Jump to content

அழியாத கோலங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழியாத கோலங்கள்.

புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று.  காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை.

வந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் என்று எத்தனையோ கணங்கள் வந்து போய்விட்டன.

எவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. 

எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. ஆனால், மனிதர்களில் இதுவரையில் தோழமையுடன் வந்தவர்கள் வெகு சிலரே. வந்தவர்களும் பாதியிலேயே விட்டகல வெறும் தனிமைதான் கூட வருகிறது. உறவுகள் இறுதிவரையென்றாலும், தனிமனித விருப்பு வெறுப்புகள் அவற்றையும் தேடல்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகின்றன. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் மனதில் இட்ட அழிக்கமுடியாத கோலங்களில் இன்றுவரை தொடர்ந்துவருவது எனது தேசம். நினைத்தவிடத்து போய்த் தரிசிக்க முடியாத கடப்பாடுகளும், ஆற்றாமைகளும் என் தேசம் மீதான ஏக்கங்களை கூட்டினவேயன்றி அழிக்க முடியவில்லை. தெரிந்தவரில் எவர் போய்வரினும் வாஞ்சையுடன் ஊர்ச்செய்தி கேட்டறியத் துடிக்கும் மனது. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பேசத் துடிக்கும் உதடுகள், ஆசையுடன் ஊர்ப்பெயர் சொல்லி நினைவு மீட்டலுக்கு கணப்பொழுதில் தயாராகும் நினைவலைகள் என்று என் இளமைக்கால ஏக்கங்களை இப்போதாவது அடைந்துவிட காத்திருக்கிறேன்.

பணவசதியும், உயர் வாழ்க்கைத்தரமும், பேரும் புகழும் இவை எதுவுமே நிறைவைத் தருவதாக நான் நினைக்கவில்லை. எதுவில்லாத பொழுதும், நான் பிறந்த மண்ணும், ஓடித்திரிந்து அள்ளி அள்ளிப் பருகிய மண்வாசனையும், கூடவே விருப்பமுடன் சேர்ந்து பழக ஒரு சில மனிதர்களும் போதுமென்று நினைக்கிறேன்.

அந்நியனின் ஆக்கிரமிப்பில் எந்தேசம் கிடந்தழுதாலும் கூட, அதுமீதான எனது ஏக்கங்களும், தாபங்களும் அப்படியே இருக்க, மீண்டுமொருமுறை என்வாழ்க்கை ஆரம்பக் கோட்டிலிருந்து தொடங்காதா என்று அங்கலாய்க்கிறேன்.  எனது இளமைக்காலங்களில் நான் தவறவிட்ட என் தேசத்துடனான எனது வாழ்க்கையை எல்லாக் காலத்திற்குமாகச் சேர்த்து வாழக் காத்திருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே நினைவலைகளில்தான் மூன்று தசாப்தங்கள் நானும் உழன்றுகொண்டு இருந்து முப்பது நாளில் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வந்தேன்.......!  😁

தொடருங்கள் ரஞ்சித் ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது.

யாராவது தேடல்களின் இறுதியைத் தொட்டுவிட்டால் அவன் தான் கடவுள்.
அதுவரை தேடி அலையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 வருடங்களிருக்கும்.  கடப்பாடுகளும், எச்சரிக்கைகளும் விட்டெறிந்து, தாயகம் செல்லத் தயாரான கணங்கள். இல்லாத சுதந்திரம் தேடி, நாள்குறித்து நான் முற்றாக்கிய எனது பயணம் முளையிலேயே முறிக்கப்பட்டு, அழுத்தங்களுடனான ஒரு செயற்கைத் "தாயக மீள்வாக " மாறியதை நான் பேசுவதில்லை.

பயணிக்குமுன்பே இடங்களும் ஆட்களும் தீர்மானிக்கப்பட்டு, வெறும் இயந்திரத்தனமாக, கண்கள் கட்டப்பட்ட குதிரைபோல முடிக்கிவிடப்பட்ட பொம்மைபோல அவசரமாகத் தெருக்களில் சுற்றிவந்த அந்த அவலத்தை நான் பேசுவதில்லை. 

நான் இதுவரை காத்திருந்த எனது தாயகத்தின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் வெறும் மூன்றே வாரத்தில், அவசரமாகக் காட்டி, இனிவேண்டாம் என்று சலிக்கவும் வைத்த அந்தப் பயணம் பற்றி நான் பேசபோவதில்லை. 

நான் ஏங்கித் தவிக்கும் எனது தாயகம் இன்னும் எனக்காகக் காத்திருப்பதாக நான் இன்றும் உணர்கிறேன்.

சுதந்திரமாக, அழுத்தமின்றி, நினைத்த நேரத்தில், விரும்பிய தாயகத்தின் முடுக்குகளைத் தரிசிக்க விரும்புகிறேன். 

பார்க்கலாம், நான் விரும்புவது இருக்கட்டும், தாயகம் என்ன நினைக்கிறதென்று !

28 minutes ago, ஈழப்பிரியன் said:

யாராவது தேடல்களின் இறுதியைத் தொட்டுவிட்டால் அவன் தான் கடவுள்.
அதுவரை தேடி அலையுங்கள்.

சரிதான், இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...ஆரம்பமே அசத்தலாய் இருக்கு 

 

Link to comment
Share on other sites

16 hours ago, ரஞ்சித் said:

இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. 

எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.

நம்முள்ளே தேடிக்கண்டுபிடிப்பதற்கு நிறைய உள்ளன என்பதை உணராமலேயே பலரது வாழ்க்கை வீணாகிறது. 

புலம்பெயர்ந்த நாட்டிற்கு இயைபாக்கமடைவதற்காக நாம் பெறுமதியாக மதித்தவற்றை (உதாரணமாக நமது கலாசாரம், வாழ்க்கை முறை) எல்லாம் இழந்து ஏதோ வாழ்வின் ஓட்டத்தோடு ஏனையோரைப் போல நாமும் ஓடுவோம் என்ற மனநிலையோடு தான் அநேகரின் வாழ்க்கை கழிகிறது.

விடாமுயற்சியுடன் தேடுகிறீர்கள் என்பதே ஓர் நல்ல ஆரம்பம்; 👍நிச்சயமாக கண்டறிவீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள், ரஞ்சித்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

நம்முள்ளே தேடிக்கண்டுபிடிப்பதற்கு நிறைய உள்ளன என்பதை உணராமலேயே பலரது வாழ்க்கை வீணாகிறது. 

புலம்பெயர்ந்த நாட்டிற்கு இயைபாக்கமடைவதற்காக நாம் பெறுமதியாக மதித்தவற்றை (உதாரணமாக நமது கலாசாரம், வாழ்க்கை முறை) எல்லாம் இழந்து ஏதோ வாழ்வின் ஓட்டத்தோடு ஏனையோரைப் போல நாமும் ஓடுவோம் என்ற மனநிலையோடு தான் அநேகரின் வாழ்க்கை கழிகிறது.

விடாமுயற்சியுடன் தேடுகிறீர்கள் என்பதே ஓர் நல்ல ஆரம்பம்; 👍நிச்சயமாக கண்டறிவீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள், ரஞ்சித்! 😊

தேடல்கள் தொடர்வதென்றாலே, நாம் இன்னும் எம் வாழ்க்கையில் திருப்தியடையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது உடல் சார்ந்ததா, உளம் சார்ந்ததா என்றால் , இரண்டும்தான். இவை இரண்டுமே ஒருங்கே அமையப்பெறும்போது எமது தேடல்கள் நின்றுவிடவேண்டும். ஆனால், அப்படியில்லையே? தேடல்கள் நிற்கும் பொழுதில் வாழ்க்கையும் முற்றுப்பெற்றுவிடும். அல்லது, வாழ்க்கை முற்றுப்பெறும்பொழுது தேடல்களும் சமாதியாக்கப்பட்டு விடுகின்றன. 

தேடல்களின் விளைவாகவே வாழ்க்கை முன்னோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றது என்று நினைக்கிறேன். நாம் தேடுவது சிலவேளைகளில் 60 % ஆகவோ, 70 % ஆகவோ எமக்குக் கிடைக்கலாம். ஆனால், நிறைவாவதில்லை. 

இப்போதைக்கு எனது தேடல்கள் எனது தாய்தேசம் நோக்கியதாக இருக்கிறது. நீண்ட காலமாக அதைப் பிரிந்திருப்பதால் வந்த ஏக்கமாக அது இருக்கிறது. பார்க்கலாம் !

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

தேடல்கள் தொடர்வதென்றாலே, நாம் இன்னும் எம் வாழ்க்கையில் திருப்தியடையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது உடல் சார்ந்ததா, உளம் சார்ந்ததா என்றால் , இரண்டும்தான். இவை இரண்டுமே ஒருங்கே அமையப்பெறும்போது எமது தேடல்கள் நின்றுவிடவேண்டும். ஆனால், அப்படியில்லையே? தேடல்கள் நிற்கும் பொழுதில் வாழ்க்கையும் முற்றுப்பெற்றுவிடும். அல்லது, வாழ்க்கை முற்றுப்பெறும்பொழுது தேடல்களும் சமாதியாக்கப்பட்டு விடுகின்றன. 

தேடல் பற்றிய உரையாடல் மிகவும் சிக்கலானது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றைத் தேடித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. சிலவற்றுக்கு அன்றைய இரையைத் தேடுவதுடனே தேடல் முற்றுப் பெறுகிறது;  இவ்வாறே சிலவற்றுக்கு அன்பு, பாசம், பொருள், காணி, பூமி, கல்வி, பணம் எனப் பட்டியல் நீளும். எல்லாம் உணர்ந்த ஞானிகள் கூட உண்மை எது என தேடிக்கொண்டே இருப்பர். 

உலக வாழ்வில் நமது தேவைகள் நாளாந்தம் மாறிக்கொண்டே இருக்கும் போது நமது தேடலும் சிக்கலாகிறது.

புலம்பெயர் ஈழத்தமிழர் என்ற வகையில் நமக்கு இது மேலும் சிக்கலான விடயமாகிறது. இங்கு நாம் விரும்பி ஏற்காத வாழ்க்கையோடு ஒன்ற முடியாமலும், விடுபடமுடியாமலும் திணறும் போதும் மும்முரமான வாழ்வில் இதைப் பற்றிக் கணநேரம் தானும் யோசிக்கப் பலருக்கு நேரமில்லை; இன்னும் பலருக்கு இந்தச் சிக்கலுக்கு வெளியே வரவும் பயம் - status quo மனநிலையில் comfort zoneக்கு வெளியே வரத் தயங்குகிறார்கள். உதாரணமாக விசாவில் கற்க வந்தவனுக்கு பல்கலைக்கழக கட்டணத்தை, வாழ்க்கைச் செலவை சமாளிக்கவும், குடும்ப பாரத்தைச் சுமப்பவருக்கு சுமை தாங்கவும் உழைப்பதிலேயே நேரம் சரியாக இருக்கும் போது இவர்கள் வாழ்வில் உண்மையான தேடல் இருக்காது. அதற்காக அவர்கள் வாழ்வில் நிறைவடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை தானே?!

உலகத்தில் மிகச் சிலருக்கு அவர்கள் விரும்பியது எல்லாம் ஓரளவுக்குத் திருப்திகரமாகக் கிடைத்தும், இன்னும் சிலர் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாகவும் வாழப் பழகியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் தேடல்கள் அவசியமில்லை என்பதே எனது கருத்து. எனினும், இந்த திருப்திகரமான நிலை கூட இன்றைய கணத்துக்குக் கணம் மாறி வரும் உலகில் எவ்வாறு நிரந்தரம் என்றும் தெரியவில்லை.

ஆதி மனிதராக நாம் காட்டில் வேட்டையாடிக்கொண்டு இருந்தபோது தேடல் முயற்சிகள் தற்போதய மனிதரின் முயற்சிகள் போல ஆழமில்லாமல், அற்பத்தனமாக இருந்திருக்கலாம்; எனினும் அன்றைய மனிதன் அனுபவித்த சுதந்திரத்தையும், மனநிறைவையும் விருத்தியடைந்த இன்றைய மனிதகுலம் பெறமுடியாதுள்ளது. எனவே இன்றைய உலகில் தேடல் மட்டுமல்ல தேடிப்பெற்றதை அனுபவிக்க, மாறிவரும் உலகை எதிர்கொள்ளும் துணிச்சலும், மனவுறுதியும் அவசியம். இல்லாவிடின் தேடல் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும், அல்லது தேடலிலும் சலிப்பு ஏற்பட்டுப் பிடிக்காத வாழ்க்கையையே தொடரவேண்டிய நிலை தான் ஏற்படும். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடமைகள், கடப்பாடுகள், சம்பிரதாயங்கள் என்று நாம் வரிந்துகொள்ளும் எவையுமே எமக்கு உண்மையான திருப்தியைத் தரக்கூடியவைதானா என்று அடிக்கடி கேட்கிறேன். இப்போதிருக்கும் பிணைப்புக்கள் எல்லாமே வெறும் செயற்கைதானா என்று அவ்வப்போது என்னத் தோன்றுகிறது. கண்ணிற்குத் தெரியாக் கட்டாயப்படுத்தல்கள் மூலம் வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளதுபோலக் கூடத் தோன்றுகிறது வேளைகளில். தொடர்ச்சியான அழுத்தமொன்று நெஞ்சிற்குள் இருந்துகொண்டு சுதந்திரமாக சுவாசிப்பதைத் தடுக்கிறது. 

இதெல்லாம் களைந்தெறிந்து புதியதாகப் பிறக்கலாம் என்றால், அதுவும் சாத்தியமில்லை என்று மனது சொல்கிறது. மனசாட்சியென்றும், சமூக அழுத்தமென்றும் பல காரணம் கூறிக்கொண்டே கூடவந்து தடுக்கிறது. கால்களில் பாரமேற்றி கைகள் இரண்டும் கட்டப்பட்டு வாழ்க்கை நீண்டுகொண்டு போவதுதான் நடக்கிறது. 

இதெல்லாம் மாறவேண்டுமெனில், ஆரம்பத்திலிருந்தே அழித்து அழித்து மீண்டும் புதிதாய் எழுதவேண்டும். அதற்குக் காலம் இடம்தரப்போவதில்லை. மீதமிருக்கும் காலங்களும் அரிதாகிக் கொண்டுபோவதும், கடந்துபோகும் காலத் துளிகளில் வாழ்க்கையை நனைக்கக் கூட சந்தர்ப்பங்கள் இன்றித் தவிப்பதும் மட்டுமே இப்போதைக்குச் சாத்தியம்.

இதற்கு ஒரே வழி, தொடர்ந்து தேடுவது. வாழ்க்கையினைப் பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு.  மீதமிருக்கும் ஒரு சில காலங்களையாவது இழுத்துச்செல்ல அது தேவை எனக்கு. 

பார்க்கலாம், வாழ்க்கை எனக்காக எதைச் சேகரித்து வைத்திருக்கிறதென்பதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழகிய பெயரை ஏன் மாற்றினீர்கள் ?? ரஞ்சித் என்றதும் வேறு யாரோ என்று இந்தப் பக்கமே துடிப்பு பார்க்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

பார்க்கலாம், வாழ்க்கை எனக்காக எதைச் சேகரித்து வைத்திருக்கிறதென்பதை. 

வாழ்க்கை உங்களுக்காக எதையும் சேர்த்து வைத்திருக்காது.
நீங்கள் தான் வாழ்க்கைக்கு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வாழ்க்கை உங்களுக்காக எதையும் சேர்த்து வைத்திருக்காது.
நீங்கள் தான் வாழ்க்கைக்கு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

அதுவும் சரிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...நான் ஆறுதலாய் எழுதுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழகிய பெயரை ஏன் மாற்றினீர்கள் ?? ரஞ்சித் என்றதும் வேறு யாரோ என்று இந்தப் பக்கமே துடிப்பு பார்க்கவில்லை

உது சரியில்லாத குணம் கண்டியளோ.......ஆரெண்டாலும் சமமாய் பாக்கோணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபத்தைந்து வருடங்களின் பின் என் தாயகம் நோக்கி பயணிக்கையில் மனதுக்குள் இருந்த தேடல் அங்கு போய் எனது ஊரின் வெறுமையைப் பார்த்தபின் மிஞ்சியது ஏக்கம் மட்டுமே. மீண்டும் திரும்பாத அந்த வசந்த காலத்தை எண்ணி எண்ணியே எமது காலம் முடிந்து கொண்டிருக்கிறது. என்னதான் மீண்டும் கட்டப்பட்டாலும் எமது உறவுகளும் அந்த ஊரின் கலகலப்பும் என்றுமே திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் உள்வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற உண்மை இரண்டாம் முறையும் ஊருக்குப் போனபோது நிசமாகியது. திரும்ப அங்கு போய் குடியிருப்போம் என்ற எண்ணமும் நாளடைவில் கனவாகி விடும் என்றே தோன்றகிறது. வேர்கள் அங்கும் விழுதுகள் இங்குமாய் எமது வாழ்க்கை .....? நல்லதொரு நினைவு மீட்டல் ரஞ்சித் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

இருபத்தைந்து வருடங்களின் பின் என் தாயகம் நோக்கி பயணிக்கையில் மனதுக்குள் இருந்த தேடல் அங்கு போய் எனது ஊரின் வெறுமையைப் பார்த்தபின் மிஞ்சியது ஏக்கம் மட்டுமே. மீண்டும் திரும்பாத அந்த வசந்த காலத்தை எண்ணி எண்ணியே எமது காலம் முடிந்து கொண்டிருக்கிறது. என்னதான் மீண்டும் கட்டப்பட்டாலும் எமது உறவுகளும் அந்த ஊரின் கலகலப்பும் என்றுமே திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் உள்வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற உண்மை இரண்டாம் முறையும் ஊருக்குப் போனபோது நிசமாகியது. திரும்ப அங்கு போய் குடியிருப்போம் என்ற எண்ணமும் நாளடைவில் கனவாகி விடும் என்றே தோன்றகிறது. வேர்கள் அங்கும் விழுதுகள் இங்குமாய் எமது வாழ்க்கை .....? நல்லதொரு நினைவு மீட்டல் ரஞ்சித் தொடருங்கள்.

பலரது உணர்வுகளும் இவ்வாறு தான் உள்ளது!

விரும்பியோ அல்லது விரும்பாமலோ......தூரத் தூர விலகிப் போய்க்கொண்டிருக்கிறோம்!🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் உயிருடன் இருக்கும்வரை இந்த அங்கலாய்ப்பு  எம்மை விட்டு விலகாது. எமக்குப்பின் ஒருவேளை பிள்ளைகள் கியூபா மெக்சிக்கோ போவதுபோல விடுமுறையைக் கழிக்க ஒருவேளை தாயகம் நோக்கிப் பயணிப்பார்களோ என்னவோ அதுகூட நிச்சயமில்லை. இந்த உண்மையை ஜீரணிக்க கஸ்ரமாகத்தான் இருக்கிறது. கருத்துக்கு நன்றிகள் புங்கையூரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கிடையிலான, குறிப்பாக தம்பதியினருக்கிடையிலான நெருக்கம்  காலப் போக்கில் விரிவடைவதற்கான காரணம்பற்றி யாராவது எண்ணியிருக்கிறீர்களா? இது சேரும் ஆணுக்கும் பெண்ணிற்குமிடையிலான தெரிவென்பது ஆரம்பத்திலேயே சரியாக கணிக்கப்படாததன் காரணமாகவோ அல்லது,          வாழ்க்கையின் அழுத்தங்களின் அதிகரிப்பினால் ஏற்படுகின்றதென்று எடுத்துக்கொள்ளலாமா?

பேசிச் செய்யப்படும் திருமணங்களில் ஆணினதும் பெண்ணினதும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ அல்லது எதிர்பார்ப்புகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல், குடும்ப கெளரவம், மூத்த பிள்ளை மற்றவர்களுக்கு உதாரணம் ஆக இருக்க வேண்டும், சொந்தத்தில் முடிக்கவேண்டும், சொத்துடன் முடிக்க வேண்டும் என்கிற தம்பதியினரின் அந்நியொன்னியத்திற்குச் சிறிதுமே சம்பந்தமில்லாத காரணிகளால் உறவு மூன்றாம் தரப்பினரால் தீர்மானிக்கப்பட்டு, நாளடைவில் ஒத்துவராதென்று இருவரும் அல்லது இருவருள் ஒருவரோ தீர்மானிக்கும்போது உறவு முற்றுப்பெறுகிறது.

அப்படியானால், காதல்த் திருமணங்கள் முறிவது ஏன்? இருவருமே அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணைந்தாலும் கூட, அவை தோற்பது ஏன்?

ஆகக் காதல் என்பது வெறும்  பதின்ம வயதில் வரும் பாட்கவர்ச்சியால் ஏற்படும் இரசாயன மாற்றம் என்பதும், தான் தேர்ந்தெடுக்கும்  துணை உண்மையிலேயே தனக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்று விளங்கிக்கொள்ள முடியாத காலத்தில் ஏற்படும் மாயை என்பதுமாகிவிடுகிறதா?

தொடங்கப்பட்ட தலைப்பிற்கும் இங்கு நான் பேசுவதற்கும் சம்பந்தமில்லை, ஆனாலும் ஒருமுறை உங்கள் கருத்தையும் கேட்டு வைக்கலாம் என்பதற்காக கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பந்தத்திலிருந்து விலகிச் செல்லும் ஒரு பெண்ணிற்கான சமூக அந்தஸ்த்தென்பது தமிழரைப் பொறுத்தவரையில் எப்படி இருக்கிறது? திருமண முறிவிற்குக் காரணமான ஆண்பற்றிய எந்த விமர்சனத்தையும் மும்வைக்காத எமது சமூகம், பெண்ணை மட்டுமே மொத்தக் காரணியாக்கி சாடுவது ஏன்? 

தனித்து வாழ எத்தனிக்கும் பெண்மீதான அழுத்தங்கள் எவை? ஊரிலிருக்கும் பல ஆண்களின் பார்வையில் ஒரு பண்டமாகத் தெரிவது முதல், ஊர்ப்பெண்களின் வாயில் நடத்தை கெட்டவள் எனும் அவலாக மாறும்வரை அவள் படும் அவஸ்த்தைகள் எவை? 

பொருளாதார ரீதியில் சுயமாக ஒரு பெண்ணினால் வாழமுடியும் என்பது சாத்தியமாகியபிறகு அவள் தனியாகவோ, விரும்பிய ஆணுடன் வாழ்வதில் என்ன தவறு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், சமூகத்திற்குமாக ஒரு பெண் வாழும் வாழ்க்கை முழுமையானதா? 

இங்கே பெண்ணின் விருப்பு வெறுப்புகளோ, உணர்வுகளோ தேவையற்றதா? “என்னனவாக இருந்தாலும், நீதான் அனுசரிச்சுப் போகவேணும் பிள்ளை” என்று அவளின் துன்பங்களையோ உணர்வுகளையோ அறிந்துகொள்ள விரும்பாத, அறிந்தும் எதுவுமே செய்ய விரும்பாத பெற்றோர் இன்னமும் எம்மில் இருப்பது ஏன்? 

“நீ பேசாமல் இருந்தாலேயே எல்லா பிரச்சனையும் சரியாகும்” என்று கூறியே பெண்ணின் உணர்வுகளை மழுங்கடித்து ஆணாதிக்கத்திற்குள் தெரிந்தே தள்ளும் பெற்றோர் சகோதரர்கள் இன்னும் இருப்பது ஏன்?

இவைகளின் அழுத்தங்களால் ஒரு பெண் தனது விரும்பா வாழ்விலிருந்து வெளியே வருவதா அல்லது எவருமே தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்கிற விரக்தியில் மனநோயாளியாகி தனது வாழ்வையே முடித்துக்கொள்ளுவதா சரியானது?

புரிந்துகொள்ளமுடியாத, விருப்பமில்லாத வாழ்வொன்றிற்காக வாழ்வை முடித்துக்கொள்வதைக் காட்டிலும், சுயமாக, அழுத்தமில்லாத வாழ்வொன்று சாத்தியமென்பது எமது பெண்களுக்கு தெரிந்திருக்கிறதா?

இதைச் செய்வதற்கு அவர்களுக்குப் தடையாக இருப்பது எது? அப்படியொரு இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவைதான் என்ன பெண்ணிற்கு?

 

Link to comment
Share on other sites

10 hours ago, ரஞ்சித் said:

உறவுகளுக்கிடையிலான, குறிப்பாக தம்பதியினருக்கிடையிலான நெருக்கம்  காலப் போக்கில் விரிவடைவதற்கான காரணம்பற்றி யாராவது எண்ணியிருக்கிறீர்களா? இது சேரும் ஆணுக்கும் பெண்ணிற்குமிடையிலான தெரிவென்பது ஆரம்பத்திலேயே சரியாக கணிக்கப்படாததன் காரணமாகவோ அல்லது,          வாழ்க்கையின் அழுத்தங்களின் அதிகரிப்பினால் ஏற்படுகின்றதென்று எடுத்துக்கொள்ளலாமா?

ஆண்-பெண் திருமண உறவு என்பது தனித்துவமான ஒன்று தான். எனினும் இதுவும் நட்பு மற்றும் உறவினர்களுடனான உறவு போல் ஒரு உறவு தான் என்று சிந்தித்தால் இந்த உறவையும் எப்படிக் கையாள வேண்டும் என்ற அடிப்படை எண்ணமாவது இருக்கும். மற்ற எந்த உறவுக்கும் அவசியமான புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, காருண்யம் ஆகிய பண்புகள் திருமண உறவின் வெற்றிக்கும் மிக அவசியமாக உள்ளன. இவை புறக்கணிக்கப்படுமிடத்து மற்ற உறவுகள் போல திருமண உறவும் விரிசலடைகிறது. 

சரியாக பொருத்தம் பார்க்கப்படாமல் செய்யப்பட்ட திருமணங்களும் விரிசலுக்குக் காரணம். இங்கு பொருத்தம் என்பது படிப்பு, குடும்பப்பின்னணி ஆகியவற்றில் மட்டுமல்ல இன்னும் பல்வேறு தனிநபர் சார்ந்த விடயங்களாக இருக்கலாம். ஜோதிடத்திலும் எனக்கு ஓரளவு நம்பிக்கை உண்டு, எனினும் அங்கும் பொருத்தம் சரியாகக் கணிக்கப்படுகிறதா என்று சொல்ல முடியாது. அது ஜோதிடர்களின் திறமையையும் பொறுத்தது.

எவ்வாறாயினும் ஒவ்வொரு திருமண உறவுக்கும் அதைச் சூழத் தனித்துவமான பிரச்சினைகள் இருக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியே பல கோணங்களில் ஆராய்தால் தான் தீர்வு கிடைக்கும். வாழும் சூழலின் அழுத்தங்களும் சுமுகமாக இருக்க வேண்டிய திருமணபந்தங்களுக்குச் சவாலாக இருக்கின்றன. இதனால் தான் சிலருக்கு இட, வேலை மாற்றங்கள் உறவுநிலை மேம்பட உதவியுள்ளன.

Link to comment
Share on other sites

11 hours ago, ரஞ்சித் said:

அப்படியானால், காதல்த் திருமணங்கள் முறிவது ஏன்? இருவருமே அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணைந்தாலும் கூட, அவை தோற்பது ஏன்?

ஆகக் காதல் என்பது வெறும்  பதின்ம வயதில் வரும் பாட்கவர்ச்சியால் ஏற்படும் இரசாயன மாற்றம் என்பதும், தான் தேர்ந்தெடுக்கும்  துணை உண்மையிலேயே தனக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்று விளங்கிக்கொள்ள முடியாத காலத்தில் ஏற்படும் மாயை என்பதுமாகிவிடுகிறதா?

'காதல் திருமணம் vs ஒழுங்குபடுத்தப்பட்ட திருமண' என்ற பார்வை திருமண உறவுகள் பற்றிய சிக்கல்களுக்குத் தீர்வாகாது; பட்டிமன்ற விவாதத்துக்கு வெறுமனே சுவாரஸ்யமான தலைப்பாக மட்டுமே உபயோகமாகலாம்!

காதலோ, பெரியார் நிச்சயித்ததோ திருமணம் என்ற உறவானது புதியதோர் உலகம்; திருமண உலகின் சவால்கள் காதலிக்கும் போது தெரிவதில்லை. காதலிக்காதோருக்கு இது இன்னமும் சவாலாக இருக்கும். எனினும் மேலே நான் குறிப்பிட்ட மனித உறவுகளுக்கு அவசியமான பண்புகளைக் கடைப்பிடித்தல் மட்டுமல்ல முடிந்தவரை சரியான துணையைத் தேர்ந்தெடுத்தலும் நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமாகும்.

காதல் என்பது பதின்ம வயதில் மட்டும் வரவேண்டிய ஒன்றல்ல. எனினும் பதின்ம வயதுக் காதலர்களில் நீடித்த மணவாழ்வை வாழ்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

காதல் என்பது அழகிய அட்டைப்படம் உள்ள புத்தகம் போன்றது. அட்டைப்படத்தின் அழகிற்காக மட்டும் வாங்கப்பட்ட புத்தகத்தை நீண்ட காலம் மனமொன்றிப் படிக்க முடியாமல் இருக்கலாம்.  ஆனால், அதன் உள்ளடக்கத்தைப் பொறுமையாக ரசித்துப்படித்து அது சொல்லவந்த விடயங்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமையும். அதற்கு முதலில் நாம் விரும்பிய புத்தகத்தை வாங்க வேண்டும். அல்லது அதைப் பொறுமையாக வாசிக்க / புதியவற்றை அறிய ஆர்வத்துடன் இருக்க வேண்டும். நல்ல சூழலையும் தேர்ந்தெடுக்கவும் வேண்டும். நமது திருமண உறவும் ஓர் புத்தகம் வாசிக்கும் அனுபவம் போலத்தான்!😊

Link to comment
Share on other sites

11 hours ago, ரஞ்சித் said:

திருமண பந்தத்திலிருந்து விலகிச் செல்லும் ஒரு பெண்ணிற்கான சமூக அந்தஸ்த்தென்பது தமிழரைப் பொறுத்தவரையில் எப்படி இருக்கிறது? திருமண முறிவிற்குக் காரணமான ஆண்பற்றிய எந்த விமர்சனத்தையும் மும்வைக்காத எமது சமூகம், பெண்ணை மட்டுமே மொத்தக் காரணியாக்கி சாடுவது ஏன்? 

தனித்து வாழ எத்தனிக்கும் பெண்மீதான அழுத்தங்கள் எவை? ஊரிலிருக்கும் பல ஆண்களின் பார்வையில் ஒரு பண்டமாகத் தெரிவது முதல், ஊர்ப்பெண்களின் வாயில் நடத்தை கெட்டவள் எனும் அவலாக மாறும்வரை அவள் படும் அவஸ்த்தைகள் எவை? 

பொருளாதார ரீதியில் சுயமாக ஒரு பெண்ணினால் வாழமுடியும் என்பது சாத்தியமாகியபிறகு அவள் தனியாகவோ, விரும்பிய ஆணுடன் வாழ்வதில் என்ன தவறு? 

நிறைய நல்ல பாரம்பரியங்களையுடைய நமது ஈழத்துக் கலாச்சாரத்தில் பெரும் சாபக்கேடான அம்சங்கள் தான் இவை. பொதுவாக நான் கலாச்சார மாற்றத்தை விரும்புவதில்லை; எனினும் இவ்வாறான அழுக்குகள் களையப்பட நமது சமூகத்தில் (புலத்திலும், வெளியிலும்) பெரும் கலாச்சாரப் புரட்சி ஏற்பட வேண்டும் - அதாவது நாம் எல்லோரும் கூட்டாக இது போன்ற விடயங்களில் நமது பார்வையை மாற்றியமைக்க வேண்டும். 

சாபக்கேடான சில பழமையான அம்சங்களில் ஊறிய மூத்தோரும், மூட நம்பிக்கையாகப் பின்பற்றும் ஏனையோரும் இந்த மாற்றங்களை ஏற்கத் தயங்குவர். எனினும், இந்த விடயங்களில் நம்மிடையே அடிப்படையான மனமாற்றம் இன்றி (தனிநபராகவோ/கூட்டாகவோ) பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் விடியல் கிட்டாது. அவர்கள் இவ்வாறான மாற்றங்களை அங்கீகரிக்கும் ஏனைய சமூகங்களுடன் தம்மை இணைத்துக்கொள்ளும் நிலைமையும் மாறாது / தவறுமில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.