Jump to content

சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர்


Recommended Posts

சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர்

 

suren-raghavan-300x200.jpgசிறிலங்கா அதிபரின் ஒப்புதலைப் பெறாமலேயே ஜெனிவா தீர்மானத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகளில் ஒருவராக ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்ற சுரேன் ராகவன், நாடு திரும்பிய பின்னர், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா தீர்மானத்துக்கு, பிரதமர் செயலகத்தில் உள்ள தனி நபர் ஒருவரே அங்கீகாரம் அளித்திருந்தார்.

அதற்கு அவர் சிறிலங்கா அதிபரின் அனுமதியையோ, வேறெந்த அதிகாரிகளின் ஒப்புதலையே பெற்றிருக்கவில்லை.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்,சிறிலங்காவுக்கு அனைத்துலக சமூகம் உத்தரவிட முடியாது.

சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய உறுதிமொழிகளை  செயற்படுத்த தவறிவிட்டது என்று கூறும் தரப்பினர், அனைத்துலக நீதி பொறிமுறையினை நாட முயற்சிக்கின்றமை நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும்.

அனைத்துலக நீதிபதிகளை உள்வாங்கும் முயற்சிகள்  சாத்தியமற்றது.

ஜெனிவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்கள்   நாட்டின் சுயாதீனதன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றப்படும்.

இதற்கு எந்தத் தரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/03/26/news/37077

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரு உங்கட கமே றால வாசிக்கச்சொல்லி எழுதிக்கொடுத்த பத்தியோ ....
அப்படியே கமே றாலவிடம் சொல்லுங்கோ இந்த தேர்தலோடு பொலன்னறுவைக்கு பெட்டியை கட்டவேண்டியது தான் கிம்புள்ள உதல்லவுடன் (முதலை மண்வெட்டியுடன்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது முன்னமே எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே??

கதிர்காமர் நம்பர் 2 !!!!!

உங்களைச் சும்மாவா சிங்களவன் அரியனையில் ஏற்றி அழகு பார்க்கிறான் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரஞ்சித் said:

இது முன்னமே எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே??

கதிர்காமர் நம்பர் 2 !!!!!

உங்களைச் சும்மாவா சிங்களவன் அரியனையில் ஏற்றி அழகு பார்க்கிறான் ? 

படித்த  தமிழர்கள்

பிழைப்புக்காக எம்மை  விற்பது

வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....😥😥😥

Link to comment
Share on other sites

7 hours ago, விசுகு said:

படித்த  தமிழர்கள்

பிழைப்புக்காக எம்மை  விற்பது

வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....😥😥😥

படிக்காத தமிழர்கள் மட்டும் கிழித்தார்களா 

முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் நாசம் பண்ணினார்களே 😡

Link to comment
Share on other sites

12 minutes ago, ஜீவன் சிவா said:

படிக்காத தமிழர்கள் மட்டும் கிழித்தார்களா 

முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் நாசம் பண்ணினார்களே 😡

எந்த திரியில் எவர் எதை எழுதினாலும், அதில் வந்து இவ்வாறு புலிகளை இழுத்து காழ்ப்புணர்வுடன் எழுதி திரியினை திசை திருப்புவது என்பது கருத்தாடல் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும். யாழ் களம் புலிகள் மீதான நேர்மையான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனபதை நினைவில் கொள்க.

ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு எதிரான போக்கு தொடருமாயின் அதை தவிர்க்க எம்மாலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Link to comment
Share on other sites

அப்பாடி பொண்டாட்டிட்ட அடி வாங்கினாலும் பழி புலி மேல தான் போல இருக்கு. 

Link to comment
Share on other sites

2 minutes ago, நிழலி said:

எந்த திரியில் எவர் எதை எழுதினாலும், அதில் வந்து இவ்வாறு புலிகளை இழுத்து காழ்ப்புணர்வுடன் எழுதி திரியினை திசை திருப்புவது என்பது கருத்தாடல் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும். யாழ் களம் புலிகள் மீதான நேர்மையான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனபதை நினைவில் கொள்க.

ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு எதிரான போக்கு தொடருமாயின் அதை தவிர்க்க எம்மாலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புலிகளின் பாணியில் இந்த யாழும் இயங்குகிறதென்றால் - அதை வெளிப்படையாக யாழின் கள விதிமுறைகள் பகுதியில் வெளிப்படையாக எழுதலாமே.

புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று.

நடிப்பு???  🤣🤣🤣

இந்த மிரட்டல் பலிக்காது 

முடிந்தால் என்னையும் தடை செய்யவும் - உங்களுக்கு இது புதிதா 

Link to comment
Share on other sites

1 minute ago, ஜீவன் சிவா said:

 

புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று.

 

விடுதலைப் புலிகள் மீதான ஆரோக்கியமான நேர்மையான விமர்சனங்களை தவிர புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு  ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இதற்கு மேல் எந்தவித விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

புலிகளின் பாணியில் இந்த யாழும் இயங்குகிறதென்றால் - அதை வெளிப்படையாக யாழின் கள விதிமுறைகள் பகுதியில் வெளிப்படையாக எழுதலாமே.

புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று.

நடிப்பு???  🤣🤣🤣

இந்த மிரட்டல் பலிக்காது 

முடிந்தால் என்னையும் தடை செய்யவும் - உங்களுக்கு இது புதிதா 

சகோ

கருத்துக்களத்தில் சில  விதிகளும்  

அவர்களது இணையத்துக்கென்று  சில  கொள்கைகளும்  இருக்கின்றன

அதில்  வந்து  எழுத  தொடங்குமுன்  அவற்றை  அறிந்திருக்கணும்

அல்லது அனுபவத்தில் தெரிய  வந்திருக்கணும்

மேலே  நிழலி தெளிவாகக்குறிப்பிட்டுள்ளார்

எல்லா  திரிகளிலும்

மற்றும்  யாழ் களம் புலிகள் மீதான நேர்மையான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும்  என்றும்.

இவற்றை  கருத்தில்  கொள்ளுங்கள்

நாங்கள் வேறு  பல  விடயங்களில்  ஒன்றாக  பயணிக்க வேண்டிய  தேவை  இருக்கிறது

நன்றி

Link to comment
Share on other sites

On 3/26/2019 at 10:25 AM, நிழலி said:

எந்த திரியில் எவர் எதை எழுதினாலும், அதில் வந்து இவ்வாறு புலிகளை இழுத்து காழ்ப்புணர்வுடன் எழுதி திரியினை திசை திருப்புவது என்பது கருத்தாடல் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும். யாழ் களம் புலிகள் மீதான நேர்மையான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனபதை நினைவில் கொள்க.

ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு எதிரான போக்கு தொடருமாயின் அதை தவிர்க்க எம்மாலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நிழலி,

அவர் படிக்காத தமிழர்களை பெருமளவில் கொண்ட ஒரு அமைப்புக்கும் அதன் முன்னெடுப்பில் ஏற்பட்ட அழிவிற்கும் ஒரு உதாரணத்தை காட்டி இருக்கிறார். அது எவ்வகையில் ஆரோக்கியமற்ற கருத்தாடலாக அமையும்? 

On 3/26/2019 at 3:07 AM, விசுகு said:

படித்த  தமிழர்கள்

பிழைப்புக்காக எம்மை  விற்பது

வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....😥😥😥

இது ஒட்டு மொத்தமாக படித்த தமிழர்களை அவதூறு செய்வதாக இல்லையா? 

பல படித்த தமிழர்களுக்கு சுக வாழ்வு எங்கும் கிடைக்கும். அவர்களை அவதூறு செய்தால் அவர்களின் அறிவு எங்கள் மக்களுக்கு என்றும் பயன் தராது.

On 3/26/2019 at 10:12 AM, ஜீவன் சிவா said:

படிக்காத தமிழர்கள் மட்டும் கிழித்தார்களா 

முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் நாசம் பண்ணினார்களே 😡

எனக்கு இந்த கேள்வியும் உதாரணமும் நியாயமானதாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் முதலாக....அவரை வணங்கும் வாரிசுகள் ஈறாகத் தூக்கித் திரியிறது....பிட்சா பாத்திரம்!

இருக்கிற திமிருக்கு மட்டும்....ஒரு குறைச்சலும் இல்லை!😚

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நிழலி,

அவர் படிக்காத தமிழர்களை பெருமளவில் கொண்ட ஒரு அமைப்புக்கும் அதன் முன்னெடுப்பில் ஏற்பட்ட அழிவிற்கும் ஒரு உதாரணத்தை காட்டி இருக்கிறார். அது எவ்வகையில் ஆரோக்கியமற்ற கருத்தாடலாக அமையும்? 

இது ஒட்டு மொத்தமாக படித்த தமிழர்களை அவதூறு செய்வதாக இல்லையா? 

பல படித்த தமிழர்களுக்கு சுக வாழ்வு எங்கும் கிடைக்கும். அவர்களை அவதூறு செய்தால் அவர்களின் அறிவு எங்கள் மக்களுக்கு என்றும் பயன் தராது.

எனக்கு இந்த கேள்வியும் உதாரணமும் நியாயமானதாகவே தெரிகிறது.

படிக்காத தமிழர்கள் என்று ஒரு விடுதலை அமைப்பை விமர்சித்தது தன்னிச்சையானதல்ல. இது படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம். தாம் மட்டுமே படித்தவர்கள் என்கிற அகம்பாவத்தில் வெளிவரும் செருக்கு. ஆனால், புலிகளியக்கம் முட்டாள்களில்லை என்பது உங்களுக்கும் தெரியும். 

அவ்வாறே, குகன் மேற்கோள் காட்டிய படித்த தமிழர்கள் என்பது எல்லோரையும் அல்ல, மாறாக தமது அறிவுத்திறமையை சிங்களவர்களுக்குச் சேவை செய்ய மட்டுமே பாவிக்கும் கதிர்காமர் சுரேன் போன்றவர்களைத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

 

இங்கே கருத்து அகற்றப்பட்டது இந்த ஒற்றைக் கருத்தினை மட்டுமே வைத்து அல்ல. எக்கருத்தை எவர் எழுதினாலும், அதைத் திசை திருப்பி புலிகள்மீது தனக்கிருக்கும் வக்கிரத்தைக் காட்டுவதற்குப் பயன்படுத்துவதனால்த்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. அழுத்தம் கொடுக்குது என்கிறார்கள்....
ஆளுநர் அழுத்தம் கொடுக்க முடியாது என்கிறார்...
இதிலை ஆரப்பா...பெரிசு?

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

படிக்காத தமிழர்கள் என்று ஒரு விடுதலை அமைப்பை விமர்சித்தது தன்னிச்சையானதல்ல. இது படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம். தாம் மட்டுமே படித்தவர்கள் என்கிற அகம்பாவத்தில் வெளிவரும் செருக்கு. .

பெருமளவில் பல்கலைக்கழக மட்டத்திலான கல்வி அறிவு கொண்டவர்களால் வழி நடத்தப்படாத போராட்டம் என்ற கருத்திலேயே அவர் எழுதி இருப்பதாகவே எனக்கு தெரிகிறது. நீங்கள் “படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம்” என்று ஒரு குறிப்பிட்ட, வசதியான வாழ்வு கொண்ட மக்கள் மீது கோபம் கொண்டு இருப்பதாகவே உங்கள் கருத்து காட்டுகிறது.

2 hours ago, ரஞ்சித் said:

. ஆனால், புலிகளியக்கம் முட்டாள்களில்லை என்பது உங்களுக்கும் தெரியும். .

அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனால் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில்    தோல்விக்கான காரணங்களை உணர்ச்சிவசப்படாமல்   ஆராய்ந்து பார்த்தால் பல விடயங்கள் வேறு விதமாக செய்யப் பட்டு இருக்கலாம் என்று அவர்களே சொல்லக்கூடும். அதில் தேவையான துறைகளில் கல்வி அறிவு கொண்டவர்களை போதிய அளவில் உள்வாங்கி அவர்களின் கருத்துக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத்தும் ஓன்றாக அமையும். சிறிலங்கா போர்க்காலத்தில்  கல்வி அறிவு கொண்டவர்களை பெருமளவில் இணைத்து செயல் பட்டது. கதிர்காமரும் அவர்களில் ஒருவர்.  

2 hours ago, ரஞ்சித் said:

. அவ்வாறே, குகன் மேற்கோள் காட்டிய படித்த தமிழர்கள் என்பது எல்லோரையும் அல்ல, மாறாக தமது அறிவுத்திறமையை சிங்களவர்களுக்குச் சேவை செய்ய மட்டுமே பாவிக்கும் கதிர்காமர் சுரேன் போன்றவர்களைத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்..

அவர் பொதுவாக எல்லா படித்த தமிழரையும் பற்றி எழுதியதாகவே எனக்கு பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எழுதியது குறிப்பிட்ட ஒரு சிலரை தான் ஆனால் இவர் எழுதியது எல்லாரையும் தான்..

என்னமா நடிக்கிறாங்கப்பா.....

 

Link to comment
Share on other sites

19 minutes ago, MEERA said:

அவர் எழுதியது குறிப்பிட்ட ஒரு சிலரை தான் ஆனால் இவர் எழுதியது எல்லாரையும் தான்..

என்னமா நடிக்கிறாங்கப்பா.....

 

படித்த தமிழருள் நீங்கள் அடங்க மாட்டீர்கள் இல்லையா? அப்படித்தான் உங்கள் கருத்து சொல்கிறது. நானும் இல்லை என்று சொல்லவில்லை. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

படிக்காத தமிழர்கள் என்று ஒரு விடுதலை அமைப்பை விமர்சித்தது தன்னிச்சையானதல்ல. இது படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம். தாம் மட்டுமே படித்தவர்கள் என்கிற அகம்பாவத்தில் வெளிவரும் செருக்கு. ஆனால், புலிகளியக்கம் முட்டாள்களில்லை என்பது உங்களுக்கும் தெரியும். 

அவ்வாறே, குகன் மேற்கோள் காட்டிய படித்த தமிழர்கள் என்பது எல்லோரையும் அல்ல, மாறாக தமது அறிவுத்திறமையை சிங்களவர்களுக்குச் சேவை செய்ய மட்டுமே பாவிக்கும் கதிர்காமர் சுரேன் போன்றவர்களைத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

 

இங்கே கருத்து அகற்றப்பட்டது இந்த ஒற்றைக் கருத்தினை மட்டுமே வைத்து அல்ல. எக்கருத்தை எவர் எழுதினாலும், அதைத் திசை திருப்பி புலிகள்மீது தனக்கிருக்கும் வக்கிரத்தைக் காட்டுவதற்குப் பயன்படுத்துவதனால்த்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

ரஞ்சித், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஒருவர் கொஞ்சம் அறிவார்த்தமாகவும் எழுதக்கூடியவர். மற்றவர் சுத்தம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஒருமைப்பாட்டுக்காக பல தமிழர்கள்( படித்த /படிக்காத) உழைத்துள்ளார்கள் தொடர்ந்தும் உழைத்து கொண்டிருக்கிறார்கள்....சேர் .பொன் ராமநாதன் முதல் சுமத்திரன் வரை (படித்த) சில முன்னாள்  ஆயுதக்குழுக்கள் (படிக்காத).....சிங்களகட்சிகள் இவ‌ர்களின் உழைப்பை கண்டு கொள்ளவில்லை இனியும் கண்டு கொள்ளப்போவதுமில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட ரீதியில் பொது வெளியில் சுட்டிக்காட்டுவதால்  ஆகப்போவது ஒன்றுமில்லை , செய்வதற்கு எவ்வளவோ இருக்கின்றது 

 

ஆமாம் படித்தவர் என்பதற்கு எதாவது வரைவிலக்கணம் இருக்கிறதா  ( அறிவாளியைப் பற்றி இங்கே சொல்ல வரவில்லை )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

பெருமளவில் பல்கலைக்கழக மட்டத்திலான கல்வி அறிவு கொண்டவர்களால் வழி நடத்தப்படாத போராட்டம் என்ற கருத்திலேயே அவர் எழுதி இருப்பதாகவே எனக்கு தெரிகிறது. நீங்கள் “படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம்” என்று ஒரு குறிப்பிட்ட, வசதியான வாழ்வு கொண்ட மக்கள் மீது கோபம் கொண்டு இருப்பதாகவே உங்கள் கருத்து காட்டுகிறது.

அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனால் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில்    தோல்விக்கான காரணங்களை உணர்ச்சிவசப்படாமல்   ஆராய்ந்து பார்த்தால் பல விடயங்கள் வேறு விதமாக செய்யப் பட்டு இருக்கலாம் என்று அவர்களே சொல்லக்கூடும். அதில் தேவையான துறைகளில் கல்வி அறிவு கொண்டவர்களை போதிய அளவில் உள்வாங்கி அவர்களின் கருத்துக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத்தும் ஓன்றாக அமையும். சிறிலங்கா போர்க்காலத்தில்  கல்வி அறிவு கொண்டவர்களை பெருமளவில் இணைத்து செயல் பட்டது. கதிர்காமரும் அவர்களில் ஒருவர்.  

அவர் பொதுவாக எல்லா படித்த தமிழரையும் பற்றி எழுதியதாகவே எனக்கு பட்டது. 

ஜூட்,

பெருமளவு பல்கலைக்கழக பட்டதாரிகளால் எமது போராட்டம் வழிநடத்தப்படவில்லையாயினும், பல பல்கலைக்கழக அனுமதி பெற்ற, பெறத்தகுதி கிடைத்த இளைஞர்கள் போராட்டத்தில் பங்காற்றியிருந்தனர். ஆனால், “படிக்காதவர்கள்” என்று மேற்கோள் காட்டப்பட்டது விசமத்தனமாக தலைவர் பிரபாகரனைத்தான் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. முழுக்க முழுக்க புலிகளின் தலைவரைக் கிண்டலடிக்கும் நோக்கம் மட்டுமே அங்கிருந்தது.

அடுத்ததாக, படித்த மேல்த்தர வர்க்கம் என்று நான் குறிப்பிட்டது மொத்த குழுமத்தையும் அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஒரு அரசியல்க் கட்சியில் சட்டத்தரணிகளாக இருக்கும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு போராட்டம் மீதும் புலிகள் மீதும் கல்விதொடர்பாக இருக்கும் ஏளனத்தைத்தான்.

குகனது மேற்கோள், கதிர்காமரின் இன்றைய  வடிவம்தான் சுரேன் என்னும் எனது ஒப்பீட்டின் தொடர்ச்சியே. அதாவது, கதிர்காமர், சுரேன் போன்ற படித்தவர்களின் செயற்ப்பாட்டை மட்டுமேயன்றி, எல்லா படித்தவர்களையும் நோக்கி அல்ல. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் படிக்காத தமிழர்கள் என்று யாராவது இருக்கிறார்களா....எனக்கு தெரிந்து இப்ப அப்படி யாரும் இல்லை..... குறைந்தபட்சம் பத்திரிகைகள் படிக்கிற அளவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்து போடக்கூடியவர்களாகவும்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.........!  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இலங்கையில் படிக்காத தமிழர்கள் என்று யாராவது இருக்கிறார்களா....எனக்கு தெரிந்து இப்ப அப்படி யாரும் இல்லை..... குறைந்தபட்சம் பத்திரிகைகள் படிக்கிற அளவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்து போடக்கூடியவர்களாகவும்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.........!  🙂

இங்கிலிஸில் பந்தி பந்தியா வாசித்து பந்தி பந்தியா எழுதவேணும்.....
மொட்டைகடிதம் ....எழுதினால் படிக்காதவன்
பெட்டிசன் போட்டால் ...படிச்சவன்..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடமிருந்து  இக்கருத்தை எதிர்பார்க்கவில்லை

படித்த  தமிழர்கள்

பிழைப்புக்காக எம்மை  விற்பது

வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....😥😥😥

 

படித்த  தமிழர்களை  அவர்களது  படிப்புக்காகவே  நம்பினோம்

பின்  சென்றோம்

அதே  படிப்பை  (அறிவை)

வைத்து  எம்மை  ஏமாற்றிய  வரலாற்றைத்தான்  குறிப்பிட்டேன்

அது   வரலாற்றில்  எம்மை  ஏமாற்றியவர்களை  மட்டுமே  குறிக்கும்  என்பது 

உங்களுக்கு  புரியாதது அல்ல

இருந்தாலும்........????

அடுத்தது  

படிக்காதவர்களின்  பின்னால்  சென்றதற்கு

அவர்கள்  படிக்கவில்லை  என்பது  காரணமல்ல

அவர்களது செயல்களே  காரணம்...

4 hours ago, Jude said:

 

அவர் பொதுவாக எல்லா படித்த தமிழரையும் பற்றி எழுதியதாகவே எனக்கு பட்டது. 

 

Link to comment
Share on other sites

17 hours ago, ரஞ்சித் said:

ஜூட்,

பெருமளவு பல்கலைக்கழக பட்டதாரிகளால் எமது போராட்டம் வழிநடத்தப்படவில்லையாயினும், பல பல்கலைக்கழக அனுமதி பெற்ற, பெறத்தகுதி கிடைத்த இளைஞர்கள் போராட்டத்தில் பங்காற்றியிருந்தனர். ஆனால், “படிக்காதவர்கள்” என்று மேற்கோள் காட்டப்பட்டது விசமத்தனமாக தலைவர் பிரபாகரனைத்தான் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. முழுக்க முழுக்க புலிகளின் தலைவரைக் கிண்டலடிக்கும் நோக்கம் மட்டுமே அங்கிருந்தது.

அடுத்ததாக, படித்த மேல்த்தர வர்க்கம் என்று நான் குறிப்பிட்டது மொத்த குழுமத்தையும் அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஒரு அரசியல்க் கட்சியில் சட்டத்தரணிகளாக இருக்கும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு போராட்டம் மீதும் புலிகள் மீதும் கல்விதொடர்பாக இருக்கும் ஏளனத்தைத்தான்.

குகனது மேற்கோள், கதிர்காமரின் இன்றைய  வடிவம்தான் சுரேன் என்னும் எனது ஒப்பீட்டின் தொடர்ச்சியே. அதாவது, கதிர்காமர், சுரேன் போன்ற படித்தவர்களின் செயற்ப்பாட்டை மட்டுமேயன்றி, எல்லா படித்தவர்களையும் நோக்கி அல்ல. 

 

 

உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றி. மைக்கிரோ சொவ்ற் நிறுவனர் பில்.   கேற்ஸ், விஞ்ஞானி அயன்ஸ்ரைன்  போன்ற பல்கலைக்கழக பட்டப் படிப்பு முடிக்காதோர் வரிசையில்  விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும்  தான்  தேர்ந்து  கொண்ட துறையில்  நிகரில்லாத அறிஞர்  என்பதில்  மாற்றுக் கருத்து இல்லை.  

14 hours ago, விசுகு said:

 

அடுத்தது  

படிக்காதவர்களின்  பின்னால்  சென்றதற்கு

அவர்கள்  படிக்கவில்லை  என்பது  காரணமல்ல

அவர்களது செயல்களே  காரணம்...

 

டக்ளஸ்,  கருணா,  பிள்ளையான்  பின்னால்  போனவர்களை பற்றி தானே  எழதுகிறீர்கள்?   இல்லையா?

14 hours ago, விசுகு said:

படித்த  தமிழர்களை  அவர்களது  படிப்புக்காகவே  நம்பினோம்

பின்  சென்றோம்

அதே  படிப்பை  (அறிவை)

வைத்து  எம்மை  ஏமாற்றிய  வரலாற்றைத்தான்  குறிப்பிட்டேன்

அது   வரலாற்றில்  எம்மை  ஏமாற்றியவர்களை  மட்டுமே  குறிக்கும்  என்பது 

 

 

படிக்காத கருணா உங்களை  ஏமாற்றவில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.