Jump to content

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு


Recommended Posts

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு

 

tourist-arrival-300x200.jpgவரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.

பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நுழைவிசைவு கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் வெற்றியைப் பொறுத்து, இதனை நீடிப்பதா- இல்லையா என்று முடிவு செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/03/25/news/37058

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்க லே கூட்டத்துக்கு நல்லா பின்பக்கம் காயுது என்று தெரியுது , மிகவிரைவில் புல் தின்பார்கள் 
வரி வரி என்று ஒருபக்கம், விலையேற்றம் ஒருபக்கம் ,மின்வெட்டு ஒருபக்கம் என்று  சனம் கொலைவெறியில்.... 
இது போதாது என்று திரும்பவும் சீனாவிடம் பெக்கிங் , போதாக்குறைக்கு  வாற சுற்றுலாப்பிரயாணிகளிடமும் பாலியல் துர்நடத்தை, நாடே நாறுதாம் என்று கேள்வி ...
ஓய் @தனி உண்மையா கேள்விப்பட்டதெல்லாம் .....?  EPF ,ETF இற்கும் வரி ஆரம்பித்திருக்கிறார்களாமே ,
செத்தானுகள் தனியார்துறை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

சிங்க லே கூட்டத்துக்கு நல்லா பின்பக்கம் காயுது என்று தெரியுது , மிகவிரைவில் புல் தின்பார்கள் 
வரி வரி என்று ஒருபக்கம், விலையேற்றம் ஒருபக்கம் ,மின்வெட்டு ஒருபக்கம் என்று  சனம் கொலைவெறியில்.... 
இது போதாது என்று திரும்பவும் சீனாவிடம் பெக்கிங் , போதாக்குறைக்கு  வாற சுற்றுலாப்பிரயாணிகளிடமும் பாலியல் துர்நடத்தை, நாடே நாறுதாம் என்று கேள்வி ...
ஓய் @தனி உண்மையா கேள்விப்பட்டதெல்லாம் .....?  EPF ,ETF இற்கும் வரி ஆரம்பித்திருக்கிறார்களாமே ,
செத்தானுகள் தனியார்துறை 

இனி 24 மணியும் தடையற்ற

வெட்டில்லா  மின்சாரம் என  போன  கிழமை  அறிக்கை  ஒன்று  பார்த்த ஞாபகம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தடவையும் 35 டாலர் கட்டவேண்டி இருக்கே என்று மீரா கவலைப்பட்டார்.

இந்த 6 மாதத்துக்குள் போய்வந்துடுங்க சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொரு தடவையும் 35 டாலர் கட்டவேண்டி இருக்கே என்று மீரா கவலைப்பட்டார்.

இந்த 6 மாதத்துக்குள் போய்வந்துடுங்க சார்.

நன்றி ஈழப்பிரியன்.

இந்த வருடம் ஏற்கனவே 2 தடவை கட்டியாச்சு, பார்க்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

நன்றி ஈழப்பிரியன்.

இந்த வருடம் ஏற்கனவே 2 தடவை கட்டியாச்சு, பார்க்கலாம்....

மீரா கொழும்பில் நிற்கிற வேளையில் ஒருக்கா இமிகிரேசன் பக்கம் போய் மல்ரிப்பிள் விசாவைப்பற்றி ஆராயலாமே?
சிலவேளை அங்கே கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இனி 24 மணியும் தடையற்ற

வெட்டில்லா  மின்சாரம் என  போன  கிழமை  அறிக்கை  ஒன்று  பார்த்த ஞாபகம்??

ஊர் உலகம் முழுக்க பில்லியன் கணக்கில் கடன் எடுத்தும் நாட்டை சீர்செய்யமுடியாமல் தவிக்கின்றார்கள்.
இங்கே ஈழத்தமிழர்கள் மார்தட்ட முடியும்.
எங்களை பிரித்து விடுங்கள்.எமக்கு பத்து வருடங்கள் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

மீரா கொழும்பில் நிற்கிற வேளையில் ஒருக்கா இமிகிரேசன் பக்கம் போய் மல்ரிப்பிள் விசாவைப்பற்றி ஆராயலாமே?
சிலவேளை அங்கே கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

ஈழப்பிரியன், long term multiple விசா British passport ற்கு இல்லையாம்.

3 மாதம் தொடர்ச்சியாக (இலங்கையை விட்டு வெளியேறாது) இருந்தால் பிறப்பு சான்றிதழுடன் 1 வருட வதிவிட விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்க லே கூட்டத்துக்கு நல்லா பின்பக்கம் காயுது என்று தெரியுது , மிகவிரைவில் புல் தின்பார்கள் 
வரி வரி என்று ஒருபக்கம், விலையேற்றம் ஒருபக்கம் ,மின்வெட்டு ஒருபக்கம் என்று  சனம் கொலைவெறியில்.... 
இது போதாது என்று திரும்பவும் சீனாவிடம் பெக்கிங் , போதாக்குறைக்கு  வாற சுற்றுலாப்பிரயாணிகளிடமும் பாலியல் துர்நடத்தை, நாடே நாறுதாம் என்று கேள்வி ...
ஓய் @தனி உண்மையா கேள்விப்பட்டதெல்லாம் .....?  EPF ,ETF இற்கும் வரி ஆரம்பித்திருக்கிறார்களாமே ,
செத்தானுகள் தனியார்துறை 

எல்லா கோதாரிகளையும் ஆரம்பிக்குறானுகள் மாதம் 30000 ஆயிரம் சம்பளம் கொடுக்கிறானுகள் செலவு லட்சத்தை தாண்டும் போல் உள்ளது கேட்டால் பொருளாதார மாற்றமாம் இரவு தூங்கி எழும்பினால் எல்லா பொருளுக்கும் விலையேற்றம் என்ன செய்வது என்று புரியல முந்தி 1000 ரூபா மாத்தினால் ஓரளவு கைக்குள்ள பிரளும் இப்ப 5000 ரூபா மாத்தினால் கூட கைக்குள்ள ஒன்றும் நிற்குதில்லை 
 

21 hours ago, விசுகு said:

இனி 24 மணியும் தடையற்ற

வெட்டில்லா  மின்சாரம் என  போன  கிழமை  அறிக்கை  ஒன்று  பார்த்த ஞாபகம்??

ம்கும் பங்குனி வெயில் எல்லா பக்கமும் காய வைக்கிறது மண்டை சூடாகி முடியும் நரைக்கிறது இதுக்குள்ள செயற்கை மழையாம் என்று சொன்னாங்கள் செய்தியும் வந்தது பெய்விச்சாங்களாம் என்று ஆனால் மின் வெட்டு தொடர்கிறது 

8 hours ago, குமாரசாமி said:

ஊர் உலகம் முழுக்க பில்லியன் கணக்கில் கடன் எடுத்தும் நாட்டை சீர்செய்யமுடியாமல் தவிக்கின்றார்கள்.
இங்கே ஈழத்தமிழர்கள் மார்தட்ட முடியும்.
எங்களை பிரித்து விடுங்கள்.எமக்கு பத்து வருடங்கள் தேவையில்லை.

எங்களின்ற அரசியல் வாதிகளை ஒரு விலை பேசி எடுத்து விட்டு சொல்லுங்கள் 
எங்களுக்கு வேண்டாம் வேண்டுமென்றால் நீங்கள் அவர்களை வைத்துக்கொள்ளுங்கள் ஐந்து வருடம் போதும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.