Jump to content

நெடுக்காலபோவன் (AMBCS)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணனியில் அதிகம் பயிற்சி எடுத்த களம் என்றால்..  அது யாழ் களம் தான்.

குறிப்பாக தமிழ் விசைப்பலகையில் ஆரம்பித்து... தமிழ் யுனிக்கோட் எழுத்துரு உருவாக்கத்தில்...  ஆரம்ப காலத்தில்... நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியது ஈறாக.. வலைப்பூக்கள் அமைப்பு.. படங்களை மீள் வடிவமைத்தல்.. அசைவியக்க படங்கள் உருவாக்கம்.. தமிழ் மூல.. வின்டோஸ் அப்பிளிகேசன் மென்பொருள் பாவனை என்றும்..  கணணி வன்பொருள் அறிவு பெற்றமை.. கணனிக்குரிய பகுதிகளை வாங்கிப் பொருத்தி சொந்தமாக கணனி.. உருவாக்குதல் என்று.. போய்.. யாழுக்கு அப்ஸ் உருவாக்கும் வரை என்று நிறைய கணணி சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள யாழ் இடமளித்திருக்கிறது கடந்த பல ஆண்டுகளாக.

இந்தப் பின்னணிகள் மற்றும் கல்வியிடங்களில் பெற்ற கணனி அறிவு.. மற்றும்.. வேலையிடங்களில் பெற்ற கணணி மென்பொருள் அறிவு எல்லாத்தையும் கலந்தடித்து சமர்ப்பித்ததன் அடிப்படையில்..

பிரிட்டிஷ் கம்பியூட்டர் சாசைட்டி.. The British Computer Society.. BCS இல்.. நிரந்தர அங்கீகாரங்களில் ஒன்றான.. AMBCS நிலை அண்மையில் கிடைக்கப் பெற்றது. 

கணணி சார் பட்டப்படிப்பு எதனையும் கொண்டிராத நிலையில்.. இந்த தகுதி நிலையை அடைவதற்கு இடையறாது.. கணணி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம்.... இந்த அங்கீகாரத்துக்கான அடிப்படையாகும்.  அதுக்கு யாழும் உதவி புரிந்துள்ளது. 

The benefits of Associate (AMBCS) membership

Associate membership delivers a range of services designed around the professional needs of today’s competent IT practitioners.

  • Professional recognition
    Tools to gain recognition within the industry include post nominal letters AMBCS, and a defined path to Chartered status via Professional membership.
  •  
  • Career development
    To plan and track progression, members use our Personal Development Plan (PDP), the CPD portal and gain full access to Browse SFIAplus, the online tool that allows them to explore the industry framework for IT skills, training and development.
  •  
  • Networking
    Top people, great ideas and the latest thinking locally, nationally and online - our global networking opportunities are unrivalled and include branches, specialist groups and the Member Network.
  •  
  • Knowledge and best practice
  • From the latest industry news to our massive online library, the Institute’s information services keep members up to date with best practice, and at the cutting edge of IT.
  •  
  • Exclusive discounts and offers
    Adding even more value to membership, our discounts and free services enable members to enjoy savings both at work and at home. 

Upgrading to Professional (MBCS) membership

At any time during their free year’s membership, candidates who are eligible can upgrade to Professional (MBCS) membership. (MBCS subscription payment is required).

யாழில் எழுத ஆரம்பித்த ஆர்வத்தின் மிகுதியால் கிடைக்கும் இரண்டாவது அங்கீகாரம் இதுவாகும். முன்னர் விஞ்ஞானச் செய்திகளை.. ஆக்கங்களை படித்து.. மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தமைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அது  Royal Society of Biology வாயிலாகக் கிடைத்தது. 

இவை போக.. தமிழகத்தில்.. ஆனந்த விகடனில்.. யாழில் எழுதி வந்த விஞ்ஞான ஆக்கங்களை... எளிமையான மொழிபெயர்ப்புக்களை..  கொண்டு  வந்த எங்கள் வலைப்பூவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. 

இவை போக.. யாழிலிலும் பகிர்ந்து கொள்ள என்று பிடிக்கப்பட்ட இரண்டு.. உயிரியல் சார்ந்த படங்கள்.. The Biologist என்ற இரு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியாகும் ஏட்டிலும் இரு வேறு படங்கள்.. இரு வேறு தடவைகள்.. பிரசுரமாகியுள்ளன. 

யாழ் ஒரு பொழுதுபோக்கு களம் என்பதற்கும் அப்பால்.. பலரும் பல்வேறு நிலை விருத்திக்குப் பயன்படுத்திய.. படுத்தக் கூடிய.. நுண்மைகள் பொருந்திய இடமும் கூட. 

இவற்றையும் யாழின் 21 ஆண்டு கால சாதனைகளில் சேர்ந்துக் கொண்டமைக்கு யாழுக்கும் யாழை உருவாக்கி.. நிர்வகித்து நடத்துவோருக்கும்.. செந்நன்றிக்கடனாக்கிக் கொள்கிறோம். 

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்,

நானும் ஒரு முன்னால் MBCS. தொடர்ந்து மெம்பராக இருப்பதற்கு காசு கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதால் என் அங்கத்துவத்தை புதுப்பிக்கவில்லை. அதே மாதிரி தான் AMBCS வைத்து இருந்தேன். கொழும்பில் இருக்கும் போது IDM இல் படித்து எடுத்தவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  NP .

கணனி  பயன்பாடு    தெரியா  விட்டால்   தலைக்கு  மேலால  மிதித்துக்  கொண்டு  போய்விடுவினம் , 

15 வருடங்களிற்கு  முன்னர்  field மாறுவம்  எண்டு  business computing இல்  யூனிவர்சிட்டி  ஒண்டில்  ஒரு  டிப்ளமோ  செய்து  முடித்திருந்தேன்  , அது  பாஸ்  பண்ணியவுடனும்  எனது  field   யிலேயே  வேலை  கிடைத்ததால்  தப்பித்தேன்  . இல்லாவிட்டல்  இருந்த  H1B விசாவுடன்  வந்து  இப்ப  Trump உடன்  தான்  குப்பை  கொட்டிக்   கொண்டிருந்திருப்பேன். 

இரண்டு  மறக்க  முடியாத  நினைவுகள்  அந்த  கம்ப்யூட்டிங்     கோர்ஸ்   செய்த  நேரம் 

1)            என்ன  மாதிரி  ஒரு  third   பார்ட்டி  கணனியின்  root டிரெக்டரிக்குள்  புகுவது  என்று  ஒரு  session.  Session முடிந்ததும்   வேறு  சில 3r d party  கணணிகட்குள்  புகுந்து  அவர்களின்  டாக்குமெண்ட்ஸ்  பகுதிக்கு  போனால்  என  என்ன  இன்டெரெஸ்ட்டிங்  ஆன  விடயங்களெல்லாம்  .  மற்றவரின்  தனிப்பட்ட  அந்தரங்களுக்குள்  உள்ளிடாதே  என  உள்ளிருந்து  எச்சரிக்கைக்    குரல்  வர  நிறுத்தி  விட்டேன் 

 

2)            ஒரு  குறிப்பிட்ட    சோதனையில்  ஒரு   கேள்விக்கு  நான்  பிழையான  பதில்  எழுதிய  போதும்  எனக்கு  100 புள்ளிகள்  கிடைத்தது  .  நான்  எழுதிய   ஒரு  code இன்  கட்டமைப்பு  வாத்திக்கு  நல்லாப்  பிடிச்சுப்    போய்,   போனஸ்  புள்ளிகள்  போட்டு  விட்டுது  .  ( பீத்திக்     கொள்ளவில்லை  . மலரும்  நினைவுகள்  மட்டுமே,   உண்மையில் 101 புள்ளிகள் )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

நெடுக்ஸ்,

நானும் ஒரு முன்னால் MBCS. தொடர்ந்து மெம்பராக இருப்பதற்கு காசு கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதால் என் அங்கத்துவத்தை புதுப்பிக்கவில்லை. அதே மாதிரி தான் AMBCS வைத்து இருந்தேன். கொழும்பில் இருக்கும் போது IDM இல் படித்து எடுத்தவை.

தொடர்ந்திருந்து... Chartered IT ஆகி இருக்கலாம். சம்பள உயர்வுகளுக்கு உதவி இருக்குமே.

நாங்கள் தொழில்முறையில் முழுக் கணணி சாரா நிலை இருந்தாலும்.. இப்போ எல்லாத் துறைகளிலும் கணணியின் ஆதிக்கமே வலுவடைந்துள்ளதால்.. குறிப்பாக.. automation.. எல்லா இடமும் பகுதியாகவும் முழுமையாகவும் நுழைந்து விட்டதால்..   இப்படியான அங்கீகாரங்கள்.. எம்மை தனித்துக்காட்ட உதவும். அந்த வகையில் இந்த அங்கீகாரம் உதவுவதோடு.. தொடர்ந்து எமது கணணி அறிவைப் புதிப்பித்துக் கொண்டிருக்கவும்.. மாற்றங்களை உடனுக்குடன் அறியவும் உதவுகிறது. 

2 hours ago, சாமானியன் said:

2)            ஒரு  குறிப்பிட்ட    சோதனையில்  ஒரு   கேள்விக்கு  நான்  பிழையான  பதில்  எழுதிய  போதும்  எனக்கு  100 புள்ளிகள்  கிடைத்தது  .  நான்  எழுதிய   ஒரு  code இன்  கட்டமைப்பு  வாத்திக்கு  நல்லாப்  பிடிச்சுப்    போய்,   போனஸ்  புள்ளிகள்  போட்டு  விட்டுது  .  ( பீத்திக்     கொள்ளவில்லை. மலரும்  நினைவுகள்  மட்டுமே,   உண்மையில் 101 புள்ளிகள் )

முன்னர் எல்லாம் கோடிங் முழுமையாக எழுதுவோம். இப்ப எல்லாம்.. மாணவர்கள் இடைச்செருகல் தான் செய்து பிழைப்பை ஓட்டுகிறார்கள். ஆரம்ப காலத்தில்.. இருந்த கோடிங் விருத்தி நிலை இப்போ.. C#, java வருகையோடு ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது. உள்ளதை முன்னேற்றிச் செல்கிறார்கள்.. புதிதாக வருவதாகத் தெரியவில்லை அல்லது வந்தாலும் ஜாவா மற்றும் C# அளவுக்கு பிரசித்தமாவதில்லை.  C# மற்றும் ஜாவா வந்தே இப்போ 20 வருடங்கள் ஆகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் தகவல்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி நெடுக்ஸ்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல் பகிர்வுக்கு நன்றி தோழர் ..! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ். இது போல் Australian Computer Society (ACS) என்றும் ஒன்று இருந்தது
90 களில் இவை கொழும்பில் பல இடங்களில் படிப்பிக்கப்ப்ட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

முன்னர் எல்லாம் கோடிங் முழுமையாக எழுதுவோம். இப்ப எல்லாம்.. மாணவர்கள் இடைச்செருகல் தான் செய்து பிழைப்பை ஓட்டுகிறார்கள். ஆரம்ப காலத்தில்.. இருந்த கோடிங் விருத்தி நிலை இப்போ.. C#, java வருகையோடு ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது. உள்ளதை முன்னேற்றிச் செல்கிறார்கள்.. புதிதாக வருவதாகத் தெரியவில்லை அல்லது வந்தாலும் ஜாவா மற்றும் C# அளவுக்கு பிரசித்தமாவதில்லை.  C# மற்றும் ஜாவா வந்தே இப்போ 20 வருடங்கள் ஆகின்றன. 

கார்டில் பஞ்ச் பண்ணி மெயின் பிரேம் கணனியில் FORTRAN இல் ப்ரோக்ராம் எழுதியது தான் எமது முதல் அனுபவம் ।  ஒரு நாளில் இரண்டே பாட்ச் ரன்னிங் மட்டுமே
நூற்றுக்கணக்கான கார்ட்களில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான துளைகளில் ஒரு துளையாவது சரியான இடத்தில் இராவிட்டால் SYNTAX ERROR என்று துப்பி விடும் , மீண்டும் விக்கிரமாதித்தன் கதை தான் ।        வாழ்க்கை வெகு சுவாரசியமாக இருந்தது,  நன்றாக அனுபவித்திருந்தோம் 83 வரை

 

Link to comment
Share on other sites

உண்மை தான். அந்த காலத்தில் Assembly,GWBasic, Pascal, FORTRAN, Prolog, COBOL, RPG 400 (AS 400 Languages)  இல் எழுதுவதற்கும், இப்போது C#, Java இல் எழுதுவதற்கும் இடையில் எங்கையோ எதையோ இழந்த உணர்வுகள். இருந்தாலும் Python மீண்டும் C/C++ இல் எழுதும் உணர்வுகளை தருகிறது. 2020 காலங்களில் Machine Learning/AI and Data Scientist/Data Mining தான் உலகத்தை ஆளும். 

வாழ்த்துக்கள் நெடுக்ஸ். உங்கள் வளர்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். 

யாழின் தொழினுட்ப களத்தில் எம்மவர்களின் பங்களிப்பை அதிகபடுத்தவேண்டும். எங்கள் அடுத்த தலைமுறை தொழினுட்பத்தால் உலகை ஆளவேண்டும். 

RPA(Robotic Process Automation)  சம்பந்தமாக UiPath/BluePrism பற்றி ஏதாவது எழுதுவம் என்று இருக்கிறேன். நிச்சயமாக எங்கள் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் macotronics என்பது எங்கட பொடியங்களின்ட விருப்பமான courses இல ஒண்டு ।      அல்டிமேட்டா அதில் AI etc எல்லாம் வரும் gaming  வேர்டில ( world )  நல்ல காசு பார்க்கலாம் என நம்புகிறார்கள் ।       நாங்கள் எண்டால் இவங்கட வயதில பெக்கோவாகத் தான் இருந்தனாங்கள் ( இன்டர்நெட்டை கணக்கிலெடுத்துப் பார்த்தாலும் கூட)   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் தம்பி

வானுயரணும்  என்  தம்பிகள்

53 minutes ago, சாமானியன் said:

இப்போதெல்லாம் macotronics என்பது எங்கட பொடியங்களின்ட விருப்பமான courses இல ஒண்டு ।      அல்டிமேட்டா அதில் AI etc எல்லாம் வரும் gaming  வேர்டில ( world )  நல்ல காசு பார்க்கலாம் என நம்புகிறார்கள் ।       நாங்கள் எண்டால் இவங்கட வயதில பெக்கோவாகத் தான் இருந்தனாங்கள் ( இன்டர்நெட்டை கணக்கிலெடுத்துப் பார்த்தாலும் கூட)   

 

 

1981-82  காலப்பகுதியில் பம்பலப்பிட்டியில்  இவ்வாறு  கணணி  படிப்பிப்பதாக  அறிந்த

எனது  தமையனார்  படி  என்று  சேர்த்து  விட்டார்

நோட்களும் செய்முறைகளும் பிடித்திருந்தாலும்

கணணி  ஒன்றை  வாங்கும்படி கேட்டதால் (அப்பொழுதைய  விலை  தலையை  சுற்றியதால்)

அண்ணரிடம்  சொல்லாமலேயே நிறுத்தி  விட்டேன்

அப்பொழுதே  நண்பர்கள்  சொன்னார்கள்

இது தான்  இனி  உலகை  ஆளப்போகிறது என்று

தொடரந்திருந்தால்  சுந்தர் பிச்சையப்பாவின்   இடத்தில் இருநதிருக்கலாம்..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

பிரிட்டிஷ் கம்பியூட்டர் சாசைட்டி.. The British Computer Society.. BCS இல்.. நிரந்தர அங்கீகாரங்களில் ஒன்றான.. AMBCS நிலை அண்மையில் கிடைக்கப் பெற்றது. 

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

13 hours ago, nedukkalapoovan said:

தொடர்ந்திருந்து... Chartered IT ஆகி இருக்கலாம். சம்பள உயர்வுகளுக்கு உதவி இருக்குமே.

 

அப்படி ஒரு எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கனடா வந்த பின் ஒரு போதும் Management பக்கம் போக மாட்டேன் என முடிவெடுத்தமையால் Certifications கள் மட்டுமே அதிகமாக செய்தேன்..அது உழைப்புக்கு நல்ல பலனைக் கொடுக்கின்றது.

13 hours ago, nedukkalapoovan said:

 

முன்னர் எல்லாம் கோடிங் முழுமையாக எழுதுவோம். இப்ப எல்லாம்.. மாணவர்கள் இடைச்செருகல் தான் செய்து பிழைப்பை ஓட்டுகிறார்கள். ஆரம்ப காலத்தில்.. இருந்த கோடிங் விருத்தி நிலை இப்போ.. C#, java வருகையோடு ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது. உள்ளதை முன்னேற்றிச் செல்கிறார்கள்.. புதிதாக வருவதாகத் தெரியவில்லை அல்லது வந்தாலும் ஜாவா மற்றும் C# அளவுக்கு பிரசித்தமாவதில்லை.  C# மற்றும் ஜாவா வந்தே இப்போ 20 வருடங்கள் ஆகின்றன. 

இப்ப இன்னும் நிறைய நிறைய புதிய விடயங்களை புகுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். .Net ஒரு கடல் மாதிரி விரிந்து கொண்டே செல்கின்றது.  சில வருடங்களுக்கு முன்னர் MVC இனை புகுத்தினார்கள், இப்ப .Net core கொண்டு வந்து அசத்தி கொண்டு இருக்கின்றார்கள்.

12 hours ago, colomban said:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ். இது போல் Australian Computer Society (ACS) என்றும் ஒன்று இருந்தது
90 களில் இவை கொழும்பில் பல இடங்களில் படிப்பிக்கப்ப்ட்டது.

இதையும் நான் செய்து MACS ஆக இருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்...கல்யாணம் கட்டினாலும் படிப்பிலும் தொடர்ந்து முன்னேறுவது சிறப்பு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும் ஊக்குவிப்பும் நல்கிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.