Jump to content

பிக்குவுக்கு புற்றுநோய்: கோயிலை அபகரித்து விகாரை அமைத்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mullaitivu-Semmalai-Problem.jpg

பிக்குவுக்கு புற்றுநோய்: கோயிலை அபகரித்து விகாரை அமைத்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முல்லைத்தீவில் கோயிலை அபகரித்து விகாரை அமைத்த பௌத்த பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தியதுடன் குருகந்த ரஜமஹா விகாரையையும், பிரமாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த ஆலயம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.

இவ்வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில் பௌத்த பிக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்கின் ஒருதரப்பான பௌத்த பிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளதன் காரணமாக மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் மன்றில் தெரிவித்தார் .

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

http://athavannews.com/பிக்குவுக்கு-புற்றுநோய்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே ! சில சமயங்களில் கொடிய நோய்களும் தாக்க வேண்டிய ஆட்களைத் தாக்கும் எனத் தோன்றுகிறது (கொடிய நோயே செய்த பாவத்தின் விளைவு எனும் மூட நம்பிக்கை ஒரு புறம் இருக்கட்டும். புற்றுநோய் இப்போதெல்லாம் பலரையும் கொல்லும் நோய் என்பதும் வேறு விடயம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை ஏமாத்தலாம்... 

நீராவியடிப் பிள்ளையார் விளையாடிக் போட்டார்.... 

இனி பயப்படுவினம்...

Link to comment
Share on other sites

2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

பரவாயில்லையே ! சில சமயங்களில் கொடிய நோய்களும் தாக்க வேண்டிய ஆட்களைத் தாக்கும் எனத் தோன்றுகிறது (கொடிய நோயே செய்த பாவத்தின் விளைவு எனும் மூட நம்பிக்கை ஒரு புறம் இருக்கட்டும். புற்றுநோய் இப்போதெல்லாம் பலரையும் கொல்லும் நோய் என்பதும் வேறு விடயம்).

 

2 hours ago, Nathamuni said:

சட்டத்தை ஏமாத்தலாம்... 

நீராவியடிப் பிள்ளையார் விளையாடிக் போட்டார்.... 

இனி பயப்படுவினம்...

புற்றுநோய் உங்களுக்கு  அல்லது நீங்கள்  நேசிப்பவர்களுக்கு  வரும் போது  இங்கு  நீங்கள்  எழுதியதை  மறக்காமல்  மீண்டும்  வந்து  படித்து  விளங்கி  கொள்ள  பாருங்கள்.  புத்தருக்கும்   மேலான  ஞானம்  பிறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மிகுந்த மனிதாபிமானிகள், யார் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவம்! ஆனா எங்களுக்கு அடிச்சு உங்கடை கை நோகுதே என்றது தான் இப்ப கவலை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

 

புற்றுநோய் உங்களுக்கு  அல்லது நீங்கள்  நேசிப்பவர்களுக்கு  வரும் போது  இங்கு  நீங்கள்  எழுதியதை  மறக்காமல்  மீண்டும்  வந்து  படித்து  விளங்கி  கொள்ள  பாருங்கள்.  புத்தருக்கும்   மேலான  ஞானம்  பிறக்கும்.

நீஙகள் அறப்படிக்க வேண்டியதில்லை. 

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்கள்.

அதிகாரத்தையும், பலத்தையும் வைத்துக் கொண்டு, மமதையுடன் பேயாட்டம் ஆடிவிட்டு, அதற்கான தெய்வ தண்டணை வழங்கப்பட்டால், இப்படி தான் சொல்வீர்களா?

நீஙகள் வாழும் வீட்டை, அவ்வூர் நாட்டாமை, போலீஸ் பலத்துடன் கைப்பற்றி, உங்களை குடும்பத்துடன் நடுவீதியில் விட்டெறிந்திருந்தால், என்ன செய்வீர்கள். 

ஒரு இந்து ஆலயம், இரண்டாயிரம் வருசத்துக்கு முன்னர் பெளத்த ஆலயம் இருந்த இடமாம் என்று அலம்பறை பண்ணி வழிபட விடாமல் தெய்வநிந்தனை. கூடவே, அரச, தொல்லியல், போலீஸ் துணை.

தனிப்பட்ட ரீதியில், ஒருவருக்கு இந்தநிலைமை வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதாயினும் இது, இன்னுமோர் மதரீதியான அநீதி, அடாத்து செய்யலாம் என்று நிலையில் சிந்தனை செய்பவரை தடுக்கும் என்கிறேன்.

நீஙகள் இந்து அல்லது  பெளத்தர் இல்லாவிடில் இதில் மூக்கை நுழைக்க தேவையில்லை நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

 

புற்றுநோய் உங்களுக்கு  அல்லது நீங்கள்  நேசிப்பவர்களுக்கு  வரும் போது  இங்கு  நீங்கள்  எழுதியதை  மறக்காமல்  மீண்டும்  வந்து  படித்து  விளங்கி  கொள்ள  பாருங்கள்.  புத்தருக்கும்   மேலான  ஞானம்  பிறக்கும்.

அந்த மதவெறியன் இந்துக் கோயிலை புத்த விகாரையாக மாற்றியதைப் போல் வேறொருவன் புத்த விகாரையை இந்துக் கோயிலாக மாற்றினாலும் இதே போல் நிந்தனை செய்வேன். தீவினையின் பயனே நோய் என்பது மூடநம்பிக்கை. ஆனால் நோயைச் சொல்லி நிந்திப்பது கையறு நிலையின் வெளிப்பாடு. 'பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்' என்று இறைவனையே பழிக்கும் வள்ளுவன் முன் நாமெல்லாம் எம்மாத்திரம்?  'பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்று நெஞ்சைக் கேட்பதில்லை; கேட்க விரும்புவதுமில்லை. ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட நான் கிறிஸ்துநாதர் வழித் தோன்றலுமில்லை.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

 

புற்றுநோய் உங்களுக்கு  அல்லது நீங்கள்  நேசிப்பவர்களுக்கு  வரும் போது  இங்கு  நீங்கள்  எழுதியதை  மறக்காமல்  மீண்டும்  வந்து  படித்து  விளங்கி  கொள்ள  பாருங்கள்.  புத்தருக்கும்   மேலான  ஞானம்  பிறக்கும்.

புத்தரின் ஞானமே எனக்கு வேண்டாம் எனும்போது, புத்தருக்கும் மேலான ஞானத்தை வைத்து என்ன செய்வது, சகோதரரே ? 

Link to comment
Share on other sites

16 hours ago, சுப.சோமசுந்தரம் said:

புத்தரின் ஞானமே எனக்கு வேண்டாம் எனும்போது, புத்தருக்கும் மேலான ஞானத்தை வைத்து என்ன செய்வது, சகோதரரே ? 

உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.

எனக்கு உறுதியாக புற்றுநோய் வரும் என்ற நம்பிக்கை உண்டு. காரணங்களைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முதிர்ச்சியின்றி சிறுபிள்ளைத்தனமாக (சின்னத்தனமாக என்பதன் இடக்கரடக்கலாக பயன்படுத்தியுள்ளேன்) வாழ்வதை விட புற்றுநோய் வந்து சாவது மேல். உங்களுடன்(I address Mr.Jude) வாதம் செய்யும்போது "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்" என்ற வள்ளுவம் நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

எனக்கு உறுதியாக புற்றுநோய் வரும் என்ற நம்பிக்கை உண்டு. காரணங்களைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முதிர்ச்சியின்றி சிறுபிள்ளைத்தனமாக (சின்னத்தனமாக என்பதன் இடக்கரடக்கலாக பயன்படுத்தியுள்ளேன்) வாழ்வதை விட புற்றுநோய் வந்து சாவது மேல். உங்களுடன்(I address Mr.Jude) வாதம் செய்யும்போது "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்" என்ற வள்ளுவம் நினைவுக்கு வருகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.

என்னவொரு மூடநம்பிக்கை? நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்கள்?

சாவு நிச்சயம். கோழைக்கு நித்தம் சாவு. வீரனுக்கு ஒரு சாவு. 

தேங்காய் தலையில் விழுந்து சாவோம் என்று பயந்தால், இளனி குடிக்கலாம் என்று, தென்னை மரத்தின் கீழ் போவது எங்கனம்? 

Link to comment
Share on other sites

சிறுமை கண்டு பொங்கும் "தம் கணத்தார் முன் கோட்டிக்கொளல்" நிகழ்த்திய அண்ணலுக்கு வள்ளுவர் சொன்ன அங்கணம் நினைவுக்கு வந்திருக்கலாம். 

நம் கணத்தார் அல்லாத அங்கணத்து அழுக்குத் தின்னும் சிறுநரி கண்டு என் நினைவுக்கு வந்ததோ கம்பனின் பின்வரும் பாடலே:

"வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார் எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும் நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே!"

அங்கணத்து அழுக்குத் தின்னும் நாயினும் கடைப்பட்ட சிறுநரிகள் அழையா விருந்தாக அவ்வப்போது தலைகாட்டவே செய்யும். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் அந்த நரிகளை விரட்டியடித்து, சங்காரம் செய்து வீரச் சங்கினை முழங்குவர்.

Link to comment
Share on other sites

On 3/28/2019 at 4:33 PM, சுப.சோமசுந்தரம் said:

பரவாயில்லையே ! சில சமயங்களில் கொடிய நோய்களும் தாக்க வேண்டிய ஆட்களைத் தாக்கும் எனத் தோன்றுகிறது 

 

On 3/28/2019 at 4:41 PM, Nathamuni said:

சட்டத்தை ஏமாத்தலாம்... 

நீராவியடிப் பிள்ளையார் விளையாடிக் போட்டார்.... 

இனி பயப்படுவினம்...

 

3 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

 

நம் கணத்தார் அல்லாத அங்கணத்து அழுக்குத் தின்னும் சிறுநரி கண்டு என் நினைவுக்கு வந்ததோ கம்பனின் பின்வரும் பாடலே:

அங்கணத்து அழுக்குத் தின்னும் நாயினும் கடைப்பட்ட சிறுநரிகள் அழையா விருந்தாக அவ்வப்போது தலைகாட்டவே செய்யும். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் அந்த நரிகளை விரட்டியடித்து, சங்காரம் செய்து வீரச் சங்கினை முழங்குவர்.

உங்கள் தரத்து ஏற்ற அழுக்கு தின்னும் கற்பனையில் அழிந்தி நீங்கள் தாரளமாக வாழுங்கள். "வெள்ளம் போல் தமிழர் கூட்டம்" சங்காரம் செய்யப்பட்டது உங்களை போன்றவர்களின் கற்பனைகளால் தான். வீரச் சங்கு முழங்கவில்லை -முழங்கும் சாத்தியமும் இல்லை. ஏன் வெள்ளம் போல் தமிழர் கூட்டத்துக்கு மரண சடங்குகள் கூட நடக்காமல் போனது உங்களின் அழிந்து போகும் மனப்பான்மையால் தான். தொடருங்கள் - முடிவு தூரத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Jude said:

 

 

உங்கள் தரத்து ஏற்ற அழுக்கு தின்னும் கற்பனையில் அழிந்தி நீங்கள் தாரளமாக வாழுங்கள். "வெள்ளம் போல் தமிழர் கூட்டம்" சங்காரம் செய்யப்பட்டது உங்களை போன்றவர்களின் கற்பனைகளால் தான். வீரச் சங்கு முழங்கவில்லை -முழங்கும் சாத்தியமும் இல்லை. ஏன் வெள்ளம் போல் தமிழர் கூட்டத்துக்கு மரண சடங்குகள் கூட நடக்காமல் போனது உங்களின் அழிந்து போகும் மனப்பான்மையால் தான். தொடருங்கள் - முடிவு தூரத்தில் இல்லை.

எதோ சொல்ல வந்து, குழம்பி, என்னவோ சொல்லி முடிகிறீர்கள்.

அப்படி இப்படி சுத்தி வளைக்காம, பிள்ளையார் கோவிலில், புத்தர் ஒக்காருவதில் வந்த தடை உங்களுக்கு பெரிய மனக்கவலை என்று சொல்லிட்டு அமைதியாகுங்கள்.

Link to comment
Share on other sites

உம்போன்றோருக்கு இலக்கிய உவமை காட்ட வேண்டிய நனி நாகரிகம் இனித் தேவையில்லை. வெளிப்படையாக நீவிர் தின்னும் அங்கணத்து அழுக்கு எது என்பதைச் சொன்னால் அன்றி நீவிர் அடங்கப் போவதும் இல்லை.

சொல்கிறேன்! அடாது செய்த பிக்குவின் செயலைக் கூறினால் உமக்கேன் பொத்துக்கொண்டு வருகின்றது?

உம் தவறை மென்மையாகச் சுட்டிக்காட்டிய அண்ணலுக்கு நீவிர் தந்த பதில் 'உமக்கும் புற்றுநோய் வரும்' என்பது. ஏன், உமக்கு (Read as Mr.Jude) புற்றுநோய் வராதா? உம் மன அழுக்கை விடவும் கொடிய புற்றுநோய் ஒன்று இவ்வுலகில் உண்டா?

பொருளாதாரத் துன்பமோ, உடல் நோய் துன்பமோ உள்ளவர்களைக் கண்டுவிட்டால், உடனேயே மதம் மாற்றும் நோக்குடன் ஜபம் செய்யக் கிளம்பும் உம் போன்ற அங்கணத்து அழுக்குத் தின்னும் நாயினும் கடைப்பட்ட நரிகளின் அழுக்குக் கூட்டத்தை அடையாளம் காட்டித்தான் எங்கள் நாட்டில் இந்துமத வெறியைத் தூண்டி மத வெறுப்பை விதைத்து, சர்வாதிகாரம் செலுத்துகின்றன, சிங்களப் பேரினவாத சக்திகளைப் போன்ற இந்துமத ஆரியப் பேரினவாத ஆதிக்க சக்திகள்.

இந்துமதவெறியர்கள்  வேட்டையாடுவது  'மாட்டுக்கறி வைத்திருந்தான், ஆட்டுக்கறி வைத்திருந்தான்' என்று கூவி, ஒன்றுமறியாத நேர்மையாக வாழும் சிறுபான்மையினரை.

துன்பத்தில் இருக்கும் அப்பாவி இந்துக்களை மதம் மாற்றி, வெளிநாட்டில் இருந்து பணம் தின்னும் உம்போன்ற நரிகள், இந்துப் பேரினவாதிகளின் காலடியில் வீழ்ந்து உம்மைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். தேவைப்பட்டால், மீண்டும் மதம் மாறி, மந்திரம் ஓதவும் தயங்க மாட்டீர்கள். வெட்கக்கேடு! உம் தரத்துக்கு இறங்கவேண்டிய தேவையை உருவாக்கியது நீவிரே!

Link to comment
Share on other sites

Jude said

 "வெள்ளம் போல் தமிழர் கூட்டம்" சங்காரம் செய்யப்பட்டது உங்களை போன்றவர்களின் கற்பனைகளால் தான். வீரச் சங்கு முழங்கவில்லை -முழங்கும் உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.சாத்தியமும் இல்லை.ஏன் வெள்ளம் போல் தமிழர் கூட்டத்துக்கு மரண சடங்குகள் கூட நடக்காமல் போனது உங்களின்மனப்பான்மையால் . தொடருங்கள் - முடிவு தூரத்தில் இல்லை."

 

தமிழர் அழிந்துபோனதில் திருப்தி ????????  tw_angry:

 

Jude said

"உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்."

tw_dissapointed: tw_fearful:   👎👎👎

 

பேராசிரியர்.ந.கிருஷ்ணன் said

"உம் தவறை மென்மையாகச் சுட்டிக்காட்டிய அண்ணலுக்கு நீவிர் தந்த பதில் 'உமக்கும் புற்றுநோய் வரும்' என்பது. ஏன், உமக்கு (Read as Mr.Jude) புற்றுநோய் வராதா? உம் மன அழுக்கை விடவும் கொடிய புற்றுநோய் ஒன்று இவ்வுலகில் உண்டா?"

:96_ok_hand::96_ok_hand:

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 4:11 AM, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

உம்போன்றோருக்கு இலக்கிய உவமை காட்ட வேண்டிய நனி நாகரிகம் இனித் தேவையில்லை. வெளிப்படையாக நீவிர் தின்னும் அங்கணத்து அழுக்கு எது என்பதைச் சொன்னால் அன்றி நீவிர் அடங்கப் போவதும் இல்லை.

சொல்கிறேன்! அடாது செய்த பிக்குவின் செயலைக் கூறினால் உமக்கேன் பொத்துக்கொண்டு வருகின்றது?

உம் தவறை மென்மையாகச் சுட்டிக்காட்டிய அண்ணலுக்கு நீவிர் தந்த பதில் 'உமக்கும் புற்றுநோய் வரும்' என்பது. ஏன், உமக்கு (Read as Mr.Jude) புற்றுநோய் வராதா? உம் மன அழுக்கை விடவும் கொடிய புற்றுநோய் ஒன்று இவ்வுலகில் உண்டா?

பொருளாதாரத் துன்பமோ, உடல் நோய் துன்பமோ உள்ளவர்களைக் கண்டுவிட்டால், உடனேயே மதம் மாற்றும் நோக்குடன் ஜபம் செய்யக் கிளம்பும் உம் போன்ற அங்கணத்து அழுக்குத் தின்னும் நாயினும் கடைப்பட்ட நரிகளின் அழுக்குக் கூட்டத்தை அடையாளம் காட்டித்தான் எங்கள் நாட்டில் இந்துமத வெறியைத் தூண்டி மத வெறுப்பை விதைத்து, சர்வாதிகாரம் செலுத்துகின்றன, சிங்களப் பேரினவாத சக்திகளைப் போன்ற இந்துமத ஆரியப் பேரினவாத ஆதிக்க சக்திகள்.

இந்துமதவெறியர்கள்  வேட்டையாடுவது  'மாட்டுக்கறி வைத்திருந்தான், ஆட்டுக்கறி வைத்திருந்தான்' என்று கூவி, ஒன்றுமறியாத நேர்மையாக வாழும் சிறுபான்மையினரை.

துன்பத்தில் இருக்கும் அப்பாவி இந்துக்களை மதம் மாற்றி, வெளிநாட்டில் இருந்து பணம் தின்னும் உம்போன்ற நரிகள், இந்துப் பேரினவாதிகளின் காலடியில் வீழ்ந்து உம்மைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். தேவைப்பட்டால், மீண்டும் மதம் மாறி, மந்திரம் ஓதவும் தயங்க மாட்டீர்கள். வெட்கக்கேடு! உம் தரத்துக்கு இறங்கவேண்டிய தேவையை உருவாக்கியது நீவிரே!

நூறு பச்சைப்புள்ளி போடலாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ஆனால் இதுகளுக்கு ஆயிரம் சூடு போட்டாலும் திருந்தாதுகள் !! *******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு திரியில் மேல்படியான் பதிவு:

///

ஐம்பெரும் காப்பிய காலத்து தமிழரின் மதமான பௌத்தத்தை மணிமேகலை காலத்தின் மணிபல்லவத்தில் மீண்டும் புதுப்பிக்கும் ஆளுனரின் முயற்சிக்கு வாழ்த்துகள். அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் ஆதிக்கத்தில் உள்ள பௌத்தத்தை விடுவித்து உண்மையான பௌத்தத்தை ஏனைய பௌத்த நாடுகளின் ஆதரவுடன் வட கிழக்கில் வளர்ச்சி அடைய செய்து சிங்கள இனவாத பிக்குகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியும்.

பெரும்பாலான சிங்கள மக்கள் பிக்குகளுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பி அவர்களுக்கு அஞ்சுகிறார்கள் இந்து கடவுள்களிடமும் தெய்வீக சக்தி இருப்பதாக நினைக்கிறார்கள். தமிழ் பௌத்தம் இரெண்டையும் இணைக்கும்.

///

நான் நினைக்கிறேன்: தமிழ் பௌத்தம் ஆக்ரோஷமாக எழுந்து, சிங்கள பௌத்தத்தினை எதிர்க்க வேண்டும் என நினைக்கிறாரோ?

ஜனனாயக காலத்தில், மதத்திணிப்பு சாத்தியமில்லாதது.

உலகம் முழுவதும் அசோகன் முதல் எட்டாம் ஹென்றி மன்னர் வரை, அரசர்கள் காலத்தில் தான் குடிகளின் மதம் மாத்தப் பட்டது.

இருந்தாலும், எட்டாம் ஹென்றி மன்னர் மூத்த மகள், மேரி (Queen Mary) பட்டத்துக்கு வந்த போது தனது தந்தை அறிமுகப் படுத்திய இங்கிலாந்து திருச்சபை மார்க்கத்தினை தடுத்து, இங்கிலாந்தை கத்தோலிக்கத்துக்கு திருப்பினார்.

காரணம் எதேச்ச அதிகாரம்.

இவரோ, மூட நம்பிக்கையினை சொல்லி, பௌத்தத்தினை வளர்க்கவேண்டும் என்கிறார்... அதுவும் மக்களுக்கு, இறை நம்பிக்கை குறைந்து வரும்ஜனநாயக காலத்தில்.

Link to comment
Share on other sites

பிள்ளையார், என்ன நினைத்தார் அந்த பிக்கு ...அதன் வலி தெரிகிறதா ...
தெய்வம் நின்றறுக்கும் ....

On 3/30/2019 at 1:52 PM, Jude said:

உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும்.  வந்த பின்னர் வாருங்கள்,  தொடர்ந்தும் பேசலாம்.

உங்கள் அபிமானம் தான் என்ன ? பிக்கு, பிள்ளையாரின் இருப்பிடத்தை அபகரித்தார் பிள்ளையார் தண்டனை கொடுத்தார் ...உங்களது குழப்பம் என்ன ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.