Jump to content

கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி

tna-.jpg

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து 10 வருடங்களாகியும் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது.

அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் அதாவது சாட்சிகள் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும்.

கைது செய்கின்ற நபர் அவரை துன்புறுத்தி அந்த துன்புறுத்தலின் மூலம் அவர் தான் குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு நீண்டகால தண்டனை வழங்குவதற்கு விசாரணையற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு ஜனாதிபதியால் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மறைமுகமாக உதவி செய்ததின் அடிப்படையில் 100 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக 10 வருடங்களுக்கு மேலாக இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் சிறு சிறு குற்றங்கள் செய்ததாக தெரிவித்திருக்கின்றனர். இவர்கள் அரசியல் ரீதியான கைதிகள்.

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரனை அதாவது கருணா அம்மான் என்று கூறுகின்ற அந்த நபரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாங்கள் ஏன் கைது செய்யவில்லை? விசாரணை செய்யவில்லை? என்பதை அமைச்சர் இந்த சபைக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த முடியுமா? என்று நான் கேட்டு கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோன்று கே.பி மற்றும் பிள்ளையான் ஆகியோர் கைது செய்யப்படவில்லை அல்லது விசாரணைக்கு உட்படுத்தபடவில்லை என்பது குறித்து அமைச்சர் இந்த சபைக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரியுள்ளார்.

 

http://athavannews.com/கருணா-அம்மானை-பயங்கரவாத/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணகாலம் உயிரோடு இருக்கோணும் என்று ஆசை இல்லை போல 🤐
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

கணகாலம் உயிரோடு இருக்கோணும் என்று ஆசை இல்லை போல 🤐
 

யாரை கேட்கிறீங்க ?

கருணா expiry date (காலாவதியாகி கனகாலம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

யாரை கேட்கிறீங்க ?

கருணா expiry date (காலாவதியாகி கனகாலம் )

காலாவதியான ஆளைப் பார்த்து சாள்ஸ் ஏன் கூவுகிறார் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

காலாவதியான ஆளைப் பார்த்து சாள்ஸ் ஏன் கூவுகிறார் 😀

பிழை விட்டவர் விட்டவர் தான் தண்டனை அவர்களுக்கு காத்துகொண்டு இருக்கும் உலக வழக்கம் அது தானுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறி லிங்காவின் யாப்பிற்குள்ளும், சட்டதிற்குள்ளுமே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

22 minutes ago, ரதி said:

காலாவதியான ஆளைப் பார்த்து சாள்ஸ் ஏன் கூவுகிறார்

சொறி லங்காவின் யாப்பிற்குள்ளும், சட்டதிற்குள்ளுமே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.  

சட்டப்படியும், அவர் செய்தவைகள் காலாதியாகவில்லை.

ஆனால், சொறி லங்கா அரசிற்கு கருணாவின் உபயோகமும், அறிவை பயன்படுத்தும் தேவையும் கலாதியாகிவிட்டது.  

இது ஏற்கனவே பல இடங்களில் யாழில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.

 

54 minutes ago, ரதி said:

கணகாலம் உயிரோடு இருக்கோணும் என்று ஆசை இல்லை போல

ங்கள் UK இல் வசிப்பவர் என்றே நான் எண்ணுகிறேன். நீங்கள் சொல்லியது, UK anti terrorism legislation படி குற்றமாக கருதப்படுவதற்கு இடமுண்டு.  ஏனெனில், நீங்கள் சொல்லியவர் வேறு ஓர் அரசாங்கத்தின் பிரதிநிதி.

Link to comment
Share on other sites

13 hours ago, ரதி said:

காலாவதியான ஆளைப் பார்த்து சாள்ஸ் ஏன் கூவுகிறார் 😀

கருணாவின் இன்றய நிலை , இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன ...அவ்வளவு தான் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

பிழை விட்டவர் விட்டவர் தான் தண்டனை அவர்களுக்கு காத்துகொண்டு இருக்கும் உலக வழக்கம் அது தானுங்க .

நான் கேட்டதிற்கு உதுவா பதில் 😏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணாவையெல்லாம் கைது பண்ண முடியாது அது அரசாங்கத்தாலும் முடியாது இது தெரிந்தும் இந்தாள் ஏன் கூவுது  கூவுறது இந்த கூத்தமைப்பு வேலையாப்போச்சுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கர்ணாவையெல்லாம் கைது பண்ண முடியாது அது அரசாங்கத்தாலும் முடியாது இது தெரிந்தும் இந்தாள் ஏன் கூவுது  கூவுறது இந்த கூத்தமைப்பு வேலையாப்போச்சுது 

கூவியும் பிரபலமாக வரலாமல்ல‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மட்டக்கிளப்பில் பிள்ளையானை விடுவிக்க சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது...அதில் பங்கு பற்றியவர்களில் ஒரு பிரபல்ய பாடசாலையில் அதிபராய் இருந்து ஒய்வு பெற்ற ஒருவரும்,சில அதிகாரிகளும் இருந்தனர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

அண்மையில் மட்டக்கிளப்பில் பிள்ளையானை விடுவிக்க சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது...அதில் பங்கு பற்றியவர்களில் ஒரு பிரபல்ய பாடசாலையில் அதிபராய் இருந்து ஒய்வு பெற்ற ஒருவரும்,சில அதிகாரிகளும் இருந்தனர்..

எடுத்துக் காட்டுகளை எல்லாம் இப்படி பொறிக்கி எடுக்க வேண்டி இருக்கிறதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎3‎/‎2019 at 8:53 PM, MEERA said:

எடுத்துக் காட்டுகளை எல்லாம் இப்படி பொறிக்கி எடுக்க வேண்டி இருக்கிறதே!

உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கிறேன்...பிள்ளையான் உள்ளுக்குள்ள இருக்கிறார்...அவரை விடுவிக்க சொல்லி அங்கிருக்கும் படித்த சமூகத்தினர் கொஞ்ச பேர் ஆர்ப்பாட்டம் செய்திருக்கினம் ..நேற்று 5,6 பேர் செய்தவை,இன்டைக்கு 100,200 பேர் செய்வினம்.அதே நாளைக்கு 1000 ஆக கூடலாம்.


கூ ட்டமைப்பின் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது.அல்லது பிள்ளையான் போன்றோரால் மட்டும் தான் தங்கட இடங்களையும்,மக்களையும் காப்பாற்ற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள் ..என்னுடைய ஆதங்கம் என்ன என்றால் கூட்டமைப்பினரோ அல்லது புலம் பெயர் தமிழர்களோ இவர்களுக்கு உதவவில்லை என்றால் அது கிழக்கு பிரிவினைவாதத்திற்கு அடி கோலும் என்று நினைக்கிறேன்.முக்கியமாய் மட்டு மக்கள் இப்படி இறங்கி இருப்பது ஒன்று பிள்ளையான் மேல் உள்ள நம்பிக்கை அல்லது அவர்களுக்கு வேறு வழியில்லை.
 

Link to comment
Share on other sites

On 4/2/2019 at 12:13 AM, ரதி said:

கணகாலம் உயிரோடு இருக்கோணும் என்று ஆசை இல்லை போல 🤐
 

அதாவது கருணா கும்பல் செய்த கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கொலை போல பலநூறு கொலைகளின் வழியில் இன்னொரு கொலையும் அரங்கேறும் என்று நம்புகிறீர்களோ?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 6:30 AM, தனிக்காட்டு ராஜா said:

கர்ணாவையெல்லாம் கைது பண்ண முடியாது அது அரசாங்கத்தாலும் முடியாது இது தெரிந்தும்

ஏன் முடியாது? தேவையற்றதாக இருக்கலாம்.

சொறி லங்கா அரசால் முடியும், அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லையாயினும்.

இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

அப்படி செய்த ஓர் வேளையில், சரத் பொன்செவால் கருணா பகிரங்கமாக அதட்டப்பட்டது வெளிப்படையானது.

இப்பொது சரத் பொன் உள்நாட்டு மிகவும் முக்கிய பொறுப்பில், உள்நாட்டு பாதுகாப்பின் அம்சமும் கொண்டது சரத்தின் பொறுப்பு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

ஏன் முடியாது? தேவையற்றதாக இருக்கலாம்.

சொறி லங்கா அரசால் முடியும், அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லையாயினும்.

இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

இதன் காரணமோ அல்லது வேறு விடயமோ, கருணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

அப்படி செய்த ஓர் வேளையில், சரத் பொன்செவால் கருணா பகிரங்கமாக அதட்டப்பட்டது வெளிப்படையானது.

இப்பொது சரத் பொன் உள்நாட்டு மிகவும் முக்கிய பொறுப்பில், உள்நாட்டு பாதுகாப்பின் அம்சமும் கொண்டது சரத்தின் பொறுப்பு.

ஹாஹா  கருணாமீது கைவைத்தால் ஒட்டிமொத்தமாக கோர்வையாக செல்ல நேரிடும் அது சரத்பொன்சேகாவையும் சேர்த்துதான் அதனால் கர்ணா எந்த அரசு வந்தாலும் செல்லபிள்ளையாத்தான் இருப்பாரு ஒருவேளை போர்க்குற்றம் எனும் வரும் போது விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் ஆனால் சிறைப்படுத்தமுடியாது , பிள்ளையானைப்போல் இல்லை கர்ணா அம்பி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.