Jump to content

ஜெனீவா தீர்மானங்களும் கொழும்பு அரசாங்கங்களின் அணுகுமுறைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா தீர்மானங்களும் கொழும்பு அரசாங்கங்களின் அணுகுமுறைகளும்

- வீ.தனபாலசிங்கம் -

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் 2019 பட்ஜெட் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு குறித்து பெரும்பாலான  பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்களோ இல்லையோ கடந்தவாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பற்றி தவறாமல் பேசிவிடுகிறார்கள். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் அரசாங்கத்தின் பட்ஜெட் யோசனைகளை விமர்சனம் செய்கின்றதை விடவும் ஜெனீவா விவகாரத்தில் அதிக தீவிரம் காட்டி காரசாரமாக உரையாற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.   

UN.jpg      

இதற்கு புறம்பாக, தற்போது ராஜபக்சாக்களின் அரசியல் கட்சியாக விளங்குகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ( இவர்கள் பாராளுமன்றத்திற்குள் தங்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் என்றே கூறிக்கொள்கிறார்) பாராளுமன்றத்துக்கு வெளியே கொழும்பில் தினமும் செய்தியாளர் மகாநாடுகளைக் கூட்டி ஜெனீவா விவகாரம் தொடர்பில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.            

அவர்களின் விமர்சனங்கள் எல்லாம் பெருமளவுக்கு கடந்தவாரம் ஜெனீவாவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதைப் பற்றியதாகவே இருக்கிறது. குறிப்பாக உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தும் நிபந்தனையை மீண்டும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்கிவிட்டது என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.           

அரசாங்கத் தரப்பினரும் ஜெனீவாவில் தாங்கள் இணங்கிக்கொண்ட நிபந்தனைகள் அல்லது ஏற்பாடுகளை முழு உலகமுமே நன்கறியும் என்பதைத் தெரிந்துகொண்டும் கூட கலப்பு நீதிமன்றத்துக்கு ஒருபோதும் தாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும்  வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் நீதி விசாரணைச் செயன்முறைகளில் சம்பந்தப்படுத்தப்போவதில்லை என்றும் மறுதலித்துக்கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜபக்ச முகாமின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கிறார்கள்.           

ஒட்டுமொத்தத்தில் நோக்குகையில், ஜெனீவா விவகாரம் அரசியல் கட்சிகள்  குறிப்பாக, இரு பிரதான கட்சிகளும் பரஸ்பரம்  தங்களது  தேசப்பற்றின் வலிமையையும்  எதிர்த்தரப்பினரின்  துரோகத்தனத்தின்  பாரதூரத்தன்மையையும் நாட்டு மக்களுக்கு காட்டுவதற்கான ஒரு வசதியான கருவியாக மாறியிருக்கிறது எனலாம்.

மாற்றமில்லை

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறிய தீர்மானம் 2015 அக்டோபர் தீர்மானத்தின்(30/1) வாயிலாக வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இருவருடகால அவகாசத்தை வழங்குவதை நோக்கமாகக்கொண்டதே. இலங்கையின் பொறுப்புக்கூறல் கடப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளும் நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிச்செயன்முறைகள் தொடர்பிலான ஏற்பாடுகளும் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகவில்லை.அவற்றை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருக்கிறது என்ற சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் காணப்படுவதாகவும் கூறமுடியாது.           

ஜெனீவாவுக்குச் சென்ற இலங்கைக் குழுவின் தலைவரான வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இம்மாத ஆரம்பத்தில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை நிலைவரம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பல விடயங்களை மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய உரையில் கடுமையாகக் கண்டனம் செய்திருந்ததுடன் ஆணையாளர் செய்த பல விதந்துரைகளையும் நிராகரித்திருந்தார் என்ற போதிலும்  காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதில் தயக்கம் இருப்பதாகக் கூறவில்லை. அந்த குழுவில் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகச் சென்றவர்களும் இணை அனுசரணையை ஜெனீவாவில் வைத்து ஆட்சேபிக்கவில்லை.ஆனால், நாடு திரும்பிய உடனடியாக அவர்களும் இணை அனுசரணையைக் கண்டனம் செய்பவர்களுடன் உற்சாகமாக இணைந்துகொண்டுள்ளனர்.             

அரசாங்கத் தரப்பினரின் பிரதிபலிப்பு அவர்கள் மீதான எதிரணியின்  குற்றச்சாட்டுக்களை பலப்படுத்துவதாக அமைகின்றதே தவிர உண்மை நிலையை விளக்குவதாக இல்லை. இந்த இடத்தில் தான் ஜெனீவா கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் உரையாற்றியபோது ' இலங்கையின் அரசியல் தலைமைத்துவங்களின் உயர்மட்டத்தில் பொதுவான நோக்கு இல்லாததே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாதமைக்கு முக்கிய காரணம் ' என்று சுட்டிக்காட்டிய உண்மையை நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.             

2015 அக்டோபர் ஜெனீவா தீர்மானம் 30/1 நிறைவேற்றப்பட்ட பிறகு அதன் ஏற்பாடுகளை இலங்கை 18 மாதங்களில் அதாவது 2017 மார்ச் அளவில் நிறைவேற்றவேண்டும் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதற்குப் பிறகு மீண்டும் இலங்கையின் இணை அனுசரணையுடனேயே மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் (34/1) மூலமாக இரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கால அவகாசத்திற்குள் அரசாங்கம் திருப்திகரமான முறையில் நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனினும் முன்னெடுக்கப்பட்ட செயன்முறைகளை மனித உரிமைகள் பேரவை வரவேற்கத்தவறவில்லை.              

காணாமல்போனோர் விவகார அலுவலகம் 2017 செப்டெம்பரில் அமைக்கப்பட்டு அதற்கான ஆணையாளர்கள் 2018 பெப்ரவரியில் நியமிக்கப்பட்டதன் பிறகு அது செயற்பட ஆரம்பித்திருப்பதையும் இழப்பீட்டு அலுவலகம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை  நிறுவுவதற்கு சட்டமூலம் ஒன்றைக்கொண்டுவருவதற்கு அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டதையும் கடந்த வாரத்தைய ஜெனீவா தீர்மானம் வரவேற்றிருக்கிறது. அந்தச் செயன்முறைகள் எல்லாம் மிகுந்த மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும்,போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவிதத்திலும் திருப்திப்படக்கூடியதாக இருக்கவில்லையெனினும் இலங்கை அரசாங்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரினதும் மனித உரிமைகள் பேரவையினதும் அபிப்பிராயங்கள் அமைந்திருக்கின்றன.

ஐந்தரை வருடங்கள்            

2015 அக்டோபர் தீர்மானத்துக்குப் பிறகு இதுவரையில் மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. கடந்த வாரம்  வழங்கப்பட்டிருக்கும் இரு வருடகால அவகாசத்தின் முடிவில்  அந்த தீர்மானம் ஐந்தரை வருடங்களை எட்டும். அப்போது இலங்கை அரசாங்கம் அதன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லணக்க கடப்பாடுகளை எந்தளவுக்கு நிறைவேற்ற முன்னவே இருக்கும் என்பது முக்கியமான ஒரு கேள்வி.      

ஜெனீவாவில் இருந்து நாடு திரும்பிய கையோடு அரசாங்கத் தூதுக்குழுவின் தலைவரான வெளியுறவு அமைச்சர் மாரப்பனவும் முன்னாள் அமைச்சரான சரத் அமுனுகமவும் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியவை.

மனித உரிமைகள் பேரவையில் தான் நிகழ்த்திய உரை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்த மாரப்பன இலங்கையில்  நடத்தப்படக்கூடிய நீதிவிசாரணைச் செயன்முறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை சம்பந்தப்படுத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று ஜெனீவாவில் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிவித்தார். நிறைவேற்றப்பட்ட தீர்மான ஆவணத்துக்கு புறம்பான ஆவணம் ஒன்றின் மூலமாக கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு தான் இணக்கம் தெரிவித்ததாக எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.           

அதேவேளை, ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் ஊடாக அளிக்கப்பட்ட  உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரையறை  எதற்கும் தாங்கள் இணங்கவில்லை என்று அமுனுகம பாராளுமன்றத்தில்  குறிப்பிட்டார். போர்க்குற்றங்கள்  தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு  முன்னெடுக்கப்படக்கூடிய  எந்தவொரு நீதிச்செயன்முறையிலும் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை ஒருபோதும் அனுமதிக்க இலங்கை தயாராயில்லை என்பதை மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவாகக் கூறிவிட்டதாகவும் அவர் கூறினார்.             

இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை களுத்துறையில் வைபவம் ஒன்றில் உரையாற்றியபோது ஜெனீவா தீர்மானத்தின் மூலமாக இலங்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று கூறியிருந்தார்.அரசியலமைப்புக்கு முரணானதாக அமையக்கூடிய எந்தவொரு யோசனையும் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்யப்போவதாகவும்ஜனாதிபதி சூளுரைத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அது மாத்திரமல்ல,  ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவது தொடர்பில் தனது அனுமதி இல்லாமலேயே அங்குள்ள இலங்கையின் தூதுவர் கைச்சாத்திட்டதாகவும் அவர் கைச்சாத்திட்டது வெளியுறவு அமைச்சுக்கோ அல்லது வெளியுறவுச் செயலாளருக்கோ கூட தெரியாது என்றும் ஜனாதிபதி சிறிசேன கூறியிருக்கிறார். ஜனாதிபதி கூறுகின்ற இந்த கையெழுத்து சர்ச்சை குறித்து அரசாங்கத்தரப்பில் இருந்து இதுவரை பிரதிபலிப்பு எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. அதேவேளை, ராஜபக்ச தரப்பைச் சேர்ந்தவர்கள் ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவரை திருப்பியழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.     

சர்வதேச சமூகத்துடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான விவகாரத்தை இவ்வாறாக பொறுப்புணர்ச்சியற்ற முறையில்  அணுகுவது உலகநாடுகள் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று அரசியல் தலைவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உள்நாட்டு விவகாரங்களை கட்சி அரசியல் மாச்சரியங்களின் அடிப்படையில் அணுகுவதற்கு பழக்கப்பட்டுவிட்ட அவர்கள் வெளியுறவு விவகாரங்களையும் அவ்வாறே அணுகுகிறார்கள். வெளியுலகில் கூறுவது ஒன்று, உள்நாட்டில் ' கலரிக்கு ' பேசுவது  வேறொன்றாக இருக்கிறது.

மஹிந்தவின் முதல் வாக்குறுதி    

இலங்கையின் விவகாரம் ஜெனீவாவுக்கு சென்ற நாள் தொடக்கம் இதுவரையில் கொழும்பு எவ்வாறு அதைக் கையாண்டுவந்திருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் திரும்பிப்பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

2009 மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்கு வந்து ஒரு வாரகாலத்திற்கு பிறகு இலங்கை வந்த அப்போதைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ - மூனுடன் கூட்டறிக்கையொன்றில் கைச்சாத்திட்டு மனித உரிமை மீறல்கள் / போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிசெய்வதாக முதலில் வாக்குறுதி அளித்தவர் வேறு யாருமல்ல, இன்று ஜெனீவா செயன்முறைகளுக்கு எதிராக போர்முழக்கம்  செய்யும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே. அந்த கூட்டறிக்கை தொடர்பிலான கடப்பாட்டை வெளிப்படுத்தி அதே வருடம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கையே முன்னின்று கொண்டுவந்த தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.      

பான் கீ - மூனுடனான கூட்டறிக்கை தொடர்பிலும் மேற்கூறப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அடுத்த நகர்வுகளைச் செய்வதற்கு இலங்கை தவறியதால் இந்த விவகாரத்தில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கென்று செயலாளர் நாயகம் 2010 ஆம் ஆண்டில் தருஸ்மன் குழுவை நியமித்தார். அந்தக்குழு 2011 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையில் போரின் இறுதி மாதங்களில் மாத்திரம் 40 ஆயிரம் குடிமக்கள் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.     

தருஸ்மன் குழு நியமிக்கப்படவிருந்த வேளையில் ஜனாதிபதி ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.அந்த ஆணைக்குழுவும்  2011 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையில் பாதுகாப்பு படைகளினாலும் விடுதலை புலிகளினாலும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றே விதந்துரை செய்தது.      

ஆனால், ராஜபக்ச அரசாங்கம் அதுவாகவே நியமித்த அந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் கிஞ்சித்தேனும் அக்கறை காட்டாத நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை 2012 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பில் அதன் முதன்முதலான தீர்மானத்தை நிறைவேற்றியது. அதே ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு தீர்மானம் இலங்கையைக் கேட்டுக்கொண்டது. ராஜபக்ச அரசாங்கம் அந்த தீர்மானத்தை நிராகரித்தது. ஆனால், பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் தேசிய நடவடிக்கைத்திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்தது. இத்தகைய திட்டமொன்றை  முன்வைக்குமாறு மனித உரிமைகள் பேரவை அதன் தீர்மானத்தில் இலங்கையைக் கேட்டுக்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே இராணுவத்துக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணைசெய்வதற்கு  6 உறுப்பினர்களைக்கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றும் நியமிக்கப்பட்டது.

தேசிய நடவடிக்கை திட்டம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் பேரவை  2013 ஆம் ஆண்டில் அதன் இரண்டாவது தீர்மானத்தின் மூலமாக ( கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் விததந்தரைக்கப்பட்ட கடப்பாடுகளுக்குப் புறம்பாக) வேறு கடப்பாடுகளை இலங்கை மீது விதித்தது.புதிய கடப்பாடுகளில் அதிகாரப்பரவலாக்கல் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த தீர்மானத்துக்கான பதிலாக ஜனாதிபதி ராஜபக்ச காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கு பரணகம ஆணைக்குழுவை நியமித்தார். போரின் இறுதிக்கட்டங்களில் எவரும் காணாமல்போகவில்லை என்று இராணுவ நீதிமன்றம் கூறியபோதிலும் இந்த ஆணைக்குழுவைஅவர் நியமித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

 மனித உரிமை மீறல்கள் ஃ போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்று கோரும் தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியபோது  மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளையும் ஆராய்வதற்கு பரணகம ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ராஜபக்ச இரண்டாவது ஆணையொன்றையும் வழங்கினார். 

அதற்குப் பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து புதிய அரசாங்கம் பல்வேறு கடப்பாடுகளுடன்  வெளிநாட்டு நீதிபதிகளினதும் பங்கேற்புடன் கூடிய நீதிச்செயன்முறையை வலியுறுத்திய 2015 அக்டோபர் தீர்மானத்துக்கு ஜெனீவாவில் இணை அனுசரணை வழங்கியது. ஆனால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு தொடர்பான உறுதிமொழியை அரசாங்கம் மீறியது.

2015 அக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2017 மார்ச்சில் ஜெனீவாவில் ஒரு இணை அனுசரணைத் தீர்மானத்தின் மூலமாக அரசாங்கம் இருவருட காலஅவகாசத்தைப் பெற்றுக்கொண்டது. இப்போது  உள்நாட்டு நீதிச்செயன்முறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புக்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று உச்சத்தொனியில் பேசிக்கொண்டே அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் கூடிய நீதிச்செயன்முறையை வேண்டிநிற்கும் அதே தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இருவருட கால அவகாசத்தைக் கேட்டுப்பெற்றிருக்கிறது.

ஜெனீவா தீர்மானங்களை நிராகரிப்பதாகக் கூறிய ராஜபக்ச ஆட்சியாக இருந்தாலென்ன, தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய இன்றைய அரசாங்கமாக இருந்தாலென்ன போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றிருக்கக்கூடிய மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதாக சர்வதேச சமூகத்துக்கு கூறிவிட்டு உள்நாட்டில் வந்து மறுதலையாக பேசுவதையே வழமையான தந்திரமாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றன. அது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. 

 

http://www.virakesari.lk/article/52951

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.