Jump to content

அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த

கே. சஞ்சயன் / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:02 Comments - 0

image_12025998c3.jpgமேற்குலகத்துக்கு எதிரான, குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் திடீரென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்திக்கச் சென்றிருந்தார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸையும் மஹிந்த ராஜபக்‌ஷவையும் அமெரிக்கத் தூதுவரிடம் அழைத்துச் சென்றவர் பசில் ராஜபக்‌ஷ.  

மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அவரை அமெரிக்கத் தூதுவரிடம் இன்னொருவர் அழைத்துச் செல்லும் அளவுக்கு, இருதரப்பு உறவுகள் எட்டத்தில் இருந்தன. பசில் ராஜபக்‌ஷ, அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருப்பவர் என்ற வகையில், இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டாளராகக் கலந்து கொண்டிருக்கலாம்.  

மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டுத் தூதுவர்கள் அவரைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை குறிப்பாக, மேற்குலக நாடுகள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.  

பொதுவாகவே, நாட்டின் அரச தலைவர்களுக்கு அடுத்ததாக, எதிர்க்கட்சித் தலைவரை, வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திப்பது வழக்கம். எனினும், அண்மையில் கொழும்பு வந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் மரியன் ஹகென், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்திக்கவில்லை. இதுகுறித்து, கெஹெலிய ரம்புக்வெல அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.   

பிரதமர், சில அமைச்சர்களுடனான சந்திப்புகள், வடக்குக்கான பயணம் போன்ற இறுக்கமான நிகழ்ச்சி நிரலால்தான், மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்திக்க முடியவில்லை என்று, நோர்வேத் தூதரகம் கூறியிருந்தது.  

ஆனால், நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலாளரின் பயணம் தொடர்பாக, நோர்வே தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்தமை பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, மஹிந்த ராஜபக்‌ஷ கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிந்தது. அதற்குப் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவை நோர்வே தூதுவர், சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். ஆனாலும், மஹிந்த ராஜபக்‌ஷவை, மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், பெரிதாகக் கண்டுகொள்ளும் நிலை இல்லை.  

ஒக்ரோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்பால், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மேற்குலகத்துக்கும் இடையிலான விரிசல் தீவிரமடைந்தது. மேற்குலக நாடுகள், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அங்கிகரிக்க மறுத்ததுடன், அரசமைப்புச் சட்டத்துக்கு அமையச் செயற்படுமாறும் அழுத்தங்களைக் கொடுத்தன. அதனால் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கூட, உயர்நீதிமன்றத்தைத் தட்டிக்கழித்து விட்டு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாமல் போனது.  

அதைவிட, 2015 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், அமெரிக்கா, இந்தியா போன்ற தரப்புகளுடன் முட்டி மோதிக் கொண்டிருந்த ராஜபக்‌ஷவினர், பின்னர் ஒரு கட்டத்தில், “நாங்கள் கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு விட்டோம். இனிமேல் முன்னரைப் போன்ற தவறுகளை, நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறிவந்தனர்.  

ஆனால், ஒக்ரோபர் 26, ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், நடந்த அத்தனை சம்பவங்களுமே, 2005 ஜனவரி எட்டாம் திகதிக்கு முன்னர், எப்படி ராஜபக்‌ஷ தரப்பு இருந்ததோ, அதேவிதமாகவே இருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. இது மேற்குலகத்துக்கும் ராஜபக்‌ஷவினருக்கும் இடையில் விரிசல் இன்னும் தீவிரமடையக் காரணமாகியது.  

இந்த விரிசலைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில், ராஜபக்‌ஷ தரப்பு இப்போது இருக்கிறது. சர்வதேச சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் தொடர்ச்சியாகத் தாம், வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் பசில் ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.

எதிர்வரும், டிசெம்பர் மாதத்துக்குள் நடக்கப் போகின்ற ஜனாதிபதி தேர்தலில், சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் அவர்களின் நோக்கம். சர்வதேச ஆதரவு இல்லாமல், சர்வதேச சமூகத்தைப் பகைத்துக் கொண்டு, ஆட்சி செய்யவும் முடியாது;  அதிகாரத்தைக் கைப்பற்றவும் முடியாது என்பதை, ராஜபக்‌ஷவினர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனாலும், அதற்கும் அப்பால், வேறொரு காரணமும் இந்தச் சந்திப்பின் பின்னணியில் இருந்திருக்கலாம்.   

கோட்டாபயவையே  அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ராஜபக்‌ஷ குடும்பம் முடிவு செய்திருக்கிறது. கோட்டாபயவும், அதற்கான முன்னேற்பாடாக, அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடும் முடிவுக்கு வந்திருக்கிறார். கடந்த மார்ச் 6ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குச் சென்ற, கோட்டாபய, அமெரிக்கக் குடியுரிமையை விலகிக் கொள்ளக் கோரும் ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறார். கோட்டாபய, அந்த ஆவணங்களைக் கொடுத்த பின்னர்தான், மஹிந்தவை அழைத்துக் கொண்டுபோய், அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்திருக்கிறார் பசில் ராஜபக்‌ஷ.  

அமெரிக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்காகவோ, கோட்டாபயவின் குடியுரிமைத் துறப்புக்கான கோரிக்கையை விரைவுபடுத்துமாறு கோருவதற்காகவோ, இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம்.  

எவ்வாறாயினும், மஹிந்தவைப்  பொறுத்தவரையில், அமெரிக்காவையோ, இந்தியாவையோ பகைத்துக் கொண்டு எதையும் செய்துவிட முடியாது என்பது வெளிப்படை. இரண்டு நாடுகளுமே உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்த இரண்டு நாடுகளையும் இப்போது சமாளித்துக் கொண்டு செல்ல முற்படுகிறார் மஹிந்த.  இந்தியாவோ, அமெரிக்காவோ விரும்புகின்றனவா, இல்லையா என்பதை விட, இரண்டு நாடுகளுடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் மஹிந்த ஆர்வம் காட்டுகிறார்.  

பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினை மோசமடைந்த போது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்தவையும் தேடிச் சென்று, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்தார். உடனடியாகவே, அந்தச் சந்திப்பு பற்றிய தகவல்களை, மஹிந்த ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார். 

ஆனால், அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்த விடயத்தையோ, அதுபற்றிய படங்களையோ இன்றுவரை அவர் பகிரங்கப்படுத்தவில்லை.   இரகசியப் பேச்சுகள் குறித்து, இரகசியம் பாதுகாக்கப்படுவதே இராஜதந்திர மரபு.   

அந்த மரபை, மஹிந்த ராஜபக்‌ஷ மீறினால் அமெரிக்கத் தூதுவரும் மீறுவார்; உண்மைகளை வெளிப்படுத்துவார். அதனால்தான், சந்திப்பு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தாமல் தவிர்த்துக் கொண்டார்.

கோட்டாபய, ‌ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, அமெரிக்கா எந்தத் தடையையும் விதித்து விடக்கூடாது என்பதே, மஹிந்தவின் இப்போதைய எதிர்ப்பார்ப்பு. அதற்காக, மஹிந்த, ‌அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுவதாக, வாக்குறுதிகளை அளித்திருக்கலாம்.  

ஏனென்றால், மஹிந்த ராஜபக்‌ஷவின் குடுமி, இப்போது அமெரிக்காவிடம் தான் உள்ளது. கோட்டாபய ராஜபக்‌ஷவின் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமெரிக்கா அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் நிறைவு செய்யாமல் இழுத்தடித்தாலே, அது மஹிந்தவுக்குப் பெரும் சோதனையாக அமையும்.  

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குத் தடையை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டுமாயின், அமெரிக்காவை பகைத்துக் கொள்ளக் கூடாது. ஆட்சிக்கு வந்ததும், உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கக் கூடும்.  

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், ராஜபக்‌ஷவினர் மீண்டும் பதவிக்கு வருவதைச் சாதகமான விடயமாகப் பார்க்கவில்லை. ராஜபக்‌ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 2015இற்குப் பின்னர், அமெரிக்காவுக்குச் சாதகமாக ஏற்பட்ட மாற்றங்கள், மீண்டும் பழைய நிலைக்குச் சென்று விடும் என்ற அச்சம், அமெரிக்க ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கிறது.  அவ்வாறான நிலை ஏற்பட்டால், இந்தியப் பெருங்கடலில், சீனா மேலும், காலூன்றுவதற்கு வழிவகுக்கும். அமெரிக்காவின் திறந்த, வெளிப்படையான இந்தோ-பசுபிக் மூலோபாயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஜெப் ஸ்மித் எச்சரித்திருக்கிறார்.  

ராஜபக்‌ஷவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் கணிசமான செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்களுடனும் வரையறைக்குட்பட்ட உறவுகளைத் பேண வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.  

அதாவது, ராஜபக்‌ஷவினர் மீண்டும் பதவிக்கு வருவதை, ஆபத்தானதாக அடையாளப்படுத்தும் அமெரிக்க ஆய்வாளர்கள் கூட, அவர்கள் மீண்டும் பதவிக்கு வந்தால், அவர்களுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்கள். இப்படியானதொரு நிலையில் தான், அமெரிக்கத் தூதுவரைத் தேடிச் சென்றிருக்கிறார் மஹிந்த ராஜபக்‌ஷ.  

மஹிந்த ராஜபக்‌ஷவின் சீனச் சார்பு நிலை தான், அமெரிக்காவுக்குப் பிரச்சினையே தவிர, அவர் மீதுள்ள, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், அமெரிக்காவுக்கு பொருட்டான விடயங்களே அல்ல.  

அமெரிக்காவின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியவராக மஹிந்த ராஜபக்‌ஷ மாறினால், அந்த வாய்ப்பை, அமெரிக்கா பற்றிக் கொள்ளத் தயங்கும் என்று, எதிர்பார்க்க முடியாது. மஹிந்த ராஜபக்‌ஷவே வலிய வந்து, இணக்கப்பாட்டுக்குத் தயாராகும்போது, அமெரிக்காவுக்கு, அவர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எல்லாமே மறந்து போய் விடும்.  

அமெரிக்காவுக்கும் ராஜபக்‌ஷவினர் தேவை, ராஜபக்‌ஷவினருக்கும் அமெரிக்காவின் தயவு தேவை என்றதொரு சூழல், இப்போது மெதுவாக முளைவிடத் தொடங்கியிருக்கிறது. இது ஐ.தே.கவுக்கு மாத்திரமன்றி, போர்க்குற்றங்களுக்கு நீதியைத் தேடிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் கூட, ஆபத்தான அறிகுறிதான்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமெரிக்காவுடன்-நெருங்கும்-மஹிந்த/91-231230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா சொல்லுறாங்கப்பூ கதை.

எத்தனுக்கு எத்தன்.... அமெரிக்கன்....

அப்படியானால், அக்டோபர் 26ல் வெண்டிருப்பார்களே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.