Jump to content

கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதனை சில நாட்களின் முன்னர் அரிச்சுவடியில் பதிவிட்டிருந்தேன் , ஈழப்பிரியன் அறிவுறுத்தியிருந்தார் சரியான பகுதியில் இணைத்துவிடும் படி 

அன்பர் ஈழப்பிரியனின் குறிப்பிடுதலுக்கு அமைய அரிச்சுவடியில்   இட்ட பதிவை இங்கே வாழும் புலத்தில்மீள் பதிவிடுகிறேன்  

 

கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..

 

எனது  தாயார்   இந்த  பாடலை  அடிக்கடி   சொல்வார்  கோரைக்  கிழங்கு  புடுங்க  கேட்க   கோவிச்சுக்  கொண்டாராம்  பண்டாரம்  , அவிச்சுக்  குவிச்சு  முன்னால   வைக்க  சிரிச்சுக்  கொண்டாராம்  பண்டாரம்  என்று  .

வேறொன்றுமில்லை  , இன்று  காலை  வெந்நீர்க்   குளியலின்  நடுவே  தெறித்து  விழுந்த  எண்ணப்  பாடொன்று  , பகிர்ந்து  கொள்ளலாம்  என  தோன்றிற்று 

யாழ்  திண்ணையில்   கருத்தாடுவது  மனதுக்கு  இதமான  ஒரு  விடயமாக  இருக்கிறது.   

திண்ணை  வாசிகள்  ஒவ்வொருவரின்  தனித்  தன்மையையும்    வெகுவாக  இரசிக்கக்  கூடியதாக  இருக்கின்றது.  உண்மையில்  எல்லோரையும்  கடந்த  2012 இலிருந்து  ரசித்துக்  கொண்டு  வருகிறேன்.   மிக   அண்மைக் காலங்களில்  இருந்து  தான்  குந்தியிருந்து  நாலு  கதை  பேச   வாய்த்திருக்கின்றது.

முகமறியாமல்  உரையாடுவது      என்பது  உரையாடல்களில்     சாதாரணமாக  இருக்கக்கூடிய  பல  தடைகளை  இல்லாமல்  செய்து  ஒவ்வொருவரும்  தத்தமக்கே   உண்மையாக  இருக்கக்  கூடியதாக  இருக்கின்றது. யாழ்  திண்ணையின்   பலன்களில்  இது  முக்கியமானதொன்றாக  அமைகின்றது   என  நினைக்கின்றேன்.

சமூக  கடப்பாடுகள்  பற்றியும்  ஒரு  தனிப்  பகுதி  இருக்கின்றது.   பலர்  பதிவுகள்  இட்டும்,   தனிப்பட்ட  முறையில்  பங்களிப்புகளை  வெளிப்படையாகவும்   மற்றவர்கள்  அறியாமலும்  செய்து  கொண்டிருக்கின்றனர்  அநேகமாக  எங்கள்  எல்லோருமே  ஏதோ  ஒரு  வகையில்  இப்படியான  முயற்சிகளில்  ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்  என  நான்  நம்புகிறேன்.

யாழ்  கூட்டுக்குடும்பமாகவும்   நாங்கள்  இந்த  முயற்சிகளை   முன்னெடுத்தால்  என்ன …..

ஏறக்குறைய 100 அங்கத்தினர்  இருக்கின்றனர்  என  எடுத்துக்  கொண்டால்  (உண்மையில்  எவ்வளவு  என  எனக்குத்  தெரியாது  ஆனால்  இதற்கு  குறையாமல்  இருக்கும்  என  நம்புகிறேன்) , ஒவ்வொருவரும்  ஒரு  கிழமைக்கு  10 வெள்ளி  வீதம்  யாழ்  சல்லி  முட்டியில்  சேமித்தால்  ஒரு  வருடத்தில்  இது   ஏறக்குறைய  52,000 வெள்ளிகளாக  மாறுகின்றது.

உறுப்பினர்கள்  எவராவது   ஒரு  வருடத்தின்  பின்னர்( அல்லது 6  மாதங்களின் பின் )    செயல்  திட்டங்களை  முன்  மொழியலாம்  – உரிய   விபரங்கள் , தரவுகள்  , நன்மைக்கூற்றுகள்  etc ..etc

யாழ்    திண்ணை  வாசிகள்  இதனை  திண்ணையில்  வைத்து  ஆராய்ந்து    ,  ஒரு  வாக்கெடுப்பு  மூலம்  குறிப்பிட்ட  செயல்திட்டத்தை  முன்னெடுப்பதா  இல்லையா  என  தீர்மானிக்கலாம் .

முன்னெடுப்பது  என்று  தீர்மானிக்கும்  பட்சத்தில்  , திண்ணை  வாசிகள்  அந்த  செயல்  திட்டத்தை  செயற்படுத்துவதற்கு   பொறுப்பாக  3 திண்ணை  வாசிகளை தெரிவு  செய்யலாம்  , (விரும்பும்  திண்ணை  வாசிகள்  தங்களின்  ஒத்திசைவை  தெரிவித்ததின்  மேல் ) அம்மூவருமே  இதற்கு  முழுமையான  பொறுப்பாக  இருப்பார்கள்.

இதனை  செயற்படுத்தும்  ஒரு  பொதுக்கணக்கிற்கு  திண்ணைவாசிகள்  தங்கள் தங்கள்  சல்லி  முட்டியை  திறந்து  உரிய  பங்களிப்பை  செய்து  விட  வேண்டும்  ( ஒரு   சிறிய  செயற்திட்டம்  10,000 வெள்ளி  எனில்  திண்ணை  வாசிகள்  ஒவ்வொருவரும்  100 வெள்ளியை  செலுத்தி  விட்டு  தொடர்ந்து  திண்ணைக்   கருத்தாடல்களில்  ஈடுபடலாம்  பொறுப்பான  மூவரிடமும்  எந்த  கேள்விகளையாவது  கேட்பதை  தவிர்த்துக்  கொண்டு )  . எல்லோரும்  பங்களித்து,   தேவையான  முழுத்  தொகையும்  கணக்கில்  சேர்த்த  பின்னரே  அம்மூவரும்   செயற்திட்டத்தை  நடைமுறைப்  படுத்துதலில்  ஈடுபடுவர்.  அந்த  மூவரும்  செயற்திட்டம்  பற்றி  திண்ணையில்  ஒழுங்கான  அடிப்படையில்  தகவல்கள்  வழங்கிக்  கொண்டிருக்க  வேண்டும்.

முதலாவது  செயற்றிட்டம்  எவ்வாறு  முன்னேறுகிறது    என்பதைப்  பொறுத்து  , இரண்டாவது  , மூன்றாவது  என  திட்டங்களை  தொடரலாம்.   

ஒவ்வொரு  புதுத்  திட்டத்திற்கும்  முன்பே  பொறுப்பாக  இருந்த  உறுப்பினர்களைத்  தவிர்த்து  ஏனையவர்கள்  தெரிவு  செய்யப்  படலாம்.   

என்ன,  கோரைக்  கிழங்கு  புடுங்கிப்  பார்ப்போமா …….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

இதனை சில நாட்களின் முன்னர் அரிச்சுவடியில் பதிவிட்டிருந்தேன் , ஈழப்பிரியன் அறிவுறுத்தியிருந்தார் சரியான பகுதியில் இணைத்துவிடும் படி 

 அன்பர் ஈழப்பிரியனின் குறிப்பிடுதலுக்கு அமைய அரிச்சுவடியில்   இட்ட பதிவை இங்கே வாழும் புலத்தில்மீள் பதிவிடுகிறேன்  

 

இப்ப தான் நீங்க சாமானியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் உறவுகள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டில் குழுக்களாக அல்லது வீட்டில் மாதம் 5 படி வருடம் 60 (இத்தொகை விரும்பினால் அதிகப்படுத்தலாம்) சேர்த்து பெரும் நிதியங்களை உருவாக்கினால் அதன் மூலம் நிறைய உதவிகள் செய்யலாம்.
ஏனெனில் வறுமையில் இருக்கும் மக்களுக்கு தீடீரென ஏற்படும் மருத்துவ செலவுகளிற்கு செலவளிக்க பணம் இருக்காது, அத்தகைய சந்தர்ப்பங்களில் இப்படி சேர்த்து வைத்த பணத்தை உடனடியாக கொடுத்து உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎30‎/‎2019 at 12:20 AM, ஏராளன் said:

புலம்பெயர் உறவுகள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டில் குழுக்களாக அல்லது வீட்டில் மாதம் 5 படி வருடம் 60 (இத்தொகை விரும்பினால் அதிகப்படுத்தலாம்) சேர்த்து பெரும் நிதியங்களை உருவாக்கினால் அதன் மூலம் நிறைய உதவிகள் செய்யலாம்.
ஏனெனில் வறுமையில் இருக்கும் மக்களுக்கு தீடீரென ஏற்படும் மருத்துவ செலவுகளிற்கு செலவளிக்க பணம் இருக்காது, அத்தகைய சந்தர்ப்பங்களில் இப்படி சேர்த்து வைத்த பணத்தை உடனடியாக கொடுத்து உதவலாம்.

ஏராளன்,

வருகைக்கும்  கருத்துக்கும்  நன்றி  .

வீட்டில்  வைத்திருக்கக்  கூடிய  யாழ்  உண்டியலில்  ஒவ்வொருவரும்  தமக்கு  வசதியான  சில்லறையை  ஒவ்வொரு  மாதமும்  இடலாம்  , நான்  முன்பு  கிழமைக்கு  10 வெள்ளி  என்று  சொன்னது  ஒரு  பருமட்டான  தொகையே  அவரவர்  வசதிக்கேற்ப  இது  மாறுபடலாம்.  

யாழில்  இது  தொடர்பாக  ஒரு  விபரக்கொத்து  இணைக்கப்படலாம் .  ஒவ்வொருவரின்  பெயருடன்  அவரின்  உண்டியலில்  கிழமையில் / மாதத்தில்  அவர்  இடும்  தொகை  மற்றும்  அன்றைய  திகதியில்  இந்த  திட்டத்தில்  உலகளாவிய  ரீதியில்  சேர்ந்திருக்கக்  கூடிய  மொத்த  தொகை  என்பன    அடக்கப்பட்டிருக்கும்    , இது  திட்டத்தில்  பங்கு  கொள்ளும்  எல்லோரினதும்  பார்வைக்காக.   

மருத்துவ  உதவி ,  குறுகிய  நீண்ட  கால  பயனளிக்கக்கூடிய  பல்வேறு  வகையான  செயற்பட்டுத்  திட்டங்கள்  என   எவ்வளவோ  செய்யலாம் .

அதை  விட  இந்த  திட்டத்தில்  இணைவதின்  மூலம்  பொருத்தமான  கட்டுப்பாடுகளுடன்    கூடிய  பலரும்  பங்கு பற்றக்   கூடிய செயற்திட்டங்களை  எவ்வாறு  ஆரம்பித்து  முன்னெடுத்துச்  செல்லலாம்  என  வீட்டிலுள்ள  இளையோர்களும்  அறிந்து  கொள்ளக்  கூடியதாக  இருக்கும்.  ஒரு  பங்குபற்றல்     மனப்பான்மையை  அவர்களினிடையே இலகுவாக  அறிமுகம்  செய்யலாம்  , இது  அவர்களின்  நீண்டகால  ஆளுமை  வளர்ச்சிக்கு   பங்களிக்கக்  கூடிய  தன்மை  கொண்டதாகவும்  அமையும் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.