Jump to content

பன்னாட்டு நீதிமன்றுக்கு கொண்டு போவீர்களோ!


Recommended Posts

இணை அனுசரணைக்கு இணங்கி இலங்கை அரசு கையயாப்பமிட்டால், அது கலப்பு நீதிமன்றை ஏற்றுக்கொள்வதாகவே பொருள்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் வைத்துக் கூறியுள்ளார்.
 
கலப்பு நீதிமன்றுக்கு உடன்பட மறுத்தால், பன்னாட்டு நீதிமன்றுக்கு எடுத்துச் செல்வோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
நல்லது. தமிழனத்தின் அழிப்பை; வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை; ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதை; போர்க்குற்றம் நடந்ததை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றுக்குக் கூட்டமைப்பு எடுத்துச் சென்றால் அது வரவேற்கத்தக்கது.
 
ஆனால் அது நடக்குமா? உங்களால் அது முடியுமா? என்பதுதான் நம் கேள்வி.
இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்வோம் என்று இப்போது கூட்டமைப்பினர் மார்தட்டுகின்றனர்.
 
இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு மறைமுகமாக உதவி செய்துவிட்டு, பாராளுமன்றத்தில் வைத்து அப்படிச் செய்வோம். இப்படிச் செய்வோம் என வீராப்புப் பேசுவது உங்கள் மனச்சாட்சிக்கு ஏற்புடையதா? என்பதை கூட்டமைப்பே தீர்மானிக்க வேண்டும்.
 
வெளிநாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக் கூடியதான கலப்பு நீதிமன்றை இலங்கை அரசு நிராகரித்தால், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றுக்குக் குறித்த விவகாரத்தைக் கொண்டு செல்வோம் என்று கூறுகின்ற கூட்டமைப்பினர்,
இதுவரைக்கும் அப்படியாரு முடிவை எடுக்காததற்குக் காரணம், வன்னியில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை காணாதா? அல்லது காணாமல்போனவர் களின் எண்ணிக்கை போதாதா? அல்லது தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலைகிடைத்துவிட்டதா என்ன?
 
செய்ய வேண்டியதை செய்யாமல், கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்குஈனம் செய்து விட்டு, இப்போது அரசாங்கத்தை எச்சரிப்பதென்பது நகைப்புக்குரியது.
 
அன்புக்குரிய கூட்டமைப்பினரே! கலப்பு நீதிமன்றை நிராகரிக்கிறோம் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில், பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் கூறியுள்ளார்.
 
ஆக, திலக் மாரப்பன கூறியதை மறுக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா ஆணையர் அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடையதாகும். ஆனால் அவர்கள் திலக் மாரப்பனவின் உரையை நிராகரிக்கவில்லை. 
 
நிலைமை இதுவாக இருக்கையில், 
கலப்பு நீதிமன்றை நிராகரிப்பதாக திலக் மாரப்பன இலங்கையில் கூறியதுபோல கூட்டமைப்புக் கருத்துக்கூறுவது எந்த வகையிலும் பொருத்தமற்றதும் தமிழ் மக்களை ஏமாற்றுவதுமான செயலாகும்.   
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.