Jump to content

இந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை

Published :  02 Apr 2019  10:10 IST
Updated :  02 Apr 2019  10:19 IST
 
modi-1jpg

பிரதமர் மோடி :கோப்புப்படம்

ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றை தகர்த்த இந்தியாவின் செயலால் 400 துண்டுகளாக அந்த செயற்கைக்கோள் சிதறிக் கிடக்கிறது, இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) ஆபத்து அதிகரித்துள்ளது என்று நாசா கவலை தெரிவித்துள்ளது.

மிஷன் சக்தி திட்டம்

இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், மற்ற எதிரிநாட்டு செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை கடந்த மாதம் 27-ம் தேதி மத்திய பாதுகாப்புதுறையின் டிஆர்டிஓ நடத்தியது. இந்த திட்டத்துக்கு மிஷன் சக்தி திட்டம் என பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த மிஷன் சக்தி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சமூக ஊடங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தாற்போல், இந்தியாவிடம் செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை இருக்கிறது என்றும் சோதனையின் போது, ஒரு செயற்கைக்கோளை 3 நிமிடங்களில்  துல்லியமாக ஏவுகணை தாக்கி அழித்தது என்று மோடி பெருமையாகக் குறிப்பிட்டார்.

a-satjpg

இந்தியாவின் டிஆர்டிஓ ஏவிய ஏ-சாட் ஏவுகணை : கோப்புப்படம்

 

400 பாகங்கள்

இந்நிலையில், தகர்த்து எறியப்பட்ட செயற்கைக்கோளின் பாகங்கள் 400-க்கும் மேற்பட்டவை விண்வெளியின் புவிசுற்றுவட்டப் பாதையில் மிதப்பதாக ஏற்கனவே அமெரிக்கா கூறி இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ''இந்தியா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் 400 துண்டுகளாக சிதறிக்கிடக்கின்றன. இவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா விண்வெளிமையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் இன்று நாசா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர்  கூறியதாவது:

''விண்வெளியில் தங்களின் செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக, இந்தியா ஏ-சாட் எனும் ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை தாக்கி அழித்து நடத்திய சோதனை உண்மையில் பயங்கரமானது. ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இதுவரை 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளோம். 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது.

issjpg

சர்வதேச விண்வெளி நிலையம் : கோப்புப்படம்

 

இதுபோன்ற செயல்கள், மனிதர்கள் விண்வெளியில் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்காது.. விண்வெளியில் மிதக்கும் பாகங்களில் பெரும்பாலானவை 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக, பெரியளவில் இருக்கிறது. இந்த பாகங்களால் சர்வதேச விண்வெளிய நிலையத்துக்கு ஆபத்தான சூழல் இருக்கிறது.

இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணைச் சோதனை நடவடிக்கைகள், மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வுகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் நடக்கும்போது, விண்வெளியில் இருக்கும் மற்ற செயற்கைக்கோள்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும்.

ஒருநாடு இதுபோன்று சோதனை செய்யும் போது, மற்ற நாடுகளும் நாங்களும் இதுபோன்ற சோதனையைச் செய்கிறோம் என்று இறங்கினால், விண்வெளி என்ன ஆவது? இதை ஏற்க முடியாது. எங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புவரும் என்பது குறித்து நாசா தெளிவாக இருக்கிறது.

விண்வெளியில் மிதந்து வரும் செயற்கைக்கோள் குப்பைகள் குறித்து ஒவ்வொரு மணிநேரமும் நாசா தகவல்களைச் சேகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து நாங்கள் செய்த ஆய்வின்படி,  இந்த உடைந்த பாகங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து கடந்த வாரத்தில் இருந்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பூமியின் குறைந்த சுற்றுவட்டாரப் பாதையில் இருப்பவை அடுத்த 10 நாட்களுக்குள் சிதைந்துவிடலாம்.

கடந்த 2007-ம் ஆண்டு இதோபோன்ற சோதனையை சீனா மேற்கொண்டது. சீனா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் இன்னும் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. விண்வெளியில் இத்தகைய செயல்களுக்கு இதுபோன்ற  சோதனை மேற்கொள்ளும் நாடுகள்தான் பொறுப்பு.

விண்வெளியில் உள்ள சூழல் குறித்து அறிந்து, நாடுகள் பொறுப்புடனும், விண்வெளி போக்குவரத்து மேலாண்மை குறித்தும் அறிந்து நடக்க வேண்டும். விண்வெளி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்''.

இவ்வாறு பிரிடென்ஸ்டைன் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/world/article26709319.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் செயலால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து

April 2, 2019

naza.jpg?resize=630%2C417ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றை தகர்த்த இந்தியாவின் செயலால் 400 துண்டுகளாக அந்த செயற்கைக்கோள் சிதறிக் கிடக்கிறது எனவும் இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து அதிகரித்துள்ளது எனவும் நாசா கவலை தெரிவித்துள்ளது.

இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், மற்ற எதிரிநாட்டு செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையான மிஷன் சக்தி திட்டத்தினை கடந்த மாதம் 27-ம் திகதி மத்திய பாதுகாப்புதுறையின் டிஆர்டிஓ நடத்தியிருந்தது.

இந்த மிஷன் சக்தி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார். அமெரிக்கா, ரஸ்யா, சீனாவுக்கு அடுத்தாற்போல், இந்தியாவிடம் செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை இருக்கிறது எனவும் சோதனையின் போது, ஒரு செயற்கைக்கோளை 3 நிமிடங்களில் துல்லியமாக ஏவுகணை தாக்கி அழித்தது எனவும் தெரிவித்திருந்தார்

இந்நிலையில், தகர்த்து எறியப்பட்ட செயற்கைக்கோளின் பாகங்கள் 400-க்கும் மேற்பட்டவை விண்வெளியின் புவிசுற்றுவட்டப் பாதையில் மிதப்பதாக ஏற்கனவே அமெரிக்கா கூறி இருந்தநிலையில், இந்தியா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் 400 துண்டுகளாக சிதறிக்கிடக்கின்றன எனவும் இவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் நாசா விண்வெளி மையம், தெரிவித்துள்ளது.

ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன எனவும் இதுவரை 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது எனவும் நாசா விண்வெளிமையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்கள், மனிதர்கள் விண்வெளியில் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்காது எனவும் விண்வெளியில் மிதக்கும் பாகங்களில் பெரும்பாலானவை 10 சென்டிமீற்றருக்கும் அதிகமாக, பெரியளவில் இருப்பதனால் இவற்றினால் சர்வதேச விண்வெளிய நிலையத்துக்கு ஆபத்தான சூழல் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் இருந்து தாங்கள் செய்த ஆய்வின்படி, இந்த உடைந்த பாகங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து கடந்த வாரத்தில் இருந்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்த அவர் எனினும் பூமியின் குறைந்த சுற்றுவட்டாரப் பாதையில் இருப்பவை அடுத்த 10 நாட்களுக்குள் சிதைந்துவிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/117456/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.