Jump to content

தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார் : சீ.யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார் : சீ.யோகேஸ்வரன்

Yogeswaran-720x450.jpg

நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீ.யோகேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வாழைச்சேனை கடதாசி ஆலை 1956ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகள் காலம் வரையிலும் சிறப்பாக இயங்கிவந்தது. தேசிய வர்த்தக விருதும் அன்றைய காலத்தில்பெற்றுக்கொண்டது.

அக்காலத்தில் வயிக்கோல் மூலம் மட்டுமல்லாமல் கழிவு கடதாசிகள் கொண்டும் உற்பத்திகள் நடைபெற்றன. இன்று கழிவுக்கடதாசிகள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

ஆனால் அக்கடதாசி கழிவுகளை இங்கு பயன்படுத்த முடியும். இதன்மூலம் பல உற்பத்திகளை செய்யமுடியும்.

மேலும் வாழைச்சேனை கடதாசி ஆலையில் 3000க்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றினர். ஆனால் தற்போது அவர்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் வறுமையில் வாழ்கின்றனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையினை மீண்டும் இயங்குவதற்காக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம்.

இதன்போது சீனாவின் உதவியுடன் அதனை இயக்குவதற்கு,ஏற்பாடுகளை மேற்கொண்டு இறுதிக்கட்டம் எட்டப்படும்போது, வடக்கு- கிழக்கில் சீனாவினை அனுமதிக்கமுடியாதென என பிரதமர் ரணில் கூறினார்.இதனால் அத்திட்டத்தை கைவிட்டோம்.

அதனைத் தொடர்ந்து கொரியாவின் உதவியுடன் தொழிற்சாலையினை முழுமையாக புனரமைத்து, மீள இயங்கச்செய்வதாக தெரிவித்ததை தொடர்ந்து அது தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் பிரதமர், குறித்த தொழிற்சாலையில் தொழில்நுட்ப பூங்கா செய்யவேண்டும், சுற்றுலாத் துறையினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று கூறி வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு வந்த 20மில்லியன் டொலர்களையும் எம்பிலியப்பிட்டியவுக்கு கொண்டுசென்று அதனை அபிவிருத்தி செய்தார்.

தற்போது அபுதாபியிலிருந்து தமிழர்களின் ஒத்துழைப்புடன் 20000மில்லியன் டொலர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் நிதி வழங்குவதற்கு தயாராகவுள்ளது.

இவ்வாறு வாழைச்சேனை கடதாசி ஆலையினை புனரமைத்து மீள இயங்கச்செய்வதற்கு தேவையான நிதியுதவிகளை வழங்க பலர் தயாராகவுள்ளனர். ஆனால் அதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு தயங்குகின்றது.

அந்தவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இதற்கான தடைகளை ஏற்படுத்துகின்றார். சிங்கள மக்கள் மட்டுமே வாழவேண்டும், தமிழர்களை மழுங்கடிக்கவேண்டும் என அவர் கருதுகின்றார்.

மேலும் தொழிற்சாலையை மீள இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதமர் தொடர்ச்சியாக தயக்கம் காட்டுகின்றார்” என சீ.யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

http://athavannews.com/தமிழர்களை-மழுங்கடிக்கவே/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.