Jump to content

ஒரு நாளில் நாம் எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
முட்டைபடத்தின் காப்புரிமை Getty Images

முட்டை சாப்பிடுவது, நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா என்று பல ஆண்டுகளாக வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.

 

இதற்கு பதில், நீங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. JAMA மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட புதிய மருத்துவ ஆய்வு இதனை கண்டுபிடித்துள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதய நோய் மற்றும் முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் அதிகளவிலான கொழுப்பு. பெரிய முட்டை ஒன்றில் சுமார் 185 மில்லிகிராம் கொழுப்பு இருக்கும் என அமெரிக்காவின் விவசாயத்துறை கூறுகிறது. நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

விகிதாச்சார அபாயங்கள்

17 ஆண்டுகளில் 30,000 பேர் பங்கேற்ற ஆறு ஆய்வுகள் செய்யப்பட்டன.

நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் எடுத்துக் கொள்வது, இதய நோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் அளவிற்கும், முன்கூட்டியே மரணம் ஏற்படுவதை 18 சதவீதம் அளவிற்கும் உயர்த்தியதாக ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

முட்டைகளை பொறுத்தவரை, ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் எடுத்துக்கொண்டால், இருதய நோய் ஏற்படும் அபாயம் 6 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டுபிடிப்பட்டுள்ளது. அதே போல, இது முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் 8 சதவீதம் அதிகமாக உள்ளது.

முட்டைபடத்தின் காப்புரிமை Getty Images

ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது மேற்கூறப்பட்ட இரண்டு நோய்கள் ஏற்படும் அபாயத்தை 27 மற்றும் 34 சதவீதம் அதிகமாக்குகிறது.

இந்த ஆய்வானது, வயது, உடற்பயிற்சி நிலைகள், புகையிலை பயன்பாடு அல்லது ரத்த அழுத்தம் போன்ற எதையும் கணக்கில் எடுக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்டது.

"இரண்டு நபர்கள் ஒரே மாதிரியான உணவு முறையை எடுத்துக்கொண்டு, அதில் முட்டைகள் எடுத்துக் கொள்வது மட்டும் வேறு மாதிரியாக இருந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்கிறார் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பிரிவின் இணை ஆசிரியர் நொரினா ஆலென்.

முந்தைய ஆய்வுடன் முரண்பாடு

முட்டைகள் எடுத்துக் கொள்வதற்கும், இதய நோய்க்கான அபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்ட முந்தைய ஆய்வுடன் இந்த புதிய ஆய்வு முரண்படுகிறது.

ஆனால், முந்தைய ஆய்வுகளில் குறைந்த வேறுபட்ட மாதிரிகளே இருந்தது என்றும், குறுகிய காலம் மட்டுமே அவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள் என்றும் ஆலென் கூறுகிறார்.

எனினும், தங்கள் ஆய்வுகளில் சிறு தவறுகள் இருக்கலாம் என் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

முட்டைபடத்தின் காப்புரிமை Getty Images

சரி. நாம் எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்?

இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட ஆலென், ஒரு வாரத்திற்கு மூன்று முட்டைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது என்கிறார்.

அதுவும், முட்டையின் வெள்ளைக்கருவை உண்ணுமாறு முட்டை பிரியர்களுக்கு அவர் பரிந்துரைக்கிறார்.

"முட்டை சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும் என்று நான் கூறவில்லை. சரியான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன்."

இந்த ஆய்வு அமெரிக்கர்களை வைத்து எடுக்கப்பட்டது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

உலகில் அதிகம் முட்டைகள் எடுத்துக் கொள்ளும் நாடுகள்(Source: சர்வதேச முட்டை ஆணையம், 2015)  
நாடுகள் தனிநபர்கள்முட்டை எடுத்துக் கொள்ளும் அளவு
மெக்ஸிகோ 352
மலேஷியா 342
ஜப்பான் 329
ரஷ்யா 285
அர்ஜெண்டினா 256
சீனா 254.8
அமெரிக்கா 252
டென்மார்க் 245

அதிகம் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் 252 முட்டைகளை எடுத்துக் கொள்கிறார்.

https://www.bbc.com/tamil/science-47697857

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.