Jump to content

தென் ஆப்பிரிக்காவின், சிங்கத்தாய் (Lion Mamma)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்பிரிக்காவின், சிங்கத்தாய் (Lion Mamma)

Nokubonga Qampi

 

நேரம் நள்ளிரவை தாண்டி விட்டது. அந்த தாய் வேலை முடித்து வந்த அசதி....

அவரது ஒரே மகள், தனது நண்பிகள் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கே தங்கி மறுநாள் தான் வருவதாக சொல்லி இருந்தார்.

போன் அலறுகிறது.... திடுக்கிட்டு எழுகிறார். அழைப்பது...மகள் இல்லையே. கிராமத்தில் 500மீட்டர் தூரத்தில் இருக்கும் மகளின்  நண்பி பேசுகிறார்.... பதட்டத்துடன்.

உன் மகளை... சில குடி கார இளைஞர்கள் ... பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள்..... அவள் போடும் கூச்சல் எனக்கு கேட்கிறது. 

அவரிடம் கேட்டாலும் உதவிக்கு போக மாட்டார்கள்... காரணம்.. பயம்.... கேட்பதில் பயனில்லை. 

பயம்... அதிர்ச்சி.... கோபம்.... நண்பிகள் எங்கே... அவள் மட்டும் என்றால் எப்படி?

இரண்டு அறை வீடு. ஒன்று சமையல் அறை.... அங்கே செல்கிறார். கையில் கிடைத்தது.... காய்கறி வெட்டும் கத்தி....

போலீசாரை அழைக்கிறார். அவர்கள் அந்த கிராமத்துக்கு வந்து சேர முன்னர், மகள் இறந்து விடக் கூடும். அவர்களும் ஓடி விடக்கூடும்.

வெளியே ஓடுகிறார்....  கும் இருட்டு... போனில் உள்ள டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் ஓடோடி செல்கிறார்.

கிராமத்தின் ஒரு மூலையில்... நான்கு வீடுகள். அதில் ஒரு  (நண்பியின்) வீட்டில் தான் இவரது மகள் தூங்கிக் கொண்டிருந்தார். மணி 1.30. அவளை எழுப்ப விரும்பாத நண்பிகள், வெளியே இயற்கை அழைப்பினால் சென்றிந்தார்கள்.

அவர்கள், கதவை பூட்டாமல் போனதை, அவதானித்த மூன்று, குடிகார இளைஞனர்கள் உள்ளே புகுந்து கொண்டு, அந்த பெண்ண தாக்க ஆரம்பித்திருந்தார்கள்.

நல்ல வேளையாக ஒரு பெண்ணிடம் இருந்த போன் மூலம் அந்த தாய்க்கு தகவல் போனது.

இதோ அந்த (சிங்க) தாய் ஓடி வருகிறார்.

அருகில் செல்லும் போது.... மகளின்  அவலக் குரல் கேட்கிறது. பயம், கோபமாக மாறுகிறது. குரலை தொடர்ந்து செல்கிறார். உள்ளே, கையில் இருந்த வெளிச்சத்தில், மூவர்.... ஒருவர்... அலறிக் கொண்டிருக்கும் மகளை.... வன்புணர்வு செய்து கொண்டிருந்தார்.

அடுத்த இருவர்களது காலாடை, முழுங்காலளவுக்கு இறங்கி இருக்கிறது.... தமது முறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என புரிந்தது.

இருட்டில், வருவது யார் என்று தெரியவில்லை.... வெளியே போன பெண்களோ..... மப்பில்.... தீர்க்கமாக பாய்ந்து வந்தனர், இருவரும்..... 

சில கணங்கள் தான்... அவர்கள் கையில் இருந்த வெளிச்சத்தினை பாச்சிய போனினை தட்டி விடலாம், அவரையும் தாக்கலாம்... 

கையில் இருந்த கத்தி..... எழுந்தது.... ஒருவர் ஐயோ என்று அலறி வீழ்ந்தார்... அடுத்தவர் குத்து வாங்கிய வாறே யன்னலோடு பாய்ந்து, வெளியே விழுந்து காயத்துடன் ஓடினார்....

மகளை தாக்கியவரோ.... என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவில்லை எனினும்.... எழுவதற்கு முன்னரே.... முதுகில் கத்தி பாய்ந்தது.

ஒருவர் கொலை.... இருவர் படுகாயம்.

*****
போலீசார் வந்தனர்.... அந்த தாய் கைதானார்... மகள் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.

அன்று பகல் முழுவதும் போலீஸ் நிலையத்தில்..... தவித்துக் கொண்டிருந்தார் மகளை நினைத்து.

ஆனால் வெளியே... தென் அப்பிரிக்காவே ஆர்த்தெழுந்திருந்தது.

உலகின் மிக மோசமான பாலியல் வன்புணர்வுகள் நடக்கும் ஒரு நாடு தென்னாபிரிக்கா.

அங்குள்ள சட்டப்படி.... அந்த தாயின் பெயரை நீதிமன்றம் சொல்லும் வரை வெளியே சொல்ல முடியாது.

ஆனால் குட்டியை கவ்வி செல்லும் பெண் சிங்கம் ஒன்றின் படத்தினை போட்டு, சிங்கத்தாய் என்ற அடைமொழியில் அவரது கதையை வெளியே சொன்னன தென் ஆப்பிரிக்க பத்திரிகைகள். 

அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

போலீசாருக்கும், அரசுக்கும் எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 

விளைவாக, சிங்கத்தாய் பிணையில் விடுவிக்கப் பட்டு, மகளை கவனிக்க வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

18 மாதங்களின் பின்னர் வழக்கு நீதிமன்றம் வந்தது. தென் அப்பிரிக்காவில் பணம் இருந்தால் தான் சிறந்த வழக்குரைஞர்...நீதி. 

ஆனாலும், மக்கள் பெரும் நிதியை சிங்கத்தாய்க்கு அளித்தனர். மிகவும் திறமையான வழக்கறிஞர்கள் இலவச சேவை வழங்க தாமே வந்து நின்றார்கள்.

அவர் செய்தது, தனது, தனது மகளை காப்பத்துக்குமான கைமோசக் கொலை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது.

இந்த தாக்குதலினால் பேசும் சக்தியை இழந்து விட்ட, அவரது மகள், நீதிமன்ற தீர்ப்பினைக் கேட்டு புன்முறுவல் செய்தார்.

காயங்களுடன் தப்பி ஓடிய இருவரும், 30 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டு உள்ளனர். 
 

https://www.bbc.co.uk/news/stories-47726967

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது... ஒரு பின்னூட்டம் கூட இல்லை.

இந்த தாய்... கறுப்பு பெண் இல்லை என்றால்... 'வீரத்தாய்... பாசத்தாய்'.... என்று போட்டுத் தாக்கி இருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

அவருக்கு என்றால்... தக்காளி சோஸ் அடுத்தவர்களுக்கு என்றால் ரத்தமா?

ம்...ம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

என்னப்பா இது... ஒரு பின்னூட்டம் கூட இல்லை.

ஏதோ அவசரத்தில் விட்டுவிட்டோம் என எண்ணுகிறேன்.

 

17 hours ago, Nathamuni said:

ஆனால் குட்டியை கவ்வி செல்லும் பெண் சிங்கம் ஒன்றின் படத்தினை போட்டு, சிங்கத்தாய் என்ற அடைமொழியில் அவரது கதையை வெளியே சொன்னன தென் ஆப்பிரிக்க பத்திரிகைகள். 

சிங்கத்தாயின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்கு நன்றி முனி...இப்ப தான் உது பற்றி கேள்விப்படுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை நீங்கள் இணைத்தவுடன் முதல் ஆளாக வாசித்தவன் நானாகத்தான் இருக்குமென நினைக்கின்றேன்.

இதற்கு பதில் எழுத ஏதோ ஒரு படத்தை தேட வெளிக்கிட்டு.....

கூகுளும் படம் காட்ட வெளிக்கிட...

கடைசியில் உள்ள இடமெல்லாம் போக வெளிக்கிட்டு.........

எதுக்காக வந்தமோ அதையெல்லாம் மறந்து வேறு உலகில் நின்றதுதான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்பிள்ளைகளை துணிச்சலோடும் உடலுறுதியோடும் வளர்க்க வேண்டிய தேவையை சுட்டி நிற்கிறார் சிங்கத்தாயார்.
பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள எங்கெங்கு (கண், விதை) தாக்கிவிட்டு தப்பிக்கலாம் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நன்றாக எழுதியிருக்கிறீங்கள் நாதமுனி. அப்படியே உக்ரேன் தேர்தலில் தொலைகாட்சியில் அதிபராக நகைசுவை வேடம் தாங்கியவர் வென்றதையும் (முதல் கட்ட முடிவில்), சவுதி பத்திரிக்கயாளர் ஜமால் கொலையால் சவுதி Hack செய்து பிரித்த அமேசான் நிறுவனர் ஜெப் குடும்பம் பற்றியும் மொழிபெயர்த்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே ஒரு வீரத்தாய்தான் அவர்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

மிருகங்கள் கொல்லப்படுவது தவறே இல்லை

தவறு மனித மிருகங்கள் என்பது தான் சரி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.