Jump to content

200 ரூக்கு கட்சி கூட்டத்திற்கு போகும் பெண்களின் கண்ணீர் கதை ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதை கேளு.. கதை கேளு... 200 ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு..!

campaign445-1553580537.jpg

சென்னை: முதல் நாள் இரவில் குடித்துவிட்டு வரும் கணவர்களால் அடுத்த நாள் காலையில் வீட்டில் உலை வைக்க காசு இல்லாத நிலையில் தான் பல வீட்டில் பெண்கள் தவிக்கிறார்கள். கிடைக்கும் அந்தக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், கட்சிகள் தரும் ரூ.200க்காக கோஷம் போட சென்று வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை தான் இது...

இப்போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள், மனைவி மற்றும் குழந்தைகளை விட, குடிதான் பெரிசு என்ற அளவுக்கு முழு நேரமும் மதுவுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். முன்பெல்லாம் ஏதேனும் விஷேசம் என்றால் குடித்துவந்த ஆண்கள், தினசரி குடிகாரர்களாக மாறிவிட்டார்கள். அதிலும் பலர் பகல் நேரக் குடிகாரர்களாகவே மாறிவிட்டனர்..இதனால் இவர்களது மனைவி அல்லது தாய் வருமானத்துக்கு வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்துக்காக தினசரி ரூ.200 சம்பளத்துக்கு பல பெண்கள் செல்கிறார்கள்.

பரிதவிக்கும் மனைவி

எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு ஆட்டோ ஓட்டுநர் இருக்கிறார். ஒரு நாளைக்கு அவர் ரூ.700 முதல் ரூ.1000 சம்பாதிக்கிறார்... அதில் ஆட்டோ வாடகையாக 250 கொடுத்துவிடுவார். மீதமுள்ள ரூ.600ல், சாப்பாடு செலவு பெட்ரோல் செலவு என போக சுமார் 300 தான் நிற்கும். அந்த காசோடு அப்படியே இரவு டாஸ்மாக்குக்கு செல்லும் அவர் குறைந்தது குவாட்டர் முதல் ஆப் அடித்துவிட்டே வீட்டுக்கு வருகிறார். இதனால் அவர் வீட்டுக்கு காசே தருவதில்லை. என்றாவது ஒரு நாள் தான் ரூ.1000க்கு அவருக்கு ஓடும். அப்படி ஓடும் நாளில் தான் 200 ரூபாயோ, 100 ரூபாயோ மனைவிக்கு அவர் தருவார். இதனால் அவரது மனைவி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்கிறார்.

குடியால் இழந்த பணம்

இதேபோல் எனது பக்கத்துவீட்டில் வசிக்கும் கொத்தனாருக்கு தினசரி சம்பளம் ரூ.700, அவருக்கு 2 குழந்தைகள், ஒரு குழந்தை பெரியவள் ஆகிவிட்டாள். இன்னொரு குழந்தை படித்துவருகிறான். தினமும் இவர் குடித்துவிட்டு வருவதால், இவர்களது குடும்பத்துக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. எல்லா நாட்களும் வேலை இருக்காது என்பதால் வறுமையில் பிடியில் குடும்பம் தவிக்கிறது. கொத்தனாரின் மனைவி தினமும் 180 ரூபாய் சம்பளத்துக்கு அருகில் உள்ள கடைக்கு செல்கிறார்.

பயன்படுத்தும் கட்சிகள்

இந்த மாதிரி ஏராளமான குடும்பங்கள் குடியால் பாதிக்கப்பட்டுள்ளதை என்னைப்போல் நீங்களும் பார்த்திருப்பீர்கள். குடியால பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் வறுமையை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல் கட்சிகள் கூட்டமோ, மாநாடோ நடத்தினால் ஒவ்வொரு ஊரிலும் அந்த பகுதியின் கட்சி செயலாளர்கள் மூலம் இவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதற்காக அரசியல் கட்சியினர் பெண்களுக்கு கொடுக்கும் சம்பளம் சுமார் ரூ.200.

வேறு வழியில்லை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும். இரட்டிப்பு வருமானத்தை ஏற்படுத்துவோம், லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டு வீதி வீதியாக அரசியல் கட்சிகள் கார்களில் ஊர்வலம் செல்கிறார்கள்.

அவர்களுக்கு கீழே ரூ.200க்காக கட்சி கொடிகளை ஏந்திக்கொண்டு வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் செல்கிறார்கள். அவர்கள் அன்று வாங்கும் ரூ.200ஐ வைத்து மகளுக்கு நல்ல சாப்பாடு ஆக்கி போடணும், இவங்களோட நாளு நாள் வந்து மகனுக்கு ஒரு சட்டை எடுத்து போடணும் என்று மனக்கணக்கோடு கட்சிக்கொடிகளுடன் வீதிகளை கடந்து செல்வதை வெகுஇயல்பாய் நாம் பார்த்திருப்போம்.

ஆண்கள் பரிதாபம்

பெண்களாவது ரூ,200 வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார்கள். ஆண்களின் நிலை அதைவிட மோசம், அவர்கள் வாங்கும் 300ஐ எடுத்துக்கொண்டு நேராக செல்வது எங்கு தெரியுமா? டாஸ்மாக் கடைக்குத்தான்... அப்படியே அந்த பணத்தில் பிரியாணி, குவாட்டர் சாப்பிட்டு விட்டு, "அந்த ஏரியாவில் எங்க கட்சிதான் ஜெயிக்கும், எங்க தலைவருதான் இந்த தடவை சிஎம்மா வருவாரு.."  என அங்கே அலப்பறைகளை கொடுத்துவிட்டு, சில பல ஆபாச அர்ச்சனைகளை காண்போர் மீது தூவி விட்டு தள்ளாடியடி வீட்டுக்கு வெறுங்கையோடு நடந்து செல்வதை வெகு இயல்பாய் நாம் பார்த்திருப்போம்.

வேலையின்மை

நம் தேசத்தில் வேலை கிடைக்காததை அவங்களுடைய இயலாமையாகவே மக்கள் பார்க்கிறார்கள். இது நம் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் ஆட்சிக்கு வருபவர்கள் நினைத்தால் சுயமான வேலை வாய்ப்பு மற்றும் திடமான பொருளாதார நிலையை ஒவ்வொரு வீட்டுக்கும் ஏற்படுத்திவிட முடியும். அதற்குதான் அவர்கள் முயற்சிப்பதே இல்லை. குடிக்கு அடிமையாக்கி அந்த பணத்தில் இலவச திட்டங்களை வாரிக் கொடுத்து நம் மக்களை வறுமையாகவே அரசியல் கட்சிகள் வைத்திருக்கின்றன. உண்மையில் தமிழகம் வறுமையான மாநிலம் இல்லை. ஆனால் குடியால் வறுமைக்கு தள்ளப்பட்ட மாநிலமாக மாறிவருகிறது. அதற்கு ஆயிரம் பரிதவிப்போடு ரூ.200க்காக அரசியல் கட்சிகள் கூட்டத்தில் கோஷம் போடும் பெண்களே சாட்சி...

https://tamil.oneindia.com/news/chennai/tn-women-s-going-political-parties-election-campaign-200-rupees/articlecontent-pf362764-345021.html


டிஸ்கி:

large_214413.jpg

செம்பு தட்ஸ்தமிழ் காங்கிரஸ் -- திராவிட யால்ராவின் நீண்ட நாள் கழித்து ஓர் தரமான கட்டுரை .. ஆனால் 10 வருடங்களுக்கு முன் தற்போது 'கூவுதலுக்கான' தினசரி படிக்காசு பெண்களுக்கு 500+புரியாணியும் ஆண்களுக்கு 1000 + "இதர" சலுகைகளும் .. 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.