Jump to content

அஷ்வினுக்கு எதிராக பொங்கும் ட்விட்டர்..!- ஐபிஎல் சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜோஷ் பட்லரை சூட்சுமமாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டு, சட்டம் பேசும் ரவிச்சந்திரன் அஷ்வின்

தற்போது நடைபெற்று வரும் இந்திய ஐ. பி. எல் போட்டிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியும் மோதின. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 184 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்த்தான் அணி, 3 விக்கெட்டுகளுக்கு 148 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையின் இருந்தபொழுது, பந்துவீசச் சென்ற இந்திய சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின், கோட்டிற்கு வெளியே ஓடுவதற்கு ஆயத்தமாக நின்றிருந்த ஜோஷ் பட்லரை, மிகவும் சூட்சுமமான முறையில் ரண் அவுட் ஆக்கி, ராஜஸ்த்தான் அணியின் பின்வரிசை ஆட்டக் காரர்களை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்ததன்  மூலம் பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

அஷ்வின் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தது கிரிக்கெட் விதிமுறைகளின்படி, முறையானது என்றாலும் கூட, ஆட்டத்தின் கண்ணியம் காத்தல் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாக இருக்கும்பொழுது அஷ்வின் கபடமாகவே பட்லரை ஆட்டமிழக்கச் செய்ததாகப் பலரும் கூறுகிறார்கள்.

பந்துவீசுவது போன்று பாவனை செய்துவிட்டு, துடுப்பாட்டக்காரர் கோட்டிற்கு வெளியே தனது மட்டையை எடுக்கும்வரை பார்த்திருந்துவிட்டு, கபடத்தனமாக விக்கெட்டினை அடித்து ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார் அஷ்வின். இதனை சற்றும் எதிர்பார்த்திராத பட்லர், ஆட்ட நடுவரைப் பார்த்து இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று வாதிட்டாலும் கூட, மூன்றாம் நடுவரின் தீர்ப்பின் மூலம் பட்லர் ஆட்டமிழந்தவராகக் கணிக்கப்படுகிறார். கடும் கோபம் கொண்ட பட்லர் அஷ்வின் மீதும், நடுவர் மீதும் வசைமாரி பொழிந்துவிட்டு வெளியேறிவிடுகிறார். அவரைத்தொடர்ந்து ராஜஸ்த்தான் அணியின் ஏனைய துடுப்பாட்டக் காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 14 ஓட்டங்களால் அவ்வணி தோல்வியைத் தழுவியது.

ஆட்ட முடிவின்போது பத்திரிக்கையாளர்கள் ஆட்டத்தின் கண்ணியம் மீறப்பட்டது தொடர்பாக அஷ்வினிடம் வினவியபோது, விதிமுறைகளில் இருக்கிறதைத்தான் நான் செய்தேன், இதில் தவறேதுமில்லை. விதிமுறை விதிமுறைதான், இங்கே கண்ணியம் என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று அலட்சியமாகப் பதிலளித்தார். இவ்வாறான உலகக் கிண்ணப் போட்டியொன்றில், பாக்கிஸ்த்தானிய வீரர் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்யும் சந்தர்ப்பம் இருந்தும் மேற்கிந்திய பந்துவீச்சாளர் கேட்னி வோல்ஷ், துடுப்பாட்டக் காரரை மீண்டும் கோட்டிற்குப் பின்னே வாருங்கள் என்று அழைத்து, விளையாட்டைத் தொடர்ந்ததும், அவ்வாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்விகண்டதும் நினைவிருக்கலாம். இதுபற்றி அஷ்வினிடம் பத்திரிக்கையாளர் வினவியபோது, அது அவரது விருப்பம். இது எனது விருப்பம். ஆட்கள் எல்லோரும் ஒரே மாதிரியல்லவே என்று பதில்க் கேள்வி கேட்டுள்ளார்.

அஷ்வின் இவ்வாறு முன்னர் பல தடவைகள் கபடத்தனமாக துடுப்பாட்டக் காரரை ஆட்டமிழக்கச் செய்ததை ஒத்துக்கொள்ளும் இந்திய அணி வீரர்கள், ஒருமுறை இலங்கை அணித் துடுப்பாட்டகாரர் திரிமானவை கபடமாக ஆட்டமிழக்கச் செய்த அஷ்வினின் கபடத்தனத்தைக் கடிந்துகொண்ட அப்போதைய தலைவர் ஷேவாக், திரிமானவை மீண்டும் துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு அழைத்தது நினைவிருக்கலாம். 

பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் இது தொடர்பாகக் கருத்துக் கூறும்போது, அது அஷ்வினின் முடிவு, அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது இந்த நடவடிக்கை காட்டியிருக்கிறது, இது ஏனைய அணி வீரர்களின் முடிவல்ல. நாம் இங்கே வந்திருப்பது நேர்த்தியான முறையில் விளையாடி, கண்ணியத்துடனும், மகிழ்ச்சியாகவும் ரசிகர்களை குஷிப்படுத்தத்தான் என்று மறைமுகமாக அஷ்வினின் கபடத்தனத்தைச் சாடியுள்ளார்.

அவ்வாறே ராஜஸ்த்தான் அணித்தலைவர் ரகானேயும், துரதிஷ்ட்டவசமாக நாம் இவ்விடயங்கள் பற்றிப் பேசமுடியாது. ஆட்ட நடுவர்கள் இதனைக் கவனிக்கட்டும். இவையெல்லாம் ஆட்டத்தின் பகுதியென்று ஏற்றுக்கொண்டு முன்னேறுவதுதான் நாம் செய்யவேண்டியதென்று கூறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ஓவர் போட்டிகளில் ஒவ்வொரு ஓட்டங்ளும் பெறுமதியானது.
அதே மாதிரி
ஒவ்வொரு அவுட்டும் பெறுமதியானது.
ஆனபடியால் அஸ்வின் செய்தது சரியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நான் தொடங்கப்பட்ட தலைப்பு முற்றாக நீக்கப்பட்டு, நான் இணைத்த செய்தியும் அகற்றப்பட்டு, நான் இணைக்காத ஆனால் அது தொடர்பான செய்திக்குறிப்பொன்று என்னுடைய பெயரில் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கிறதென்று யாராவது அறியத்தர முடியுமா?

ஏனென்றால், நான் இங்கே இணைத்தது இன்னொரு இடத்திலிருந்து வெட்டி ஒட்டியதை அல்ல. போட்டியைக் கண்டு நான் எழுதியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஜென்டில்மேன்களாக இருந்தால், கீப்பர் கேட்ச்களுக்கு அம்பயரிடம் அப்பீல் செய்யவேண்டிய தேவையே இருக்காதே! எத்தனை பேட்ஸ்மேன்கள் அம்பயர் அவுட் சொல்லும் முன் வெளியேறியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் விளையாடிய இந்த விளையாட்டில் சச்சின், கில்கிறிஸ்ட் என மிகச் சொற்ப உதாரணங்களை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!

`அஷ்வின் செய்தது சரியா தவறா’ என்ற வாதம்தான் நேற்றிரவில் இருந்து ஒவ்வொருவராலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஜாஸ் பட்லரை `மன்கடட்’ முறையில் அவர் வெளியேற்ற, `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ பாதிக்கப்பட்டுவிட்டது என்று பலரும் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.சி.சி நடத்திய ஒரு ஆன்லைன் கருத்துக்கணிப்பில் 72 சதவிகிதம் பேர் அதைத் தவறு என்று சொல்லியிருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களோடு, இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் அஷ்வினைக் குறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஐ.சி.சி விதியின்படி இது சரிதான் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆக, என்ன முடிவுக்குதான் வருவது? 

`கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம்’ என்று சொல்பவர்கள், அதில் இருக்கும் உண்மையை முழுதாக உணர்ந்தாலே, இவ்வளவு எமோஷன் ஆகத் தேவையிருக்காது. இந்த `மன்கடட்’ முறையில் ஒரு பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யலாம் என்ற விதி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? பௌலர் பந்துவீசுவதற்கு முன், பேட்ஸ்மேன்கள் பல அடி முன் சென்றுவிடுகிறார்கள் என்பதனால்தானே! பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை அவமதித்ததால் உருவாக்கப்பட்டதுதான் இந்த விதி. இருக்கும் விதியின்படி செயல்பட்ட ஒரு பௌலர் மட்டுமே இன்று குற்றவாளியாகத் தெரிவதன் காரணம் என்ன?

ஸ்டம்பிங்

 

இந்த ரன் அவுட்டை விட்டுவிடுவோம். விக்கெட் கீப்பர்கள் இதுவரை புத்திசாலித்தனமாக ரன் அவுட் செய்ததையெல்லாம் நாம் பெரிதுபடுத்தாதது ஏன்? எத்தனை முறை பேட்ஸ்மேன்கள், கிரீசிலிருந்து காலை எடுப்பதற்குக் காத்திருந்து தோனி ஸ்டம்பிங் செய்திருக்கிறார். எத்தனை கீப்பர்கள், பௌலரை வைட் வீசச்சொல்லி ஸ்டம்பிங் செய்திருக்கின்றனர். முதல் ஐ.பி.எல் தொடரில், லட்சுமி ரத்தன் சுக்லாவை தோனி ரன் அவுட் செய்ததும் இதைப் போன்றதுதான். அதையெல்லாம் கீப்பர்களின் புத்திசாலித்தனமாக ஏற்றுக்கொண்டவர்கள், இப்போது கேம் ஸ்பிரிட் என்ற கொடி பிடிப்பது ஏன்?

பேட்ஸ்மேன்கள், பேலன்ஸ் மீறி கிரீசிலிருந்து கால் எடுக்கும்வரை காத்திருந்து ஸ்டம்பிங் செய்வதும், ஓடிவரும் பேட்ஸ்மேனின் பேட், கிரீசைத் தொட்டுவிட்டு மேலெழும்போது ரன் அவுட் செய்வதும் எந்த வகையில் கேம் ஸ்பிரிட்? அது தவறு என்பதை உணர்ந்துதானே `பந்து ஸ்டம்பைத் தாக்கும் முன் பேட்ஸ்மேன் ஒருமுறை கிரீஸை ரீச் ஆகியிருந்தால் போதும். காலோ, பேட்டோ தரையைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அது ஜென்டில்மேன் ஆட்டம் இல்லை என்பதால் ஏற்படுத்தப்பட்ட விதிதானே இது. பின்னர், ஏன் இதுவரை நாம் அதைப் பெரிதுபடுத்தவில்லை?

பாடி லைன் அட்டாக்

கிரிக்கெட் ஆரம்பகாலத்திலிருந்து ஜென்டில்மேன்களின் கேமாக மட்டும்தான் இருக்கிறதா. அதுவும் இல்லைதானே! பௌன்சர் என்ற விஷயமே கேம் ஸ்பிரிட்டை மீறிய `பாடி லைன்’ பந்துவீச்சிலிருந்து வந்ததுதானே! 1932-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியின் டாப் பேட்ஸ்மேன்களை சமாளிக்க, உடலைக் குறிவைத்தே தொடர்ந்து பந்துவீசினார்கள் இங்கிலாந்து பௌலர்கள். அதன் பிறகுதான் ஓவருக்கு இத்தனை பௌன்சர்கள்தான் வீச வேண்டும் என்று விதி ஏற்படுத்தினார்கள். இப்படிப் பல்வேறு தருணங்களில் கேம் ஸ்பிரிட் என்பது கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

எத்தனையோ பொய்யான பிம்பங்களின் வழியாகத்தான் நாம் உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றுதான் `கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் கேம்’ என்பது. பௌலர்கள் ரிவர்ஸ் ஸ்விங்குக்காகப் பந்துகளைச் சேதப்படுத்தியது, பேட்ஸ்மேன்கள் அதிக எடைகொண்ட பேட்களைப் பயன்படுத்தியது, கடைசிப் பந்தில் அண்டர் ஆர்ம் பால் வீசியது, பேட்ஸ்மேன் சதமடிக்க ஒரு ரன் இருக்கும்போது நோ பால் வீசியது என எப்போதுமே இது முழு ஜென்டில்மேன் கேமாக இருந்ததில்லை. சிலர் மட்டும் முழுமையான ஜென்டில்மேன்களாக விளையாடியிருக்கிறார்கள். சிலர் அந்தப் பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போக, விளையாட்டில் இன்று அப்படியான குணத்தை எதிர்பார்க்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எல்லோரும் ஜென்டில்மேன்களாக இருந்தால், கீப்பர் கேட்ச்களுக்கு அம்பயரிடம் அப்பீல் செய்ய வேண்டிய தேவையே இருக்காதே! எத்தனை பேட்ஸ்மேன்கள் அம்பயர் அவுட் சொல்லும் முன் வெளியேறியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் விளையாடிய இந்த விளையாட்டில் சச்சின், கில்கிறிஸ்ட் என மிகச் சொற்ப உதாரணங்களை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

ஜென்டில்மேன்ஸ் கேம்?

விளையாட்டைப் பொறுத்தவரை ஒருவன் தன் எதிராளியை `deceive’ செய்ய வேண்டும். அதாவது ஏமாற்ற வேண்டும். பெனால்டி அடிக்கச் செல்பவன் கோல்கீப்பரை ஏமாற்ற வேண்டும். செட்டராக நிற்பவன், டிராப் போடுவதுபோல் எதிரணி செட்டரை ஏமாற்ற வேண்டும். பேட்ஸ்மேன், பௌலரை ஏமாற்ற வேண்டும். பௌலர், பேட்ஸ்மேனை ஏமாற்ற வேண்டும். வெற்றி பிரதானமாகும்போது இவைதான் அதற்கு வழிவகுக்கும். வலது கை பேட்ஸ்மேனுக்கென லென்த், லைன் அனைத்தையும் பிளான் செய்து அந்த பௌலர் வீசும்போது, பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேன் ஸ்விட்ச் ஹிட் ஆடுவது deception தான். ஒருவர் இன்னொருவரை ஏமாற்றும் இடத்தில் எப்படி அது ஜென்டில்மேன்களின் கேமாக இருக்கும்? 

அஷ்வின் விஷயத்தில் வெளிநாட்டு வீரர்கள் அவரைக் குற்றம் சொல்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், `அஷ்வினால் இந்திய கிரிக்கெட்டின் பெயர் கெட்டுவிட்டது’ என்று சொல்பவர்களுக்கு ஒரு விஷயம்... அஷ்வின் மனைவி சோசியல் மீடியாவில் பகிர்ந்த அவரின் மகளின் புகைப்படத்துக்குக் கீழே `உன் தந்தை மோசடிக்காரன்’ என சில இந்தியர்கள் கமென்ட் போடுகிறார்கள். இவர்களுக்குத்தான் எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. `மன்கடட்’ என்ற இந்தப் பெயரே இந்திய வீரர் வீனூ மன்கட் முதல்முறையாகச் செய்ததால் வந்ததுதான் என்று இவர்களுக்குத் தெரியாதா? 1992-ம் ஆண்டு, மொத்த தேசமும் பாரபட்சமின்றி கொண்டாடும் கபில் தேவ்கூட இப்படி ஒரு தென்னாப்பிரிக்க வீரரை அவுட்டாக்கியுள்ளாரே! அப்போதெல்லாம் பாழாகாத, சூதாட்டப் புகார்களில் பாழாகாத இந்தியக் கிரிக்கெட்டின் பெயர்தான் இப்போது பாழாகிவிடப்போகிறதா?

அஷ்வின்

இங்கு `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’தான் முக்கியம் என்று சொல்பவர்களில் வெற்றியைப் பிராதனப்படுத்தாதவர்கள் யாரும் இல்லை. அணி தோல்வியடைந்தால் வீரரின் வீட்டைத் தாக்குபவர்கள் அதிகம். இங்கு வெற்றியின் அடிப்படையில் மட்டுமே வீரர்களை மதிப்பிடும் மனநிலை கொண்டவர்கள் அதிகம். ஒரு டெஸ்ட் மேட்ச்சின் மூன்று நாள்கள் உயிரைக் கொடுத்து களத்தில் நிற்கும் பேட்ஸ்மேனைவிட, டி-20 போட்டிகளில் அரை மணி நேரம் களத்தில் நின்று சில சிக்சர்கள் அடிப்பவர்களை மட்டும் கொண்டாடுபவர்கள் அதிகம். விடிய விடிய காத்துக்கிடந்து டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் இருப்பது டி20-க்கா அல்லது டெஸ்ட் போட்டிக்கா. இங்கு கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீதான பார்வையே ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாசமாகத்தானே இருக்கிறது வெற்றியை மட்டும் பிராதனப்படுத்தும் இடத்தில் கேம் ஸ்பிரிட் எங்கிருந்து வருகிறது.

 

https://www.vikatan.com/news/sports/153391-does-spirit-of-the-game-exist-in-cricket.html

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

இங்கே நான் தொடங்கப்பட்ட தலைப்பு முற்றாக நீக்கப்பட்டு, நான் இணைத்த செய்தியும் அகற்றப்பட்டு, நான் இணைக்காத ஆனால் அது தொடர்பான செய்திக்குறிப்பொன்று என்னுடைய பெயரில் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கிறதென்று யாராவது அறியத்தர முடியுமா?

ஏனென்றால், நான் இங்கே இணைத்தது இன்னொரு இடத்திலிருந்து வெட்டி ஒட்டியதை அல்ல. போட்டியைக் கண்டு நான் எழுதியது.

ரஞ்சித்,

நுணா மேலதிக தகவல்களை இணைக்க முற்படும் போது தவறுதலாக உங்கள் பதிவை எடிட் பண்ணி அதன் மேல் ஒட்டி விட்டார் என நினைக்கின்றேன். நான் மீண்டும் இணைத்துள்ளேன்....சரி பார்க்கவும்

அத்துடன் முக்கியமாக உங்களின் சுய ஆக்கம் எனில் உங்கள் பெயரை இறுதியில் போட மறக்க வேண்டாம். மூலம் குறிப்பிடுதல் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ரஞ்சித்,

நுணா மேலதிக தகவல்களை இணைக்க முற்படும் போது தவறுதலாக உங்கள் பதிவை எடிட் பண்ணி அதன் மேல் ஒட்டி விட்டார் என நினைக்கின்றேன். நான் மீண்டும் இணைத்துள்ளேன்....சரி பார்க்கவும்

அத்துடன் முக்கியமாக உங்களின் சுய ஆக்கம் எனில் உங்கள் பெயரை இறுதியில் போட மறக்க வேண்டாம். மூலம் குறிப்பிடுதல் அவசியம்.

விளக்கத்திற்கு நன்றி நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஷ்வினின் டெலிவரி stride இலேயே தெளிவாக தெரிகிறது இது முன்பே திட்டமிட்டு செய்ததென்று . சும்மா instinctive என்று புலுடா விடுகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு விளையாட்டு.இரண்டு நடுவர்கள் பத்தாது என்று மூன்றாவதாகவும் ஒரு நடுவர் இருக்கிறார்.அவர் தீர்க்கமாய் பார்த்துதான் அவுட் கொடுக்கிறார். இதுக்கு மேல் ஜெண்டில்மேன் என்று கத்துவதெல்லாம் வேலைக்காவாது. அப்படியென்றால் பவுலரின் கையை விட்டு பந்து கடந்தபின் இவர் கிரீஸைத் தாண்ட வேண்டும்.அதுதான் ஜெண்டில்மேனுக்கு அழகு. எல்லோரும் ஒரேமாதிரி இருக்க மாட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தை போலர் தவறவிட்டால் பேட்மேன் விளாசிக்கொண்டே இருப்பார். சம்பளம் குடுப்பவரிடம் யார் திட்டு வாங்குவது, இனிமேல் பாட்ஸ்மன் பொறுப்புடன் விளையாட வேண்டும்.....விளையாடுவார்கள், முக்கியமாய் அஸ்வின் பந்து போடும்போது....!  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வினை தமிழன் என்று சொல்வதே அவமானம் 🤯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அஸ்வினை தமிழன் என்று சொல்வதே அவமானம் 🤯

ஏன் அஸ்வினுடன் என்னதான் பிரச்சனை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.