Jump to content

திகில் காட்சிகளை நோக்கி நகரும் தமிழகத் தேர்தல் களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திகில் காட்சிகளை நோக்கி நகரும் தமிழகத் தேர்தல் களம்

எம். காசிநாதன் / 2019 மார்ச் 25 திங்கட்கிழமை, மு.ப. 05:28 Comments - 0

image_ea53c75b2c.jpg

 

இனித் தேர்தல் வாக்குறுதிகள்  காலம். 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அ.தி.மு.கவும் தி.மு.கவும் தங்கள் கட்சிகளின் சார்பில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.   

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், 38 தேர்தல் வாக்குறுதிகளும் தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100 வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.   

இரண்டிலுமே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. போரின் போது, இடம்பெற்ற குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு கட்சிகளுக்கும் தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை விவகாரத்தில், திராவிடக் கட்சிகளிடத்தில் இருந்து, வேறுபட்ட நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தும், இப்படியொரு தேர்தல் வாக்குறுதி இடம்பெற்றுள்ளது.   

‘தேசிய அளவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு, மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்க, மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம்’ என்பது மட்டுமே, அ.தி.மு.கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய வாக்குறுதியாகக் காணப்படுகின்றது.  

ஆனால், தி.மு.கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ‘மகளீருக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாக் கடன்’, ‘50 இலட்சம் மகளீருக்கு வேலை’ போன்றவை முக்கியமான வாக்குறுதிகளாக உள்ளன.  

‘கச்சதீவை மீட்போம்’ என்பது, இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் இடம்பெற்றுள்ளது. அதனால்தானோ என்னவோ, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “நான் சிறுவயதாக இருந்த காலத்திலிருந்து கொடுத்த வாக்குறுதிகளைத் திரும்பவும் கொடுத்திருக்கிறார்” என்று நக்கலடித்திருக்கிறார்.  

இரண்டு திராவிடக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களிலும் ‘வாரிசுகளுக்கு’ப் பஞ்சமில்லை. தி.மு.கவில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆர்க்காடு வீராச்சாமி ஆகியோரின் மகன்களுக்கு தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.   

அ.தி.மு.கவில் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிடோட்டோரின் மகன்களுக்கும் தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.   

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால்,  பணம் செலவழிப்பது என்ற அளவுகோலின் அடிப்படையில், வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும் அவல நிலைமை, இரு கட்சிகளிலும் ஏற்பட்டிருக்கிறது.   

வாக்காளர்கள் பணம் வாங்கிக் கொண்டுதானே, தங்களின் வாக்குகளைச் செலுத்துகிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாக, இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களும் அமைந்து விட்டன.   

தி.மு.க தலைவராக கலைஞர் கருணாநிதி, அ.தி.மு.க பொது செயலாளராக ஜெயலலிதா ஆகியோர் இருந்த காலத்தில், மக்கள் செல்வாக்குப் பெற்ற, எதிர்பார்க்கப்படாத புதுமுக வேட்பாளர்கள் இருப்பார்கள். அப்படி வேட்பாளர்களைத் தெரிவு செய்ய, இரு கட்சித் தலைவர்களுமே இன்றைக்குத் தயாராக இல்லை. ஆகவே, பொதுமக்கள் நன்மதிப்புப் பெற்ற வேட்பாளர்கள் என்ற எண்ணவோட்டம், இப்போது காணப்படவில்லை. ‘பணம் கொடுத்தால் வாக்கு போடப் போகிறார்கள்’ என்ற ஒரே கண்ணோட்டம் மட்டுமே தெரிகிறது.   

தேர்தல் ஆணைக்குழுவால், எத்தனை கண்காணிப்பாளர்களை நியமித்தாலும், அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, பணத்தை விநியோகிக்கும் வல்லமை படைத்த கட்சிகளாக, இந்த இரு கட்சிகள் மட்டுமின்றி இக்கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளும் இருப்பதால், தேர்தலின் புனிதத் தன்மை, படுபாதாளத்துக்குப் பின்னோக்கிச் சென்றுள்ளது.  

இப்போது இரு கட்சித் தலைவர்களுமே, தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்பட்டு விட்டார்கள். அ.தி.மு.கவின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில், முதல் பிரசாரக் கூட்டத்தை தொடங்கினார். அங்கு பேசிய அவர், “தி.மு.க கூட்டணி ஒரு சுயநலக்கூட்டணி. இந்திய நாட்டைப் பாதுகாக்க, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். ராகுல் காந்தி, பிரதமர் என்றும், இல்லை, எதிர்க்கட்சிகள் கூறும் ஒருவரே பிரதமர் என்றும் ஸ்டாலின் மாற்றி மாற்றிப் பேசுகிறார்” என்று கூறி, “தி.மு.க நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறும் பச்சோந்தி போன்றது” என்று, கடுமையாகத் தாக்கிப் பேசினார்.   

அதேநேரத்தில், தனது முதலாவது பிரசாரத்தை, கலைஞர் கருணாநிதியின் பிறந்த மாவட்டமான திருவாரூரில் தொடங்கிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் நரேந்திர மோடி, ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்றும் விமர்சித்து, எடப்பாடி மற்றும் மோடி ஆகிய இருவர் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளார். “தவழ்ந்து வந்து, முதலமைச்சராகி கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் எடப்பாடி, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த, வெளிநாட்டு வாழ் பிரதமர், மோடி” என்றும், கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.   

ஆகவே, இதுவரை இருவரின் பிரசாரத்தை உற்று நோக்கினால், முதலமைச்சர் பழனிசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கவில்லை; ஸ்டாலினை மட்டும் விமர்சிக்கிறார். 

ஆனால், ஸ்டாலினோ, பிரதமர் மோடியையும் பழனிசாமியையும் விமர்சிக்கிறார். ஸ்டாலினுடையது இருமுனைத் தாக்குதல் என்றால், எடப்பாடியினுடையது ஒரு முனைத் தாக்குதலாகச் சென்று கொண்டிருக்கிறது.  

இதற்குக் காரணம், இல்லாமல் இல்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. ஏற்கெனவே, 113 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள எடப்பாடி, இந்த 18 தொகுதிகளில், சரி பாதி தொகுதிகளை வெற்றி பெற்றேயாக வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது, அவருக்குத் தெரியும்.   

அப்படியே வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு விட்டாலும், ராகுல் காந்தியை விமர்சித்து, வம்பை விலைக்க வாங்க வேண்டாம் என்று நினைக்கிறார். ஏற்கெனவே 97 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இருக்கும் தி.மு.க- காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஆட்சி, மத்தியில் தேர்தலுக்குப் பிறகு அமைந்தாலும் தன் ஆட்சிக்கு ஆபத்து உருவாகி விடும் என்று கருதுகிறார் எடப்பாடி. இவற்றை மனதில் வைத்தே, ஸ்டாலினை மட்டும் விமர்சிக்கும் முதலமைச்சர் எடப்பாடி, ராகுல் காந்தியை விமர்சிக்காமல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.   

ஆனால், ஸ்டாலினைப் பொறுத்தமட்டில், இப்போது நடைபெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதை உணருகிறார். அவர் தலைமையில், ‘மினி தேர்தல்’ போல் சந்திக்கும் சட்டமன்றத் தேர்தல் இது.

இந்த 18 தொகுதிகளில் அவர் பெறப் போகும் வெற்றியை வைத்தே, அடுத்த சட்டமன்ற தேர்தலில் அவர் கூட்டணி அமைக்க முடியும். இது ஒரு புறமிருக்க, 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டால், 115 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தி.மு.கவுக்குக் கிடைத்து விடும். அது, இப்போது இருக்கும் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு விடை கொடுக்கச் சரியாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறார்.   

அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கத்துக்கு, மோடி அளித்த ஆதரவுக்கு, அவர் மீது கோபத்தைக் காட்டும் ஸ்டாலின், இப்படியோர் இரு முனைத் தாக்குதலில் தீவிரமாக இருக்கிறார்.   

ஆகவே, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தல் இப்போது நடைபெறும் தேர்தலில் ஒரு சிறப்பம்சம். மற்ற மாநிலங்களில் இவ்வளவு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கவில்லை.  

நாடாளுமன்றத் தொகுதிகள் 39இல் வெற்றி பெற்று, ஸ்டாலின் அல்லது எடப்பாடி ஆகிய இருவரில் ஒருவர் கைகாட்டும் ஆட்சி, மத்தியில் அமையப் போகிறது என்பதன் முக்கியத்துவத்தை விட, 18 சட்டமன்றத் தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி, எடப்பாடியின் இரு வருட ஆட்சியைத் தக்க வைக்குமா அல்லது எட்டு வருடமாக ஆட்சி அதிகாரத்தைச் சுவைக்காத, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலினுக்கு ஆட்சி அமைக்கும் ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுக்குமா? என்ற திகில் நிறைந்த காட்சிகளை நோக்கி, தமிழகத் தேர்தல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திகில்-காட்சிகளை-நோக்கி-நகரும்-தமிழகத்-தேர்தல்-களம்/91-231244

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.