Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அய்யாவின் எழுத்து, வர்ணனை ,சம்பவமெல்லாம் சும்மா நேர இருந்து பார்த்ததை போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள்

"ஏன் இப்படி சிரிக்கின்றீர்"

"சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

இதுதான் உன்மையா என்ன?

Link to comment
Share on other sites

14 minutes ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதையே தான் நானும் நினைத்தேன். இப்படித் தான் நிறையக் காதல்கள் மூடி மறைக்கப்படுகின்றனவோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,
நன்றாக இருந்தது. இது வெறும் கதை இல்லை என்று நினைக்கிறன். மேல குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரிதான் உண்மையான situation இருந்திருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தனியப் போயிருக்கவேணும் புத்தன். மனிசியைக் கூட்டிக்கொண்டு போனா உப்பிடித்தான்.😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தனியப் போயிருக்கவேணும் புத்தன். மறிசியைக் கூட்டிக்கொண்டு போனா உப்பிடித்தான்.😅

"மறிசியைக் கூட்டிக்கொண்டு போனா" 


 சுமே அக்கா... டக்கென்று வாசிக்கும் போது "மசிரை கூட்டிக்கொண்டு போனால்" எண்டு தான் வந்தது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Sasi_varnam said:

"மனிசியைக் கூட்டிக்கொண்டு போனா" 


 சுமே அக்கா... டக்கென்று வாசிக்கும் போது "மசிரை கூட்டிக்கொண்டு போனால்" எண்டு தான் வந்தது. 😂

ஐயோ கவனிக்கேல்ல😊😋

 

 

 

Link to comment
Share on other sites

கதை அப்பிடி இப்பிடி  திரும்பும் என்று 96 பட ஸ்டைலில் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ( நான் உட்பட ) "சப்" என்று முடிந்து விட்டது கதை. வேறு மாதிரி எழுதத் தொடங்கி "சொந்தச் செலவில் சூனியம் வைக்கிற" கதையாக மாறிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு "alternate ending"  குடுத்திட்டார் போல   எழுத்தாளர்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  என்னவோ புத்தன் முடிவை வேண்டும் என்று மாத்தி எழுதின மாதிரி தெரியுது.


பெருமாள்,எங்கிருந்தாலும் சபைக்கு வரவும்...வந்தால் 72ம் ஆண்டின் தத்துவத்தினை விளங்கிக் கொள்ளலாம் 😃
 

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கு.சா பெரிய விண்ணன் ... புத்தன் கதையை இப்படி முடித்ததற்கான காரணத்தை மட்டுமல்ல  இப்படியான "revolution"  ஆன "gif" ஐயும்  சிச்சுவேசனுக்குத் தகுந்தாப் போல தேடிக் கண்டு பிடித்திட்டாரே மனிசன்...😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் உன்மையா என்ன?

யோவ்...... சும்மா இரப்பா......அது நான் சும்மா பகிடிக்கு எழுதினது.....☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 10:33 PM, ஏராளன் said:

வீட்டுக்காரியின் நக்கலிலையே மிச்ச வாழ்க்கை போகபோது சுரேசிற்கு.

பாவம் சுரேஸ் ....நான் நினைக்கிறேன் இனிமேல்  பழைய காய்களை ச‌ந்திப்பதை நிறுத்திவிடுவான் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 11:14 PM, suvy said:

கதவை தட்டி ஹலோ டீச்சர் நான்தான் சுரேஷ் ஞாபகம் இருக்கா என்று கேட்பதற்கு ஆன செலவு 5000 டொலர்.....!  👍

நல்ல சுவாரஸ்யமான கதை புத்ஸ்.....!   😁 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...5000 டொலருக்கு கியுபாவுக்கு போய்விட்டு வ‌ந்திருக்கலாம் என்று இப்ப சுரேஸ் நினைச்சிருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 11:38 PM, மல்லிகை வாசம் said:

இந்த இடத்தில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை... 😃😀🤣 ஒருகாலத்தில் கதாநாயகன் ஜோடியாக நடித்த நடிகைகள் எல்லாம் பின்னாளில் அவருக்கே அம்மாவாக நடிக்கும் கொடுமை இதனால் தானோ! 

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...சுரேஸ் பிள்ளைய‌ருக்கு இப்பவும் காதாநாயகன் என்ற நினைப்பு போல கிடக்கு....அதுதான் பழசை பார்க்க வெளிகிட்டிருக்கிறார்...

On 4/12/2019 at 12:15 AM, Sasi_varnam said:

புத்தன் அய்யாவின் எழுத்து, வர்ணனை ,சம்பவமெல்லாம் சும்மா நேர இருந்து பார்த்ததை போல இருக்கு.

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...என்ன இந்த பக்கம் வருவது கொஞ்சம் குறைவா இருக்கு வேலை பளுவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 12:41 AM, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...அப்படி இருக்குமோ ...நான் நினைக்கவில்லை ..சுரேஸின் மனைவி பயங்கர‌ சுழிச்சி ..சுரேசை தனியாக அனுப்பவில்லை ...அவளுக்கு  தெரிந்திருக்கும் உவர் பழசுகளிட்ட போய் இப்ப தன்னுடைய காதாநாய‌க விளையாட்டுக்களை காட்ட ஏலாது என்று..

 

அருமையான படம் 
I love it....

On 4/12/2019 at 1:39 AM, நீர்வேலியான் said:

புத்தன்,
நன்றாக இருந்தது. இது வெறும் கதை இல்லை என்று நினைக்கிறன். மேல குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரிதான் உண்மையான situation இருந்திருக்கும் 

கு.சா அண்ணே சும்மா சொல்லுறார்  ...உண்மை இது வெறும் கதை தான் ,வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் நன்றிகள் ...

நான் நீர்வேலிக்கு இந்த தடவை போய் வந்தேன் இது தான் என்னுடைய முதல் விசிட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 12:54 AM, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் உன்மையா என்ன?

சத்தியமா இது உண்மையில்லை  ....வருகைக்கும் கேள்விற்க்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...சுரேஸ் பிள்ளைய‌ருக்கு இப்பவும் காதாநாயகன் என்ற நினைப்பு போல கிடக்கு....அதுதான் பழசை பார்க்க வெளிகிட்டிருக்கிறார்...

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...என்ன இந்த பக்கம் வருவது கொஞ்சம் குறைவா இருக்கு வேலை பளுவோ?

யாருக்கும் சொல்லாதீர்கள் புத்தன் ஐயா, காதும் காதும் வைத்தால் போல 
நான் ஸ்ரீலங்கா போயிட்டு வந்திட்டன்.
சென்.பற்றிக்ஸ் பொடியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ரீ யூனியன் வச்சவையள்.
இவ்வளவு தூரம் போயிட்டு எங்கட யாழ்கள நட்புகள் சிலரை பார்க்காதது மனதுக்குள் ஒரு குறையாகவே இருக்கிறது. நேரம் கிடைத்தால் என்னுடைய பயணம் பற்றி கொஞ்சம் கிறுக்கலாம் என இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 10:10 AM, putthan said:

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.

"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ"

"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது"

"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்"

"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல"

"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்"

"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்"

"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் "

"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,

கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள்,  இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே "

"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று"

" இந்தியாவில சொப்பிங்  செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் "

"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே"

"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல"

"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்"--------

புத்தன் ஜீ....  "கலா"  என்ற, இரண்டு எழுத்து தலைப்புடன்.... 
ஆரம்பித்த கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். அதிலும்...  பிறந்த இடத்திற்கு,  உறவுகளை, பார்க்கப்  போகும் போது,  என்ன பொருள் கொடுப்பது என்பதில்... பலருக்கும், தலையே வெடித்து விடும் அளவிற்கு...  யோசனைகள்  வரும்.

அதனை...  உங்கள் கதையில்.. 
அழகிய... யாழ்ப்பாணத்து தமிழில், 
வெளிப்படையாக..... எழுதிய, புத்தனுக்கு பாராட்டுக்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2019 at 6:54 AM, Sasi_varnam said:

யாருக்கும் சொல்லாதீர்கள் புத்தன் ஐயா, காதும் காதும் வைத்தால் போல 
நான் ஸ்ரீலங்கா போயிட்டு வந்திட்டன்.
சென்.பற்றிக்ஸ் பொடியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ரீ யூனியன் வச்சவையள்.
இவ்வளவு தூரம் போயிட்டு எங்கட யாழ்கள நட்புகள் சிலரை பார்க்காதது மனதுக்குள் ஒரு குறையாகவே இருக்கிறது. நேரம் கிடைத்தால் என்னுடைய பயணம் பற்றி கொஞ்சம் கிறுக்கலாம் என இருக்கிறேன்.

உங்கள் பயண அனுபவத்தையும் எழுதுங்கோ வாசிக்க காத்திருக்கின்றோம்

On 4/13/2019 at 7:06 AM, தமிழ் சிறி said:

புத்தன் ஜீ....  "கலா"  என்ற, இரண்டு எழுத்து தலைப்புடன்.... 
ஆரம்பித்த கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். அதிலும்...  பிறந்த இடத்திற்கு,  உறவுகளை, பார்க்கப்  போகும் போது,  என்ன பொருள் கொடுப்பது என்பதில்... பலருக்கும், தலையே வெடித்து விடும் அளவிற்கு...  யோசனைகள்  வரும்.

அதனை...  உங்கள் கதையில்.. 
அழகிய... யாழ்ப்பாணத்து தமிழில், 
வெளிப்படையாக..... எழுதிய, புத்தனுக்கு பாராட்டுக்கள்.  :grin:

 நன்றிகள் சிறி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்....உங்களது கருத்துக்கள் எங்களை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 8:23 AM, putthan said:

சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

அதுதானே ....சுரேஸ்  நாக்கை பிடுங்கி சாகலாம் என்று சொல்லுறீங்கள்
😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

அதில்லை.....சுரேஸ் பிள்ளை!.......கலாவுக்கு சீலை குடுத்திருந்தால்.....சீலை கிழியக்கு முதல் சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அதில்லை.....சுரேஸ் பிள்ளை!.......கலாவுக்கு சீலை குடுத்திருந்தால்.....சீலை கிழியக்கு முதல் சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும். :grin:

சீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

நாங்களெல்லாம் இருக்கேல்லையா.... பாவம் அவரும் ஒரு ஓரமா இருந்திட்டு போகட்டும்.....!  😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.