Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை முடித்து கார் பாக் செய்திருந்த இடத்துக்கு வருகிறேன். பிரதான சாலையில் கரையிலேயே தான் என் கார் நின்றது. என்னைக் கடந்துகொண்டு ஒருவர் பெட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அவர் கடந்து சென்றதன் பின்னர் தான் எனக்கு அவரைப் பார்த்ததுபோல் இருக்க, நான் கார் கதவைத் திறந்தபடி தலை திருப்பி அவரைப் பார்க்கிறேன்.

யோசித்துக்கொண்டிருக்க எனக்கு நினைவு வந்துவிட்டது. முன்பு ஒரு தடவை சந்தித்த யாழ் உறவுதான் அவர் என்று. அவர் ஒரு கடைக்குள் நுழைய நின்று கதைத்துவிட்டுச் செல்வோமா என்று எண்ணிவிட்டு அவர் எதோ அலுவலாக இருக்கிறார். எனக்கும் காலை தேநீர் கூடக் குடிக்காத தவிப்பு. சரி இன்னொருநாள் பார்ப்போம் என்றுவிட்டுச் சென்றுவிட்டேன்.

மீண்டும் ஒரு இரண்டோ மூன்றோ வாரங்களுக்கு முன்னர் நான் நடந்து கடைக்குச் செல்ல எதிரே மீண்டும் அந்த (உறவு). இருவரும் நேரே ஒருவரை ஒருவர் பார்த்தாலும் எந்த உணர்வுமற்ற அவர் முகத்தைப் பார்த்ததும் வணக்கம் என்று கூற வெளிக்கிட்ட நான்  ஒன்று கூறாமல் கடந்து போகிறேன். ஏன் இவர் தெரியாததுபோல் போகிறார் என்று என் மனதில் கேள்வி எழுந்தாலும் நீயும் எதுவும் கூறாமல் தானே கடந்து போகிறாய் என்று என் மனச்சாட்சி கேட்க எதுவும் மேற்கொண்டு எண்ணாமல் கடைக்குச் செல்கிறேன்.

கடந்த வாரம் தமிழ்ப் பள்ளிக்காக சிலஉணவுப் பொருட்களை வாங்க உணவகம் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல இன்னும் இருவருடன் கதைத்துக்கொண்டு அதே ஆள். இம்முறை பேசாமல் போக்க கூடாது என்று எண்ணிக்கொண்டு வணக்கம் என்கிறேன். அவரும் வணக்கம் சொல்லிவிட்டுப் பார்க்க என்ன தெரியாதாமாதிரி நிக்கிறியள் என்கிறேன். எனக்கு உங்களைத் தெரியவில்லை என்கிறார் அவர். நீங்கள் யாழ் கள உறவு ........ தானே என்று கேட்க, எனக்கு அதில எழுதுற அளவு அறிவில்லை என்கிறார் அவர். நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன். அவர்  பதிலால் அவரே நான் நினைத்த உறவு என்று ஒத்துக்கொண்டதை நினைத்து இப்பவும் சிரிப்பாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

நான் யார் என்று சொல்ல மாட்டன் ரதி ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகம் தெரிந்த பின்பும், நான் முகமூடி என்று நடிப்பது ....அழ‌கல்ல அத்துடன்  சக மனிதனை அவமானப்படுத்தும் செய‌லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அன்ரி ஒன்றில் நிறையக் கனவு காண்கின்றார் அல்லது இலண்டன் புகைக்குள் அவருக்கு தோற்ற மயக்கம் (hallucinations) அடிக்கடி வருகின்றது!😀

தெரியாத ஆட்கள் வணக்கம் சொன்னால் ஒன்றில் மதம் பரப்புபவர்களாக இருப்பார்கள் அல்லது எதையும் விக்க முற்படுபவர்களாக இருப்பார்கள் என்பதால் இலண்டனில் தமிழர்கள் பலர் அவதானமாக இருப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

முகம் தெரிந்த பின்பும், நான் முகமூடி என்று நடிப்பது ....அழ‌கல்ல அத்துடன்  சக மனிதனை அவமானப்படுத்தும் செய‌லும்

அது அவருக்குப் புரியவில்லையே.

 

8 minutes ago, கிருபன் said:

சுமே அன்ரி ஒன்றில் நிறையக் கனவு காண்கின்றார் அல்லது இலண்டன் புகைக்குள் அவருக்கு தோற்ற மயக்கம் (hallucinations) அடிக்கடி வருகின்றது!😀

தெரியாத ஆட்கள் வணக்கம் சொன்னால் ஒன்றில் மதம் பரப்புபவர்களாக இருப்பார்கள் அல்லது எதையும் விக்க முற்படுபவர்களாக இருப்பார்கள் என்பதால் இலண்டனில் தமிழர்கள் பலர் அவதானமாக இருப்பார்கள்!

எனக்கு வேற வேலையில்லையாக்கும்.😃

தெரியாத ஆட்களைப் பற்றியா நான் இப்ப கதைக்கிறேன் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் யாழ் கள உறவு ........ தானே என்று கேட்க, எனக்கு அதில எழுதுற அளவு அறிவில்லை என்கிறார் அவர். நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன். அவர்  பதிலால் அவரே நான் நினைத்த உறவு என்று ஒத்துக்கொண்டதை நினைத்து இப்பவும் சிரிப்பாக இருக்கு.

படத்தை ஒருக்கா போடுங்கோ பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அவரின் பெயரையோ படத்தையோ சொல்ல வேண்டாம்...... கடைசியாய் அவர் இட்ட  பதிவை கோட் பண்ணி விடுங்கள்.....நாங்கள் பார்க்க மாட்டம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு உங்கள பார்த்து பயமோ தெரியல!
தன்னை வைச்சும் கதை எழுதிப்போடுவியளோ என்று?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, ஈழப்பிரியன் said:

படத்தை ஒருக்கா போடுங்கோ பார்ப்பம்.

நல்ல கெட்டிக்காரன் தான் நீங்கள்😁

5 hours ago, nunavilan said:

பனங்காயா இருக்குமோ??  🤣

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் நுணா.

9 hours ago, suvy said:

நீங்கள் அவரின் பெயரையோ படத்தையோ சொல்ல வேண்டாம்...... கடைசியாய் அவர் இட்ட  பதிவை கோட் பண்ணி விடுங்கள்.....நாங்கள் பார்க்க மாட்டம்.....!   😁

ஐயோ ஐயோ😁😁

9 hours ago, குமாரசாமி said:

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

பாவம் ந்ந்தன்

1 hour ago, ஏராளன் said:

அவருக்கு உங்கள பார்த்து பயமோ தெரியல!
தன்னை வைச்சும் கதை எழுதிப்போடுவியளோ என்று?!

இருக்கும். நான் அந்தப்பக்கமா யோசிக்கேல்லையே😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் யார் என்று சொல்ல மாட்டன் ரதி ☺️

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

21 hours ago, குமாரசாமி said:

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

 

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேக்கு மட்டும் இப்படியான அநுபவங்கள் எப்படி ஏற்படுதோ?

 

இங்கு உண்மையிலேயே நான்  ஏதெச்சையாக மறதிக்கு உள்ளாகியிருந்தால்க்கூட முகம் பார்த்து சிரிக்கிறார்கள் சத்தியமாத் தெரியாத சனத்திற்கும் புன்னகையால் பதிலளித்துவிட்டே கடக்கவேண்டியுள்ளது. இல்லையென்றால்  மறதியால் அசடு வழிய வேண்டியுள்ளது. வரவர மறதி அதிகரித்து செல்கிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 9:45 AM, ஜெகதா துரை said:

அவருக்கு என்ன பிரச்சனையோ?

அப்படி எண்ணித் தான் முதல் இரு தடவைகளும் நானும் எண்ணியது. ஒரு தெரிந்த மனிதரைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் வணக்கம் சொல்வது ஒரு பெரிய வேலையா என்ன ???

11 hours ago, வல்வை சகாறா said:

சுமேக்கு மட்டும் இப்படியான அநுபவங்கள் எப்படி ஏற்படுதோ?

 

இங்கு உண்மையிலேயே நான்  ஏதெச்சையாக மறதிக்கு உள்ளாகியிருந்தால்க்கூட முகம் பார்த்து சிரிக்கிறார்கள் சத்தியமாத் தெரியாத சனத்திற்கும் புன்னகையால் பதிலளித்துவிட்டே கடக்கவேண்டியுள்ளது. இல்லையென்றால்  மறதியால் அசடு வழிய வேண்டியுள்ளது. வரவர மறதி அதிகரித்து செல்கிறது

 

லண்டனில் பெரும்பாலான எங்கடை சனங்கள் விசித்திரமான சனங்களாய்த்தான் இருக்கிறார்கள் சகாரா. பலரும் குனிந்த தலை நிமிர்த்தாமல் தொலைத்த எதையோ தேடுவதுபோல் அல்லது திருடனுக்குத் தேள் கொட்டியவர்கள் போலத்தான் பார்ப்பது.

23 hours ago, ரதி said:

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

 

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 

ஏன் ரதி மற்றவர்கள் கடைகளுக்கே போவதில்லையா ???
அதுசரி பெருமாளுக்குத் தமிழ்க் கடைகளோடு நல்ல பரிச்சயம் என்று நன்கு தெரிந்தவர்போல் சொல்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு    வேலை கிருபனாய் இருக்கும்.. உதவி  கேட்க போறா என்று ..  பேசாம 

விட்டு இருப்பார் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 9:16 PM, ரதி said:

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

 

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 

அப்ப ஆர் உந்த மொள்ளமாரி????? :rolleyes:

மீரா நல்ல பொடியன்!  நந்தனும் இல்லை..பெருமாள் பெரிய டவுட்...நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

தங்கச்சி புலநாயை முடுக்கி விடுங்கோ....😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 ஒரு    வேலை கிருபனாய் இருக்கும்.. உதவி  கேட்க போறா என்று ..  பேசாம 

விட்டு இருப்பார் .  

அப்பிடியான ஆள் கிருபன் என்று நான் நினைக்கவில்லை.

10 hours ago, குமாரசாமி said:

அப்ப ஆர் உந்த மொள்ளமாரி????? :rolleyes:

மீரா நல்ல பொடியன்!  நந்தனும் இல்லை..பெருமாள் பெரிய டவுட்...நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

தங்கச்சி புலநாயை முடுக்கி விடுங்கோ....😄

குடும்பஸ்தராய் வந்தபிறகு நெடுக்கர் மாறிவிட்டார் என்று சொல்லீனம்

Link to comment
Share on other sites

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

On 3/28/2019 at 11:46 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருவரும் நேரே ஒருவரை ஒருவர் பார்த்தாலும் எந்த உணர்வுமற்ற அவர் முகத்தைப் பார்த்ததும் வணக்கம் என்று கூற வெளிக்கிட்ட நான்  ஒன்று கூறாமல் கடந்து போகிறேன்

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

அந்தாள் வலையில் வீழ்ந்து கனகாலம் கண்டியளோ😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

சீ சீ அப்படியெல்லாம் அவர் கேட்கமாட்டார். எதற்கும் ஆக்கத்தை இன்னொருமுறை ஆறுதலாக வாசித்துப் பாருங்கள் சாமியாரே.!

On 3/28/2019 at 11:46 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பிடியான ஆள் கிருபன் என்று நான் நினைக்கவில்லை.

குடும்பஸ்தராய் வந்தபிறகு நெடுக்கர் மாறிவிட்டார் என்று சொல்லீனம்

 

அப்பிடியா! நெடுக்கரையும்,மனிசியையும் வீட்டை கூப்பிட்டு சாப்பாடு கொடுக்கத் தான் இருக்கு 😎
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

 

 

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.😀

 

6 hours ago, குமாரசாமி said:

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.