Jump to content

இடிந்த நிலையில் சிவாலயம்... விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது.  மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில் இருப்பதைக் கண்டறிந்த ஊர்மக்கள், ஞாயிறு ஜெ.கஜேந்திரனிடம் தெரிவித்தனர்.

சிவாலயம்

அந்தக் கோயிலில் திருப்பணி செய்வதற்காக மரங்களையும் முட்செடிகளையும் அகற்றியபோது மிகவும் சிதைந்த நிலையில் சிவலிங்கம், சிற்பம், மண்டபம், கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டன. 

 

 

இந்த ஆலயம் சிதைந்த நிலையில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. மகாமண்டபக் கிழக்குப்பகுதி முப்பட்டை குமுதத்தில் விக்கிரமசோழன் கல்வெட்டு இருப்பதை ஆய்வாளர் ப.பூபாலன், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையக் காப்பாட்சியர் கோ.உத்திராடம், எழுத்தாளர் ரெங்கையா முருகன்  ஆகியோர் கண்டறிந்து கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனர்.

சிவாலயம்

விக்கிரமசோழனின் 15-வது ஆட்சியாண்டில் (கி.பி.1118 - 1135)  வெட்டப்பட்ட இந்தக் கல்வெட்டு, ஜயங்கொண்ட சோழமண்டலத்து வெண்குன்றக் கோட்டத்தில் உள்ள வாதவூர் நாட்டு பிரமதேயமான ஓசூர் மகாசபையார் நிலவிலை ஆவணம் செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இந்த நிலங்கள் அனைத்தும் 16 சாண் கோலால் அளக்கப்பட்டது.

நிலத்தின் மொத்த குழிகள் 7000 ஆகும். இந்தக் கல்வெட்டு, நிலம் விற்பனை செய்யப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது. விற்கப்பட்ட  நிலமும் அதன் விவரமும் எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன.  இன்றைய மழவங்கரணை கல்வெட்டில் மழவன்காராணை  என்று அழைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இக்கல்வெட்டை ஆராய்ந்த கோ.உத்திராடம் கூறுகையில், ``சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற படையெடுப்பால் இந்தக் கோயிலின் சிலைகளும் மண்டபங்களும்  சிதைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், இக்கோயிலை சீரமைக்கும்போது பல கல்வெட்டுகளும் சிற்பங்களும் கிடைக்க வாய்ப்புள்ளன" எனத் தெரிவித்தார்.

சிவாலயம்

``இவ்வூரில் உள்ள துர்க்கை மேட்டில், பல்லவர் காலக் கொற்றவை சிற்பம் தலைப்பகுதி சிதைந்தநிலையில் காணப்படுகிறது. கொற்றவை வலதுகாலை  எருமைத் தலைமீது ஊற்றியும் இடதுகாலைத் தன் வாகனமான சிங்கத்தின்மீது வைத்தும் எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள்.

கொற்றவையின் கழுத்து, தோள், கை, கால் ஆகியவற்றில் அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளன. மார்பை கச்சையும் இடையை ஆடையும்  அழகுசெய்கின்றன. கொற்றவையின் கீழ்பகுதியில்  இரு அடியவர்கள் வழிபடுகின்றனர். இந்தச் சிற்பம் கி.பி.7-ம் நூற்றாண்டைச் சார்ந்தது" என்று ப.பூபாலன் தெரிவித்தார். இந்த ஆய்வு மேற்கொண்டால் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளன.

 

https://www.vikatan.com/news/spirituality/153635-chola-dynasty-sculpture-idendified-in-vanthavasi-sivan-temple.html?artfrm=home_breaking_news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான சிவலிங்கமாக இருக்கின்றது.... பகிர்வுக்கு நன்றி பிழம்பு....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் வரலாற்று பொக்கிசங்களை பாதுகாக்க மறந்தான், அதனால் அடிமைப்பட்டு இருக்கிறான்.

Link to comment
Share on other sites

கட்டிடக்கலையை வைத்து கோவில்களை கட்டி மக்களை சோம்பேறிகளாக்கிய சோழர்களை விட அதே கலையை உபயோகப்படுத்தி கல்லணையை கட்டி இன்றும் பாசனத்திற்கு  உபயோகப்படுத்த வைத்த கரிகாலன் எவ்வளவோ மேலானவன். கரிகாலன் போன்ற மன்னர்கள் பலர்  இருந்திருந்தால் தமிழ்நாடு இன்று வளங்கொழிக்கும்  சுதந்திரநாடாக இருந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை! மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/296333
    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.