Jump to content

மாலியில் தாக்குதல்: கர்ப்பிணிகள் உட்பட 134 பேர் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fulani-720x438.jpg

மாலியில் தாக்குதல்: கர்ப்பிணிகள் உட்பட 134 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள கிராம மக்கள் 134 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 55 பேர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கூரிய ஆயுதங்களுடன் புகுந்த தோகோன் பழங்குடியினத்தவர்களே நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலியில் உள்ள மொப்டி பிராந்தியத்தில் உள்ள Ogossagou கிராமத்தில் வாழும் புலானி இன மக்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளும் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.

தோகோன் பழங்குடியினர் அவ்வப்போது புலானி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி ஏராளமானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/ஆபிரிக்க-நாடான-மாலியில்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.