Jump to content

நிரந்தரம் என்று எதுகும் இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தரம் என்று எதுகும் இல்லை 

 

உறவுகளோ 

நண்பர்களோ 

உன்னை வெறுப்பதாய் 

இருந்தால் 

விட்டு விலகிவிடு 

அவர்கள் வேண்டாம் 

என்று போன பின் 

நீ அன்பு வைப்பதில் 

அர்த்தமில்லை 

இந்த உலகில் 

நிரந்தரமானது என்று 

எதுகும் இல்லை 

அன்பு பாசம் 

எல்லாமே ஒரு 

மேடை நாடகமே 

சுயநலத்துடன் சுளரும் 

பம்பரம் போலே 

வேசம் கலைந்தபின் 

விட்டு விலகிவிடுவார்கள் 

ஒன்றை மட்டும் 

உங்களுக்கு சொல்லிக்கொள்ள 

விரும்புகின்றேன் 

என்னோடு எப்பவுமே 

பொய்மைகள் உறங்குவதில்லை 

என் மனச்சாட்சியுடன் 

நான் இப்போ 

மௌனமான மொழியை 

கற்றுக்கொண்டு விட்டேன் 

அதனோடு வாழவும் 

பழகிவிட்டேன் 

என் அருகில் 

அழகிய வாழ்வு 

இருக்கும்பொழுது 

நான் தனியனே 

போதும் 

என் படை 

அசையாமல் நகரும் 

 

பா .உதயகுமார் /Oslo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, uthayakumar said:

நான் தனியனே 

போதும் 

என் படை 

அசையாமல் நகரும் 

வணக்கம் உதயகுமார்.
நான் தனியன் என்கிறீர்கள்.என் படை என்கிறீர்கள்.
ஒன்றுமே விளங்கவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் உதயகுமார்.
நான் தனியன் என்கிறீர்கள்.என் படை என்கிறீர்கள்.
ஒன்றுமே விளங்கவில்லையே?

நானும் என்னைத்தானோ என நினைத்து விட்டன்

ஏதோ ஓர் ஏக்கம் , இழப்பு தெரிகிறது போராட்டமான வாழ்க்கை சுழலுவதும் தெரிகிறது அன்பருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த விரக்தி நண்பரே...... நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூகத்துடன்தான் சேர்ந்து நகர வேண்டும்.இப்போதுதான் இங்கு வந்து விட்டீர்கள், இங்கு உங்களுக்கு சந்தோசம் , மகிழ்ச்சி , ஊடல், கூடல் எல்லாம் கிடைக்கும்........ரசித்து வாழுங்கள். ...!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பு நீங்கள் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, uthayakumar said:

 

151/5000
 
 
 
11/5000
 
 
 
 
 
9 hours ago, uthayakumar said:

 

நல்ல எழுத்து நடை. சும்மா ஒரு கவிதையாக தான் எழுதினீர்கள் என்று நினைக்கிறன். உலகம் ஒரு நாடக மேடை தான். அதனால் நாம் எல்லோரும் கெட்டித்தனமாக நடித்து முடிக்க வேண்டியதுதான்.வாழ்க்கை வாழ்வதட்கே

 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுகுமே நிரந்தரமில்லைத்தான். ஆனாலும் இதுகும் கடந்து போகும். துணிந்து யாழ்இணையத்துடன் இணைந்திருங்கள் நிம்மதி நிரந்தரமாகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

யாரப்பு நீங்கள் 😟

எப்பிடியும் எல்லாம் தெரிஞ்ச ஆளாய்த்தான் இருக்கும். புதிசாய் ஆரும் வந்தால் வரவேற்கிற பண்பாட்டோடை அவரையும் வரவேற்பம்.....😃
உதயகுமாரரை வருக வருக என வரவேற்கின்றோம்.:295_rose:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் உள் கருத்து....என்னை மிகவும் கவர்ந்தது!

இந்தப் பூவுலகில் எதுவுமே...நிரந்தரமில்லை!

ஏன்...இந்தப் பிரபஞ்சம் கூட நிரந்தரமில்லை!

பூமிக்கு வந்த வெறும் விருந்தினர்கள் என்ற நினைவில் வாழ்ந்து விட்டால்....பிரச்சனைகளே இல்லையே!

கவிதைக்கு நன்றி...உதயகுமார்!

Link to comment
Share on other sites

யதார்த்தமான வரிகள்...

மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்கள் உதயகுமார்  🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கருத்துக்கள் அனைவருக்கும் நன்றிகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சிறப்பாக இருக்கிறது.  உங்கள் நிலை அப்பிடி இல்லை என நம்புகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் 
நன்றிகள் பல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்களும் வாழ்த்துக்களும் சொன்ன 
கள உறவுகளுக்கு நன்றிகள் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.