு வெளிநாடு போவது பற்றி வீட்டில் கதைக்கலாம் என்றிருக்கின்றேன்.

அக்காவுக்கு ஒரு கடிதம் போடவும்.

வைரவர் கோவில் மடை நடந்தது.உங்கடை ஐயாதான் முன்னுக்கு நின்று செய்தவராம்.இந்தமுறை பலி குடுக்கக்கூடாதெண்டு ஆரோ வந்து சொன்னவையாம்.அதாலை இனிமேல் பலி குடுக்க மாட்டினமாம்.நல்ல விசயம் தானே.

வேறு புதினமில்லை. இத்துடன் முடிக்கின்றேன். பதில் கடிதம் போடவும்
இப்படிக்கு
அன்பு வசந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு" மறைத்த மாதிரி குருவின்ர காதலிக்கு கடிதம் போடச்சொல்லி இந்த வசந் தீ   பத்த வைக்குது.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு ஏனிந்த வேலை!, வெள்ளைக்காறியோட நிக்கிற படத்தை அனுப்பியிருக்கு. அவாக்கு தெரிஞ்சால் அதோ கதி தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

இந்தாளுக்கு ஏனிந்த வேலை!, வெள்ளைக்காறியோட நிக்கிற படத்தை அனுப்பியிருக்கு. அவாக்கு தெரிஞ்சால் அதோ கதி தான்!

எவவுக்கு??? வெள்ளைக்காறிக்கோ??😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/14/2019 at 10:06 AM, குமாரசாமி said:

புரோக்கரை கண்டவுடனை அக்கா  யாருக்கும் தெரியாமல் கடியன் கறுவலை அவிட்டுவிட்டா.

வெளிநாட்டு கடுவனை மடக்க ஊர்கடுவனை அவிட்டுவிட்டிருக்கினம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய்

'கரணவாய் அத்தானை'க் காணாத பரிமளத்தின் நாச்சிமார் கோவிலடியில் தேடல்..! :unsure:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2019 at 8:06 PM, குமாரசாமி said:

இந்த வெளிநாடு விசயமாக நான் இன்னும் வீட்டில் கதைக்கவில்லை. அம்மாவுடன் முதலில் கதைத்தால் எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.அம்மா ஓம் என்று சொன்னால் வீட்டில் ஒருவரும் மறுபேச்சு பேசமாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே.

வீட்டுக்கு வீடு அம்மாள் ஆட்சி போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்னதியான் துணை

சிமோனா ஸ்ராச 24
முன்ஸ்ரர்
15.06.1983

என்ரை செல்லம் பரிமளம் அறிவது.

                                                                       நான் நல்ல சுகம். அதுபோல் நீங்களும் சுகமாயிருக்கு சன்னதியானை வேண்டுறன்.

எப்படியப்பா இருக்கிறீர்?💖

நான் இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் ஒரு பதில் கடிதம் கூட போடேல்லை.

அப்படி நான் என்ன பாவம் செய்தனான்.💔

ஒரு படம்  அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை    போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு  போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐

இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு? உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே? நீங்களும் கொப்பரை மாதிரி  கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை.

நான் இஞ்சை வெளிக்கிடுறதுக்கு முதல் நாள் பின்னேரப்பார்  நானும் நீங்களும் துரவுப்புட்டிக்கு பின்னால நிண்டு கதைச்சதையெல்லாம் மறந்து போனியள் போலை கிடக்கு.உங்களோடை அந்த பின்நேர தருணத்தை நான் ஒவ்வொருநாளும் நினைத்து வாடுறன் தெரியுமே💞

உண்மையிலையே நீர் ஈவு இரக்கம் இல்லாத கல்நெஞ்சுக்காரியப்பா.

கந்தசாமி கோயில் திருவிழா இப்ப நடக்குமெண்டு நினைக்கிறன். போனவருசத்துக்கு அதுக்கு முதல் வருச வேட்டைத்திருவிழா ஞாபகமிருக்கோ..அதுதான் அந்த கச்சான் சுருள்.....😻

பின் பனங்காணியுக்கை கொண்டுவந்து தந்த கொழுக்கட்டை இப்பவும் என்ரை வாயிலை இனிச்சுக்கொண்டேயிருக்கு.  ❣️ கடியன் என்ன செய்யிறான்? அவன் இல்லாட்டில் எங்கடை சந்திப்புகள் பெரிய சோலியளிலை முடிஞ்சிருக்கும். 🐕  இருந்தாலும்  ஒருக்கால் கொண்ணரோடை கடியன் போகேக்கை கடியன் என்னைப்பாத்து வாலாட்டினது கொண்ணருக்கு இனி இல்லையெண்ட அவமானம். அதுக்குப்பிறகுதானே கொண்ணர் என்னை நோட் பண்ண வெளிக்கிட்டவர்.

சரி செல்லம்.கோவங்களை மறந்து இனியாவது கடிதம் போடுமப்பா....

.இஸ் லீப டிஸ்.💖

நான் இப்ப நல்லாய் ஜேர்மன் பாசை கதைப்பன். wie geht es dir mein schatz 💌

இத்துடன்
முடிக்கிறன்
அன்பு அத்தான் 💓

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஒரு படம்  அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை    போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு  போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐

ம்.நானும் பக்கத்து தோட்டத்து சந்திரனோடை நிண்டு ஒரு படம் அனுப்பினால் தாங்குவியளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

ம்.நானும் பக்கத்து தோட்டத்து சந்திரனோடை நிண்டு ஒரு படம் அனுப்பினால் தாங்குவியளோ?

வந்துட்டாங்கள்....கத்தி கடப்பாரை...அலவாங்கோடை  கிண்டிக்கிளற  வந்துட்டாங்கள். :grin:

Looking Vadivelu GIF - Looking Vadivelu Thalainagaram GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழசெல்லாம் நினைவூட்டியா  இக்கடிதத்தை கண்டதும் கரையாத மனசும் கரைந்துவிடும் விரைவில் பரிமளம் அண்ணி கடிதம்   கிடைக்க வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

...

ஒரு படம்  அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை    போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு  போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐

...

( இங்கேதான் உள்ளுறைந்த ஆணாதிக்க சிந்தனை தலை தூக்குகிறது..! vil-down.gif

தான் எப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் எல்லாவிதத்திலும் சுத்த பத்துமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆண்களின் அப்பட்டமான சுயநல நினைப்பை என்னவென்று சொல்வது..?   vil-bah.gif

கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! )  vil2_chut.gif

Empfehlung an Parimalam:   all-good.gif

"அம்மாடி பரிமளம், உந்தாள் உமக்கு சரிப்பட்டு வராது கண்டியளோ..?

 கொப்பர் பார்க்கும் பெடியனையே கட்டிக்கொள்ளம்மா..! " 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் கனவேலை பாத்திருக்கு! அதைச் சொல்லியே மருட்டி பாக்கிறார்.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

3

 

இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு? உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே? நீங்களும் கொப்பரை மாதிரி  கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை.

 

 


 

 

Résultat de recherche d'images pour "manorama memes gif"

பரிமளம் மைண்ட் வாய்ஸ் :  என்னையும் பழசு என்று சொல்லுறது போல கிடக்கு. அதாவது பரவாயில்லை, என்ர குடும்பத்தையே கிறுக்கு பிடித்த குடும்பம் என்று சொல்லுறாய். இரு மகனே, வந்து உனக்கு சுடுதண்ணியால ஊத்துறன்.....!   🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்னதியான் துணை

சிமோனா ஸ்ராச 24
முன்ஸ்ரர்
15.06.1983

 

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                      நான் நல்ல சுகம்.நீங்களும் சுகமாயிருக்க எம்பெருமான் முருகனை வேண்டுறன்.

உங்கள் கடிதம் கிடைத்தது.வாசித்து மட்டில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

நான் அனுப்பின போட்டோவிலை இருக்கிறவ என்னோடை வேலை செய்யிறவ.நல்ல சீவன். என்ன உதவி கேட்டாலும் இல்லையெண்டாமல் உதவி செய்யும்.மற்றப்படத்திலை இருக்கிற பொடியன் சிலோன் பொடியன் தான்.ஊர்காவத்துறை பொடியன்.

கொண்ணர் ஐயாவோடை பிரச்சனைப்பட்டதெல்லாம் கேள்விப்பட்டன்.பரிமளத்தின்ரை பேச்சுக்கால் சறுக்கினதுக்கு நான் தான் காரணமெண்டு முறுகினவராம்.பரிமளம் ஓமெண்டால் கலியாணத்தை செய்து வைக்க வேண்டியது தானே.ஏன் என்ரை ஐயாவோடை கொண்ணர் புடுங்குப்பட வேணும்?

நீங்கள் வெளிநாடு வாறதெண்டால் வீட்டிலை கதைச்சு ஒரு முடிவை எடுங்கோ.நான் எல்லா உதவியும் செய்வன்.ஆனால் என்ரை பெயர் மருந்துக்கும் உங்கினேக்கை அடிபடக்கூடாது. பிறகு கன பிரச்சனை வரும்.உங்களுக்கு கனடாவிலை ஒரு சினேகிதி இருக்கிறமாதிரி கதையை பரவ விடுங்கோ.ஆரும் சந்தேகப்பட மாட்டினம்.இப்ப வாறதெண்டால் பேர்லினுக்கு நேரை வந்து இறங்கலாம்.போடர் இறுக்குவாங்கள் போலை கிடக்கு. சட்டுபுட்டெண்டு முடிவெடுங்கோ.திருப்பியும் சொல்லுறன் என்ரை பெயர் வெளியிலை வரக்கூடாது.பிறகு பெரிய வில்லங்கங்கள் வரும்.

வைரவர்மடை நடந்ததெண்டு  எழுதியிருந்தியள். உவன் சந்திரன் நாலு முழத்தை கட்டிக்கொண்டு அங்கையும் இஞ்சையும் ஓடி பெரிய சேக்கஸ் காட்டியிருப்பானே.அவனுக்கு நான் இல்லாதது.... தான் பெரிய கிங் எண்ட நினைப்பு.  தான் கொஞ்சம் வெள்ளைதோல் எண்டபடியாலை மன்மத குஞ்சு எண்ட நினைப்பு.என்னைப்பற்றி தெரியேல்லை அவருக்கு..

சரி வசந்தி கனக்க எழுதீட்டன் போலை கிடக்கு.வெளிநாட்டுக்கு வாற விசயமாய் ஒரு முடிவெடுங்கோ. நான் இருக்கிறன் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.
பதில் கடிதம் போடுங்கோ.

இப்படிக்கு
அன்புடன்
குரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது எண்டு ஒண்டுமே புரியுதில்லையே?????🤔🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உவன் சந்திரன் நாலு முழத்தை கட்டிக்கொண்டு அங்கையும் இஞ்சையும் ஓடி பெரிய சேக்கஸ் காட்டியிருப்பானே.அவனுக்கு நான் இல்லாதது.... தான் பெரிய கிங் எண்ட நினைப்பு.  தான் கொஞ்சம் வெள்ளைதோல் எண்டபடியாலை மன்மத குஞ்சு எண்ட நினைப்பு.என்னைப்பற்றி தெரியேல்லை அவருக்கு..

இந்த பயம் எப்போதும் இருக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தியை கூப்புடுவதில் தான் மும்முரமாக இருக்கிறியல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் அம்மணி இப்போ எந்த ஊரிலை இருக்கிறார்களோ..? :(

தாய்நாட்டில வேறை கண்ட எடத்துல குண்டு, பெண்டு என சனம் அலறுது.. !  :shocked:

'சவுகிதார்' கு.சா அவர்களே, பரிமளத்திற்கு ஒரு வழி செய்யுங்கோ..! :)

Link to comment
Share on other sites

உங்கள் கடிதங்களை தொடருங்கள்.  எங்கே சென்று முடியப்போகிறது என்றறிய ஆவல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.