Jump to content

தேர்தல் 2019 - "30 இடங்களில் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்" - வேல்முருகன்; மீதமுள்ள 10 தொகுதிகள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் 2019 - "30 இடங்களில் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்" - வேல்முருகன்; மீதமுள்ள 10 தொகுதிகள்?

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
வேல்முருகன்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionவேல்முருகன்

2019 மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.மு.கவுக்கு ஆதரவளிக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், அக்கட்சியின் தலைவர் வேல்முருகனை பிரச்சாரத்தில் காண முடியவில்லை. இதற்கான காரணங்கள் குறித்தும் சமீபத்தில் நடந்த சுங்கச் சாவடி தாக்குதல் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் வேல்முருகன். பேட்டியிலிருந்து:

கே. 2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தல் தொடர்பான கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை முதலில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் நடத்தினீர்கள். பிறகு, சில நாட்களிலேயே தி.மு.கவுக்கு ஆதரவளித்தீர்கள். என்ன நடந்தது?

ப. அப்படியான ஒரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழுவைக் கூட்டியும் பொதுக் குழுவைக் கூட்டியும் தேர்தல் குறித்து விவாதித்தோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரோடு பயணிப்பது, யாருடனாவது கூட்டணி வைத்து, இடங்களைப் பெற்று போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா அல்லது இப்போதிருக்கிற பொது எதிரியான பாரதிய ஜனதா கட்சியையும் அவர்களை ஆதரித்து அரசு நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி தலைமையிலான மாநில அரசை வீழ்த்துவது ஆகியவை பற்றி விவாதித்தோம். அந்தக் கூட்டத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

அந்த பொதுக் குழுவில் கலந்துகொள்ள புறப்பட்டபோது, எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனால், தொலைபேசி மூலம் பொதுக்குழுவில் இருந்தவர்களிடம் பேசினேன். பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தோம். அப்போதுதான் எதிரியை வீழ்த்துவதுதான் முக்கியம் என பலரும் கூறினார்கள். அப்படியான சூழலில் தி.மு.கவை ஆதரிக்கிறோம் என்று சொன்னால், அந்தக் காரணங்கள் காலப்போக்கில் தெரியவரும்.

வேல்முருகன்படத்தின் காப்புரிமைTNDIPR

கே. அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா சிறையிலிருந்து வெளிவரும்போது, அவருடைய வாகனத்தை நிறுத்தி உங்களை விசாரித்தார். அந்த அளவுக்கு அவர் உங்கள் மீது பிரியம் வைத்திருந்த நிலையில், இப்படி தி.மு.கவை ஆதரிக்கும் முடிவை உங்கள் கட்சித் தொண்டர்கள் ஏற்கிறார்களா?

ப. முதலமைச்சர் ஜெயலலிதா என்னை உரிய மரியாதையோடு நடத்தினார். என்னுடைய சுயமரியாதைக்கு தன்மானத்திற்கும் இழுக்கு வராமல் பார்த்துக் கொண்டார். நான் போயஸ் கார்டன் வருகிறேன் என்று சொன்னால், அவருடைய காரை எடுத்துச் சென்று ஷெட்டில் நிறுத்திவிட்டு, என்னுடைய காரை அங்கே நிறுத்தவைத்து, வரவேற்றார்கள்.

ஒரு முறை சென்னை வர்த்தக மையத்தில் இஃப்தார் விருந்து நடந்தபோது, நான் பார்வையாளராக கீழே அமர்ந்திருந்தேன். என்னை மேடைக்கு அழைத்து, அவர் அருகில் ஒரு இருக்கையை போடச் சொல்லி அமரச் செய்து மரியாதை தந்தார்.

பிரதமர் நரேந்திர மோதி ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர். ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு அவர் வந்திருந்தார். அதே நரேந்திர மோதி பிரதமராகப் பதிவியேற்கும் விழாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா செல்ல முடிவெடுத்திருந்தார். ஆனால், அந்த விழாவுக்கு ராஜபக்சேவும் வருகிறார் எனச் செய்தி வந்தது. விழா மேடையில் பிரதமர், அவருக்கு அருகில் ஜெயலலிதா, மற்றொரு பக்கம் ராஜபக்சேவை அமரவைத்து ஒரு இணக்கமான சூழல் இருப்பதைப் போல காட்ட நினைக்கிறார்கள் என செய்திவந்தது.

நான் உடனடியாக ஜெயலலிதா அவர்களைப் பார்த்து இந்தத் தகவலை தெரிவிக்க விரும்பினேன். உடனடியாக ஜெயலலிதாவைச் சந்தித்து, 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறீர்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் உங்கள் மீது நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தத் தருணத்தில் நீங்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளக்கூடாது எனத் தெரிவித்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார். அதேபோல, ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பதைச் சொன்னேன். அதற்கு அனுமதியளிக்கச் சொன்னார். அதேபோல, கெயில் திட்டம் போன்ற பல திட்டங்களிலும் நான் வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்காக அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்தேன். சட்டமன்றத் தேர்தல் வரும்போது ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடங்களைத் தருவதாக ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், இரண்டாம் கட்டத்தில் இருந்தவர்கள் அந்த இடங்கள் கிடைப்பதைத் தடுத்துவிட்டார்கள்.

வேல்முருகன்படத்தின் காப்புரிமைFACEBOOK

கே. அ.தி.மு.கவில் இரண்டாம் கட்டத்தில் இருந்தவர்கள்தான் உங்களுக்கு இடங்கள் கிடைப்பதைத் தடுத்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அந்த இரண்டாம் இடத்தில் இருந்த சசிகலா - தினகரன் அணியினரின் அ.மு.மு.கவினருடன் எப்படி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?

ப. ஜெயலலிதா என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். சசிகலாவும் என்னிடம் அன்பாகத்தான் இருந்தார். நான் போயஸ் கார்டனுக்குப் போனபோது, இன்டர்காமில் உதவியாளர் பூங்குன்றனை அழைத்து என்னை கவனிக்கச் சொன்னார். அவர்களும் மிகச் சிறப்பாக கவனித்தார்கள். அதனால் அவர்கள் எனக்கு எதிராக இருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

தொகுதி பங்கீடு குறித்து பேசும்போது, எடப்பாடி கே. பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை அழைத்து வேல்முருகன் அளிக்கும் தொகுதிப் பட்டியலைப் பார்த்து ஒரு முடிவெடுத்து என் கவனத்திற்கு கொண்டுவாருங்கள் என்று சொன்னார்.

பிறகு, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து நான்கைந்து முறை பேச்சு வார்த்தை நடந்தது. ஒரு கட்டத்தில், "தலைமை அலுவலகம் வந்து பேசினால் காலதாமதாகிறது. நாங்கள் எடப்பாடி கே. பழனிச்சாமி வீட்டில் எல்லோரும் இருக்கிறோம். அங்கே பேசிவிடலாம் வாருங்கள்" என்று சொன்னார்கள். அங்கு சென்றவுடன் "நீங்க சும்மா சும்மா அம்மாவையும் சின்னம்மாவையும் தொந்தரவு செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு இடம்தான். விருப்பமிருந்தால் நில்லுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று மூஞ்சியில் அடித்ததுபோல சொன்னார்கள்.



கே. டிடிவி தினகரனோடு என்ன பேச்சுவார்த்தை நடத்தினீர்கள், தி.மு.கவோடு செல்ல ஏன் முடிவெடுத்தீர்கள்?

ப. அமமுக-வைச் சேர்ந்தவர்கள் முதலில் என்னிடம் பேசினார்கள். டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறார். வட மாவட்டங்களில் வளர்ந்துவரும் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள். இருவரும் தேர்தலில் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். நான் கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவைக் கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டேன்.

நான் மருத்துவமனையில் இருக்கும்போது டிடிவியின் ஆதரவாளர்கள், தி.மு.கவைச் சேர்ந்தவர்கள், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என எல்லாத் தரப்பினரும் வந்து பார்த்தார்கள். பலர் கூட்டணிக்கு அழைத்தார்கள். சிலர், தனியாக ஒரு அணி அமைக்கலாம் என்று அழைத்தார்கள். பல தமிழ் தேசியத் தலைவர்களோடு நான் பேசினேன். சீமானோடுகூட பேசினேன்.

அதற்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், வடதமிழ்நாட்டில் பெரிய செல்வாக்கு இல்லையென்றாலு்ம டி.டி.வி. தினகரன் ஒரு வளர்ந்துவரும் தலைவராக இருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் சிறப்பாக பேசுகிறார் என்று சொன்னேன். அதை வைத்துத்தான் அவரோடு நான் கூட்டணி என்று கூறிவிட்டார்கள். அவரும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், எஸ்டிபிஐ கட்சியோடு உடன்பாடு கண்டிருக்கிறோம் என்றும் மேலும் ஒரு நல்ல கட்சியோடு பேசிவருகிறோம் என்றும் கூறினார். ஆனாலும் அது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அதிகாரபூர்வமாக அவர் சொல்லவில்லை.

டிடிவி தரப்பிலிருந்து என்னிடம் நட்பு ரீதியாகப் பேசியது உண்மை. அதை நான் மறுக்கவில்லை. மற்றொரு பக்கம் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை வைத்து இதைச் செய்கிறார்கள். இந்த அநியாயத்தை தட்டிக்கேட்கும் வலிமையுள்ள கட்சியாக தி.மு.க. இருக்கிறது.

p0752slj.jpg
 
தேர்தல் 2019 - அரசியல் தலைவர்களிடம் இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன?

தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்சியாக நாங்கள் இல்லை. ஆனால், அந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த பலம் இருக்கிறது. தி.மு.கவோடும் காங்கிரசோடும் எனக்கு முரண்பாடு இருப்பது உண்மைதான். இதைப் பல இடங்களில் நான் பதிவுசெய்திருக்கிறேன். ஆனால், முதல்வராக மு. கருணாநிதி இருந்தபோதும் நான் முன்வைத்த பல கோரிக்கைகளைச் செய்து கொடுத்தார். இப்போதும் நான் தி.மு.கவை எந்த நிபந்தனையுமின்றி ஆதரித்தால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் மனுக்கொடுக்க சென்றால்கூட வாங்க மறுக்கிறார் எடப்பாடி. ஆனால், மு.க. ஸ்டாலினோ, அவரால் கை காட்டப்படுபவரோ அந்த இடத்தில் இருந்தால் எனக்காகக் காத்திருப்பார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது கலைஞரின் குடும்பத்தை எளிதில் அணுக முடியும். ஸ்டாலினிடம் எந்த நேரத்திலும் தொலைபேசியில் பேச முடியும்.

கே. தமிழ்நாட்டில் பல தமிழ் தேசிய இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால், தேர்தலில் அவர்களுக்கு போதுமான பலம் இருப்பதில்லை. பெரிய கட்சிகளை அணுகி, ஒன்றிரண்டு இடங்களில்தான் போட்டியிட முடிகிறது?

ப. இன்றைக்கு பெரிய கட்சிகளாக இருப்பவர்கள் கடைக்கோடி வரை அமைப்பை கட்டியிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் எங்களைப் போன்ற அமைப்புகளுக்கு அம்மாதிரி ஆதரவு இல்லை. போராட்டங்களின் மூலமாகத்தான் மக்களை அடைய முடிகிறது. ஊடகங்கள்கூட எங்களைக் கவனிப்பதில்லை. தமிழ்தேசிய அமைப்புகளுக்கு பொருளாதார பலமில்லை. தமிழ்தேசிய அமைப்புகள் ஒன்றாக இருந்து பெரிய கட்சிகளை வீழ்த்த முடியும் என்றால் நான் அவர்களோடு நின்றிருப்பேன்.

கே. தமிழ் தேசிய அமைப்புகளின் லட்சியம் பொதுவாக, தமிழகத்தின் நலன்தான். ஆனால், இந்த அமைப்புகளுக்குள் கட்சிகளுக்குள் ஏன் ஒரு ஒற்றுமை ஏற்படுவதில்லை?

ப. வாக்கரசியலில்தான் அம்மாதிரி ஒரு அணி அமைவதில்லை. ஓட்டரசியலில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் எவ்வளவு செலவழிக்க வேண்டுமென உங்களுக்கே தெரியும். இம்மாதிரி சூழலில் சிறிய சிறிய தமிழ் தேசிய அமைப்புகள் என்ன செய்ய முடியும்? சீமான் பிச்சை எடுத்து கட்சி நடத்துவேன் என்கிறார். நான் பிச்சை எடுத்தால் தருவார்களா என்று தெரியவில்லை. நல்ல அரசியல்வாதிகளான நல்ல கண்ணுவையும் நெடுமாறனையும் இந்த சமூகம் எப்படி வைத்திருக்கிறது?

வேல்முருகன்படத்தின் காப்புரிமைFACEBOOK

கே. அப்படி சொல்லிவிட முடியுமா? பெரியார், அண்ணா போன்றவர்கள் தங்கள் கருத்துகளை மக்கள் முன் இப்படித்தானே வைத்தார்கள்?

ப. பெரியார் மிக வசதியானவர். அண்ணாவும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்தான். நல்லக்கண்ணு இன்னமும் பேருந்தில்தான் வருகிறார். நான் என் சொத்தையெல்லாம் விற்றுவிற்று செலவழித்துவிட முடியுமா?

கே. பெரியாரும் அண்ணாவும் வசதியானவர்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்களா?

ப. ஆமாம். வசதி வாய்ப்பிருந்ததால் பெரியாரால் ஒரு பிரச்சார வாகனம் வாங்க முடிந்தது. முதலில் அதில் பயணம் செய்தார். பிறகு, உங்களுக்காகத்தானே உழைக்கிறேன் எனக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் எனக் கேட்டார். மேடையில் படம் எடுத்துக்கொள்ள பணம் கேட்டார். சாப்பிடச் செல்ல வேண்டுமென்றால் பணம் கேட்டார். அவர் பணத்தை தர மறுத்து தந்தை வெளியேற்றியபோது, கையேந்தி வசூலித்தார். அன்றைக்கு கொடுக்க அவருக்கென பற்றாளர்கள் இருந்தார்கள். இன்றைக்கு வேல் முருகன் கேட்டால் கொடுக்க யார் இருக்கிறார்கள்? இன்றைக்கு அவர் என்ன ஜாதியென்றல்லவா பார்க்கிறார்கள்?

சட்டமன்றத்தில் நான் சிறப்பாகத்தானே செயல்பட்டேன்? அ.தி.மு.க. தலைமை அன்று அரவணைத்தது. பிறகு வந்தவர்கள் ஏற்கவில்லை. பிடித்து உள்ளே அடைத்தார்கள். தி.மு.கவும்கூட ஆதரவளியுங்கள்; அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றுதானே சொல்கிறார்கள். ஆனால், அதற்காக இணையதளங்களில் என்னைப் பற்றித் தவறாக எழுதுகிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் நான் தண்ணீரைத் தவிர வேறு எதையும் குடிக்கவில்லை. ஆனால், என்னைப் பிடிக்காதவர்கள் நான் தி.மு.கவிடம் பெட்டி வாங்கிவிட்டதாகவும் அதனால்தான் எம்.பி., எம்.எல்.ஏ. சீட்களைக் கேட்கவில்லையென சொல்கிறார்கள். நானோ என் தொண்டர்களோ, தி.மு.கவிடம் ஒரு ரூபாயைக்கூட கைநீட்டி வாங்கவில்லை. எங்கள் உழைப்பில் ஓட்டுக்கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். என்னை 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு தொகுதிகளிலும் என்னால் பயணிக்க முடியாது. அதனால் பொதுக்கூட்டங்களை ஏற்பாடுசெய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அதனால், அதற்கேற்றபடி பொதுக்கூட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionகோப்புப்படம்

கே. தி.மு.கவுடன் கூட்டணி என்று அறிவித்த பிறகும், நீங்கள் பிரச்சாரத்தில் இறங்காமல் இருப்பதற்கு உடல்நலம் மட்டும்தான் காரணமா?

ப. உடல்நலம் மட்டும்தான் காரணம். இப்போது உங்களோடு பேசும்போதுகூட கண்களில் இருந்து தண்ணீர் வந்துகொண்டேயிருக்கிறது. உடல்நலம் மட்டும்தான் காரணம். வேறு எந்தக் காரணமும் கிடையாது. 4ஆம் தேதி முதல் பிரச்சாரத்திற்கு செல்லவிருக்கிறேன். இன்னொன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நான்தான் பிரச்சாரத்திற்குச் செல்லவில்லை. என் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இப்போதும் களத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், அதிலும் சில வருத்தங்கள் உண்டு.

கே. தி.மு.க. மேடைகளில் உங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்ற வருத்தமா?

ப. இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. நான் மருத்துவமனையில் இருந்தபடி தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தி.மு.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, என்னுடன் பேசியவர்கள் என்ன சொன்னார்களோ அது நடக்கவில்லை. நான் பணமோ, இடங்களோ கேட்கவில்லை. எனக்கு உரிய மரியாதையைக் கேட்டேன். பா.ம.க. வளர்ந்த கட்சி. அந்த அளவுக்கு உரிய மரியாதையை நான் கேட்கவில்லை. அந்த கட்சியை மதிப்பதில் பாதி அளவுக்காவது மதியுங்கள் எனச் சொன்னேன்.

மேடைகளில் படங்களை வைப்பது, கொடிகளைக் கட்டுவது, துண்டறிக்கைகளில் கட்சிப் பெயரை இடம்பெறச் செய்வது ஆகிய கோரிக்கைகளை வைத்தேன். தி.மு.க. தலைமை அதனை மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துவிட்டது. ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள். நான் தலைமையிடம் உரிய முறையில் புகார் தெரிவித்திருக்கிறேன். நான் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்போது இதற்கு விடை கிடைக்கும். 30 இடங்களிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்.

கே. மீதமுள்ள பத்து இடங்கள்...?

ப. ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு பிரதான காரணம் காங்கிரஸ். சரி நடந்துவிட்டது. அந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து எந்தக் கருத்தும் அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என வெளிநாடுகளில் சொல்லும் ராகுல் காந்தி, தமிழகத்திற்கு வரும்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதை ஏன் சொல்ல மறுக்கிறார்? அவர் அப்படிச் சொல்லட்டும், காங்கிரஸ் போட்டியிடும் பத்து தொகுதிகளிலும் அவர்களை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்போம். காங்கிரஸ் தலைவர்கள் எங்களிடம் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம்.



கே. நீங்கள் தமிழ் தேசியம் பேசினாலும் பிற மாநிலத்தவர் இங்கே வாழக்கூடாது எனச் சொல்பவரல்ல.. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ காட்சியில் சுங்கச் சாவடியில் பணியாற்றும் பணியாளர் ஒருவரைத் தாக்குவது தெரிந்தது. சுங்கச் சாவடியை எதிர்த்தாலும், அங்கு பணியாற்றுபவர்களைத் தாக்குவது முறையா?

ப. நான் மருத்துவமனையில் இருக்கும்போது, என் கட்சியின் ஒன்றியச் செயலாளர் இறந்ததாகச் செய்தி வந்தது. அவசரமாகப் புறப்பட்டேன். என் வாகனத்தைவிட வேகமாகச் செல்லும் என்பதால், என் சகோதரரின் வாகனத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டேன். இந்த வாகனத்தில் சுங்கச் சாவடிகளுக்கு முன்பே பணம் செலுத்தி பெறப்படும் Fast tag ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இணைய தளங்களில் சொல்வதைப் போல ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வண்டியல்ல. 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள வண்டி. இங்கிருந்து செல்லும்போது இதே செக்போஸ்ட்டை கடந்து சென்றேன். அப்போது அனுமதித்தார்கள். சென்னைக்குப் புறப்படும்போது மணி இரண்டரை மணியாகிவிட்டது. எல்லா சுங்கச் சாவடியிலும் இந்த வண்டியை அனுமதித்தார்கள். இந்த சுங்கச் சாவடியிலும் வாகனம் அனுமதிக்கப்பட்டது. தடையைத் தாண்டி, 50 மீட்டர் நகர்ந்திருக்கும்போது வட நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஓடிவந்து வண்டியை மறித்தார். சுங்கம் செலுத்தும்படி சொன்னார்.

வேல்முருகன்படத்தின் காப்புரிமைFACEBOOK

என் ஓட்டுனர் "பாஸ்ட் டாக்" முறைக்கு பணம் செலுத்தியிருப்பதைச் சொன்னார். பிறகு வாக்குவாதம் முற்றி, கார் கதவை இழுத்து அந்த இளைஞர் திறக்க முயன்றார். இதுவரைக்குமான காட்சிகளைத்தான் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். முழுவதுமாக வெளியிட்டால்தான் அவர்கள் செய்த அராஜகம் தெரியும். இதெல்லாம் காவல்துறையால் எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டது. 5.30 மணிக்கு அந்த டோல் கேட்டிற்குள் நுழைந்தேன். பிறகு பிரச்சனையாகி, அங்கிருந்து புறப்படும்வரையுள்ள வீடியோ காட்சிகளை முழுமையாக நீங்கள் ஒளிபரப்பத் தயாரா? தவிர, சுங்கச் சாவடிகளில் நடக்கும் அநியாயத்தை யாராவது கேட்கிறீர்களா?

கே. பா.ம.கவிலிருந்து பிரிந்துவந்து ஒரு அரசியல் கட்சியைத் துவங்கியபோது, ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனை முன்வைத்துப் பேசினீர்கள். ஆனால், சமீப காலமாக நீங்கள் ஒரு இலக்கில்லாத பயணத்தை மேற்கொள்வதைப் போலத் தோன்றுகிறது..

ப. இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் மிகக் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறேன். சுங்கச் சாவடி தொடர்பான போராட்டம், பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிரான போராட்டம், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டது, ஆசிரியர் தேர்வாணையத்தில் நடந்த விவகாரம், அஞ்சல் துறை முறைகேடு போன்றவற்றை தொடர்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறேன். ஆகவே, நான் மிகச் சரியாக, நேர்த்தியாக, திட்டமிட்டு ஒவ்வொன்றையும் செயல்படுத்துகிறேன்.

எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால், ஒவ்வொரு ஊடகமும் அவர்களுக்குத் தோன்றியபடி எழுதுகிறார்களே தவிர, நான் மிக சரியாகவே சென்றுகொண்டிருக்கிறேன்.

https://www.bbc.com/tamil/india-47769677

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.