Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

அம்மா திருநீறை மேலே இழுத்து விட்டிருப்பா இருடி "உனக்கு இனி நாமம்தான்" திருமணத்துக்கு பிறகுதான் மாமியின் மனசு மனிசிக்கு தெரியும்......!

மருதடியில் பிள்ளையாரைத்தான் எல்லாரும் தங்களை சேர்த்து வைக்க சொல்லி கும்பிடுவினம். இவ வைரவரை கும்பிட்டு அவரை மாதிரி போட்டொ எடுத்து அனுப்ப சொல்கிறா.... போட்டொ எப்படி இருக்க வேண்டும் என்று இனி அத்தானுக்கு புரிஞ்சால் சரி......!  👍

இந்நேரம் வசந்தி தன்னுடைய போட்டோவே அனுப்பி இருப்பா.....!  😄

 

D6JC615V4AEMOUh.jpgஇப்பிடியொரு படம் எடுத்து அனுப்பிவிட்டன்....சனம் கலங்கிப்போச்சு...🤣

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

அவையள் அப்பிடித்தான் சொல்லுவினம்.....அங்கை போனாப்பிறகு மண்வெட்டியை கையிலை தந்து விடுவினம்.....😎

அனுபவம் பேசுதாக்கும் 😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

ஏன் பல்லு கூசியிருக்கும்?!
மாங்காய் சாப்பிட்டவையோ!

  இல்லை புளியங்காய் சாப்பிட்டவையாம்...

Vadivelu Comedy | Cheena Thaana 001 | All Comedy Scenes Movie, Film, Kollywood, South Indian, The Cinecurry, Free, Cheena Thaana 001 (Film), Vadivelu (Composer), Manivannan (Film Director), Comedy (Film Genre), All, Funny, Film (Film), Scenes, Hilarious, Lol, Jokes, Humor, Laugh, watch, best, complete, full, Part, Part 1, Part full, Prasanna, Sheela, Livingston, Delhi Ganesh, Visu, T. P. Gajendran, Nizhalgal Ravi, Deva GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட மனிசி உங்களை அத்தான் எண்டு கூப்பிடாத ஏக்கத்தை இத்தனை அத்தான் போட்டு தீத்திருக்கிறியள் 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கட மனிசி உங்களை அத்தான் எண்டு கூப்பிடாத ஏக்கத்தை இத்தனை அத்தான் போட்டு தீத்திருக்கிறியள் 😛

Ãhnliches Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2019 at 12:54 AM, பெருமாள் said:

அனுபவம் பேசுதாக்கும் 😀😀

ஒருத்தன்ரை அனுபவத்த கண்டுபிடிச்ச நீங்கள் பெரிய அனுபவசாலி.....😁tw_smiley:😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

Ãhnliches Foto

🤔😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

Ãhnliches Foto

On 4/6/2019 at 7:16 PM, குமாரசாமி said:

Vasantha Maligai Movie Romantic Scene ll  Sivaji Ganesan, Vanisree Romantic Songs Of All Time, Old Telugu Songs Collection, Vasantha Maligai Movie, Romantic Scene, Tamil Romentic videos, sivaji Ganesan, vanisree, vanisri romentic videos GIF

On 5/12/2019 at 2:58 AM, குமாரசாமி said:

Vadivelu Comedy | Cheena Thaana 001 | All Comedy Scenes Movie, Film, Kollywood, South Indian, The Cinecurry, Free, Cheena Thaana 001 (Film), Vadivelu (Composer), Manivannan (Film Director), Comedy (Film Genre), All, Funny, Film (Film), Scenes, Hilarious, Lol, Jokes, Humor, Laugh, watch, best, complete, full, Part, Part 1, Part full, Prasanna, Sheela, Livingston, Delhi Ganesh, Visu, T. P. Gajendran, Nizhalgal Ravi, Deva GIF

On 5/4/2019 at 1:33 AM, குமாரசாமி said:

manathai thirudi vittai vadivelu comedy manathai, thirudi, vittai, vadivelu, comedy GIF

On 3/31/2019 at 4:05 AM, குமாரசாமி said:

Vadivelu Dk14 GIF - Vadivelu Dk14 Time GIFs

  Vadivelu in disguise to charm girls - Aaru erosnow, tamil, kollywood, movie, indian, films, Aaru, Aru, Aaru movie, Aru movie, Aaru tamil movie, hd, Vadivelu, scene, scenes, comedy, humour, jilla GIF

 

எங்கேயிருந்து சாமி இப்படி 'படக் படக்'குன்னு திரியின் ஓட்டத்திற்கேறவாறு பொருத்தமான படங்களை தேர்ந்தெடுத்து போடுறீங்கள்..? :shocked::)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

துர்க்கை அம்மன் துணை  

கோண்டாவில்
  24.07.1983

அன்புள்ள ஆசை அத்தான் அறிவது.  

                                                                             நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் நல்ல சுகமாக இருக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன்.

அத்தான்  நீங்கள் அனுப்பின கடிதமும் போட்டோக்களும் கிடைத்தது. பார்த்து சந்தோசப்பட்டேன்.நீங்கள் இப்ப கொஞ்சம் வெள்ளையாய் வந்துட்டியள். தலைமயிர் எல்லாம் வளர்த்து வடிவாய் கட் பண்ணி ஒரு நடிகரை போல இருக்கிறியள் அத்தான். நானே நாவூறு படுத்திப்போடுவன் போலை இருக்கு.அதாலை 3 செத்தல் மிளகாயை அடுப்பிலை சூடுகாட்டி நானே உங்களுக்கு நாவூறு பாத்திட்டன்

ஆருயிரே.

 அது என்ன காதிலை தோடெல்லாம் குத்தியிருக்கிறியள்.வடிவாய் இல்லை.ஆர் குத்தி விட்டது. எங்கடை அப்புவும் உப்புடித்தானே குடும்பி கட்டிக்கொண்டு தோடும் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.அத்தான் உங்களுக்கு தோடு வடிவில்லை.கழட்டுங்கோ.

மற்றது ஒரு போட்டோவிலை சாராய கலரிலை கிளாசுக்கை  என்ன இருக்கு? சாராயம்  குடிக்க வெளிக்கிட்டியளோ? அதெல்லாம் கெட்ட பழக்கம் அத்தான் வேண்டாம்.சோறு கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறியளோ அத்தான். உங்கை மிளகாய்த்தூள் சரக்குத்தூள் எல்லாம் வேண்டலாமோ அத்தான்.

செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம். நான் செவ்வாய் வெள்ளி சனி ஞாயிறு மச்சம் சாப்பிடாமல் விரதம் பிடிக்கிறன். நீங்கள் செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிடாமல் இருங்கோ. அது அம்மனுக்கும் முருகனுக்கும் உகந்த நாள்.

வெள்ளைக்கார பொம்புளையளோடை பழகவேண்டாம் அத்தான். அவையள் சரியில்லாத ஆக்கள் எண்டு எல்லாரும் கதைக்கினம்.

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ.

நான் இப்ப கோண்டாவில் குஞ்சியப்பு வீட்டை நிக்கிறன். தங்கச்சி வசந்தியும் நிக்கிறாள்.வாற கிழமைநல்லூருக்கு  போய் அப்பிடியே வீட்டை போவம் எண்டு இருக்கிறம்.

வேறை என்ன அத்தான் உடம்பை கவனமாய் பாத்துக்கொள்ளுங்கோ.

வீட்டை போய்  உங்கடை உடன்பிறப்பு செய்த  வேலையை விரிவாய் அடுத்த கடிதத்திலை எழுதுறன்.
இப்படிக்கு
ஆசை முத்தங்களுடன்
அன்பு பரிமளம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அய்த்தான்..அய்த்தான்.."ன்னு அம்மணி ரொம்பக் கொழையுறத பார்த்தால் கு.சா. 'அம்பேல்' தான்..! :innocent:

பார்ப்போம், கலியாணம் கட்டினப் பிறகு எப்படி போகுதென்று..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தானை எச்சரிக்கிறது போல் இந்தக் கடிதம் அமைந்திருக்கு. கோண்டாவிலில் நிக்கிறவ பக்கத்தில சாந்தமாய் இருக்கிற மஞ்சவனப்பதி  அம்மனை தவிர்த்து விட்டு  எங்கேயோ அரிவாளும், கோடாலியும் வைத்திருக்கின்ற  துர்க்கை அம்மன் துணை என்று எழுதுவதை சாதாரணமாய் எடுக்கேலாது .......!   😐

                           Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

அத்தானை எச்சரிக்கிறது போல் இந்தக் கடிதம் அமைந்திருக்கு. கோண்டாவிலில் நிக்கிறவ பக்கத்தில சாந்தமாய் இருக்கிற மஞ்சவனப்பதி  அம்மனை தவிர்த்து விட்டு  எங்கேயோ அரிவாளும், கோடாலியும் வைத்திருக்கின்ற  துர்க்கை அம்மன் துணை என்று எழுதுவதை சாதாரணமாய் எடுக்கேலாது .......!   😐

                           Image associée

சுவியர், மஞ்சவனப்பதி முருகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

சுவியர், மஞ்சவனப்பதி முருகன்

அதை நாச்சிமார் கோவில் அம்மன், கழட்டி அம்மன் என்று திருத்திப் படிக்கவும்......!  👍

இப்ப சந்தோசமா , அவரே கவனித்திருக்க மாட்டார், நீங்கள் வேற .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

அது என்ன காதிலை தோடெல்லாம் குத்தியிருக்கிறியள்.வடிவாய் இல்லை.ஆர் குத்தி விட்டது. எங்கடை அப்புவும் உப்புடித்தானே குடும்பி கட்டிக்கொண்டு தோடும் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.அத்தான் உங்களுக்கு தோடு வடிவில்லை.கழட்டுங்கோ.

அட இப்படி வேற சங்கதி இருக்குதோ?

சரி எந்தக் காது?வலது காதா?இடது காதா?இரண்டிலுமா?

வந்த புதிதில் விபரம் தெரியாது எந்தக் காதென்றாலும் குத்தினால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட உடன் பிறப்பும் யாரையும் லவ் பண்ணுறாவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ...........

அந்தக் காலத்தில குளிருக்குள் வேலைக்கு போக   கை விரல்  வெடிக்க 
 பஸ்ஸுக்கு நிற்க ஏலாதென்று கடனை உடனைப்பட்டு ஒரு   பழைய கார்  கட்டுக் காசுக்கு வாங்கி   அதை ஊருக்கு காட்டிட  அதற்கு முன் நின்றுபோட்டொ பிடித்து அனுப்புவீனம்.  இதை பார்த்த  பக்கத்து வீட்டுக் காரர்   நீயும் இருக்கிறியேடா என்று தன்  மகனை நச்சரிப்பினம்  வெளி  நாடு போ உழைக்கலாம்  என்று ... ...வந்த பின்தான் தெரியும் வெளி நாடு ... எப்படி  என்று ....  இனி  பரிமளம்  அண்ணி டி வீ  வாங்கி அனுப்ப சொல்ல போகிறா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

"அய்த்தான்..அய்த்தான்.."ன்னு அம்மணி ரொம்பக் கொழையுறத பார்த்தால் கு.சா. 'அம்பேல்' தான்..! :innocent:

பார்ப்போம், கலியாணம் கட்டினப் பிறகு எப்படி போகுதென்று..! :)

கொழையிறதையெல்லாம் கணக்கிலை எடுக்காதீங்க சார்.....நான் பாவம்...:grin:

11 hours ago, suvy said:

அத்தானை எச்சரிக்கிறது போல் இந்தக் கடிதம் அமைந்திருக்கு. கோண்டாவிலில் நிக்கிறவ பக்கத்தில சாந்தமாய் இருக்கிற மஞ்சவனப்பதி  அம்மனை தவிர்த்து விட்டு  எங்கேயோ அரிவாளும், கோடாலியும் வைத்திருக்கின்ற  துர்க்கை அம்மன் துணை என்று எழுதுவதை சாதாரணமாய் எடுக்கேலாது .......!   😐

                           Image associée

அம்மன் குற்றம் வரக்கூடாது எண்டுதான் கடைசிவரைக்கும் கவனமாய் இருந்தது....அப்பிடியிருந்தும்  இரண்டொரு தரம் சறுக்கீட்டுது...ð

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அட இப்படி வேற சங்கதி இருக்குதோ?

சரி எந்தக் காது?வலது காதா?இடது காதா?இரண்டிலுமா?

வந்த புதிதில் விபரம் தெரியாது எந்தக் காதென்றாலும் குத்தினால் சரி.

அதை ஏன் பேசுவான்.....விசயம் தெரியாமல் வில்லங்கமான காதிலை குத்தி  பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.🤣

2 hours ago, ரதி said:

உங்கட உடன் பிறப்பும் யாரையும் லவ் பண்ணுறாவோ?

அவனை எனக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது......ஒருக்கால்  அம்மன் கோயில் எட்டாம் திருவிழாவிலை தெற்கு வீதி இருட்டுக்கை வைச்சு சணல் பறக்க  அடி....அப்பிடியிருந்தும்......😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ...........

அந்தக் காலத்தில குளிருக்குள் வேலைக்கு போக   கை விரல்  வெடிக்க 
 பஸ்ஸுக்கு நிற்க ஏலாதென்று கடனை உடனைப்பட்டு ஒரு   பழைய கார்  கட்டுக் காசுக்கு வாங்கி   அதை ஊருக்கு காட்டிட  அதற்கு முன் நின்றுபோட்டொ பிடித்து அனுப்புவீனம்.  இதை பார்த்த  பக்கத்து வீட்டுக் காரர்   நீயும் இருக்கிறியேடா என்று தன்  மகனை நச்சரிப்பினம்  வெளி  நாடு போ உழைக்கலாம்  என்று ... ...வந்த பின்தான் தெரியும் வெளி நாடு ... எப்படி  என்று ..
..  இனி  பரிமளம்  அண்ணி டி வீ  வாங்கி அனுப்ப சொல்ல போகிறா .

ஒரு காலத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்த  விடயத்தை சொல்லியுள்ளீர்கள் சகோதரி!

ஏன் இன்று கூட அது தொடர்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

துர்க்கை அம்மன் துணை  

கோண்டாவில்
  24.07.1983

அன்புள்ள ஆசை அத்தான் அறிவது.  

                                                                             நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் நல்ல சுகமாக இருக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன்.

அத்தான்  நீங்கள் அனுப்பின கடிதமும் போட்டோக்களும் கிடைத்தது. பார்த்து சந்தோசப்பட்டேன்.நீங்கள் இப்ப கொஞ்சம் வெள்ளையாய் வந்துட்டியள். தலைமயிர் எல்லாம் வளர்த்து வடிவாய் கட் பண்ணி ஒரு நடிகரை போல இருக்கிறியள் அத்தான். நானே நாவூறு படுத்திப்போடுவன் போலை இருக்கு.அதாலை 3 செத்தல் மிளகாயை அடுப்பிலை சூடுகாட்டி நானே உங்களுக்கு நாவூறு பாத்திட்டன்

ஆருயிரே.

 அது என்ன காதிலை தோடெல்லாம் குத்தியிருக்கிறியள்.வடிவாய் இல்லை.ஆர் குத்தி விட்டது. எங்கடை அப்புவும் உப்புடித்தானே குடும்பி கட்டிக்கொண்டு தோடும் போட்டுக்கொண்டு திரிஞ்சவர்.அத்தான் உங்களுக்கு தோடு வடிவில்லை.கழட்டுங்கோ.

மற்றது ஒரு போட்டோவிலை சாராய கலரிலை கிளாசுக்கை  என்ன இருக்கு? சாராயம்  குடிக்க வெளிக்கிட்டியளோ? அதெல்லாம் கெட்ட பழக்கம் அத்தான் வேண்டாம்.சோறு கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறியளோ அத்தான். உங்கை மிளகாய்த்தூள் சரக்குத்தூள் எல்லாம் வேண்டலாமோ அத்தான்.

செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம். நான் செவ்வாய் வெள்ளி சனி ஞாயிறு மச்சம் சாப்பிடாமல் விரதம் பிடிக்கிறன். நீங்கள் செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிடாமல் இருங்கோ. அது அம்மனுக்கும் முருகனுக்கும் உகந்த நாள்.

வெள்ளைக்கார பொம்புளையளோடை பழகவேண்டாம் அத்தான். அவையள் சரியில்லாத ஆக்கள் எண்டு எல்லாரும் கதைக்கினம்.

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ.

நான் இப்ப கோண்டாவில் குஞ்சியப்பு வீட்டை நிக்கிறன். தங்கச்சி வசந்தியும் நிக்கிறாள்.வாற கிழமைநல்லூருக்கு  போய் அப்பிடியே வீட்டை போவம் எண்டு இருக்கிறம்.

வேறை என்ன அத்தான் உடம்பை கவனமாய் பாத்துக்கொள்ளுங்கோ.

வீட்டை போய்  உங்கடை உடன்பிறப்பு செய்த  வேலையை விரிவாய் அடுத்த கடிதத்திலை எழுதுறன்.
இப்படிக்கு
ஆசை முத்தங்களுடன்
அன்பு பரிமளம்

 

அண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள்.

3 hours ago, நிலாமதி said:

நீங்கள் புதுசாய் ரிவி வாங்கினான் எண்டு எழுதியிருந்தியள். ரிவிக்கு முன்னாலை நிண்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ...........

அந்தக் காலத்தில குளிருக்குள் வேலைக்கு போக   கை விரல்  வெடிக்க 
 பஸ்ஸுக்கு நிற்க ஏலாதென்று கடனை உடனைப்பட்டு ஒரு   பழைய கார்  கட்டுக் காசுக்கு வாங்கி   அதை ஊருக்கு காட்டிட  அதற்கு முன் நின்றுபோட்டொ பிடித்து அனுப்புவீனம்.  இதை பார்த்த  பக்கத்து வீட்டுக் காரர்   நீயும் இருக்கிறியேடா என்று தன்  மகனை நச்சரிப்பினம்  வெளி  நாடு போ உழைக்கலாம்  என்று ... ...வந்த பின்தான் தெரியும் வெளி நாடு ... எப்படி  என்று ....  இனி  பரிமளம்  அண்ணி டி வீ  வாங்கி அனுப்ப சொல்ல போகிறா .

கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு.

இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும்.

கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா-பரிமளம் ஜோடி,  இப்போது இணைந்தால் 'குத்தாட்டம்' இப்படிதான் இருக்குமென தோன்றியது..! :)

 

 

Link to comment
Share on other sites

On 5/26/2019 at 7:09 PM, ஈழப்பிரியன் said:

அட இப்படி வேற சங்கதி இருக்குதோ?

சரி எந்தக் காது?வலது காதா?இடது காதா?இரண்டிலுமா?

வந்த புதிதில் விபரம் தெரியாது எந்தக் காதென்றாலும் குத்தினால் சரி.

 

21 hours ago, குமாரசாமி said:

அதை ஏன் பேசுவான்.....விசயம் தெரியாமல் வில்லங்கமான காதிலை குத்தி  பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.🤣

நினைச்சன் 😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் எழுதும் காதலரைக் காணோம்..!

ஒருவேளை பரிமளம் அம்மணி ஜெர்மனி வந்து கு.சாவுடன் ஐக்கியமாகிவிட்டார்களா..?

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

GettyImages-57158954-59917b3f03f40200119eff7c.jpg  

இப்படி இருக்க வேண்டிய 'பரிமளம் அம்மணி'யை பற்றிய தகவல் ஒன்னையும் காணேல்ல..! :innocent:

நல்லா இருந்தால் சந்தோசமே..Mr.கு.சா..!! 🙌

Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

GettyImages-57158954-59917b3f03f40200119eff7c.jpg  

இப்படி இருக்க வேண்டிய 'பரிமளம் அம்மணி'யை பற்றிய தகவல் ஒன்னையும் காணேல்ல..! :innocent:

நல்லா இருந்தால் சந்தோசமே..Mr.கு.சா..!! 🙌

அந்தச் சோகத்தை ஏன் கேட்கிறீர்கள் வன்னியரே!  சாமியார் எல்லாம் துறந்து சன்னியாசியாகப் போகிறாராம், அவர் சன்னியாசியானால் பரிமளாக்காவின் நிலை இப்படித்தான் இருக்கும். வயிறு பிழைக்கவேண்டுமே!! புத்திமதி சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.….  5c95a2c12037d216067c213962a30551.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை! மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/296333
    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.