Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2020 at 1:18 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆகா பரிமளம் குமாரசாமியை கவிஞர் ஆக்கிவிட்டாவே

🤓🤗

குமாரசாமி கள்ளடிச்சால் கவிஞன்.😎

On 1/20/2020 at 2:17 AM, ராசவன்னியன் said:

பரிமளம் அம்மணிக்கு இன்னமுமா கலியாணம் ஆகலை..? vil2_cupidon.gif

பின்னே எப்பிடி இந்த ஐத்தான், பொய்த்தான், பொத்தான் என உருகல் cum மருகல்..?  vil2_envoicoeur.gif

ஒருவேளை பரிமளம் அம்மணி,  கு.சா வுக்கு முறைப்பெண்ணோ? dubitatif.gif

 பரிமளம் பக்கத்துக்கு பக்கத்து வீடு 😂

On 1/20/2020 at 3:40 AM, ஈழப்பிரியன் said:

அப்பாடா ஒரு கடிதத்திலேயே 15 அத்தான்.

அத்தான் செத்தான்.

அத்தான்ரை கெத்து வேறை லெவல் 🏋️‍♂️

19 hours ago, பையன்26 said:

நான் யாழுக்கு வார‌தே தாத்தாவின் எழுத்தை பார்த்து சிரிக்க 😁 , தாத்தா நீ க‌ல‌க்கு 😘

:grin:😀😊

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

குமாரசாமி கள்ளடிச்சால் கவிஞன்.😎

 பரிமளம் பக்கத்துக்கு பக்கத்து வீடு 😂

அத்தான்ரை கெத்து வேறை லெவல் 🏋️‍♂️

 

 

கவிஞர்(?) கு.சா..!

இம்மாதிரி ஏதும் பரிமளம் அம்மணியோடு செய்து போடாதீர்கள்..!  vil-modeste2.gif

யாழ் களம் தாங்காது..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2020 at 9:21 PM, குமாரசாமி said:

துர்க்கை அம்மன் துணை

கரணவாய் சென்ரல்
கரணவாய்
05.08.1983

 

அன்புள்ள ஆசை அத்தானுக்கு,

நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மாளாச்சியை வேண்டுகின்றேன்.
நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் அத்தான்.

ஊர் குறட்டை விடும் சாமத்திலே...
நானுறங்கும் நேரத்திலே...
காத்துப் போல வந்து தொட்டது யார்? 
காதல் தீயை நெஞ்சில் இட்டது யார்?
யார் அது யார் என் அத்தானே?

அது நீங்கள் தான் அத்தான்.
அது நீங்கள் தான் அத்தான்.


நீங்கள் தந்த பட்டுச் சேலை....
கலையாமல் கட்டிபார்த்தேன்....
கலியாண பொம்புளை போல...
கால் விரல் மெட்டிச்சத்தம் ..
காதோரம் உங்கள் மூச்சுச்சத்தம்..

என் அத்தான் அங்கிருந்து தனியே வாட..
இங்கே தென்னந்தோப்பில் தனியே ..
இருந்து நான் பாடும்..
குயில் பாட்டு கேக்குதா அத்தான்..
தூங்காமல் என் மனம் கிடந்து வாடுது அத்தான்..
சொல்ல துணை யாருமில்லை அத்தான்..


சுவரோரம் சாய்ஞ்சிருந்து..
என்னோடை நானே இங்கே...
தனியாக பேசுறேன்.
பாய்கூட முள்ளாப் போச்சு அத்தான்...  
தலையணி கல்லாய்ப்போச்சுது...
தூங்காமல் வாடுறேன்.

அத்தான் உங்கள் பெயரை... 
மணலில் எழுதி கை நோகுது....
கற்பூரமாய் உருகி உருகி...
நாள் போகுது அத்தான்.
தாலி கட்டுவது எப்போது அத்தான்?
மணமேளம் சத்தம் எப்போது அத்தான்?

இப்படிக்கு
உங்கள்
ஆசை
இதய 
பரிமளம்

அண்ணை... பரிமளத்தை, பார்க்க... பாவமாய் இருக்கு. 
சட்டு, புட்டு என்று... ஜேர்மனிக்கு  கூப்பிடுற  அலுவலை,  கெதியாய்.... பாருங்கோ. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமா குமாரசாமியின் வேஸ்ட் & பேஸ்ட்டில்தான் ஒட்டியிருக்க வேண்டும், மாறி இங்கு வந்திட்டுது......பிறகுதான் பார்த்தால் பரிமளம் ஜெர்மனி வந்தபின் (வந்தால்) இவரின் வாழ்க்கையே இப்படி ஜாலியாய் மாறினானும் மாறலாம் என்று விட்டுட்டன்.....!   😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2020 at 5:19 AM, தமிழ் சிறி said:

அண்ணை... பரிமளத்தை, பார்க்க... பாவமாய் இருக்கு. 
சட்டு, புட்டு என்று... ஜேர்மனிக்கு  கூப்பிடுற  அலுவலை,  கெதியாய்.... பாருங்கோ. :grin:

 எனக்கு விசா  சரியில்லை....சிங்கப்பூர் போய்.........:grin:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய்  
15.12.1983

அன்புள்ள தம்பி குரு அறிவது.
நாங்கள் கடவுள் கிருபையாலை சுகமாய் இருக்கிறம்.நீங்களும் சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை கும்புடுறன்.
நான் உங்களுக்கு கடிதம் எழுதுறது ஆச்சரியமாய் இருக்குமெண்டு நினைக்கிறன். மன்னிக்கோணும் தம்பி.நான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டிய கட்டாயத்திலை இருக்கிறன்.

வேறை ஒண்டுமில்லை எல்லாம் மூத்தவள் பரிமளத்தின்ரை விசயமாய்த்தான்.உங்கடை அம்மா ஐயாவோடையும் கதைச்சனான். தாங்கள் உங்களை அவசரப்படுத்த மாட்டம் எண்டு சொல்லீட்டினம்.உங்கடை தங்கச்சிக்கு கலியாணம் முடிஞ்சாப்பிறகு உங்கடை கலியாணத்தை பற்றி யோசிக்கலாம் எண்டு சொல்லீனம்.

எண்டாலும் தம்பி எனக்கு மனம் திக்கெண்டமாதிரி இருக்கு.இரண்டு வயதுக்கு வந்த பொம்புளைப்பிள்ளையளை பாதுகாப்பாய் வைச்சிருக்கிறது பெரிய கரைச்சலாய் இருக்கு. ஒவ்வொருநாளும் மடியிலை நெருப்பை கட்டிக்கொண்டு திரியுறமாதிரி பயமாய் இருக்கு.பரிமளத்தை கேட்டால் இப்ப உங்களை கஸ்டப்படுத்தக்கூடாது எண்டுறாள். ஆனால் எனக்கு அப்பிடி இல்லை தம்பி.பயமாய் இருக்கு.ஆமியள் அடிக்கடி ஊருக்கை வந்து செக் பண்ணுறாங்கள்.சில இடங்களிலை விசாரணைக்கெண்டு கூட்டிக்கொண்டு போறாங்கள் எண்டு கேள்விப்பட்டன்.கனகசபையின்ரை மூண்டு பெட்டையளும் இயக்கத்துக்கு போட்டுதுகளாம்.எனக்கு உதுகளை நினைக்க நித்திரையே வருதில்லை.

வசந்தியை அச்சுவேலி அம்பலவாணரின்ரை பொடியனுக்கு கேட்டு வந்தது.நாங்கள் மூத்தவள் இருக்கிறாள் அதுக்குப்பிறகு பாப்பம் எண்டு சொல்லீட்டம்.வசந்தி தான் வெளிநாடு போகப்போறன் நிக்கிறாள்.அதுவும் நல்லதெண்டுதான் இவரும் சொன்னவர்.அதுக்கு எங்களிட்டை வசதியும் இல்லை.இல்லாட்டில் காணியை வித்தாவது  ஏதாவது செய்வம் எண்டு இருக்கிறம்.


உங்கை ஆரும் நல்ல பொடியள் இருந்தால் விசாரிச்சு பாருங்கோ.உங்களுக்கு கரைச்சல் குடுக்கிறன் எண்டு நினைக்க வேண்டாம்.எங்களுக்கு இப்ப இருக்கிற நிலைமையிலை உங்களை விட்டால் வேறை ஆக்களில்லை.தம்பி நீங்கள் கொஞ்சம் கவனமெடுத்து பரிமளத்தை கூப்பிட பாருங்கோ.முடிஞ்சால் வசந்திக்கும் உங்கை ஆரையும் விசாரிச்சு பாருங்கோ. வேறை விசயமில்லை. மறக்காமல் பதில் கடிதம் போடுங்கோ தம்பி.

இப்படிக்கு
பாக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க சாமிகளே,

ஆடிக்கொரு வாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டி பரிமளத்துக்கு கடிதம் போட்டால் இப்படித்தான். கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்..?

 மரத்துப்போன ஒங்களுக்கு கொமாட்டில் நாலு இடி இடித்தால்தான் உறைக்கும்போல தெரியுது..! :)

மாமி கேட்பது நியாயம்தானே..?  அம்மணியை கூப்பிடுற வழியை பாருங்கோ. 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

---உங்கை ஆரும் நல்ல பொடியள் இருந்தால் விசாரிச்சு பாருங்கோ.உங்களுக்கு கரைச்சல் குடுக்கிறன் எண்டு நினைக்க வேண்டாம்.எங்களுக்கு இப்ப இருக்கிற நிலைமையிலை உங்களை விட்டால் வேறை ஆக்களில்லை.தம்பி நீங்கள் கொஞ்சம் கவனமெடுத்து பரிமளத்தை கூப்பிட பாருங்கோ.முடிஞ்சால் வசந்திக்கும் உங்கை ஆரையும் விசாரிச்சு பாருங்கோ. வேறை விசயமில்லை. மறக்காமல் பதில் கடிதம் போடுங்கோ தம்பி.

இப்படிக்கு
பாக்கியம்

குரு  அண்ணை..... 

பாக்கியம் மாமியிடம்... பியர், கியர் குடிக்காத, 
வெள்ளிக்கிழமை விரதம் இருக்கிற... நல்ல பெடியன் ஒருத்தன், 
ஜேர்மனியிலை இருக்கிறான் எண்டு சொல்லி,

வசந்திக்கு... அவரை செய்ய விருப்பமோ... எண்டு கேளுங்கோவன்.  😛

வசந்தி,  ஓம் எண்டால்... உடனை என்ரை சாதகத்தை அனுப்பி வைக்கிறன்.

நாங்கள்... எண் சாத்திரமும் பாக்கிற படியால், வசந்தியின் பிறந்த திகதி...
என்ரை திகதியுடன்... பொருத்தமாய் இருந்துது எண்டால், 
வாற வைகாசிக்கு, கலியாணத்தை... வைக்கலாம்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் சிங்கப்பூருக்கு போக முதல் வசந்தி ஜெர்மனிக்கு வந்திடுவா போல் இருக்கு......!   😂

Résultat de recherche d'images pour "fun wedding gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நல்ல பெடியன் ஒருத்தன், 
ஜேர்மனியிலை இருக்கிறான் எண்டு சொல்லி,

வசந்திக்கு... அவரை செய்ய விருப்பமோ... எண்டு கேளுங்கோவன்

12 வயசுப் பையனுக்கும் கலியாணம் கேட்குது.

கலி முத்திப் போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குரு  அண்ணை..... 

...

சரிதான்..!

கிராமங்களில் சகலையை 'அண்ணன்' என்றுதான் அழைப்பார்கள்..
தமிழ் சிறி இப்பவே அடித்தளம் போட்டுவிட்டார். vil-rigole.gif

இவர் அண்ணை என்பதும், அவர் தம்பி என்பதும்...ம்ம்.. நடக்கட்டும், நடக்கட்டும்..
சீக்கிரம் 'குடிமகன்கள்' செட்டிலானால் வாழ்த்தலாம்..!  vil-idee.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட யாழின் பிறந்த நாள் முடிந்தாலும் என்ர அண்ணரின் கதை முடியாது 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 5:32 AM, தமிழ் சிறி said:

குரு  அண்ணை..... 

பாக்கியம் மாமியிடம்... பியர், கியர் குடிக்காத, 
வெள்ளிக்கிழமை விரதம் இருக்கிற... நல்ல பெடியன் ஒருத்தன், 
ஜேர்மனியிலை இருக்கிறான் எண்டு சொல்லி,

வசந்திக்கு... அவரை செய்ய விருப்பமோ... எண்டு கேளுங்கோவன்.  😛

வசந்தி,  ஓம் எண்டால்... உடனை என்ரை சாதகத்தை அனுப்பி வைக்கிறன்.

நாங்கள்... எண் சாத்திரமும் பாக்கிற படியால், வசந்தியின் பிறந்த திகதி...
என்ரை திகதியுடன்... பொருத்தமாய் இருந்துது எண்டால், 
வாற வைகாசிக்கு, கலியாணத்தை... வைக்கலாம்.   :grin:

பாக்கியம் மாமி, 
வசந்திக்கு.... சீதனம் குடுத்தால், 
மாப்பிள்ளை வாங்குவாரோ... என்று கேட்டால்.....  :)

ஓம்... எண்டு சொல்லுங்கோ.... :grin:
இல்லையெண்டு மட்டும், சொல்லிப் போடாதேங்கோ அண்ணை. 🤣

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொரணோவால் உங்;கள் தபால் சேவையும் நின்று விட்டதா....நல்ல விசயம் தாத்தா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:

இந்தக் கொரணோவால் உங்கள் தபால் சேவையும் நின்று விட்டதா....நல்ல விசயம் தாத்தா.

old-couple.jpg

அப்படியல்ல,

பரிமளம் அம்மணி, கு.சா. அவர்களோடு ஜெர்மனிக்கு வந்து இணைந்திருக்கலாம், இனி கடிதாசி தேவைப்படாதுதானே..?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 6:30 PM, ராசவன்னியன் said:

old-couple.jpg

அப்படியல்ல,

பரிமளம் அம்மணி, கு.சா. அவர்களோடு ஜெர்மனிக்கு வந்து இணைந்திருக்கலாம், இனி கடிதாசி தேவைப்படாதுதானே..?

அதுதான் நடக்கப்போகுது 😃

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்


சிவமயம். 

 

கரணவாய்
05.10.1983

 

அன்புள்ள அத்தான் அறிவது!
நான் நல்லசுகம் நீங்களும் நல்ல சுகமாயிருக்கு வல்லிபுரத்தானை வேண்டுகின்றேன்.

உங்கடை கடிதம் கிடைத்தது. நீங்கள் சொன்ன மாதிரி கந்தசாமி கோயில்லை அர்ச்சனை செய்து வேழநூல் இதுக்குள்லை வைச்சிருக்கிறன்.வெள்ளிக்கிழமை வெள்ளன எழும்பி குளிச்சு முழுகிட்டு கிழக்கு பக்கம் பாத்துக்கொண்டு குப்பிட்டு இந்த நூலை கையிலை கட்டுங்கோ அத்தான். அண்டைக்கு மச்சம் சாப்பிடாதேங்கோ.விரதமாய் இருங்கோ அத்தான்.

இஞ்சை எல்லாரும் சுகமாய் இருக்கினம். வசந்திதான் கொஞ்சம் குளப்படி. வெளிநாட்டுக்கு போகோணும் எண்டு சண்டை பிடிக்கிறாள். அவளை நினைச்சு அம்மாவுக்கு சரியான கவலை.

அத்தான் உங்களை பற்றி இஞ்சை ஊரிலை பெரிய கதை அடிபடுது. நீங்கள் உங்கை ஆரையோ வெள்ளைக்காரியை வைச்சிருக்கிறியளாம். ஒரு பிள்ளை  இருக்கெண்டு வேறை கதைக்கினம்.

ஆர் இந்த கதையை கட்டி விட்டதெண்டு எனக்கு தெரியாது. ஆனால் ஊர்முழுக்க  வெள்ளைக்காரியை வைச்சிருக்கிறியள் எண்டு கதைக்கினம். எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை. அத்தான் இது சம்பந்தமாய் ஏதாவது பதில் சொல்லுங்கோ.என்னாலை வெளியிலை தலைகாட்டேலாமல் கிடக்கு. 
நான் உங்களை நம்புறன் அத்தான்.

பதில் உடனை போடுங்கோ அத்தான்
இப்படிக்கு

உங்கள் துணைவி
பரிமளம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை.....அது பொய். நம்ப வேண்டாம்......அத்தானுக்கு அவ்வளவு கெத்து எல்லாம் கிடையாது என்று தெரியும்தானே உங்களுக்கு....... வெள்ளைக்காரிதான் அத்தானை வைச்சிருக்கிறா.....!  😎

Pin on (Obsession) Britney Spears

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

இல்லை.....அது பொய். நம்ப வேண்டாம்......அத்தானுக்கு அவ்வளவு கெத்து எல்லாம் கிடையாது என்று தெரியும்தானே உங்களுக்கு....... வெள்ளைக்காரிதான் அத்தானை வைச்சிருக்கிறா.....!  😎

Pin on (Obsession) Britney Spears

அத்தான் நல்லவர். சொக்கத்தங்கம். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.