Jump to content

அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்

March 24, 2019
IMG_2343.jpg?resize=800%2C534

எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று  கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து  போய் நின்றேன். மனைவி விறைத்து போய் நின்றாள்  அவளது முகத்தில் கண்ணீர் வடிந்தோடியது. என்றார் குழந்தைவேல் விஜயகுமார்.

கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த ஒரு முன்னாள்  போராளியான குழந்தைவேல் விஜயகுமார் 2009 நவம்பர் மாதம்  ஓமந்தை தடுப்பு முகாமில் இடம்பெற்ற அந்த பத்து நிமிட சந்திப்பை பற்றி குறிப்பிடும் போதே  இவ்வாறு தெரிவித்தார். தனது வாழ்நாளில்  மறக்க முடியாத அந்த சந்திப்பு இன்றும் பசுமரத்து ஆணி போல் மனதில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டு திருமணம் செய்த விஜயகுமாருக்கு 2008.05.18 ஆம் திகதி மகன் தர்சன் பிறந்திருக்கிறார். அப்பா என்ற அந்தஸ்த்து கிடைக்கிறது. இயக்கப் பணி, காரணமாக வீட்டுக்கு வந்து செல்வது அவ்வவ்போதுதான். அப்பா என்ற வாழ்க்கையின் ஒரு படியை கடந்த அவருக்கு மகன் அப்பா என்றழைக்கும் தருணத்திற்காகவும் காத்திருந்திருக்கின்றார்.

மகன் பிறந்த காலப்பகுதி இறுதி யுத்தம் தீவிரமடைந்துக்கொண்டிருந்த காலம். கிளிநொச்சி இடப்பெயர்வு, அதன் பின்னர் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால்வரை இடம்பெயர்ந்த வாழ்க்கை இதனால் தான் மகனோடு செலவழித்த காலங்கள் மிகவும் குறைவு இதனால் தனது முகம் மகனுக்கு நெருக்கமில்லாது போய்விட்டது. மகனின் முதலாவது பிறந்த நாளான 2009.05.18 அன்று  வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரால் பேரூந்தில் ஏற்றப்படுகின்றோம். 18 ஆம் திகதி பேரூந்தில் ஏறிய நாம் 20 ஆம் திகதி ஓமந்தையை வந்தடைந்தோம். அந்த  இரண்டு நாட்கள்தான் எனது மகனோடு நானிருந்த அதிக நேரம். அதற்கு முன் ஒரு நாளும் அவ்வாறு இருந்ததில்லை. ஆனால் அந்த இரண்டு நாட்களும் மகிழ்ச்சியாய் இருந்ததில்லை.

ஓமந்தையில் நான் இராணுவத்திடம் சரணடைந்தேன்  மனைவி மகனுடன் தனியாக எவரது உதவியுமின்றி  செட்டிக்குளம் முகாமுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றார்.பின்னர்தான் தெரியும் அவர் மெனிக்பாம் ஆனந்தகுமாரசாமி முகாமில் கொண்டு சென்று விடப்பட்டார் என்று. இதன் பின்னர் ஆறு மாதங்களாக எங்களுக்குள் எந்த தொடர்புமில்லை.  மனைவிக்கு தெரியாது நான் எங்கிருக்கிறேன் என்று. எனக்கு தெரியாது மனைவி எங்கு எப்படி இருக்கின்றார் என்று. பின்னர் முகாமிலிருந்து திருகோணமலையில் உள்ள உறவினர்களிடம் மனைவியும் மகனும் சென்றுவிட்டனர். ஆறு மாதங்களின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமே மனைவி நான் ஓமந்தையில் இருப்பதை அறிந்துகொண்டார். அங்கிருந்தே 2009 நவம்பர் மாதம் ஓமந்தை தடுப்பு முகாமுக்கு என்னை சந்திப்பதற்கு வந்திருந்தனர். அந்த 10 நிமிட சந்திப்பே என் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பு.

எனது மகனின் வாயால் அவனது மழலை மொழியில் அப்பா என அழைப்பான் என ஆவலோடு இருந்த போது மாமா என்றான் அத்தருணம் என் உணர்வுகள் ஒரு அப்பாவாக மரணித்தன. மகனின் மூன்று வயது வரை அவனருகில் நான் இருந்து பழகி விளையாடியது கிடையாது. அவன் பிறந்து ஒரு வயது வரை இயக்கப் பணிகள் நிமித்தம்  நேரம் கிடைப்பதில்லை பின்னர் மூன்று வயது வரை தடுப்பு வாழ்க்கை இந்தக் காலப்பகுதியில் மனைவின் சகோதரர்களுடன் நெருக்கமாக பழகியவன்  அதனால் அவன் பார்க்கின்ற ஆண்கள் அனைவரும் மாமாவாக இருந்தனர்.  அப்பா என்ற உறவு அவனுக்கு தெரியாது. மூன்று வயதில் கூட புகைப்படத்தை காட்டி இதுதான் அப்பா என்று சொல்வதற்கு கூட மனைவியிடம் எனது புகைப்படமும் இல்லை. யுத்தம் எல்லாவற்றையும் பறித்து விட்டது.  ஒரு தடைவ நெளுக்குளம் தடுப்பு முகாமுக்கு மனைவியும் மகனும் சந்திப்பதற்கு வந்திருந்தனர். அப்போது மகனை நோக்கி தம்பி இங்க வாங்கோ என்றேன். அவன் தாயிடம் அம்மா மாமா கூப்பிடுறார் என்றான்.  அருகில் இருந்த முன்னாள்  சக போராளிகள் என்னை ஒரு மாதிரி என்னடா இது? என்ற வகையில் நேர்க்கினார்கள்.  பின்னர் அவர்களுக்கு நிலைமையை விளங்கப்படுத்தினேன்.

என்னை மாமா என்று அழைக்கும் போதெல்லாம் மனைவியின் கண்களில் கண்ணீர் வரும். நாம் யாரை நோவது. யுத்தம் இவற்றையே எமக்கு பரிசளித்துவிட்டு சென்றுள்ளது என்று எண்ணிக்கொண்டு வாழத்தொடங்கினோம். அவனது மூன்று வயது வரை தனது மாமாக்களுடன்தான் அதிகம் வாழ்ந்தான். அப்பா என்று கூப்பிடுவதற்கான வாய்ப்பு மகனுக்கு கிடைக்கவில்லை. அயல் வீட்டுக்காரரையும், பிற ஆண்களையும் மாமா என்றழைத்தவனுக்கு நானும் மாமாவாகே தெரிந்தேன். உண்மையில் மிகவும் வேதனையான விடயம். அதுவும் தடுப்பு முகாம்களில் சில வேளைகளில் தனிமையில் இருந்து யோசிக்கின்றபோது வாழ்க்கையே வெறுக்கும் எனத் தெரிவித்த விஜயன்

2009 தொடக்கம் 2011 வரை ஓமந்தை,  வெலிகந்த, நெளுக்குளம், பூந்தோட்டம் என நான்கு தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வுப்பெற்று குடும்பத்துடன் இணைந்தேன். மீள்குடியேற்றப்பட்டு கிளிநொச்சி உதயநகருக்கு வந்தோம் அப்போதும் என்னை மாமா என்றே அழைப்பான் தாய் அடிக்கடி அப்பா என்று எடு;த்துக் கூறிய போதும் அவன் அதற்கு உடனடியாக பழக்கப்படவில்லை அப்போது எனக்கும் மாமா என்ற வார்த்தை அப்பா என்பதாகவே ஒலிக்கும் பழகிவிட்டது. ஆரம்பத்தில் மாமா என்று சொல் செவிகளுக்குள் செல்லும் போது காதுக்குள் ஆணி  வைத்து அறைவது போலிருக்கும்.  வீட்டில் தாய் இல்லாத நேரம் என்னுடன் தனிமையில் இருக்கமாட்டான் என்னுடன் நெருக்கமாக பழகமாட்டான். ஒரு அப்பாக மகனுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அது என் வாழ்க்கையில் இடம்பெறவில்லை. மழலை மொழியில் பேசி விளையாடி கடைக்கும் கடற்கரைக்கும் சென்று மகனுடன் மகிழ்ச்சியாய்  பொழுதை போக்கி செல்லமாக அவனுடன் சண்டையிட்டு இப்படி ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் இருந்தேன்   ஆனால் எல்லாம்  பகல் கனவாகிவிட்டது. எனது மகனின் மழலை பருவத்தில் அவனுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அது எதுவும் நடக்கவில்லை

என்னிடம்  அதை வாங்கி தா இதை வாங்கித்தா என்று கேட்க வேண்டிய வயதில் என் மகன் அவன் என்னிடம் அப்படி ஒரு நாளும் கேட்டது கிடையாது அவற்றையெல்லாம் தனது மாமாக்களிடம் கேட்பான்.  அவன் வளர்ந்த சூழலின் விளைவாக இருந்தது. வீட்டில் நானும் மனைவியும் தாயும் இருந்த காலத்தில் என்னுடன் கொஞ்சம் கொஞ்சம்  நெருங்க ஆரம்பித்தான். முன்பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த போது நான் அவனை ஏற்றி இறக்குவது வழக்கம் அப்போதே என்னிடம் நெருக்கமாக வந்தான் என்னை அப்பா என்று அழைப்பதற்கு அவனுக்கு நான்கு வருடகங்கள் சென்றது. இப்போது எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு  மகன் ஒரு மகள். மகன் என்னுடன் மிகவும் நெருக்கமாக  உள்ளான் இரவிலும் நான்  இல்லாது உறங்கமாட்டான்.

தற்போது நிரந்தர தொழில் இல்லை பிரத்தியோகமாக மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பிக்கின்றேன். உயர்தர மாணவர்களுக்கு இராசயனவியலும் படிப்பிக்கின்றேன். போதுமான வருமானம் இல்லாத போதும்  மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. என்னை பொறுத்தவரை எனக்கு ஏற்பட்ட நிலமை எந்த அப்பாக்களும் ஏற்படக் கூடாது. அந்த வலிமிகவும் கொடியது. என்றர் விஜயகுமார்.

 IMG_2345.jpg?resize=800%2C534
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பெற்றோருக்கும் இப்படி ஒரு நிலை வரக் கூடாது 😟

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.