Jump to content

மதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்டீபன் டௌலிங் பிபிசி
 
  •  
மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு புகைப்பட கலைஞரான நான் சில ஆண்டுகளுக்கு முன்னர், டென்மார்க்கில் நடைபெற்ற கார் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டேன்.

அந்நாட்டிலுள்ள மோன் என்னும் தீவில் நடைபெற்ற கண்காட்சி முடிவடைந்தவுடன், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சில கோப்பை மதுபானம் என நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அன்றைய இரவை சாய்வு நாற்காலி ஒன்றில் படுத்துக்கொண்டு பொதுவெளியிலேயே கழிப்பது என்று முடிவெடுத்தேன்.

மறுநாள் காலையில் எனக்கு மூன்று புதிய படிப்பினைகள் கிடைத்தன.

  • கோடைக்காலத்தில் டென்மார்க்கில் மிக அதிகளவிலான கொசுக்கள் இருக்கும்.
  • கொசுக்களால் சாய்வு நாற்காலியின் அமைப்பையும், நமது சட்டையையும் மீறி கடிக்க முடியும்.
  • நாம் மதுபானம் குடித்துவிட்டு தூங்குவது என்பது, கொசுக்களுக்கு இரவு உணவுக்கான அழைப்பை விடுத்துவிட்டு தூங்குவதற்கு சமம்.

ஆம், அந்த ஒரே இரவில் கொசுக்கள் என்னுடைய முதுகை பதம்பார்த்து விட்டன. இதுபோன்ற அனுபவத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

மதுபானத்திற்கும், கொசு கடிப்பதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று தேடிப்பார்த்தபோது, அதுதொடர்பாக கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்கா கொசு கட்டுப்பாட்டு சங்கத்தின் சஞ்சிகையில் கட்டுரை உள்ளது குறித்து தெரியவந்தது.

ஒருவர் மதுபானம் குடித்திருந்தால் அவர் கொசு கடிகளுக்கு உள்ளாவது ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், மதுபானம் குடித்திருப்பவர்களை மட்டும் கொசுக்களால் எப்படி கண்டறிய முடிகிறது என்ற கேள்விக்கு பலராலும் தெளிவுற பதிலளிக்க முடியவில்லை.

மனிதர்கள் மூச்சு விடும்போது வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஆக்டோனால் ஆகியவற்றை முதலாக கொண்டே கொசுக்கள் ஒருவரை கண்டறிந்து கடிக்கிறது என்பது நமக்கு தெரிந்ததே.

மேற்கண்ட கேள்விக்கான பதில் நம்மை சமாதானப்படுத்தாத நிலையில், மதுபானம் குடித்திருந்த ஒருவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்ற மற்றொரு கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அமெரிக்காவின் பிலடெல்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் தான்யா டாப்கே, " மதுபானம் குடித்திருந்த ஒருவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில் மதுபானம் குடித்தவரின் ரத்தத்தில் மதுபானத்தின் சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும். அந்த நபரின் ரத்தத்தை குடிக்கும் கொசுவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

இதே கேள்விக்கு விடையளிக்கும் வகையில், பாப்புலர் சயின்ஸ் என்னும் இதழில் அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூச்சியியல் துறை பேராசிரியர் கோபி ஸ்சால் எழுதிய கட்டுரையில், "சுமார் 10 கோப்பை அளவு மதுபானத்தை குடித்த ஒருவரது இரத்தத்தில் 0.2 சதவீதம் அளவிற்கு மதுபானம் இருக்கும். ஆனால், அந்த நபரது ரத்தத்தை குடிக்கும் கொசுவுக்கு அதனால் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை" என்று கூறுகிறார்.

மதுபானம் குடிப்பவரை கொசுக்கள் அதிகம் கடிப்பது ஏன்?படத்தின் காப்புரிமை Getty Images

துளியளவு மதுபானம் கொசுவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாதற்கு அதன் பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், ரத்தத்தை தவிர்த்து ஏதாவது திரவத்தை கொசு குடிக்கும் பட்சத்தில், அது நேரடியாக அதன் செரிமான மண்டலத்துக்கு சென்று நொதித்தல் வினைக்கு உட்படுவதால், திரவங்கள் பூச்சியின் மத்திய நரம்பு மண்டலத்தை அடைவதில்லை என்று கருதப்படுகிறது.

"கொசுக்கள் மட்டுமின்றி அனைத்து விதமான பூச்சிகளும் குடிக்கும் சாறுகள் நேரடியாக அதன் உடல் முழுவதும் பரவுவதில்லை. பூச்சிகளின் செரிமான மண்டலத்தில் நடைபெறும் நொதித்தல் நிகழ்வின்போது மதுபானம், பாக்டீரியா உள்ளிட்ட தீமை விளைவிப்பவை தனியே வெளியேற்றப்படுகிறது" என்று கூறுகிறார் லண்டனிலுள்ள நேச்சுரல் ஹிஸ்டோரி மியூசியத்தின் மூத்த அதிகாரியான எரிக்கா மெக்அலிஸ்டர்.

"மது அருந்தியவரை கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், பழ ஈக்களில் வெளிப்படையாக மாற்றத்தை காண முடிகிறது. எனினும், அதிகளவு சகிப்புத்தன்மையை கொண்டிருக்கும் பழ வண்டுகள், மதுபானம் கலந்த திரவத்தை குடித்தவுடன், மிகுந்த உற்சாகத்தை அடைகின்றன" என்று அவர் மேலும் கூறுகிறார்.

மதுபானத்தை தவிர்த்து 'ஏ' இரத்த வகையை கொண்டிருப்பவரைவிட, 'ஓ' இரத்த வகை கொண்டிருப்பவர் கொசுக்களால் கடிபடுவதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அதிக உடல் வெப்பத்தை கொண்டிருப்பவர், கர்ப்பமாக உள்ளவர், அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுபவர் ஆகியோரை கொசு அதிகளவில் கடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/science-47679362

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிச்சா பிறகு கொசு கடித்தாலென்ன பாம்பு கடித்தாலென்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:
ஆனால், மதுபானம் குடித்திருப்பவர்களை மட்டும் கொசுக்களால் எப்படி கண்டறிய முடிகிறது என்ற கேள்விக்கு பலராலும் தெளிவுற பதிலளிக்க முடியவில்லை.

இது தெரியாதா.... வெறி சிம்பிள்.😝
மதுபானம் குடித்தவரின், வாயிலிருந்து... அழுகிய பழ வாசனை வரும்.
அது.. கொசுவுக்கு, சிவப்பு கம்பளம் விரித்த மாதிரி... பிடித்த வாசனை.
பிறகென்ன... ஊரில் உள்ள கொசுவுக்கு எல்லாம் நியூஸ் போய்... ஒரேயடியாய், கடித்து குதறி விட்டுடும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னிரவு வேளைகளில்....ஒரு அரை பியரை அடிச்சுப் போட்டு....ஒரு சாய்மனைக் கதிரையில் சாய்ந்த படி....கொசுக்கள் பாடுவதைக் கொஞ்ச நேரம் அவதானிக்கவும்!
அந்த இசையில் உள்ள ஆரோகணம்.....அவரோகணம் என்பவற்றையும் கவனிக்கவும்!
எவ்வளவு....அழகிய இசையை......அவை இலவசமாகத் தருகின்றன என்று புரியும்!
முழு பியரையும்....முடிக்கக் கூடாது!
முடித்தால் சங்கீதம்......விளங்காது...!😯

gettyimages-56802984-50_custom-da070d56b

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசுவுக்கு தெரியும் தான் எதை குடிக்க வேண்டும் எதைக் குடிக்க கூடாதென்று.அதன் உணவே இரத்தம்தான், ஆறு லிட்டர் இரத்தத்தில் ஒரு துளி அது குடித்தால் குறைந்தா  போய் விடுவோம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசுவாலை பிரச்சனை வந்தால் ஓரளவுக்கு தாங்கலாம்.......ஆனால் வீட்டிலை இருக்கிற பெரிய கொசுக்களின்ரை நொய்....நொய்  எண்ட சத்தம் தாங்கேலாமல் கிடக்கப்பா...

k-2.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.